அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

புதன், 29 ஜூலை, 2009

மத்ஹபுகளின் பார்வையில் பராஅத்!

ஷாஃபி மத்ஹப் நூலான இஆனதுத் தாலிபீன் என்ற நூலில் கூறப்பட்டிருப்பதைப் பாருங்கள்
وكذلك يحرم الصوم بعد نصف شعبان لما صح من قوله صلى الله عليه وسلم إذا انتصف شعبان فلا تصوموا ( إعانة الطالبين ج: 2 ص: 273)
ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராம் ஆகும். ஏனென்றால் ” ஷஅபான் பாதியயை அடைந்து விட்டால் நோன்பு நோற்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது. (நூல் : இஆனா பாகம் : 2 பக்கம் : 273)
மத்ஹபைப் பின்பற்றுபவர்கள்தான் பள்ளிவாசலுக்குத் தொழவரவேண்டும் என்று ஒவ்வொரு பள்ளியிலும் போடு மாட்டி வைத்துள்ளிர்களே நீங்கள் உங்கள் மத்ஹபிலேயே ஹராம் எனக் கூறப்பட்ட ஒரு காரியத்தை எப்படிச் செய்கிறீர்கள். இவ்வாறு மத்ஹப் நூற்களில் உள்ளது உண்மைதானா? என்று உங்களுடைய ஆலிம் பெருமக்களிடம் கேட்டுப்பாருங்கள். உண்மையை நிலையை உணர்வீர்கள்.
ومن البدع المذمومة التي يأثم فاعلها ويجب على ولاة الأمر منع فاعلها صلاة الرغائب اثنتا عشرة ركعة بين العشاءين ليلة أول جمعة من رجب وصلاة ليلة نصف شعبان مائة ركعة (إعانة الطالبين ج: 1 ص: 270)
ரஜப் மாத்தின் முதல் வெள்ளிக் கிழமை இரவில் மஃரிப் , இஷாவிற்கு மத்தியில் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுவதும். ஷஅபான் பதினைந்தாம் இரவில் நூறு இரக்அத்துகள் சிறப்பாக தொழுவதும் பழிக்கப்படவேண்டிய பித்அத்துகளாகும். அவ்வாறு தொழுபவன் பாவியாவான். இதை செய்பவனை தடுப்பது ஆட்சியாளர்கள் மீது கடமையாகும். (ஷாஃபி மத்ஹப் நூல் : இஆனா பாகம் : 1 பக்கம் : 270 )
فائدة أما الصلاة المعروفة ليلة الرغائب ونصف شعبان ويوم عاشوراء فبدعة قبيحة وأحاديثها موضوعة (فتح المعين ج: 1 ص: 270)
(ரஜப் மாதத்தின்) குறிப்பிட்ட ஒரு இரவிலும், ஷஅபான் பதினைந்தாம் இரவிலும் , ஆஷுரா உடைய நாளிலும் தொழப்படும் குறிப்பிட்ட தொழுகைகள் மோசமான பித்அத்களாகும். அவைகளைப் பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் இட்டுக் கட்டப்பட்டவையாகும் (ஷாஃபி மத்ஹப் நூல் : ஃபத் ஹுல் முயீன் பாகம் : 1 பக்கம் : 270 )
وإسراج السرج الكثيرة في السكك والأسواق ليلة البراءة بدعة وكذا في المساجد (البحر الرائق ج: 5 ص: 232)
பராஅத் இரவில் தெருக்களிலும், கடைவீதிகளிலும், அவ்வாறே பள்ளிவாசல்களிலும் அதிகமான விளக்குகளை எரிய வைப்பது பித்அத்தான காரியமாகும். (ஹனபி மத்ஹப் நூல் அல் பஹ்ருர் ராயிக் பாகம் : 5 பக்கம் : 232)
நன்றி;த.த.ஜ.நெட்

செவ்வாய், 21 ஜூலை, 2009

கிரகணங்களும்- இஸ்லாமியர்களும்!

சூரிய- சந்தி கிரகணங்கள் ஏற்படுவதை பற்றி அவ்வப்போது நாம் கேள்விப்படுகிறோம். நம்மில் பலர் அதை பார்த்தவர்களும் உண்டு. கிரகணங்கள் தோன்றுவதாக விஞ்ஞானிகள் அறிவித்துவிட்டால் நம்மில் பெரும்பாலோருக்கு பெருமகிழ்ச்சி. வானிலை ஆய்வு மையங்கள் கிரகனங்களை பார்வையிட ஏற்பாடு செய்துள்ள இடங்களுக்கு சென்று பார்வையிடுவது. பைனாகுளர் மூலமாகவும், வெல்டிங் செய்பவர்கள் பயன்படுத்தும் கவசங்கள் மூலமாகவும் பார்வையிடுவது. இவ்வாறாக கிரகணங்களை ஒரு ஜாலியாக கருதுகிறோம். ஆனால் உண்மையில் ஒரு முஸ்லீம் கிரகணம் ஏற்படும்போது மற்ற நாட்களை விட அல்லாஹ்வை அதிகமதிகம் அஞ்சவேண்டிய நாட்களாகும்.
கிரகணத்தை கண்டு பயந்த நபி[ஸல்] அவர்கள்;
*சூரிய கிரகணம் ஏற்பட்டபோது நபி(ஸல்) அவர்கள் கியாமத் நாள் வந்துவிட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்று எழுந்தார்கள்.[புஹாரி எண் 1059 ]
*நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தபோது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஆடையை இழுத்துக் கொண்டு பள்ளிக்குள் நுழைந்தோம்.[புஹாரி எண் 1040 ]
கிரகணங்கள் அல்லாஹ்வின் அத்தாட்சியாகும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "எந்த மனிதனின் மரணத்திற்காகவும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் பிடிப்பதில்லை. அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். அதன் மூலம் அல்லாஹ் தன்னுடைய அடியார்களை எச்சரிக்கிறான்'.[புஹாரி எண் 1048 ]
கிரகணத்தின் போது நபி[ஸல்] அவர்களுக்கு எடுத்துக்காட்டப்பட்ட சுவர்க்கமும்-நரகமும்.
*இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது (அதற்காகத்) தொழுதார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் நின்ற இடத்தில் எதையோ பிடிக்க முயன்றுவிட்டுப் பின்வாங்கினீர்களே?' என்று நபித்தோழர்கள் கேட்டனர். 'எனக்குச் சுவர்க்கம் எடுத்துக் காட்டப் பட்டது. அதிலிருந்து ஒரு குலையைப் பிடித்தேன். அதை நான் எடுத்திருந்தால் உலகம் உள்ளளவும் அதை நீங்கள் புசித்திருப்பீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.[புஹாரி எண் 748 ]
*அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்;.
சூரிய கிரகணம் ஏற்பட்ட சமயத்தில் நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். பின்னர் 'இன்று எனக்கு நரகம் எடுத்துக் காட்டப்பட்டது. அது போன்ற (மோசமான) கோரக் காட்சி எதையும் நான் கண்டதில்லை' எனக் கூறினார்கள். [புஹாரி எண் 431 ]
கிரகணங்களின் போது செய்ய வேண்டிய அமல்கள்;
தொழுகைக்கு அழைப்பு விடுத்தல்;
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது அஸ்ஸலாத்து ஜாமிஆ(தொழுகைக்குத் தயாராகுக!) என்று அழைப்புக் கொடுக்கப்பட்டது. [புஹாரி எண் 1045 ]
ஜமாஅத்தாக தொழுகை நடத்துதல்;
அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்கள்; நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.[புஹாரி எண் 1062 ]
தொழும் முறை;
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;ஒரு முறை சூரியக் கிரகணம் ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள் எழுந்துநின்று நீண்ட அத்தியாயம் ஒன்றை ஓதித் தொழுதார்கள். பிறகு நீண்ட நேரம் ருகூவு செய்தார்கள். பிறகு தலையை உயர்த்தி மற்றோர் அத்தியாயத்தை ஓதினார்கள். பிறகு மற்றொரு ருகூவு செய்து முடித்தார்கள். ஸஜ்தாவும் செய்தார்கள். இவ்வாறே இரண்டாம் ரக்அத்திலும் செய்தார்கள். [புஹாரி எண் 1212 ]
கிரகணம் விலகும் வரை தொழுதல்;
'சூரிய, சந்திர கிரகணங்கள் இரண்டும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவை. எனவே இவற்றை நீங்கள் கண்டால் அவை உங்களைவிட்டு விலக்கப்படும் வரை தொழுங்கள்![புஹாரி எண் 1212 ]
உரை நிகழ்த்துதல்;
அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்கள்;
(ஒரு முறை) சூரிய கிரகணம் ஏற்பட்டபோது நான் (என் சகோதரி) ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது மக்கள் நின்று (ம்ரகணத் தொழுகை) தொழுது கொண்டிருந்தார்கள். (அவர்களுடன்) ஆயிஷாவும் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். நான் 'மக்களுக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி) அவர்கள் தங்களின் கையால் வானத்தைக் காட்டி சைகை செய்து 'சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்)' என்று கூறினார்கள். நான் 'ஏதேனும் அடையாளமா?' என்று கேட்டேன். 'ஆம்' என்பதைப் போன்று ஆயிஷா(ரலி) அவர்கள் தங்களின் தலையால் சைகை செய்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும், அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு(ப் பின்வருமாறு) கூறினார்கள்: நான் இதுவரை காணாத யாவற்றையும் - சொர்க்கம், நரகம் உள்பட அனைத்தையும் இதோ இந்த இடத்தில் (தொழுகையில் இருந்தபோது) கண்டேன். மேலும், நீங்கள் தஜ்ஜாலின் சோதனைக்கு நெருக்கமான அளவிற்கு மண்ணறைகளில் சோதிக்கப்படுவீர்கள் என்று எனக்கு வஹீ (இறைச்செய்தி) (இறை அறிவிப்பு) அறிவிக்கப்பட்டது. (மண்ணறையில் தம்மிடம் கேள்வி கேட்கும் வானவரிடம்), இறைநம்பிக்கையாளர் ஒருவர் அல்லது 'முஸ்லிம்' '(இவர்கள்) முஹம்மத்(ஸல்) அஆவார்கள். அன்னார் தெளிவான சான்றுகளை எங்களிடம் கொண்டு வந்தார்கள். நாங்கள் (அவர்களின் அழைப்பை) ஏற்று நம்பிக்கை கொண்டோம்' என்று பதிலளிப்பார். அப்போது, '(தம் நற்செயல்களால் பயனடைந்த) நல்லவராக நீர் உறங்குவீராக! நீர் உறுதி(யான நம்பிக்கை) கொண்டிருந்தவர் என்று நாம் அறிவோம்' என்று (அவரிடம்) சொல்லப்படும். 'நயவஞ்சகர்' அல்லது 'சந்தேகங் கொண்டவர்' மண்ணறைக்கு வரும் வானவரின் கேள்விகளுக்கு), 'மக்கள் எதையோ சொன்னார்கள்; அதையே நானும் சொன்னேன். (மற்றபடி வேறொன்றும்) எனக்குத் தெரியாது' என்று கூறுவார். [புஹாரி எண் 7287 ]
அன்பான முஸ்லிம்களே! கிரகணங்கள் நாம் மகிழும் விஷயமல்ல. மாறாக, அவை நமக்கு இறைவனின் எச்சரிக்கை செய்தியாகும். எனவே, கிரகணம் எப்போது ஏற்ப்பட்டாலும் அந்த நாளில் அல்லாஹ்வை தொழுது, அவனை புகழ்ந்து அவனிடம் பாவமன்னிப்பு தேடி, சுவர்க்கத்தை அடைய முயற்ச்சிப்போமாக!

வியாழன், 16 ஜூலை, 2009

அடாடா! இதுக்கும் கூட தண்டனையா..?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيم
அல்லாஹ் தன்னுடைய அடியார்கள் எப்படியேனும் சுவர்க்கம் வந்துவிட வேண்டும் என்ற ஆசையினால், நாம் செய்யும் சின்ன சின்ன அமல்களுக்கும் ஏராளமான நன்மைகளை வாரி வழங்குவதை இதற்கு முந்தைய ஆக்கத்தில் பார்த்தோம். இதில் அல்லாஹ்வின் - அவனது தூதரின் கட்டளைகளை புறக்கணித்து நாம் செய்யும் தீமைகள் நமது பார்வையில் சிறியதாகவே தெரிந்தாலும் அதற்கும் அல்லாஹ் தண்டனையை அளிப்பான்.[நாடினால் மன்னிப்பான்] அவ்வாறு நமது பார்வையில் சாதரணமாக தெரியக்கூடிய சில தீமைகளும் அதற்கு அல்லாஹ் அளிக்கக்கூடிய தண்டனைகளையும் இந்த ஆக்கத்தில் பார்ப்போம்.
நபி(ஸல்) அவர்கள் மக்கா அல்லது மதீனாவில் ஒரு தோட்டத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்தபோது, கப்ரில் வேதனை செய்யப்படும் இரண்டு மனிதர்களின் சப்தத்தைச் செவியுற்றார்கள். அப்போது, 'இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை" என்று சொல்லிவிட்டு, 'இருப்பினும் (அது பெரிய விஷயம்தான்) அவ்விருவரில் ஒருவர், தாம் சிறு நீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்' என்று கூறிவிட்டு ஒரு பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் 'நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?' என்று கேட்கப்பட்டதற்கு, 'அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். [நூல்;புஹாரி எண் 216 ]
இந்த பொன்மொழியில், நாம் சாதாரணமாக கருதும் இரண்டு விஷயங்களுக்காக கப்ரில் வேதனை தரப்படும் என்பதை அறியமுடிகிறது. நம்மில் சிலர் சிறுநீர் கழிக்கும்போது பார்த்தால் மக்கள் வந்துபோகும் இடங்களில் அணிந்திருக்கும் ஆடையை தொடை தெரியும் அளவுக்கு இழுத்துவிட்டு யாரைப்பற்றியும் கவலைப்படாமல் சாதரணமாக சிறுநீர் கழிப்பதை பார்க்கலாம். இன்னும் சிலர் கால்நடைகளைப்போல் சிறுநீர் கழித்துவிட்டு சுத்தம் செய்யாதவர்களும் உண்டு. இதை பெரிய குற்றமாக அவர்கள் கருதுவதில்லை. ஆனால் இதற்கு கப்ரில் வேதனை தரப்படுகிறது. மேலும், புறம் பேசாதவர்களை காண்பது அரிது. அதுவும் நடைமுறையில் பெரிய தவறாக கருதப்படுவதில்லை. ஆனால், அதற்கும் கப்ரில் வேதனையுண்டு என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்" (முன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்த) பெண்ணொருத்தி ஒரு பூனை(க்குத் துன்பம் தந்த) விஷயத்தில் வேதனைப்படுத்தப்பட்டாள். அந்தப் பூனையை அது பசியால் துடித்துச் சாகும் வரை அவள் அடைத்து வைத்திருந்தாள். அதன் காரணத்தால் அவள் நரகத்தில் புகுந்தாள். அப்போது அல்லாஹ்வே மிக அறிந்தவன் - 'நீ அதைக் கட்டிவைத்து அதற்குத் தீனி போடவுமில்லை; தண்ணீர் தரவுமில்லை; அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்) கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து விடவுமில்லை" என்று அல்லாஹ் கூறினான். [நூல்;புஹாரி எண் 2365 ]
இந்த பொன்மொழியில், ஒரு பூனையை சரியாக பராமரிக்காமல் அதை சாகடித்த காரணத்தால் நரகத்தில் வேதனை செய்யப்படுகிறாள் எனில், கால்நடைகளை வளர்ப்பவர்கள் அதற்கு உரிய நேரத்தில் தண்ணீர், உணவு தரவேண்டும். அதோடு அது நோய்வாய்பட்டால் அதற்கு மருத்துவம் செய்யவேண்டும். அதன் மூலம் வருவாய் வந்தால் அதை பராமரிப்பது. அதன் மூலம் வருவாய் வரவில்லையானால் அதை பட்டினி போடுவது இவ்வாறான செயல்களை செய்பவர்களும், தெருவில் சும்மா படுத்திருக்கும் நாயை கல்லால் அடிப்பவர்களும், கழுதையின் வாலில் மட்டையை கட்டி அதில் நெருப்பு வைத்து அது விரண்டோடுவதை பார்த்து ரசிப்பவர்களும், சேவல் சண்டை- கிடாய் சண்டை - மஞ்சு விரட்டு- ஜல்லிக்கட்டு- ரேக்ளா ரேஸ் இதுபோன்ற போட்டியில் வாயில்லா ஜீவன்களை வதைப்பவர்களும் மேற்கண்ட நபிமொழியை கண்டு திருந்தவேண்டும் இல்லையேல் நரகில் வருந்தவேண்டும்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுக்கு நான் ஒரு தலையணையை (ஈச்ச நாரை அடைத்துத்) தயாரித்தேன். அதில் உருவப் படங்கள் வரையற்பட்டிருந்தன. அது சிறிய மெத்தை போன்றிருந்தது. நபி(ஸல்) அவர்கள் வந்ததும் (அதைப் பார்த்துவிட்டு) இரண்டு கதவுகளுக்கிடையே நின்றார்கள். அவர்களின் முகம் (கோபத்தால் நிறம்) மாறத் தொடங்கியது. நான், 'நாங்கள் என்ன (தவறு) செய்து விட்டோம்? இறைத்தூதர் அவர்களே!" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'என்ன இந்தத் தலையணையில்?' என்று (கோபமாகக்) கேட்டார்கள். நான், 'இது, நீங்கள் (தலைவைத்துப்) படுத்துக் கொள்வதற்காக தங்களுக்கென நான் தயாரித்த தலையணை" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், 'உருவப் படம் உள்ள வீட்டினுள் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்பதும், உருவப் படத்தைச் செய்வதன் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவான் என்பதும் அப்போது அல்லாஹ் (உருவப் படத்தைச் செய்தவர்களை நோக்கி), 'நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள்' என்று சொல்வான் என்பதும் உனக்குத் தெரியாதா?' என்று கேட்டார்கள்.[நூல்;புஹாரி எண் 3224 ]
இந்த பொன்மொழியில் உயிர் உள்ளவைகளின் உருவப்படம் பற்றி நபியவர்கள் கடுமையாக கண்டிப்பதோடு, அதற்கு மறுமையில் வேதனையுண்டு என்பதையும் சொல்லிக்காட்டுகிறார்கள். முஸ்லீம் ஓவியர்கள் உயிர்உள்ளவைகளின் உருவப்படங்கள் வரைவதை விட்டொழிக்கவேண்டும். வீடுகளில் முன்னோர்கள் தொடங்கி முந்தாநாள் பிறந்த குழந்தை வரை போட்டோ எடுத்து வரிசையாக மாட்டி வைத்திருப்பவர்களும், அழகுக்காக வீடுகளில் மிருகங்கள்- பறவைகளின் உருவங்கள் அடங்கிய பாய்கள்-போர்வைகள்- தலையணைகள்-திரைசீலைகள் பயன்படுத்துவோர் அதை மாற்றவேண்டும்.
'ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக திட்டமிட்டு சொன்னால், அவர் (மறுமையில்) இரண்டு வாற்கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் போடும்படி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால், அவரால் ஒருபோதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது.) 'தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்' அல்லது 'தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில் 'அவர்களின் உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறவரின் காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும். (உயிரினத்தின்) உருவப் படத்தை வரைகிறவர் அதற்கு உயிர் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார். ஆனால், அவரால் உயிர் கொடுக்க முடியாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.[நூல்;புஹாரி எண் 7042 ]
இந்த நபிமொழியில் காணாத கனவை கண்டதாக 'ரீல்' விடுபவர்களை பற்றி விவரிக்கிறது. இன்று நம்மில் சிலர் தன் காதலியிடம், அவளை பற்றி எந்த கனவு காணாத நிலையிலும் உன்னை கனவில் அப்படி கண்டேன் இப்படி கண்டேன் என்று புளுகுவதும், நண்பர்களுக்கு மத்தியில் தன் இமேஜை உயர்த்துவதற்காக நேற்று கனவில் பிரபலமான நடிகை என் கனவில் வந்து என்னையே திருமணம் செய்வேன் என்று ஒத்தக்காலில் நின்றார்aஎன்று புளுகுவதும், இதையெல்லாம் தாண்டி சிலர் நான் ரசூல்[ஸல்] அவர்களை கனவில் கண்டேன் என்று பினாத்துவதும் நடைமுறையில் பார்க்கிறோம். இப்படிப்பட்டவர்கள் இரு வார்கோதுமைகளை முடிச்சுபோடும்வரை வேதனை செய்யப்படுவர் எனில், ஏன் புரூடா விடவேண்டும் ?ஏன் தண்டனையை அனுபவிக்கவேண்டும்? சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். அடுத்து ஒட்டுக்கேட்பவர் காதில் ஈயத்தை காச்சி ஊற்றப்படும் என்பதை கவனத்தில் கொண்டு அடுத்தவீட்டில் என்ன நடக்கிறது என்பதை சுவரில் காதைஒட்டிவைத்து கேட்பவர்கள் சிந்திக்கவேண்டும்.
நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்;
புறாக்களின் மார்பு பகுதியை போல் சிகைக்கு கருப்பு சாயம் பூசுகின்ற ஒரு கூட்டம் இறுதிக்காலத்தில் தோன்றுவர். அவர்கள் சுவனத்தின் வாடையை கூட நுகரமாட்டார்கள்.[நூல் நசயீ]
சிலருக்கு இளநரை ஏற்படுவதுண்டு. அவர்கள் கூட தலைக்கு பெரும்பாலும் 'டை' அடிப்பதில்லை. ஆனால் கிழநரை ஏற்பட்ட கிழங்கள் கருப்பு கலரில் 'டை' அடித்துக்கொண்டு மைனராக வலம்வருவதை பார்க்கிறோம். இவர்கள் இந்த நபிமொழியை சிந்திக்கவேண்டும். கருப்பு அல்லாத வேறு கலரை கொண்டு தமது நரையை மாற்ற முன்வரவேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ், பாவங்களில் சிறியதோ- பெரியதோ அனைத்தையும் தவிர்ந்து நடக்க நமக்கு அருள் புரிவானாக!

செவ்வாய், 14 ஜூலை, 2009

அட! இதுக்கும் கூட நன்மையா..?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيم
மனிதர்களை படைத்த இறைவன் தன்னுடைய அடிமைகளான மனிதர்கள் மீது அளப்பரிய அன்பு கொண்டவன். ஒரு தாய் தன் பிள்ளை மீது காட்டும் அன்பை விட அல்லாஹ் தன் அடியார்கள் மீது காட்டும் அன்பு அளப்பரியது.
உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார்கள்;
(ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்காக(த் தன் குழந்தையைத் தேடினாள்). குழந்தை கிடைக்கவில்லை. எனவே), கைதிகளில் எந்தக் குழந்தையைக் கண்டாலும், அதை (வாரி) எடுத்து(ப் பாலூட்டினாள். தன் குழந்தை கிடைத்தவுடன் அதை எடுத்து)த் தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். அப்போது 'எங்களிடம் நபி(ஸல்) அவர்கள், 'இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள்!' என்றார்கள். நாங்கள், 'இல்லை, எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது' என்று சொன்னோம். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்களின் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்' என்று கூறினார்கள்.[நூல்; புஹாரி எண் 5999 ]
நம் மீது அளவற்ற அன்பு கொண்ட இறைவன் நாம் நரகம் சென்று விடக்கூடாது என்பதற்காக நாம் செய்யும் சின்ன சின்ன செயல்களுக்கும் நன்மைகளை வழங்குகிறான். அவற்றில் சிலவற்றை இந்த ஆக்கத்தில் பார்ப்போம்.
எண்ணத்திற்கும் கூலி வழங்கும் வள்ளல்;
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்;
(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதிவிட்டான். பிறகு அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்யவேண்டும் என (மனத்தில்) எண்ணிவிட்டாலே அதைச் செயல்படுத்தாவிட்டாலும் அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும்விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழு நூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால் ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கைவிட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான்.[நூல்; புஹாரி எண் 6491 ]
இந்த நபி மொழியில் வல்லோனின் வள்ளல்தன்மையை பாருங்கள். நாம் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் மட்டும் பசியடங்கிவிடாது. சாப்பிட்டால்தான் பசியடங்கும். ஆனால் நாம் ஒரு நன்மையான செயலை செய்ய நினைத்து செய்யாமல் விட்டுவிட்டால் கூட நாம் செய்ய நினைத்த அந்த என்னத்திற்கு ரஹ்மான் கூலிதருகிறான். அதுமட்டுமா ஒரு தீமையை செய்ய நினைத்து அதை அல்லாஹ்வுக்கு பயந்து செய்யாமல் விட்டால் அதையும் நன்மைக்குரியதாக கருதி நன்மையை பதிவு செய்கிறான். மேலும் ஒரு நல்ல செயலுக்கு பன்மடங்கு நன்மையை பதிவு செய்யும் ரஹ்மான், தீமைக்கு மட்டும் ஒரே ஒரு தீமையாக பதிவு செய்கிறான் எனில், நம் மீதுதான் நாயனுக்கு எத்துனை பாசம்?
மனைவிக்குஊட்டும் உணவுக்கும் கூலி;
நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடிச் செலவழிக்கிற எதுவாயினும் அதற்குரிய பலன் உங்களுக்கு அளிக்கப்பட்டே தீரும். உங்கள் மனைவியின் வாயில் ஊட்டும் (ஒரு கவளம்) உணவாயினும் சரியே' என்றார்கள். [நூல்; புஹாரி எண் 6373 ]
தம்பதியர் ஒவ்வொருவரும் தங்களுக்கிடையில் இருக்கும் காதலை வெளிப்படுத்தும் முகமாக ஒருவருக்கொருவர் உணவை ஊட்டி விடுவது சாதாரண விஷயம். இதில் இறைவனுக்கு செய்யும் எந்த அமலுமில்லை. ஆனாலும், மனைவியை பராமரிப்பது அவள்மீது அன்பு செலுத்துவது ஆகியவற்றை நம்மீது இறைவன் விதியாக்கியுள்ளான் என்ற எண்ணத்தில் ஒருவன் தன் மனைவியின் வாயில் ஒரு கவள உணவை ஊட்டினால் அதற்கும் நன்மையை இறைவன் அளிப்பதை நினைக்கும்போது அவன் எவ்வளவு பெரிய கருணையாளன் என்பதை புரிந்து கொள்ளலாம்.
நாய்க்கு உதவினாலும் நன்மையே;
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் 'ஒருவர் ஒரு பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையானத் தாகம் ஏற்பட்டது. அவர் (வழியில்) ஒரு கிணற்றைக் கண்டார். உடனே அதில் இறங்கித் தண்ணீர் குடித்தார். பிறகு (ம்ணற்றைவிட்டு) அவர் வெளியே வந்தார். அப்போது நாய் ஒன்று தாகத்தால் (தவித்து) நாக்கைத் தொங்கவிட்டபடி ஈரமண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அந்த மனிதர் (தம் மனத்திற்குள்) 'எனக்கு ஏற்பட்டதைப் போன்ற (அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கிறது போலும்' என்று சொல்லிக்கொண்டார். உடனே (மீண்டும்) அக்கிணற்றில் இறங்கித் (தண்ணீரைத் தோலால் ஆன) தன்னுடைய காலுறையில் நிரப்பிக்கொண்டு அதைத் தம் வாயால் கவ்வியபடி (மேலேறி வந்து) அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் இதற்கு நன்றியாக அவரை (அவரின் பாவங்களை) மன்னித்தான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைச் செவியேற்ற) மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! மிருகங்களுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு (மறுமையில்) நற்பலன் கிடைக்குமா?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(ஆம்:) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவும்பட்சத்தில் மறுமையில்) அதற்கான நற்பலன் கிடைக்கும்' என்று கூறினார்கள். [நூல்; புஹாரி எண் 6009 ]
நாய் வளர்ப்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது [இரு விஷயங்களுக்கன்றி] பொதுவாக நாயை யாரும் கண்டுகொள்வதில்லை. யாரையாவது திட்டுவதாக இருந்தால் கூட சீ நாயே! என்று திட்டுபவர்களை பார்க்கிறோம். அத்தகைய மதிப்பில்லாத நாய்க்கு நீர் புகட்டியதற்காக ஒருவரின் பாவங்களை இறைவன் மன்னிக்கிறான் என்றால் அவனின் அருளுக்குத்தான் எல்லையுண்டோ;
மரம் நட்டாலும் மகத்தான கூலி;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' ஒரு முஸ்லிம் மரம் ஒன்றை நட்டு அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது (மற்ற) உயிரினமோ உண்டால் (அதன் காரணத்தால்) ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்காமல் இருப்பதில்லை.[நூல்; புஹாரி எண் 6012 ]
மரம் நடுவதில் இறைவனுக்கு செய்யும் அமல் எதுவுமில்லை. ஆனாலும், அந்த மரத்தின் மூலம் தனது படைப்பினங்கள் பயனடைந்தால், அந்த மரத்தை நட்டியவருக்கு அல்லாஹ், தர்மம் செய்த கூலியை வழங்கி தனது தாராள கருணையை காட்டுகின்றான்.
முள்ளை அகற்றினாலும் கூலி;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒருவர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பாதையில் முட்கிளையொன்றைக் கண்டு அதை எடுத்து (எறிந்து)விட்டார். அவரின் இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்களிலிருந்து) மன்னிப்பு வழங்கினான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.[நூல்; புஹாரி எண் 2472 ]
நாம் நடந்து செல்லும் பாதைகளில் மக்களுக்கு இடையூறு தரும் அல்லது துன்பம் தரும் முள்ளையோ அல்லது கல்லையோ அகற்றினாலும் அதற்கும் கூலியுண்டு என்று நபியவர்கள் கூறியிருக்க, இன்று நடைபாதைகளில் இது போன்றவைகளை கண்டும் காணாமல் செல்லும் நம்மவர்கள் இனியேனும் அவைகளை அகற்றும் நற்செயலை செய்து நன்மையை பெற முன்வரவேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ், அவனிடத்தில் நன்மையை பெற்றுத்தரும் எல்லா அமல்களையும் செய்யக்கூடியவர்களாக நம்மை ஆக்கியருள்வானாக!

திங்கள், 13 ஜூலை, 2009

அன்பளிப்பை அழகுபடுத்துவோம்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
மனிதர்களின் உணர்வோடு இரண்டற கலந்தவை ஒருவருக்கொருவர் செய்யும் அன்பளிப்புகள். இந்த அன்பளிப்புகள் ஒருவர் மற்றவர் மீது தமக்குள்ள அன்பை வெளிப்படுத்தவும் உறுதிப்படுத்தவும் உதவுவதோடு, சம்மந்தப்பட்டவரின் கஷ்டத்தை போக்கும் வகையிலும் உள்ளதாகும். இன்றைக்கு பல்வேறுவகையான அன்பளிப்புகள் நடைமுறையில் உள்ளன. அவைகளில் பல விஷயங்கள் மார்க்கம் அனுமதித்தவையாக இருந்தாலும், சில விஷயங்கள் மார்க்கம் தடுத்தவையாகவும் உள்ளது.

பிறந்தநாள் விழா, பெயர்சூட்டு விழா, காதணி விழா, பூப்புனித[?] நீராட்டு விழா, மணிவிழா போன்றவைகளில் வழங்கப்படும் அன்பளிப்புகள் பித்அத்தாகும். ஏனெனில், மேற்கண்ட விழாக்கள் மாற்றார்கள் இடமிருந்து நம்மவர்கள் காப்பியடித்தவையாகும். இதுபோன்ற விழாக்களில் பங்கெடுப்பதோ, அதில் அன்பளிப்புகள் வழங்குவதோ பித்அத்தாகும். மேலும், திருமணம் முடித்த தம்பதிகளுக்கு ஹலாலான பொருட்களை அன்பளிப்பாக வழங்கலாம்.

