அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வியாழன், 1 ஜனவரி, 2009

எங்கே செல்லும் இந்த பாதை!


சமீபத்தில் கடலூர் மாவட்டம் கிள்ளைஎன்ற ஊரைச்சேர்ந்த பஷீரா-ஜின்னா தம்பதிகள் கோவில் கட்டி வழிபடுவதை நாம் அறிந்துள்ளோம். இப்போது அதையும் தாண்டி, ஒற்றுமை என்ற பெயரில் பிற மதத்தவருடன் இரண்டற கலந்துவிட்ட முஸ்லிம்களைப்பற்றிய செய்திகளை பார்ப்போம்.
உ.பி.மாநிலம் சந்தன் எனும் ஊரில் முஸ்லிம்களும்,முஸ்லிமல்லாதவர்களும் வணக்க விசயத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் ஒன்றிணைந்து வாழ்கிறார்கள்.முஸ்லிம்கள் நடத்தும் தொழுகையில் இந்துக்கள் கலந்துகொள்கிறார்கள்இந்துக்களின் கோயில் பூஜையில் முஸ்லிம்கள் கலந்துகொள்கிறார்கள்.மஜீத்கான் எனும் முஸ்லீம் அம்மன் கோயிலை பராமரிக்கிறார். கல்லு எனும் இந்து முஸ்லிம்களின் அடக்க தளத்தை பராமரிக்கிறார். சிவசிங் என்ற இந்துவுக்கு ஜாஜகான்பேகம் எனும் முஸ்லீம் மனைவி. இப்படி இரண்டற கலந்தது இன்று நேற்றல்ல எண்ணூறு ஆண்டுகளாக இதுதான் நிலையாம்!
இப்படி ஒன்னு மண்ணாக[?] ஆனதுக்கு ஒரு வரலாறும் உண்டாம். எண்ணூறு ஆண்டுக்கு முன்னாள் இப்பகுதியை ஆண்ட சிங்க்பால்ஜாது என்பவர் இஸ்லாத்தை தழுவியிருக்கிறார்.இருப்பினும்அவர் குடும்பத்தை சேர்ந்த சிலர் இஸ்லாத்திற்கு மாறவில்லையாம்! இவர்களின் வழிதோன்றல்கள்தான் இப்படி பெயர்தாங்கி முஸ்லிம்களாக ஒற்றுமை ,சமாதானம் என்ற பெயரில் மார்க்கத்தை மறந்து வாழ்கிறார்கள்.
இதை பார்க்கும்போது மார்க்கத்தை இந்த மக்கள் இரண்டாம்பட்சமாக கருதிவிட்டார்களா? மார்கத்தை அறிந்துகொள்ளும் எண்ணம் இவர்களுக்கு வரவில்லையா? அந்த பகுதிக்கு இதுவரை எந்தமுஸ்லீம் மேதைகளும் மார்க்கத்தை கொண்டு சேர்க்கவில்லையா? அல்லாஹ்தான் இவர்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும்.
109:1 (நபியே!) நீர் சொல்வீராக: காஃபிர்களே!
109:2 நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
109:3 இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
109:4 அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
109:5 மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
109:6 உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்¢ எனக்கு என்னுடைய மார்க்கம்."
குறிப்பு;தினமலரில் வந்த செய்தியின் அடிப்படையில் இந்த ஆக்கம் எழுதப்பட்டது.

கருத்துகள் இல்லை: