அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

சனி, 31 ஜனவரி, 2009

என் தலைவருக்கு எதிரி எனக்கும் எதிரி!

அறியாமைக் காலத்தில், அரபுக்கோத்திரங்களுக்கு மத்தியில், பகை வருமானால் அப்பகையை தலைமுறை தாண்டியும் நினைவில்கொண்டு பழிவாங்கும் பழக்கம் இருந்தது. ரசூல்[ஸல்] அவர்கள் மக்கா வெற்றியின்போது அப்பழக்கத்தை மக்களிடமிருந்து துடைத்தெரிந்தார்கள்.மக்கா வெற்றி கொள்ளப்பட்ட இரண்டாம் நாள் மக்களுக்கு நபி[ஸல்] அவர்கள் உரையாற்றினார்கள்.

அப்போது,குஜாஆ கிளையினர் மக்கா வெற்றியின் போது லைஸ் கிளையைச் சேர்ந்த ஒருவரைக் கொன்று விட்டனர். இதற்கு முன் அறியாமைக் காலத்தில் லைஸ் கிளையினர் குஜாஆ கிளையினரில் ஒருவரைக் கொன்றிருக்கின்றனர். அதற்குப் பழிவாங்கும் முகமாக இச்சந்தர்ப் பத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். இது தொடர்பாக நபி (ஸல்) இவ்வுரையில் குறிப்பிட்டுக் கூறினார்கள்:

'குஜாஆ சமூகத்தினரே! கொலை செய்வதை கைவிடுங்கள். கொலை புரிவது பயன்தக்கதாக இருந்தால் இதற்கு முன்னர் புரிந்த கொலைகளே உங்களுக்குப் போதும். இதற்குப் பிறகு அந்த மாபாதகச் செயலை செய்யாதீர்கள். நீங்கள் கொன்று விட்டவர்களுக்குரிய (கொலைக்கான நஷ்டஈட்டை) இன்று நான் நிறைவேற்றுகிறேன். இதற்குப் பின் யாராவது கொலை செய்யப்பட்டால் கொலையுண்டவன் உறவினர் இரண்டு வாய்ப்புகளில் ஒரு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒன்று, கொலையாளியைப் பழிக்குப் பழி கொல்வது அல்லது அவரிடமிருந்து கொலைக்கான நஷ்டஈட்டை வசூல் செய்து கொள்வது." யமன் வாசியான அபூ ஷாஹ் என்பவர் 'அல்லாஹ்வின்தூதரே! இதனை எனக்கு எழுதிக் கொடுங்கள்" என்றார். 'இதனை இவருக்கு எழுதி வழங்குங்கள்" என நபி (ஸல்) தோழர்களுக்குக் கூறினார்கள். நூல் ;ஸஹீஹ{ல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்.

அதுமட்டுமன்றி, தன்னுடைய சிறிய தந்தையார் ஹம்சா[ரலி] அவர்களை கொடூரமாக கொன்ற ஹிந்த் என்ற பெண்ணையும் அவரது அடிமையான வக்ஷி என்பாரையும் நபி[ஸல்]அவர்கள் பழிவாங்காமல் மன்னித்தார்கள். பின்பு இவ்விருவரும் இஸ்லாத்தை தழுவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சகாபாக்களில் சிலர் சில நேரங்களில் பழிவாங்கியே தீரவேண்டும் என்ற என்னத்தை வெளிப்படுத்தியதும் உண்டு. ஆனால் அவ்வாறு பழிவாங்கவேண்டும் என நினைத்தது தன் சொந்த எதிரிகளை அல்ல. மார்க்கத்தின் எதிரிகளை!
பத்ர் போர் கைதிகள் பற்றி நபி (ஸல்) தங்களது தோழர்களுடன் ஆலோசித்தார்கள். அப்போது அபூபக்கர் (ரழி) 'அல்லாஹ்வின் தூதரே! இவர்கள் நமது தந்தை வழி உறவினர்கள். நமது சகோதரர்கள் மற்றும் நெருக்கமான குடும்பத்தார்கள். எனவே, (இவர்களை கொலை செய்யாமல்) இவர்களிடம் (ஃபித்யா) ஈட்டுத்தொகை பெற்றுக் கொண்டு இவர்களை விடுதலை செய்வோம். நாம் வாங்கும் ஈட்டுத்தொகை இறைநிராகரிப்பாளர்களை எதிர்ப்பதற்கு நமக்கு உதவியாக இருக்கும். அதிவிரைவில் அல்லாஹ் இவர்களுக்கு நேர்வழி காட்டக் கூடும். அப்போது இவர்களும் நமக்கு உதவியாளர்களாக மாறுவர்" என்று கூறினார்கள்.பின்பு நபி (ஸல்) உமர் (ரழி) அவர்களிடம் 'கத்தாபின் மகனே! நீங்கள் என்ன யோசனை கூறுகிறீர்கள்?" எனக் கேட்டார்கள். 'அல்லாஹ்வின் மீது ஆணையாக அபூபக்கர் (ரழி) அவர்கள் கூறிய ஆலோசனையை நான் விரும்பவில்லை. மாறாக, இவர்களைக் கொலை செய்வதே எனது யோசனை. எனது இன்ன உறவினரை என்னிடம் கொடுங்கள். அவர் கழுத்தை நான் வெட்டுகிறேன். அக்கீல் இப்னு அபூதாலிபை அலீ (ரழி) அவர்களிடம் கொடுங்கள். அலீ (ரழி) அவர் கழுத்தை வெட்டட்டும். ஹம்ஜா (ரழி) அவர்களிடம் அவரது இன்ன சகோதரரை கொடுங்கள். ஹம்ஜா (ரழி) அவரது கழுத்தை வெட்டட்டும். இதன்மூலம் இணைவைப்பவர்கள் மீது எங்களது உள்ளத்தில் எந்தப் பிரியமும் இல்லை என்று அல்லாஹ் தெரிந்து கொள்வான். அது மட்டுமா! இப்போது கைது செய்யப்பட்டிருப்பவர்கள் குறைஷிகளின் தலைவர்களும் அவர்களை வழி நடத்தும் கொடுங்கோலர்களும் ஆவார்கள்" என்று உமர் (ரழி) கூறினார்கள்.அபூபக்ர் (ரழி) கூறியதையே நபி (ஸல்) ஏற்று கைதிகளிடம் ஈட்டுத்தொகைப் பெற்று உரிமையிட்டார்கள். ஈட்டுத் தொகை ஆயிரம் வெள்ளி நாணயங்களிருந்து நான்காயிரம் வெள்ளி நாணயங்கள் வரை நிர்ணயிக்கப்பட்டது. மக்காவாசிகள் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். மதீனாவாசிகளுக்கு எழுத, படிக்கத் தெரியாது. எனவே, ஈட்டுத் தொகை கொடுக்க இயலாத மக்கா கைதிகள் மதீனாவை சேர்ந்த பத்து சிறுவர்களுக்கு எழுத, படிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று பணிக்கப்பட்டனர். அவ்வாறு சிறுவர்களுக்கு நன்கு எழுத, படிக்கக் கற்றுக் கொடுத்தவுடன் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.உமர் (ரலி)கூறுகிறார்கள்; அபூபக்கர் (ரழி) கூறியதையே நபி (ஸல்) விரும்பினார்கள். நான் கூறியதை விரும்பவில்லை. எனவே கைதிகளிடம் ஈட்டுத்தொகைப் பெற்று உரிமையிட்டார்கள். அதற்கு அடுத்த நாள் நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். நபி (ஸல்) அவர்களும், அபூபக்கர் (ரழி) அவர்களும் அழுதவர்களாக இருந்தார்கள். நான் 'அல்லாஹ்வின் தூதரே! நீங்களும் உங்களது தோழரும் ஏன் அழுகிறீர்கள்? அழுகைக்குரிய செய்தி எதுவும் இருப்பின், முடிந்தால் நானும் அழுகிறேன். முடியவில்லையென்றால் நீங்கள் அழுவதற்காக நானும் அழ முயல்கிறேன்" என்றேன். அதற்கு நபி (ஸல்) 'ஈட்டுத்தொகை வாங்கியதின் காரணமாக உமது தோழர்களுக்கு ஏற்பட்டதை எண்ணி நான் அழுகிறேன். அருகில் உள்ள ஒரு மரத்தை சுட்டிக் காண்பித்து இம்மரத்தை விட நெருக்கமாக அவர்களுக்குரிய வேதனை எனக்குக் காண்பிக்கப்பட்டது" என்றார்கள்.இது தொடர்பாகவே அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கினான்:

(இஸ்லாமையும் முஸ்லிம்களையும் அழித்தொழிக்க வந்த) எதிரிகளைக் கொன்று குவிக்கும் வரை அவர்களை கைதியாக்குவது இறைத்தூதருக்கு ஆகுமானதல்ல. நீங்கள் இவ்வுலகப் பொருளை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ (உங்களுக்கு) மறுமை வாழ்வை விரும்புகிறான். அல்லாஹ் மிகைத்தவனும் ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான். அல்லாஹ்விடம் (பத்ர் போரில் கலந்த முஸ்லிம்களுக்கு மன்னிப்பு உண்டு என்ற) விதி ஏற்கனவே உறுதி செய்யப்படாமலிருப்பின் நீங்கள் (பத்ர் போரில் கைதிகளிடமிருந்து ஈட்டுத் தொகையை) வாங்கியதில் மகத்தானதொரு வேதனை உங்களைப் பிடித்திருக்கும். (அல்குர்ஆன் 8:67, 68)

இன்று நாம் பகைமை பாராட்டுவது மார்க்கத்தின்அடிப்படையிலா ? இல்லை. நம் தலைவர்கள் ,எந்த அமைப்பை நல்ல அமைப்பு என்கிறார்களோ எவர்களை நல்லவர்கள் என்று கூறுகிறார்களோ அவர்களோடு நாமும் உறவாக இருக்கிறோம்., நம் தலைவர்கள் எந்த அமைப்பை சரியில்லை என்கிறார்களோ அந்த அமைப்பை திட்டித்தீர்க்கிறோம். அந்த அமைப்பை சேர்ந்தவர்களை கன்டால் சலாம் சொல்வது கூட கிடையாது. விதிவிலக்காக சிலர், மாற்று அமைப்பை சேர்ந்தவர்களோடு சகமுஸ்லிம்கள் என்ற ரீதியில் தொடர்பு வைத்திருப்பது தெரிந்தால் அவர் துரோகி குற்றம் சாட்டப்பட்டு நீக்கப்படுவார். ஆக, நம்முடைய நேசமும்-பிரிவும் அல்லாஹ்வுக்காக என்ற நிலைமாறி, நம்முடைய நேசமும்-பிரிவும் அபிமான தலைவருக்காக! என்ற நிலை வந்துவிட்டது. இந்த நிலை மாறவேண்டும். சத்திய சகாபாக்கள் போன்று உறவும்-பிரிவும் மார்க்கத்திற்காக என்ற நிலை வரவேண்டும். அதுதான் உண்மையான தவ்ஹீத்வாதிகளுக்கு இம்மை மறுமை பயனளிக்கும்.

செவ்வாய், 27 ஜனவரி, 2009

முஸ்லிமல்லாதவர்களுக்காக நிவாரனம்வேண்டி பிரார்த்திக்கலாமா?

தமிழக முஸ்லிம்களில் அரசியல் கட்சிகளில் அங்கம்வகிப்பவர்களும், நடிகர்களை நேசிப்பவர்களும் தங்களின் தலைவருக்கு/ நேசருக்கு நோய் என்றால் அவருக்காக அல்லாஹ்விடம் து'ஆ செய்வதும், சிலநேரங்களில் அவர்களுக்காக மொட்டை போட்டுக்கொள்வதையும் பார்க்கிறோம்.

பராஉ வின் ஆஸிப்(ரலி) அறிவித்தார்;
நபி(ஸல்) அவர்கள் ஏழு செயல்களைச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்; ஏழு செயல்களிலிருந்து எங்களைத் தடுத்தார்கள். அவை (செய்யும்படிக் கட்டளையிட்ட ஏழு செயல்கள்) இவை தாம்;
1. நோயாளிகளை நலம் விசாரிப்பது.
2. ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வது.
3. தும்மியவருக்கு அவர், 'அல்ஹம்துலில்லாஹ்' ('அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்' என்று) சொன்னால், 'யர்ஹமுக்கல்லாஹ்' (அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக!) என்று பிரார்த்திப்பது.
4. சலாமுக்கு (முகமனுக்கு) பதிலுரைப்பது.
5. அக்கிரமத்திற்குள்ளானவருக்கு உதவுவது.
6. விருந்துக்காக அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக் கொள்வது.
7. சத்தியம் செய்தவரின் சத்தியத்தை நிறைவேற்ற உதவுவது.

நூல்;புஹாரி,எண் 2445

இந்த ஹதீஸில் நோய் விசாரிப்பது நபியவர்களால் கட்டளையிடப்பட்டுள்ளதாலும், முஸ்லிம்கள்-முஸ்லிமல்லாதவர்கள் என்று நபி[ஸல்]அவர்கள் பிரித்து கூறாததாலும் முஸ்லிமல்லாதவர்களுக்கு நிவாரணம் வேண்டி து'ஆ செய்யலாம் என்ற முடிவுக்கு சிலர்வரலாம். ஆனால் நபி[ஸல்]அவர்கள் முஸ்லிம்களை நோய்விசாரிக்கும்போது அவர்களுக்கு நிவாரணம் வேண்டி பிரார்த்தித்துள்ளார்கள். அதே நேரத்தில் முஸ்லிமல்லாத நோய்வாய்பட்டவர்களை சந்திக்கும்போது, அவர்களிடத்தில் தாஃவா மட்டும்தான் செய்துள்ளார்கள்.

முஸய்யப் இப்னு ஹஸ்ன் இப்னி அபீ வஹ்ப்(ரலி) அறிவித்தார் ;
அபூ தாலிப் அவர்களுக்கு மரண வேளை வந்துவிட்டபோது நபி(ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அப்போது அபூ ஜஹ்ல் அவரருகே இருந்தான். நபி(ஸல்) அவர்கள், 'என் பெரிய தந்தையே! 'லா இலாஹ இல்லல்லாஹ்' - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை' என்று சொல்லுங்கள். இச்சொல்லை (நீங்கள் சொல்லிவிட்டால் அதை) வைத்து (மறுமையில் நரகத்திலிருந்து விடுதலை கேட்டு) உங்களுக்காக அல்லாஹ்விடம் நான் வாதாடுவேன்" என்று கூறினார்கள். அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவும், 'அபூ தாலிபே! (பெரியவர், உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா புறக்கணிக்கப் போகிறீர்கள்?' என்று கேட்டனர். அவ்விருவரும் இவ்வாறே தொடர்ந்து அவரிடம் பேச இறுதியில் அவர், '(என் இறப்பு என் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில் தான் (நிகழும்)" என்று அவர்களிடம் கூறினார். எனவே, நபி(ஸல்) அவர்கள், 'நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரக்கூடாது என்று) எனக்குத் தடைவிதிக்கப்படும் வரை" என்று கூறினார்கள். அப்போதுதான், 'இணைவைப்பவர்கள் நரகவாசிகள் தாம் என்பது தெளிவாகிவிட்ட பின்பும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவதற்கு, அவர்கள் உறவினர்களாயிருந்தாலும் கூட இறைத்தூதருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் உரிமையில்லை" என்னும் (திருக்குர்ஆன் 09: 113) திருக்குர்ஆன் வசனமும, '(நபியே!) நீங்கள் விரும்பியவரை உங்களால் நேர்வழியில் செலுத்தி விட முடியாது" என்னும் (திருக்குர்ஆன் 28:56) திருக்குர்ஆன் வசனமும அருளப்பட்டன.
நூல்;புஹாரி,எண் 3884

இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இறைத்தூதர்[ஸல்]அவர்களுக்கு அரணாக இருந்த அபூதாலிப் அவர்கள் நோய்வாய்ப்பட்டபோது, அபூதாலிப் அவர்களுக்கு நிவாரனம்வேண்டி நபி[ஸல்]அவர்கள் து'ஆ செய்யவில்லை. மாறாக அபூதாலிப் அவர்களை இஸ்லாத்தின்பால் அழைக்கும் தாஃவா தான் செய்தார்கள் என்பதிலிருந்து முஸ்லிமல்லாதவர்களுக்காக நோய்நிவாரணம் தேடக்கூடாது என்பதை விளங்கலாம்.மேலும்,

அனஸ்(ரலி) கூறினார் யூதர்களின் அடிமையொருவர் நபி(ஸல்) அவர்களுக்கு ஊழியம் செய்துவந்தார். அவர் நோயுற்றுவிட்டார். அவரை உடல் நலம் விசாரிக்கச் சென்ற நபி(ஸல்) அவர்கள் 'இஸ்லாத்தை ஏற்றுக் கொள்' என்று கூறினார்கள். அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்டார்.
நூல்;புஹாரி,எண் 5657

இந்த செய்தியிலும் நோயாளியிடம் நபியவர்கள் தாஃவா மட்டுமே செய்துள்ளனர் என்பதை வைத்துப்பார்க்கும்போது, முஸ்லிமல்லாதவர்களின் நேர்வழிக்காக அல்லாஹ்விடம் நாம் து'ஆ செய்யலாமேயன்றி அவர்களுக்காக வேறு எந்த து'ஆவும் செய்ய அனுமதியில்லை என்பதை விளங்கிக்கொள்ளலாம். எனவே முஸ்லிம்கள் இதுபோன்ற செயல்களைவிட்டும் தவிர்ந்துகொள்வது சிறந்ததாகும்.

சனி, 24 ஜனவரி, 2009

நபித்தோழர்கள்வாழ்வும்--நமதுநிலையும்[பாகம் 4]

'சந்தேகப்புயலடிச்சா அங்கே சந்தோசம் தொலைந்துவிடும்' என்ற வாக்கிற்கேற்ப இன்று நமக்கு மத்தியில் ஏற்படும் சந்தேகங்கள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதை பார்க்கிறோம்.
கணவன்-மனைவிக்கு இடையில் ஏற்படும் சந்தேகங்கள் குடும்ப நலனை பாதிக்கிறது.
பெற்றோர்-பிள்ளைகள் இடையில் ஏற்படும் சந்தேகங்கள் அன்பு பிணைப்புக்கு வேட்டுவைக்கிறது.
நண்பர்கள் மத்தியில் ஏற்படும் சந்தேகங்கள் பகைமை நெருப்பை மூட்டுகிறது.
இயக்க தலைவர்களுக்கு மத்தியில் ஏற்படும் சந்தேகங்கள் சமுதாய நலனை பாதிக்கிறது.
இதற்கு தீர்வுதான் என்ன? ஒரே வழி சந்தேகத்தை விட்டொழிப்பதுதான்! அல்லாஹ் கூறுகின்றான்;

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِّنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَّحِيمٌ
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.49:12

இன்று நமது நிலைஎன்ன? எடுத்ததெர்க்கெல்லாம் சந்தேகம். ஒரு ஆணையும் பெண்ணையும் தனியாக பேசிக்கொண்டிருக்கும் நிலையில் கன்டால் அவ்விருவருக்கு மத்தியில் என்ன உறவு, என்ன விசயமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் விசாரிப்பதற்கு முன்பே, அவ்விருவருக்கும் மத்தியில் எதோ இருக்கிறது என்று சந்தேக முடிவெடுத்து, அந்த முடிவை உண்மைப்படுத்துவதற்க்காக துருவித்துருவி விசாரணை நடத்துவது. இதுதானே நம்மிடையே இன்று நடந்துகொண்டிருக்கிறது.

விளைவுகள் என்ன? தவறு செய்தவர்களை விட சந்தேகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ளதைக்கானலாம்.
காவல்த்துறையின் சந்தேக நடவடிக்கை சிலநேரங்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதையும் பல நேரங்களில் அப்பாவிகள் வாழ்க்கை கேள்விக்குறியாக ஆக்கப்படுவதையும் காணலாம்.

மேலும்,மனிதன் என்ற அடிப்படையில் என்றோ ஒருநாள் ஒருதவறு செய்தான் என்பதற்காக அவனை எப்போதும் அந்த தவறை செய்யக்கூடியவனாகவே சந்தேகத்துடன் பார்ப்பது நம்மிடையே அதிகமாக உள்ளதை பார்க்கிறோம். நல்லவன் கெட்டவனாகவும், கெட்டவன் நல்லவனாகவும் மாறுவது மனித இயல்புதான் என்பதை மறந்து, தங்களை தாங்களேதூய்மைப்படுத்துவதை பார்க்கிறோம். அல்லாஹ் கூறுகின்றான்;


أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ يُزَكُّونَ أَنفُسَهُمْ بَلِ اللّهُ يُزَكِّي مَن يَشَاء وَلاَ يُظْلَمُونَ فَتِيلاً
(நபியே!) தங்களைத் தாங்களே பரிசுத்தமானவர்கள் என்(று கூறிக்கொள்)பவர்களை நீர் பார்க்கவில்லையா? (அவர்கள் கூறுவதுபோல்) அல்ல! அல்லாஹ் தான் நாடியவர்களைப் பரிசுத்தம் ஆக்குவான். (இது விஷயத்தில்) எவரும் ஓர் அணுவளவும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள். 4:49

மேலும்,
மற்றவர்கள் சந்தேகப்படும் சூழ்நிலையும் நாம் ஏற்படுத்திவிடக்கூடாது.
ஸஃபிய்யா பின்த்து ஹுயை(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில் தங்கி) இஃதிகாஃப் இருந்தார்கள். ஓர் இரவில் அவர்களைச் சந்திப்பதற்காக அவர்களிடம் நான் சென்றேன். நான் அவர்களிடம் (சிறிது நேரம்) பேசிவிட்டு திரும்பிச் செல்ல எழுந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்களும் என்னைத் திருப்பியனுப்புவதற்காக என்னுடன் வந்தார்கள். -உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களின் வீடே அவர்களின் இருப்பிடமாக இருந்தது. (என அறிவிப்பாளர் கூறுகிறார்.) அப்போது அன்சாரிகளில் இருவர்அந்த வழியாகச் சென்றார்கள். அவர்கள் நபி(ஸல்) அவர்களைக் கண்டவுடன் விரைந்து நடக்கலானார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'நிதானமாகச் செல்லுங்கள். இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த்து ஹுயை தான்" என்றார்கள். இதைக் கேட்ட அவ்விருவரும், 'அல்லாஹ் தூயவன் இறைத்தூதர் அவர்களே! (தங்களையா நாங்கள் சந்தேகிப்போம்)" என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், 'ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் (கூட) ஓடுகிறான். உங்கள் உள்ளங்களில் அவன் தீய எண்ணம் எதையேனும் போட்டு விடுவான்.. அல்லது உங்கள் உள்ளங்களில் (சந்தேகம்) எதையாவது அவன் போட்டு விடுவான்... என்று நான் அஞ்சினேன்" என்றார்கள்.
நூல்;புஹாரி,எண் 3281