அபூ உஸ்மான் அல்ஜஅத் இப்னு தீனார்(ரஹ்) அறிவித்தார் (பஸராவிலுள்ள) பனூ ரிஃபாஆ பள்ளி வாசலில் (நாங்கள் இருந்துகொண்டிருந்த போது) அனஸ்(ரலி) எங்களைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் (என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) இருக்கும் பகுதியைக் கடந்து சென்றால் அவர்களின் இல்லத்திற்குச் சென்று அவர்களுக்கு சலாம் (முகமன்) கூறுவது வழக்கம். நபி(ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களை மணமுடித்து மணாளராக இருந்தபோது உம்முசுலைம்(ரலி) என்னிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஏதாவது ஒன்றை நாம் அன்பளிப்பாக வழங்கினால் நன்றாயிருக்குமே!'' என்று கூறினார்கள். அதற்கு நான், '(அவ்வாறே) செய்யுங்கள்!'' என்று அவர்களிடம் கூறினேன். எனவே, அவர்கள் பேரிச்சம் பழம், நெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றை எடுத்து 'ஹைஸ்' எனும் ஒருவகைப் பண்டத்தை ஒரு பாத்திரத்தில் தயாரித்தார்கள். அதை என்னிடம் கொடுத்து நபி(ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். அதை நான் எடுத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்களை நோக்கி நடந்(து சென்று கொடுத்)தேன்.[ஹதீஸ் சுருக்கம். நூல்;புஹாரி 5163 ]

இந்த ஹதீஸ் திருமணத்தில் அன்பளிப்பு செய்யலாம் என்பதை விளக்குகிறது. இன்றைய திருமணத்தில் செய்யப்படும் அன்பளிப்புகளில் இருவகை உண்டு. ஒன்று மக்கள் அவர்களாக விரும்பி செய்வது. மற்றொன்று 'மொய்' என்ற பெயரில் கட்டாய வசூல் செய்வது. இதில் நாமாக விரும்பி செய்யும் அன்பளிப்பு ஆகுமானது. அதே நேரத்தில் வழங்கப்படும் பொருட்களும் மார்க்கம் அனுமதித்தவையாக இருக்கவேண்டும். சிலர் தங்களின் நண்பர்களின் திருமணத்தில் மதுவகைகளை அன்பளிப்பு செய்கிறார்கள். அதோடு பல்வேறு உருவங்கள் அடங்கிய பரிசு பொருட்களை அன்பளிப்பு செய்கிறார்கள். இவை இரண்டும் மார்க்கத்தில் கண்டிப்பாக தடுக்கப்பட்டதாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்;
وَتَعَاوَنُواْ عَلَى الْبرِّ وَالتَّقْوَى وَلاَ تَعَاوَنُواْ عَلَى الإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُواْ اللّهَ إِنَّ اللّهَ شَدِيدُ الْعِقَابِ
இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்;. பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்;. அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.[5:2

மேலும் திருமணத்தில் தம்பதிகளை பரிகாசம் செய்யும் வகையில் சிலர், பெரிய பார்சலை கொண்டு வருவார்கள். பல அடுக்குள்ள அந்த பார்சலை பிரித்து பார்த்தால் இறுதியில் ஒரு பால் குடிக்கும் நிப்பிலோ, அல்லது ஒரு காண்டமோ இருக்கும். நிப்பிளும்-காண்டமும் மார்க்கம் தடுத்த பொருளல்ல என்றாலும், இந்த அன்பளிப்பில் ஏமாற்றமும் பரிகாசமும் உள்ளது. இந்தவகை பரிகாசம் தவிர்க்கப்படவேண்டும்.

وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللّهَ يَأْمُرُكُمْ أَنْ تَذْبَحُواْ بَقَرَةً قَالُواْ أَتَتَّخِذُنَا هُزُواً قَالَ أَعُوذُ بِاللّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ
இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்;) மூஸா தம் சமூகத்தாரிடம், "நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்" என்று சொன்னபோது, அவர்கள்; "(மூஸாவே!) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?" என்று கூறினர்; (அப்பொழுது) அவர், "(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று கூறினார்.[2:67 ]

பரிகாசம் செய்வது அறிவீனர்களின் செயல் என்பதை இந்த வசனம் மூலம் நாம் விளங்கமுடிகிறது. எனவே நாம் வழங்கும் அன்பளிப்புகள் ஒன்று இம்மை தேவையை நிறைவேற்றும் பொருளாதாரமாகவோ, அல்லது பயனுள்ள பொருட்களாகவோஇருக்கலாம். அல்லது இம்மை-மறுமைக்கு வழிகாட்டும் மார்க்க விளக்க நூல்களாகவும் இருக்கலாம் இதுதான் சிறந்ததாகும்.

அடுத்து மார்க்கம் தடுத்த பொருட்கள் ஆண் பெண் இரு சாராருக்கும் பொருந்துபவைகளும் உண்டு. இப்படி இரு சாராரும் பயன்படுத்த தடுக்கப்பட்ட பொருட்களை யாரேனும் அன்பளிப்பு செய்தால் அதை நாம் பெறக்கூடாது. அதே நேரத்தில் ஆணுக்கு மட்டும் தடையுள்ள பெண்களுக்கு அனுமதியுள்ள ஒரு பொருள் நமக்கு அன்பளிப்பாக வந்தால் அதை நாம் என்ன செய்யவேண்டும்?

அலீ(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்கள் எனக்குப் பட்டு அங்கி ஒன்றை அன்பளிப்புச் செய்தார்கள். அதை நான் அணிந்து கொண்டேன். (அதைக்கண்ட) நபி(ஸல்) அவர்களின் முகத்தில் கோபக் குறியை கண்டேன். எனவே, அதைப் பல துண்டுகளாக்கி எங்கள் (குடும்பப்) பெண்களிடையே பங்கிட்டு விட்டேன்.[புஹாரி எண் 2614 ]

ஆண்களுக்கு பட்டாடை ஹராம் என்று சொன்ன நபி[ஸல்] அவர்கள், அலி[ரலி] அவர்களுக்கு வழங்கியுள்ளார்கள். எனவே ஆண்களுக்கு பட்டாடையோ தங்கமோ அன்பளிப்பு கிடைக்குமானால் அதை மறுக்காமல் வாங்கிகொண்டு அதை அனுமதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு வழங்கிவிடலாம் என்பதை இந்த ஹதீஸ் நமக்கு விளக்குகிறது. மேலும் ஆண்களுக்கு கிடைக்கப்பெற்ற பட்டாடையோ அல்லது தங்கத்தையோ விற்கவோ, அல்லது முஸ்லிமல்லாதவர்களுக்கு வழங்கவோ செய்யலாம் என்பதற்கு கீழ்கண்ட ஹதீஸ் ஆதாரமாகும்;

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்;
உமர்(ரலி) ஒரு மனிதரின் (தோள்) மீது, விற்கப்படுகிற பட்டு அங்கியைக் கண்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்களிடம், 'இந்த அங்கியை வாங்கிக் கொள்ளுங்கள். ஜும்ஆ நாளிலும் (குலங்கள் மற்றும் நாடுகளின்) தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும் போதும் அணிந்து கொள்வீர்கள்" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'எவருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லையோ அவர்தான் இதை அணிவார்" என்று கூறினார்கள். பிறகு, ஒரு முறை நபி(ஸல்) அவர்களிடம் (அதே போன்ற பட்டு) அங்கிகள் கொண்டு வரப்பட்டன. நபி(ஸல்) அவர்கள் அவற்றிலிருந்து ஓர் அங்கியை உமர்(ரலி) அவர்களுக்கு அனுப்பி வைத்தார்கள். உமர்(ரலி), 'இது குறித்துக் கடுமையான சொற்களைத் தாங்கள் கூறியிருக்க, நான் எப்படி இதை அணிவேன்?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நான் இதை நீங்கள் அணிந்து கொள்வதற்காகத் தரவில்லை. இதை நீங்கள் விற்றுவிடுங்கள்; அல்லது வேறு எவருக்காவது அணிவித்து விடுங்கள்" என்று கூறினார்கள். உமர்(ரலி) அதை மக்காவாசிகளில் ஒருவராயிருந்த தம் சகோதரருக்கு அவர் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன்பு அனுப்பி வைத்துவிட்டார்கள். [புஹாரி எண் 2619 ]

முஸ்லிமல்லாதவர்கள் தரும் அன்பளிப்பை ஏற்கலாமா?
முஸ்லிம்களாகிய நமக்கு முஸ்லிமல்லாதவர்களுடன் நட்பும்-நல்லுறவும் இருக்கிறது. நமது நண்பர்களான அவர்கள் நமக்கு ஒரு அன்பளிப்பை தந்தால் அதை நாம் ஏற்கவேண்டும்.

அனஸ்(ரலி) அறிவித்தார். யூதப் பெண் ஒருத்தி நபி(ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி(ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். 'அவளைக் கொன்று விடுவோமா?' என்று நபி(ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், 'வேண்டாம்" என்று கூறிவிட்டார்கள். நபி(ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன்.[நூல் புஹாரி எண் 2617 ]

இந்த செய்தி முஸ்லிமல்லாதவர்கள் தரும் அன்பளிப்பை ஏற்கலாம் என்பதை நமக்கு விளக்குகிறது. அதே நேரத்தில் அவர்கள் அன்பளிப்பு செய்யும் பொருள் மார்க்கத்திற்கு உட்பட்டதாக இருந்தால் நாம் வைத்துக்கொள்ளலாம். இல்லையேல், மாற்று மதத்தவர்களுக்கு வழங்கிவிடலாம் உமர்[ரலி] அவர்களை போன்று!
கொடுத்த அன்பளிப்பை திரும்ப பெறலாமா?
நம்மில் சிலர் சிலருக்கு அன்பளிப்பு செய்வார்கள். நாளடைவில் அவர்களுக்கிடையில் பகைமை வந்துவிட்டால் நான் கொடுத்த அன்பளிப்பை கொடு என்று மல்லுக்கு நிற்பார்கள். எமக்கு தெரிந்து ஒருவர் தன் உறவினருக்கு ஒரு நிலத்தை அன்பளிப்பாக வழங்கினார். பின்பு அவர்களுக்கு மத்தியில் பகை ஏற்பட்டவுடன் எனது நிலத்தை திரும்பத்தா என்றார். அன்பளிப்பு வாங்கியவர் தர மறுக்க இருவரும் கோர்ட் சென்றார்கள். இறுதியில் அந்த நிலம் இருவரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு தரிசாக[ பயனற்றதாக] ஆகி விட்டது. எனவே அன்பளிப்பை திரும்ப பெறலாகாது;

ஜாபிர்(ரலி) அறிவித்தார்கள்;
உம்ராவாக (ஆயுட்கால அன்பளிப்பாக) வழங்கப்பட்ட பொருளைக் குறித்து நபி(ஸல்) அவர்கள், 'அது எவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதோ அவருக்கே உரியது" என்று தீர்ப்பளித்தார்கள்.[புஹாரி 2625 ]

அதே நேரத்தில், நாம் ஒருவருக்கு ஒரு நிலம் நிரந்தரமாக அன்றி இரவலாக அன்பளிப்பு செய்து அதில் ஒருவர் பாடுபட்டு தன்னிறைவு அடைந்த பின் நாம் தந்த நிலத்தை நம்மிடமே அவராகவே ஒப்படைத்தால் நாம் பெற்றுக்கொள்வதில் தடையில்லை.

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்;
முஹாஜிர்கள் (மக்காவிலிருந்து) மதீனாவுக்கு வந்தபோது அவர்களின் கையில் (செல்வம்) எதுவும் இருக்கவில்லை. அன்சாரிகள் நிலங்களையும் (பிற) அசையாச் சொத்துக்களையும் வைத்திருந்தார்கள். ஒவ்வோர் ஆண்டும் தங்கள் சொத்துக்களின் விளைச்சல்களை அவர்களுக்கு (குறிப்பிட்ட விம்தத்தில்) கொடுப்பதாகவும் 'எங்களுக்கு பதிலாக நீங்கள் அதில் சிரமப்பட்டு உழைக்க வேண்டும்' என்ற நிபந்தனையின் பேரிலும் அவற்றை முஹாஜிர்களுக்கு (குத்தகை நிலங்களாகப்) பங்கிட்டுக் கொடுத்தார்கள். என்னுடைய தாயார் உம்மு சுலைம் அவர்கள் (என் தாய்வழிச் சகோதரர்) அப்துல்லாஹ் இப்னு அபீ தல்ஹாவின் தாயாராகவும் இருந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதருக்குச் சில பேரீச்ச மரங்களை (அவற்றின் கனிகளை மட்டும் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப்பாகக்) கொடுத்திருந்தார்கள். அவற்றை நபி(ஸல்) அவர்கள் தங்களின் அடிமைப் பெண்ணான, உஸாமா இப்னு ஜைத்டைய தாயார் உம்மு அய்மனுக்கு (அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள். கைபர்வாசிகளின் மீது போர் தொடுத்து முடித்து, மதீனாவுக்குத் திரும்பியபோது முஹாஜிர்கள், அன்சாரிகளின் மனீஹாக்களை (இரவலாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப்புச் செய்த பேரீச்சந் தோட்டங்களை) அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களும் என் தாயாரிடம் அவரின் பேரீச்ச மரங்களைத் திருப்பித் தந்துவிட்டார்கள். அவற்றுக்கு பதிலாக, உம்மு அய்மன் அவர்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் தோட்டத்திலிருந்து (சில மரங்களை அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள். [புஹாரி எண் 2630 ]

ஒருவர் நாம் வழங்கிய அன்பளிப்பை முறைகேடாக பயன்படுத்தினாலோ, அல்லது உரிய முறையில் பராமரிக்காதவராக இருந்தாலோ நாம் வழங்கிய திரும்ப பெறலாமா எனில் கூடவே கூடாது.

உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார்கள்;
ஒரு குதிரையின் மீது ஒருவரை நான் இறைவழியில் (போரிடுவதற்காக) ஏற்றியனுப்பினேன். (அவருக்கே அதை தர்மமாகக் கொடுத்து விட்டேன்.) அதை வைத்திருந்தவர் அதை (சரியாகப் பராமரிக்காமல்) பாழாக்கிவிட்டார். எனவே, அந்த குதிரையை அவரிடமிருந்து வாங்க விரும்பினேன். அவர் அதை விலை மலிவாக விற்று விடுவார் என்று எண்ணினேன். எனவே, நபி(ஸல்) அவர்களிடம் அது குறித்துக் கேட்டேன். அவர்கள், 'நீங்கள் அதை வாங்காதீர்கள்; அவர் உங்களுக்க அதை ஒரேயொரு திர்ஹமுக்குக் கொடுத்தாலும் சரியே! ஏனெனில், தன் தருமத்தைத் திரும்பப் பெறுபவன், தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கிற நாயைப் போன்றவன் ஆவான்" என்று கூறினார்கள். [புஹாரி எண் 2623 ]

அன்பானவர்களே! நம்முடைய அன்பளிப்புகளை அழகானதாக, அன்பு நிறைந்ததாக, அல்லாஹ்வின் அருள் நிறைந்ததாக ஆக்க முயற்ச்சிப்போம் இன்ஷா அல்லாஹ்.

ஞாயிறு, 12 ஜூலை, 2009

ஆக்கிரமிக்கும் ஆட்சியாளர்களும்- அனுமதி கேட்ட அமீருல்முஃமினீனும்

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

ஆக்கிரமிப்புகள் ஆட்சியாளர்கள் தொடங்கி சாமான்யர்கள் வரை செய்வதை காணலாம். நம் மாநிலத்தில் முதல்வராக இருந்த ஒருவர் தாழ்த்தப்பட்ட் சமுதாயத்திற்குசொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து பங்களா எழுப்பிக்கொண்டார் என்றும், மந்திரிகள் தொடங்கி வார்டு மெம்பர் வரை அவரவர் சக்திக்கு உட்பட்டு சிலர் ஆக்கிரமித்துள்ள செய்தியும் அவ்வப்போது பத்திரிக்கைகளில் வருவதுண்டு. சென்னையில் நாம் சொந்தமாக நிலம் வாங்கி அதற்கு சுற்றுவேலி எழுப்பாமல் சிறிதுகாலம் விட்டுவிடுவோமேயானால் ஒரு கும்பல் நமது இடத்தில் சிறு குடிசை போட்டுக்கொண்டு, பின்பு அதை காலி செய்ய சில ஆயிரங்களை கையூட்டாக கேட்பார்கள். அரசாங்க நிலத்தில் குடிசை போட்டு குறிப்பிட்ட வருஷம் வசித்து விட்டால், அவர்களுக்கு மாற்று இடம் தராதவரை அவர்களை காலி செய்ய முடியாது என்ற நிலை.மேலும் முஸ்லிம்களின் வளர்ச்சிக்காக முன்னோர்களால் தனமாக வழங்கப்பட்ட வக்ப் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் கையில் சிக்கியுள்ளதையும் அறிவோம். ஏரிகளும்-ஆறுகளும் ஆக்கிரமிப்பாளர்கள் கையில் சிக்கி சிறுத்து காட்சி தருகிறது. ஒரு காலத்தில் வயல் வரப்புகள் இருவர் பேசிக்கொண்டே நடந்து செல்லும் நிலை இருந்தது. இன்றோ வயலுக்கு சொந்தாக்காரர்கள் வரப்பை ஆக்கிரமித்து ஒரு கையளவு இடத்தில் நடந்து செல்லும் நிலை உள்ளது. ஓர் தாய் வயிற்றில் பிறந்த அண்ணன்-தம்பிக்குள் ஒரு சான் நில ஆக்கிரமிப்பால் ஓட்டாண்டியாக ஆகும் அளவுக்கு கோர்ட் படிஏறுகிறார்கள். இவ்வாறான ஆக்கிரமிப்புகள் பல விதங்களில் அரங்கேறி வருவதை நாம் அன்றாடம் காண்கிறோம்.


இஸ்லாம் இந்த ஆக்கிரமிப்பு செய்பவர்களை கடுமையாக எச்சரிக்கிறது.
அபூ ஸலமா(ரலி) அறிவித்தார்;
எனக்கும் வேறு சிலருக்கும் இடையே ஒரு நிலம் சம்பந்தமான தகராறு இருந்து வந்தது. அதை நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறினேன். அவர்கள் சொன்னார்கள்; அபூ ஸலமாவே! (பிறரின்) நிலத்தை (எடுத்துக் கொள்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், 'ஓர் அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவரின் கழுத்தில் ஏழு நிலங்கள் மாலையாக (மறுமையில்) கட்டித் தொங்க விடப்படும்" என்று கூறினார்கள்.[நூல் நூல் நூல்; 2453 ]
நடைபாதைக்கும் நல்வழி காட்டிய மார்க்கம்;
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நடைபாதை விஷயத்தில் மக்கள் சச்சரவு செய்தபோது, ஏழு முழங்கள் நிலத்தைப் பொதுவழியாக (போக்குவரத்துச் சாலையாக)விட்டுவிட வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள். [நூல்;புஹாரி 2473 ]


அதிகாரத்தை பயன்படுத்தி அடுத்தவர் நிலத்தை அபகரிக்கும் ஆட்சியாளர்களுக்கு மத்தியில் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் அடியொற்றி வாழ்ந்த அருமை உமர்[ரலி] அவர்கள், ஆட்சி தலைவராக இருந்தபோதும் அடுத்தவர் நில விஷயத்தில் அதுவும் தனது உடலை அடக்கம் செய்ய தேவைப்படும் ஆறு அடி நிலத்திற்க்காக சம்மந்தப்பட்டவரிடம் அனுமதி கேட்ட அற்புதமான வாழ்க்கை பாரீர்;

அம்ர்இப்னு மைமூன் அல்அவ்தீ அறிவித்தார்;
உமர் இப்னுல் கத்தாப்(ரலி) அவர்களை (மரணத் தருவாயில்) பார்த்தேன். தம் மகனை நோக்கி, அவர், 'அப்துல்லாஹ்வே! இறைநம்பிக்கையாளர்களின் தாயார் ஆயிஷா(ரலி) அவர்களிடம் போய் உமர் ஸலாம் சொல்லிவிட்டு, என்னுடைய தோழர்களான (நபி(ஸல்) அபூ பக்ர்(ரலி) ஆகிய இருவருடன் நானும் அடக்கம் செய்யப்படவேண்டும் என்பதற்கு அவர்களிடம் அனுமதி கேள்' எனக் கூறினார். அவ்வாறே கேட்கப்பட்டதும். ஆயிஷா(ரலி) நான் அந்த இடத்தை எனக்கென நாடியிருந்தேன். இருந்தாலும் இன்று நான் அவருக்காக அதைவிட்டுக் கொடுக்கிறேன்" என்றார். இப்னு உமர்(ரலி) திரும்பி வந்தபோது உமர்(ரலி) 'என்ன பதில் கிடைத்தது?' எனக் கேட்டார். இப்னு உமர்(ரலி) 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உங்களுக்கு அவர் அனுமதியளித்துவிட்டார்' எனக் கூறினார். உடனே உமர்(ரலி) 'நான் உறங்கவிருக்கும் அந்த இடத்தைத் தவிர வேறெதுவும் எனக்கு மிக முக்கியமானதாக இல்லை. நான் (என்னுடைய உயிர்) கைப்பற்றப்பட்டவுடன் என்னைச் சுமந்து சென்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் (மீண்டும்) என்னுடைய ஸலாமைக் கூறி, 'உமர் அனுமதி கேட்கிறார்' எனக் கூறுங்கள். எனக்கு அனுமதியளித்தால் என்னை அங்கு அடக்கம் செய்யுங்கள்; இல்லையெனில் என்னை முஸ்லிம்களின் பொது மையவாடியில் அடக்கி விடுங்கள்.[ ஹதீஸ் சுருக்கம் நூல்;புஹாரி]

இந்த ஹதீஸில், முதலில் தன் மகன் மூலம் அனுமதி பெற்ற உமர்[ரலி] அவர்கள், தன்னை அந்த இடத்தில் அடக்கம் செய்வதற்கு முன்பாக மறுபடியும் அன்னை ஆயிஷா[ரலி] அவர்களிடம் அனுமதி கேட்குமாறு கூறுகிறார்கள் என்றால், எந்த அளவுக்கு அல்லாஹ் உமர்[ரலி] அவர்களின் உள்ளத்தை விசாலமாக்கியிருக்கவேண்டும்? சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். முஸ்லிமல்லாத காந்தி அவர்கள், உமருடைய ஆட்சி போன்று ஆட்சி வேண்டும் என்று சிலாகித்து சொல்லும் அளவுக்கு உமர்[ரலி] அவர்களின் வாழ்க்கை/ஆட்சி இருந்தது. அந்த உமர்[ரலி] அவர்களின் கொள்கை வழிவந்த நாம் இனியாகிலும் அடுத்தவர் நிலத்தையோ, அடுத்தவர் உரிமையையோ பறிக்காமல் வாழ்ந்து மரணிக்க முயற்ச்சிப்போம்.