எனவே, மூமீன்கள்மீது நல்லெண்ணம் கொள்வோம்- [வெளிப்படையான] தவறுகளையன்றி, மற்றவைகளை துருவித்துருவி ஆராய்ந்து நமக்கு மத்தியில் நல்லிணக்கத்தை கெடுத்துக்கொள்ளாமல் அனைவரும் சகோதர்களாக வாழ்வோம்!

புதன், 21 ஜனவரி, 2009

நபித்தோழர்கள் வாழ்வும்- நமதுநிலையும்[பாகம் 3]

யானை தன்தலையில் தானே மண்ணை அள்ளி போட்டகதையாக, அல்லாஹ்வின் சாபத்தை வழிய கேட்டு வாங்குவதை ஒரு சாதனையாக கருதக்கூடிய நிலையை பார்க்கிறோம். சாபங்கள் பலவகை உண்டு. மனிதர்களின் சாபம், நபிமார்களின் சாபம், மலக்குகளின் சாபம், அல்லாஹ்வின் சாபம். இதில் எந்த சாபத்தை பெற்றாலும் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பமுடியாது.

அதனால்தான் நபி[ஸல்]அவர்கள் கூறினார்கள்;
ஒரு மூமின் திட்டுபவனாகவோ,சபிப்பவனாகவோ, கெட்ட செயல் செய்பவனாகவோ, கெட்டவார்த்தைகள் பெசுபவனாகவோ இருக்கமாட்டன் என்றார்கள்.நூல்;திர்மிதி.

சபிப்பது முமீனின் பண்பல்ல என்று தெளிவாக தெரிந்த பின்னும் அடுத்தவர்களை சபிப்பது இன்று சாதாரணமாகி விட்டது. அது மட்டுமன்றி, தான் சொன்ன கருத்தை நிலைநாட்ட முக்காப்புலா[சாரி] முபாகலா எனும் அல்லாஹ்வின் சாபத்தை வேண்டும் நிகழ்ச்சிகளும் அரங்கேறுகிறது. இந்த முபாகலாவிற்கு ஆதாரமாக சொல்லப்படும் வசனத்தை கவனியுங்கள்;

அல்லாஹ்விடம் ஈசாவுக்கு உதாரணம் ஆதம் ஆவார்.அவரை மண்ணால்படைத்து ஆகு என்று அவரிடம் கூறினான்.உடனே அவர் ஆகிவிட்டார்.
இந்த உண்மை உம் இறைவனிடமிருந்து வந்தது. எனவே சந்தேகிப்பவராக நீர் ஆகிவிடாதீர்!
உமக்கு விளக்கம் வந்தபின் இது குறித்து யாரேனும் உம்மிடம் தர்க்கித்தால் 'வாருங்கள்! எங்கள்பிள்ளைகளையும் , உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும் அழைப்போம்.நாங்களும் வருகிறோம் நீங்களும் வாருங்கள்! பின்னர் இறைவனிடம் இறைஞ்சி பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தை கேட்போம்' எனக்கூறுவீராக!3;௫௯ 60.61

இந்த வசனத்தில் நபி ஈஸா[அலை] அவர்களின் பிறப்பு பற்றி எவரேனும் தர்க்கித்தால் முபாகலாவுக்கு அழைப்பு விடுக்குமாறு தான் இறைவன் கூறுகிறான். சொந்த பிரச்சினையில் அல்ல. இந்த வசனத்தை வைத்துக்கொண்டு வேறு பிரச்சினைகளுக்கு முபாகலாவுக்கு வாருங்கள் என்று நபி[ஸல்] அவர்களோ, சகாபாக்களோ யாருக்கும் சவால் விட்டதில்லை. முபாகலாவும் நடத்தியதில்லை.