வியாழன், 9 ஜூலை, 2009

ஒன்றே செய்; அதையும் நன்றே செய்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏جَرِيرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ بْنِ عَبْدِ اللَّهِ الثَّقَفِيِّ ‏ ‏قَالَ ‏‏قُلْتُ يَا رَسُولَ اللَّهِ قُلْ لِي فِي الْإِسْلَامِ قَوْلًا لَا أَسْأَلُ عَنْهُ أَحَدًا بَعْدَكَ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏أَبِي أُسَامَةَ ‏ ‏غَيْرَكَ ‏ ‏قَالَ ‏ ‏قُلْ آمَنْتُ بِاللَّهِ فَاسْتَقِم"
அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்குப் பிறகு (அ) தங்களைத் தவிர எவரிடம் கேட்கத் தேவையில்லாதவாறு இஸ்லாத்தைக் குறித்து எனக்குச் சொல்லித் தாருங்கள்" என்று கேட்டுக் கொண்டேன்.அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மீது நான் நம்பிக்கை கொண்டேன் என்று கூறி, அந்த நம்பிக்கையில் உறுதியாக நிலைத்து நிற்பீராக!" என்று சொன்னார்கள்.அறிவிப்பாளர் : சுஃப்யான் பின் அப்தில்லாஹ் அஸ்ஸகஃபீ (ரலி] நூல்;முஸ்லிம்எண்;55]

இந்த நபிமொழியில் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளவேண்டும். பின்பு அதில் உறுதியாக நிலைத்து நிற்கவேண்டும் என்ற கருத்தை பார்க்கிறோம். முஸ்லிம்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வை நம்புவது எனில் கலிமா ஷகாதாவை மொழிந்துவிட்டால் போதும் என்ற எண்ணமுடையவர்களாக இருப்பதை பார்க்கிறோம். கலிமாவை மொழிந்தால் மட்டும் போதாது. அந்த கலிமா சொல்லும் தத்துவமான அல்லாஹ்வை உறுதியாக நம்பவேண்டும். அந்த உறுதி நம்முடைய உள்ளத்தில் ஆழப்பதிந்துவிடும் எனில், நம்முடைய வாழ்வின் எல்லா அம்சங்களும் சீர்பெற்றுவிடும்.

அல்லாஹ்வின் மீதே நம்முடைய முழு நம்பிக்கையும் அமையும்போது, அல்லாஹ்வுடைய அல்லாஹ்வின் தூதருடைய கட்டளைக்கு மாற்றமான எந்த ஒன்றையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் மறைந்துவிடும். ஷிர்க் மற்றும் பித்அத்தை எதிர்ப்பதால் நாம் சமூகத்தால் பல்வேறு இன்னல்களுக்கு ஆட்படும்போது, ஷைத்தான் லாவகமாக நம் உள்ளத்தில் ஒரு விதைபோடுவான் அதாவது 'ஊர் கூட்டி ஒப்பாரி வைக்கும்போது நீமட்டும் ஊருக்கு மாற்றமாக செய்து இப்படி துன்பப்படவேண்டுமா ? என்று. அப்போது அல்லாஹ்வின் மீதான உறுதியான நம்பிக்கை இருக்குமெனில், அங்கே நம்முடைய இறைவன் இருக்கிறான்.இந்த ஊர் என்ன உலகமே நம்மை எதிர்த்தாலும் நம்முடைய இறைவன் பாதுகாப்பான் என்ற சிந்தனை தோன்ற நாம் அங்கே சத்தியத்தை நிலைநாட்டவும், அதனால் ஏற்படும் இழப்புகளை தாங்கிக்கொள்ளவும் தயாராகிவிடுவோம்.

இதற்கு ஒரு அற்புதமான ஒரு சான்றை அருள்மறை குர்ஆண் நமக்கு விளக்குகிறது
இறைவனின் கட்டளைப்படி பிர்அவ்னிடம் சென்ற மூஸா[அலை]அவர்கள் தன்னை நபியென நிரூபிக்க இறைவன் வழங்கிய அற்புதங்களை நிகழ்த்தி காட்டியவுடன், இந்த அற்புதங்களை சூனியம் என்று வர்ணித்த பிர்அவ்ன், கைதேர்ந்த சூனியக்காரர்களை மூஸா[அலை]அவர்களுக்கு எதிராக களமிறக்க அப்போது நடந்தவைகளை திருக்குரான் இப்படி வர்ணிக்கிறது
وَجَاء السَّحَرَةُ فِرْعَوْنَ قَالْواْ إِنَّ لَنَا لأَجْرًا إِن كُنَّا نَحْنُ الْغَالِبِينَ
அவ்வாறே ஃபிர்அவ்னிடத்தில் சூனியக்காரர்கள் வந்தார்கள். அவர்கள், "நாங்கள் (மூஸாவை) வென்றுவிட்டால், நிச்சயமாக எங்களுக்கு அதற்குரிய வெகுமதி கிடைக்குமல்லவா?" என்;று கேட்டார்கள். (7:113)
قَالَ نَعَمْ وَإَنَّكُمْ لَمِنَ الْمُقَرَّبِينَ
அவன் கூறினான்; "ஆம் (உங்களுக்கு வெகுமதி கிடைக்கும்). இன்னும் நிச்சயமாக நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்." (7:114)
قَالُواْ يَا مُوسَى إِمَّا أَن تُلْقِيَ وَإِمَّا أَن نَّكُونَ نَحْنُ الْمُلْقِينَ
"மூஸாவே! முதலில் நீர் எறிகிறீரா? அல்லது நாங்கள் எறியட்டுமா?" என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர். (7:115)
قَالَ أَلْقُوْاْ فَلَمَّا أَلْقَوْاْ سَحَرُواْ أَعْيُنَ النَّاسِ وَاسْتَرْهَبُوهُمْ وَجَاءوا بِسِحْرٍ عَظِيمٍ
அதற்கு (மூஸா), "நீங்கள் (முதலில்) எறியுங்கள்" என்று கூறினார். அவ்வாறே அவர்கள் (தம் கைத்தடிகளை) எறிந்தார்கள்; மக்களின் கண்களை மருட்டி அவர்கள் திடுக்கிடும்படியான மக்தான சூனியத்தை செய்தனர். (7:116)
وَأَوْحَيْنَا إِلَى مُوسَى أَنْ أَلْقِ عَصَاكَ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ
அப்பொழுது நாம் "மூஸாவே! (இப்பொழுது) நீர் உம் கைத்தடியை எறியும்" என அவருக்கு வஹீ அறிவித்தோம்; அவ்வாறு அவர் எறியவே (அது பெரிய பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) கற்பனை செய்த யாவற்றையும் விழுங்கி விட்டது. (7:117)
فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُواْ يَعْمَلُونَ
இவ்வாறு உண்மை உறுதியாயிற்று, அவர்கள் செய்த (சூனியங்கள்) யாவும் வீணாகி விட்டன. (7:118)
فَغُلِبُواْ هُنَالِكَ وَانقَلَبُواْ صَاغِرِينَ
அங்கேயே தோற்கடிக்கப்பட்டார்கள்; அதனால் அவர்கள் சிறுமைப்பட்டார்கள். (7:119)
وَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ
அன்றியும் அந்தச் சூனியக்காரர்கள் சிரம் பணிந்து (7:120)
قَالُواْ آمَنَّا بِرِبِّ الْعَالَمِينَ
"அகிலங்களின் இறைவன் மீது நிச்சயமாக நாங்கள் ஈமான் கொண்டோம்; (7:121)
رَبِّ مُوسَى وَهَارُونَ
"அவனே மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவனாவான்" என்று கூறினார்கள். (7:122)
قَالَ فِرْعَوْنُ آمَنتُم بِهِ قَبْلَ أَن آذَنَ لَكُمْ إِنَّ هَـذَا لَمَكْرٌ مَّكَرْتُمُوهُ فِي الْمَدِينَةِ لِتُخْرِجُواْ مِنْهَا أَهْلَهَا فَسَوْفَ تَعْلَمُونَ
அதற்கு ஃபிர்அவ்ன் (அவர்களை நோக்கி) "உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு முன்னரே நீங்கள் அவர் மேல் ஈமான் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக இது ஒரு சூழ்ச்சியாகும் - இந்நகரவாசிகளை அதிலிருந்து வெளியேற்றுவதற்காக மூஸாவுடன் சேர்ந்து நீங்கள் செய்த சூழ்ச்சியேயாகும் - இதன் விளைவை நீங்கள் அதிசீக்கிரம் அறிந்து கொள்வீர்கள்! (7:123)
لأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُم مِّنْ خِلاَفٍ ثُمَّ لأُصَلِّبَنَّكُمْ أَجْمَعِينَ
"நிச்சயமாக நான் உங்கள் கைகளையும், கால்களையும் மாறுகை, மாறுகால் வாங்கி உங்கள் யாவரையும் சிலுவையில் அறைந்து (கொன்று) விடுவேன்" என்ற கூறினான். (7:124)
قَالُواْ إِنَّا إِلَى رَبِّنَا مُنقَلِبُونَ
அதற்கு அவர்கள் "(அவ்வாறாயின்) நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் தான் திரும்பிச் செல்வோம்; (எனவே இதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை)" என்று கூறினார்கள். (7:125)
وَمَا تَنقِمُ مِنَّا إِلاَّ أَنْ آمَنَّا بِآيَاتِ رَبِّنَا لَمَّا جَاءتْنَا رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ
"எங்களுக்கு எங்கள் இறைவனிடமிருந்து எந்துள்ள அத்தாட்சிகளை நாங்கள் நம்பினோம் என்பதற்காகவே நீ எங்களைப் பழி வாங்குகிறாய்?" என்று கூறி "எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக முஸ்லீம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!" (எனப் பிரார்தித்தனர்.) (7:126 ]

மேற்கண்ட வசனங்களில் மூஸா[அலை] அவர்களுக்கு போட்டியாக சூனியம் செய்துகாட்ட வந்தவர்கள் இறுதியில் தோல்வியடைந்து ஈமான் கொண்ட மாத்திரமே, பிர்அவ்னின் 'மாறுகால் மாறுகை வாங்குவேன்; சிலுவையில் அறைவேன் என்ற மிரட்டலை கண்டு அஞ்சாமல் முழுக்க முழுக்க அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்து அதை எதிர்கொண்டார்கள் எனில், இதுதான் உண்மையான அல்லாஹ்வின் மீதான உறுதியான நம்பிக்கை. எத்தகைய சோதனைகளை நாம் உலக வாழ்வில் சந்தித்தாலும், அது எந்த வடிவில் வந்தாலும் அல்லாஹ்வின் மீதே அசைக்கமுடியாத நம்பிக்கை வைக்கவேண்டும். அதுதான் மகத்தான மறுமை வெற்றிக்கும், இறையச்சத்துடன் கூடிய இம்மை வாழ்விற்கும் வழிகாட்டும்.
رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلإِيمَانِ أَنْ آمِنُواْ بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الأبْرَارِ
"எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; "எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக! இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!"

திங்கள், 6 ஜூலை, 2009

விசாரணையின்றி, சொர்க்கம் செல்வோர் யார்?

நாம் ஒரு இடத்தை குறிப்பிட்ட நேரத்தில் அடைய வேண்டியுள்ளது. ஆனால் நாம் செல்லும் சாலையோ போக்குவரத்து நெருக்கடியால் ஸ்தம்பித்து நிற்கிறது. இந்த நேரத்தில் ஒரு காவலர் வந்து வாகனங்களை ஒதுக்கி விட்டு நாம் மட்டும் செல்வதற்கு பாதை ஏற்ப்படுத்தி கொடுத்தால் நமது உள்ளம் எந்த அளவுக்கு குதூகலிக்குமோ அதுபோன்று, விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரி முன்பாக நின்றுகொண்டிருக்கிறோம். நம்மிடத்தில் உள்ள பொருட்களுக்கு எவ்வளவு வரி போடுவார்களோ என்ற பயம். இந்நிலையில், அந்த அதிகாரி நீங்கள் எவ்வித தடங்களும் இன்றி 'கிரீன்' சிக்னல் வழியாக செல்லுங்கள் என்று நம்மிடம் கூறினால் நாம் எவ்வாறு குதூகலிப்போமோ, இதை விட்ட மிகப்பெரிய விசாரணை மைய்யமான மறுமையில் எல்லோரும் விசாரணை எப்படியிருக்குமோ நம் தீர்ப்பு என்னாகுமோ என்று அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கும் நிலையில், அல்லாஹ் நபி[ஸல்]அவர்களின் உம்மத்திலிருந்து 70 ஆயிரம் பேர்களை எவ்வித விசாரணையும் இன்றி நீங்கள் சொர்க்கத்தில் நுழையுங்கள் என்று கூறுவான். அப்படிப்பட்ட ஒரு அற்புதமான பாக்கியம் யாருக்கு?
‏ حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏حُصَيْنُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏قَالَ كُنْتُ عِنْدَ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏فَقَالَ ‏ ‏أَيُّكُمْ رَأَى الْكَوْكَبَ الَّذِي ‏ ‏انْقَضَّ ‏ ‏الْبَارِحَةَ قُلْتُ أَنَا ثُمَّ قُلْتُ أَمَا إِنِّي لَمْ أَكُنْ فِي صَلَاةٍ وَلَكِنِّي لُدِغْتُ قَالَ فَمَاذَا صَنَعْتَ قُلْتُ اسْتَرْقَيْتُ قَالَ فَمَا حَمَلَكَ عَلَى ذَلِكَ قُلْتُ حَدِيثٌ ‏ ‏حَدَّثَنَاهُ ‏ ‏الشَّعْبِيُّ ‏ ‏فَقَالَ وَمَا حَدَّثَكُمْ ‏ ‏الشَّعْبِيُّ ‏ ‏قُلْتُ حَدَّثَنَا ‏ ‏عَنْ ‏ ‏بُرَيْدَةَ بْنِ حُصَيْبٍ الْأَسْلَمِيِّ ‏‏أَنَّهُ قَالَ لَا رُقْيَةَ إِلَّا مِنْ ‏ ‏عَيْنٍ ‏ ‏أَوْ ‏ ‏حُمَةٍ ‏ ‏فَقَالَ قَدْ أَحْسَنَ مَنْ انْتَهَى إِلَى مَا سَمِعَ وَلَكِنْ حَدَّثَنَا ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏عُرِضَتْ عَلَيَّ الْأُمَمُ فَرَأَيْتُ النَّبِيَّ وَمَعَهُ ‏ ‏الرُّهَيْطُ ‏ ‏وَالنَّبِيَّ وَمَعَهُ الرَّجُلُ وَالرَّجُلَانِ وَالنَّبِيَّ لَيْسَ مَعَهُ أَحَدٌ إِذْ رُفِعَ لِي سَوَادٌ عَظِيمٌ فَظَنَنْتُ أَنَّهُمْ أُمَّتِي فَقِيلَ لِي هَذَا ‏ ‏مُوسَى ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَقَوْمُهُ وَلَكِنْ انْظُرْ إِلَى الْأُفُقِ فَنَظَرْتُ فَإِذَا سَوَادٌ عَظِيمٌ فَقِيلَ لِي انْظُرْ إِلَى الْأُفُقِ الْآخَرِ فَإِذَا سَوَادٌ عَظِيمٌ فَقِيلَ لِي هَذِهِ أُمَّتُكَ وَمَعَهُمْ سَبْعُونَ أَلْفًا يَدْخُلُونَ الْجَنَّةَ بِغَيْرِ حِسَابٍ وَلَا عَذَابٍ ثُمَّ نَهَضَ فَدَخَلَ مَنْزِلَهُ ‏ ‏فَخَاضَ ‏ ‏النَّاسُ فِي أُولَئِكَ الَّذِينَ يَدْخُلُونَ الْجَنَّةَ بِغَيْرِ حِسَابٍ وَلَا عَذَابٍ فَقَالَ بَعْضُهُمْ فَلَعَلَّهُمْ الَّذِينَ صَحِبُوا رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَقَالَ بَعْضُهُمْ فَلَعَلَّهُمْ الَّذِينَ وُلِدُوا فِي الْإِسْلَامِ وَلَمْ يُشْرِكُوا بِاللَّهِ وَذَكَرُوا أَشْيَاءَ فَخَرَجَ عَلَيْهِمْ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ مَا الَّذِي ‏ ‏تَخُوضُونَ ‏ ‏فِيهِ فَأَخْبَرُوهُ فَقَالَ هُمْ الَّذِينَ لَا يَرْقُونَ وَلَا ‏ ‏يَسْتَرْقُونَ ‏ ‏وَلَا ‏ ‏يَتَطَيَّرُونَ ‏ ‏وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ فَقَامَ ‏ ‏عُكَّاشَةُ بْنُ مِحْصَنٍ ‏ ‏فَقَالَ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ فَقَالَ أَنْتَ مِنْهُمْ ثُمَّ قَامَ رَجُلٌ آخَرُ فَقَالَ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ فَقَالَ سَبَقَكَ بِهَا ‏ ‏عُكَّاشَةُ ‏‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏حُصَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عُرِضَتْ عَلَيَّ الْأُمَمُ ثُمَّ ذَكَرَ بَاقِيَ الْحَدِيثِ نَحْوَ حَدِيثِ ‏ ‏هُشَيْمٍ ‏ ‏وَلَمْ يَذْكُرْ أَوَّلَ حَدِيثِهِ
"எனக்குப் பல சமுதாயத்தவர் (எனது விண்ணேற்றத்தின்போது) எடுத்துக் காட்டப்பட்டனர். அங்கு, (தம்மைப் பின்பற்றிய பத்துக்குள் அடங்கும்) ஒரு சிறுகுழுவினரோடு ஓர் இறைத்தூதரையும் ஓரிருவரோடு ஓர் இறைத்தூதரையும் நான் கண்டேன். ஒருவர்கூட இல்லாத (தனியாளான) இறைத்தூதர் ஒருவரும் அங்கிருந்தார். பின்னர் எனக்கு ஒரு பெருங்கூட்டம் காட்டப்பட்டது. அவர்கள் என் சமுதாயத்தவர் என்று நான் எண்ணினேன். ஆனால், "இது (இறைத்தூதர்) மூஸாவும் அவருடைய சமுதாயமும் தான்; அடிவானத்தைப் பாருங்கள்" என்று என்னிடம் கூறப்பட்டது. அவ்வாறே நான் பார்த்தேன். அங்கு ஒரு பெரும் மக்கள் கூட்டம் இருந்தது. மேலும், "மற்றோர் அடிவானத்தைப் பாருங்கள்" என்றும் என்னிடம் கூறப்பட்டது; பார்த்தேன். அங்கு மாபெரும் மக்கள் கூட்டம் இருந்தது. அப்போது, "இதுதான் உங்கள் சமுதாயம். எந்த விசாரணையும் வேதனையுமின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இவர்களுள் அடங்குவர்" என்று எனக்குச் சொல்லப்பட்டது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறிவிட்டு, தம் இல்லத்துக்குள் சென்று விட்டார்கள்.எனவே, விசாரணையும் வேதனையுமின்றி சொர்க்கம் செல்வோர் யாவர் என்பது தொடர்பாக மக்கள் விவாதிக்கத் தொடங்கினார்கள். சிலர், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழமையைப் பெற்றவர்களே அவர்களாக இருக்கலாம்" என்று கூறினர். வேறு சிலர், "இஸ்லாத்தில் பிறந்து, அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காதவர்களாக இருக்கலாம்" என்றும் இன்னும் பலவற்றையும் கூறிக்கொண்டிருந்தனர்.அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு வந்து, "எதைப் பற்றி நீங்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். அப்போது, மக்கள் (நடந்த விவாதங்களைத்) தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அவர்கள் யாரெனில், யாருக்கும் மந்திரிக்க மாட்டார்கள்; யாரிடத்தும் மந்திரித்துக் கொள்ள மாட்டார்கள்; பறவைகளை வைத்து சகுனம் பார்க்கமாட்டார்கள்; முற்றிலும் தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்" என்று கூறினார்கள்.அப்போது உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் எழுந்து, "அவர்களுள் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவர்களுள் நீரும் ஒருவர்தாம்" என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் எழுந்து, "அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இந்த விஷயத்தில் உக்காஷா உம்மை முந்தி விட்டார்" என்று சொன்னார்கள்.அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி).[முஸ்லிம் ]

மேற்கண்ட பொன்மொழியில் விசாரணையும்- வேதனையும் இன்றி சுவர்க்கம் செல்பவர்கள் நான்கு காரியங்களை செய்யமாட்டார்கள் என்று நபியவர்கள் கூறுகிறார்கள்;

1 .யாருக்கும் மந்திரிக்க மாட்டார்கள்.

2 .யாரிடத்தும் மந்திரித்துக் கொள்ள மாட்டார்கள்.

3 . பறவைகளை வைத்து சகுனம் பார்க்கமாட்டார்கள்.

4 . முற்றிலும் தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்.

மேற்கண்ட நான்கு தன்மைகள் இன்றைக்கு முஸ்லிம்களில் பெரும்பான்மையோரிடம் இருப்பதை காணலாம். மந்திரிப்பதையே தொழிலாக கொண்ட மவ்லவி[?] களும் உண்டு. முஸ்லிம் மந்திரவாதியிடம் கயிருமுடிந்து கழுத்தில் இடுப்பில் கட்டிக்கொள்வது, தாவிஸை மந்திரித்து வாங்கி தாலியாக கழுத்தில் தொங்கவிட்டுக்கொள்வது. இது காணாது என்று ஏதாவது தீராத நோய் என்றால் சாமியார்களிடமும் மந்திரித்து திருநீறு பூசிக்கொள்வது. அவன் தரும் பொருட்களை வீட்டில் தொங்கவிடுவது அல்லது மாட்டிவைப்பது. இப்படி மந்திரித்தலில் எத்துனை வகைகள் உண்டோ அத்துனையையும் செய்யும் முஸ்லிம்களும் உண்டு.

மேலும், பறவைகளை வைத்து சகுனம் பார்ப்பது இன்று இல்லை என்றாலும், பறவைகளை வைத்து சில மூடநம்பிக்கைகளை நம்புவதை காணலாம். காக்கா கத்தினால் விருந்தாளி வருவார்கள் என்பது போன்ற நம்பிக்கைகளும் , பூனை குறுக்கே போனால், அல்லது விதவை குறுக்கே போனால், அல்லது வீட்டின் நிலைப்படி தட்டிவிட்டால் போகும் காரியம் உருப்படாது என்பன போன்ற சகுனம் பார்க்கும் பழக்கம் முஸ்லிம்கள் சிலரிடம் இருக்கிறது.