ஆனால் இன்று உலகத்தில் தன்னை தூய்மையானவனாக அடையாளம் காட்டிகொள்வதற்காக தன்னையும், தனது குடும்பத்தாரையும்- எதிரியையும் அவரது குடும்பத்தாரையும் அல்லாஹ்வின் சாபத்துக்குரியவர்களாக மாற்றுவது எந்த ஆதாரத்தின் அடிப்படையில்! இதில் வேதனை என்னவென்றால் முபாகலா என்றால் என்னவென்றே அறியாத பச்சிளம் குழந்தைகளையும் இதில் ஈடுபடுத்தி அவர்களுக்கும் அல்லாஹ்வின் சாபத்தை வாங்கித்தருவதுதான்.

தவறு செய்தவரைக்கூட சபிப்பதை நபியவர்கள் தடுத்த செய்தி இதோ;
உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் 'அப்துல்லாஹ்' என்றொருவர் இருந்தார். அவர் 'ஹிமார்' (கழுதை) என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்டுவந்தார். அவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களை சிரிக்கவைப்பார். மது அருந்தியதற்காக அவரை நபி(ஸல்) அவர்கள் அடித்துள்ளார்கள். (போதையிலிருந்த) அவர் ஒரு நாள் (நபி(ஸல்) அவர்களிடம்) கொண்டு வரப்பட்டார். அவரை அடிக்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர் அடிக்கப்பட்டார். அப்போது (அங்கிருந்த) மக்களில் ஒருவர், 'இறைவா! இவர் மீது உன் சாபம் ஏற்படட்டும்! இவர் (குடித்ததற்காக) எத்தனை முறை கொண்டு வரப்பட்டுள்ளார்!' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இவரை சபிக்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார் என்றே நான் அறிந்துள்ளேன்' என்று கூறினார்கள்.
நூல்;புஹாரி,எண் 6780

முபாகலாவில் நாம் சந்தித்தவர்கள் முஸ்லிம்கள் இல்லையா? அல்லாஹ்வையும் அவன் தூதரையும் நேசிக்கக்கூடியவர்கள் இல்லையா? அப்படிப்பட்ட நம் சகோதரனுக்கு/அவனது குடும்பத்துக்கு அல்லாஹ்வின் சாபத்தை பெற்றுத்தருவதுதான் ஒரு முமீனின் பண்பா? என்பதை இனியாவது சிந்தித்து அல்லாஹ்வின் தண்டனைக்கு அஞ்சி சகோதரர்களுக்கு மத்தியில் சாபமிட்டுக்கொள்ளாமல் ஒருவருக்கொருவர் அல்லாஹ்வின் அருளை வேண்டி பிரார்த்திப்போம்.

திங்கள், 19 ஜனவரி, 2009

ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஒரு ஏகத்துவ கடிதம்!

அன்பிற்கினிய சகோதரர் ஏ.ஆர். ரஹ்மான் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்,
தங்கள் 'தங்க பூமி' விருதை வென்று, உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் மட்டுமன்றி,இந்தியாவின் பிரதமர்-தமிழகமுதல்வர் இப்படி பரவலாக அனைத்து தரப்பாரும் உங்களை வாழ்த்திவரும் நிலையில், நீங்கள் சார்ந்த இஸ்லாமிய மார்க்கத்தையுடைய நாங்கள் மட்டும் வாழ்த்தமுடியாத நிலையில் உள்ளோம். காரணம் மனமின்மையால் அல்ல.மார்க்கம் தடுப்பதால்!

தாங்கள் இஸ்லாத்தின் மீது ஆழமான பற்றுடையவர் என்பதையும், தவறாமல் தொழுகை உள்ளிட்ட அமல்களை நிறைவேற்றுபவர் என்பதையும், ஹஜ் கடமையை முடித்தவர் என்பதையும், தங்களின் உரை துவக்கத்திலும்சரி, பிறர் தங்களை பாரட்டும்போதும்சரி 'எல்லாப்புகழும் இறைவனுக்கே' என்று நீங்கள் சொல்ல மறப்பதில்லை என்பதையும் நாங்கள் அறிந்தே வைத்துள்ளோம்.