மேலும் முற்றிலும் இறைவனையே சார்ந்திருக்கும் உறுதியான நம்பிக்கையும் முஸ்லிம்களில் பலரிடம் இல்லாமையை காணலாம். தமக்கு ஏற்படும் சிற்சில துன்பங்களை தாங்கி கொள்ளமுடியாமல் தர்காக்களில் சரணடைந்து அங்கு அடங்கி மண்ணோடு மண்ணாகி போன அவுலியா என்று நம்பப்படுபவரிடம்,

எனது நோயை நீக்குங்கள்; பேயை ஒட்டுங்கள்; பிள்ளையை தாருங்கள்; விஷாவை தாருங்கள்; செல்வத்தை தாருங்கள் என்றெல்லாம் கேட்பதன்மூலம் இறைவன் மீது தங்களுக்குள்ள நம்பிக்கையை கேலிக்குரியதாக ஆக்குவதை பார்க்கிறோம். இந்நிலை மாறவேண்டும். மந்திரிப்பதையும் -சகுனம் பார்ப்பதையும்- மூட நம்பிக்கைகளையும் விட்டொழித்து முழுக்க முழுக்க இறைவனை சார்ந்து நாம் இருப்போமானால், விசாரணையும் வேதனையும் இன்றி சுவனம் செல்லும் அந்த 70 ஆயிரம் பேரில் நாமும் ஒருவராக ஆகமுடியும். எல்லாம் வல்ல அல்லாஹ் விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் நன்மக்களில் நம்மையும் ஆக்கி அருள்வானாக!

வியாழன், 2 ஜூலை, 2009

ஓரினச்சேர்க்கையும்-இஸ்லாமும்!

ஆணும்-பெண்ணும் இல்லறம் எனும் நல்லறம் மூலமாக இணைந்து அதன்மூலம் மனிதசமுதாயம் பல்கி பெருகும் வழிமுறையை இறைவன் ஏற்படுத்தியிருக்க, அதற்கு மாறாக நாகரீகம் என்ற பெயரிலும் சுதந்திரம் என்ற பெயரிலும் ஆணும்-ஆணும்,பெண்ணும்-பெண்ணும் இணையும் ஓரினச்சேர்க்கை மேலை நாடுகளில் தொடங்கி பின்பு நாளடைவில் உலக அளவில் தன் கிளை பரப்பி,இப்போது கற்ப்புக்கும்- கலாச்சாரத்திற்கும் பெயர் பெற்ற இந்தியாவிலும் மையம் கொண்டுள்ளது. இந்தியாவில் இந்த ஓரின சேர்க்கையாளர்கள் அடக்கி வாசித்ததற்கு காரணம், ஓரினச்சேர்க்கை குற்றம் என்று கூறும் 377 வது சட்டப்பிரிவு நடைமுறையில் இருந்ததுதான். இந்த சட்டப்பிரிவை நீக்கவேண்டும் என்று சமீபத்தில் சென்னையில் பேரணி நடத்தப்பட்டதும், அதையொட்டி மத்திய அமைச்சர் வீரப்பமொய்லி இந்த சட்டப்பிரிவை நீக்குவது பற்றி பரிசீலிப்போம் என்று சொன்னதும் நாம் அறிந்த ஒன்றே.


இந்நிலையில், ஓரின சேர்க்கையை கிரிமினல் குற்றமாக கருதக்கூடாது என்று தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், ஓரின சேர்க்கை சட்டவிரோதமானது அல்ல என்றும், அதன்மீதான கிரிமினல் முத்திரை நீக்கப்படுவதாகவும், 377 பிரிவு சட்டம் திருத்தம் செய்யப்படுவதாகவும் தீர்ப்பளித்துள்ளனர். இந்த தீர்ப்பு ஓரின சேர்க்கையாளர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்துள்ள நிலையில், இந்த ஓரின சேர்க்கை பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.


இந்த ஓரின சேர்க்கை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு சமுதாயத்திடம் இருந்தது. அதை ஒழிப்பதற்காகவே அல்லாஹ் லூத்[ அலை] எனும் நபியை அனுப்பி வைத்தான்.
وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنْ أَحَدٍ مِّن الْعَالَمِينَமேலும் லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்;) அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்; உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவோ முனைந்தீர்கள்?"[7:80 ]

إِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ شَهْوَةً مِّن دُونِ النِّسَاء بَلْ أَنتُمْ قَوْمٌ مُّسْرِفُونَ

"மெய்யாகவே நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள் - நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கின்றீர்கள்."[7:81 ]


இந்த இரு வசனங்களிலும் உலகில் முதன்முதலில் ஓரினசேர்க்கையை துவக்கிவைத்த சமுதாயம், நபிலூத்[அலை] அவர்கள் நபியாக அனுப்பப்பட்ட சமுதாயம்தான் என்பதை விளங்கமுடியும். இந்த தீயவர்களிடம் அவர்களின் தீய செயலை விட்டு விலகுமாறு நபி லூத்[அலை]அவர்கள் பிரச்சாரம் செய்தபோது, அந்த வழிகேடர்கள் நபிலூத்[அலை] அவர்களை பரிகாசம் செய்ததோடு அவர்களை ஊரை விட்டு விரட்டுமாறும் கொக்கரித்ததை அல்லாஹ் தன் அருள்மறையில் கூறுகின்றான்.
وَمَا كَانَ جَوَابَ قَوْمِهِ إِلاَّ أَن قَالُواْ أَخْرِجُوهُم مِّن قَرْيَتِكُمْ إِنَّهُمْ أُنَاسٌ يَتَطَهَّرُونَ
நிச்சயமாக இவர்கள் தூய்மையான மனிதர்களாக இருக்கிறார்கள். இவர்களை உங்கள் ஊரைவிட்டும் வெளியேற்றி விடுங்கள் என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும்) அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை.[7:82 ]
அழிக்க வந்த அமரர்களையும்[வானவர்கள்] 'அனுபவிக்க' நினைத்த பாவிகள்;

ஓரின சேர்க்கை அட்டூழியம் செய்து வந்த இந்தசமுதாயத்தை அழிக்க அல்லாஹ் வானவர்களை அழகிய ஆண்கள் வடிவில் அனுப்பிவைக்க, ஆண்கள் வடிவில் இருந்த வானவர்களை அனுபவிக்க அந்த வழிகெட்டவர்கள் விரைந்து வந்தபோது, லூத்[அலை] அவர்கள் கூறியதை அல்லாஹ்தான் அருள்மறையில் சொல்லிக்காட்டுகின்றான்.
وَجَاءهُ قَوْمُهُ يُهْرَعُونَ إِلَيْهِ وَمِن قَبْلُ كَانُواْ يَعْمَلُونَ السَّيِّئَاتِ قَالَ يَا قَوْمِ هَـؤُلاء بَنَاتِي هُنَّ أَطْهَرُ لَكُمْ فَاتَّقُواْ اللّهَ وَلاَ تُخْزُونِ فِي ضَيْفِي أَلَيْسَ مِنكُمْ رَجُلٌ رَّشِيدٌ
அவருடைய சமூகத்தார் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள்; இன்னும் முன்னிருந்தே அவர்கள் தீய செயல்களே செய்து கொண்டிருந்தார்கள். (அவர்களை நோக்கி லூத்) "என் சமூகத்தார்களே! இதோ இவர்கள் என் புதல்விகள்; இவர்கள் உங்களுக்கு(த் திருமணத்திற்கு)ப் பரிசத்தமானவர்கள்; எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சங்கள்; இன்னும் என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்தாதீர்கள்; நல்ல மனிதர் ஒருவர் (கூட) உங்களில் இல்லையா?" என்று கூறினார்.[11:78]
قَالُواْ لَقَدْ عَلِمْتَ مَا لَنَا فِي بَنَاتِكَ مِنْ حَقٍّ وَإِنَّكَ لَتَعْلَمُ مَا نُرِيدُ
(அதற்கு) அவர்கள் "உம்முடைய புதல்வியரில் எங்களுக்கு எந்த பாத்தியதையுமில்லை என்பதைத் திடமாக நீர் அறிந்திருக்கிறீர்; நிச்சயமாக நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நீர் அறிவீர்" என்று கூறினார்கள். (11:79)
قَالَ لَوْ أَنَّ لِي بِكُمْ قُوَّةً أَوْ آوِي إِلَى رُكْنٍ شَدِيدٍ
அதற்கு அவர் "உங்களைத் தடுக்க போதுமான பலம் எனக்கு இருக்கவேண்டுமே! அல்லது (உங்களைத் தடுக்கப் போதுமான) வலிமையுள்ள ஆதரவின்பால் நான் ஒதுங்கவேண்டுமே" என்று (விசனத்துடன்) கூறினார். (11:80)
மனித மிருகங்கள் மண்ணில் புதைந்தன;
(நபியே!) உம் உயிர் மீது சத்தியமாக, நிச்சயமாக அவர்கள் தம் மதிமயக்கத்தில் தட்டழிந்து கொண்டிருந்தார்கள். (15:72)
فَأَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُشْرِقِينَ
ஆகவே, பொழுது உதிக்கும் வேளையில், அவர்களை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. (15:73)
فَجَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةً مِّن سِجِّيلٍ
பின்பு அவர்களுடைய ஊரை மேல் கீழாகப் புரட்டி விட்டோம்; இன்னும், அவர்கள் மேல் சுடப்பட்ட களிமண்ணாலான கற்களைப் பொழியச் செய்தோம். (15:74)


மேற்கண்ட வசனங்களில், ஓரினச்சேர்க்கையாளர்களின் நிலை பற்றியும், அவர்களுக்கு அல்லாஹ் அளித்த தண்டனை பற்றியும் அறிந்தோம். இன்று நவீன உலகில் மீண்டும் ஓரினச்சேர்க்கையாளர்கள் கூட்டம் அரசின்/அதிகார வர்க்கத்தின் துணையோடு மீண்டும் அட்டூழியம் செய்ய புறப்பட்டுவிட்டது. இந்த பாவிகளை திருத்த லூத்
நபி வரப்போவதில்லை. இந்த பாவிகளை திருத்தும் கடமை மதத்திற்கு அப்பாற்பட்டு மனச்சாட்சியுள்ள ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இந்த இழிவான ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு இவ்வுலகில் எவ்வித அங்கீகாரமும் இல்லா நிலையை உருவாக்க ஒவ்வொருவரும் பாடுபடவேண்டும். அதிலும் குறிப்பாக லூத் நபியவர்களின் வழிவந்த நாம் இந்த தீமையை ஒழித்திட கடும் முயற்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும். ஓரினச்சேர்க்கையை அனுமதிக்க முயற்சிக்கும் அரசை எதிர்த்து வீரியமிக்க போராட்டங்களை தொடர்ந்து நடத்த சமுதாய அமைப்புகள் முன்வரவேண்டும். வழக்கம் போல முஸ்லீம் அமைப்புகள் ஆளுக்கொருநாள் என்று பந்தி வைத்து பரிமாறியது போல் போராட்டம் நடத்தாமல் ஒருங்கிணைந்து அனைத்து அமைப்புகளையும் திரட்டி போராடவேண்டும். மேலும், முஸ்லிமல்லாத மற்றும் ஒத்த கருத்துடையவர்களையும் இந்த போராட்டத்தில் பங்கெடுக்கசெய்து இந்தியாவில் இந்த இழிவான கலாச்சாரத்தை இல்லாமல் ஆக்குவோம் இன்ஷா அல்லாஹ்.