இருப்பினும் தங்களிடத்தின் அன்போடு இரு கோரிக்கைகள் வைக்கக் விரும்புகிறோம். முதலாவது நீங்கள், பொன்னேரி அருகேயுள்ள பூதூர் என்ற இடத்தில் வாழ்ந்த பாபா அவர்கள்மீது ஆழ்ந்த மதிப்பு வைத்திருந்ததாகவும் , நீங்கள் எதை செய்யவிரும்பினாலும் அவரிடத்தில் ஆலோசனை அல்லது ஆசி பெற்றுதான் செய்துவந்ததாகவும், அந்த பாபா மறைவுக்குப்பின் அவரது அடக்கத்தலத்தை தங்களின் நேரடிப்பரமரிப்பில் கவனித்து வருவதாகவும் நீண்ட நாட்களுக்குமுன் பத்திரிக்கையில் படித்த நினைவு. [தவறென்றால் மன்னிக்கவும்]

மேலும், மேற்கண்ட படத்தில் ஒரு தர்காவில் நீங்கள் வழிபடுகிறீர்கள். தர்கா என்பது நல்லடியார் என்று நம்பப்பட்ட ஒருவர் இறந்தவுடன் அவரை அடக்கம் செய்து அவர்இடத்தில் உதவி தேடுவது! அல்லது அவர் மூலம் உதவி தேடுவது! இந்த இரண்டுமே மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும்.

இறந்தவர்களின் கப்ருகளை உயர்த்தாதீர்கள்- அதை பூசாதீர்கள்-அதில் விளக்கு ஏற்றாதீர்கள்-உங்கள் செருப்பு வார் அறுந்தாலும் அதை அல்லாஹ்விடமே கேளுங்கள் என்றெல்லாம் நமது நபி[ஸல்] அவர்கள் கட்டளையிட்டிருக்கும் போது அந்த தர்காக்களுக்கு தாங்கள் முக்கியத்துவம் கொடுப்பதை தவிர்த்து, இறைவனுக்கு இணைவைப்பதை விட்டு விலகுமாறும் உங்களை வேண்டுகிறோம்.

அடுத்து தங்களின் இசைத்துறை என்பது இஸ்லாமிய அடிப்படையில் ஹராம் எனபதை நீங்கள் அறிந்தே இருப்பீர்கள் என நம்புகிறோம். 'இசைக்கருவிகளை உடைத்து எறியவே நான் வந்தேன் ' என்ற நபி[ஸல்] அவர்களின் நல்லுபதேசத்தை உங்களுக்கு நினைவூட்டுகிறோம். இந்த துறையின்மூலம் நீங்கள் எத்துனை கோடிகளை ஈட்டினாலும், எத்துனை விருதுகளை பெற்றாலும் அவை மார்க்கத்தில் ஆகுமாக்கப்பட்டதல்ல என்பதையும் பணிவோடு சுட்டிக்காட்டுகிறோம்.

எனவே, சகோதரர் அவர்களே! நீங்கள் அல்லாஹ்வை மட்டுமே வணக்குங்கள்! அவனுக்கு யாதொன்றையும்/யாரையும் இணையாக்காதீர்கள். இசைத்துறையை விட்டு விலகி, அல்லாஹ் உங்களுக்களித்த அற்புதமான அறிவாற்றலை மார்க்கத்துக்கு உட்பட்ட வேறு துறைகளில் செலுத்துங்கள். அல்லாஹ் தங்கபூமி என்ன! மறுமையில் விலைமதிக்க முடியா தங்க சுவனத்தை அளிப்பான். இன்ஷா அல்லாஹ்.

'உபதேசம் செய்யுங்கள்; அது முமீன்களுக்கு பயனளிக்கும்! என்ற அருமறை வாக்கின்படி இந்த மடல் உங்களுக்கு வரையப்பட்டது. அல்லாஹ் உங்களுக்கும், எனக்கும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் அவன் மார்க்கத்தின் அடிப்படையில் வாழ்ந்து மரணித்து சுவனம் செல்லும் பாக்கியத்தை அளிப்பானாக!

நலம் விருப்பும் சகோதரன்; முகவை அப்பாஸ்.


படம் நன்றி;தமிழ் முரசு.

வியாழன், 15 ஜனவரி, 2009

நபித்தோழர்கள்வாழ்வும்-நமதுநிலையும்[பாகம் 2]


எண்பதுகளில் ஏகத்துவப்பிரச்சாரத்தை எடுத்தியம்ப தொடங்கியபோது நமது தரப்பு அறிஞர்களின் அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கு ஆதாரப்பூர்வமாக பதிலளிக்கத்திணறிய சுன்னத் வல்ஜமாத்[?]அறிஞர்கள், பாமரமக்களிடம் போய்
*இந்த நஜாத்திகள் ரசூல்[ஸல்]அவர்களை சாதாரண போஸ்ட்மேன் என்கிறார்கள்.
*இந்த நஜாத்திகள் சகாபாக்களை திட்டுகிறார்கள்.
*இந்த நஜாத்திகள் நாற்பெரும் இமாம்களையும், இறைநேசச்செல்வர்களையும் இழிவாக பேசுகிறார்கள்.
இப்படியான அடுக்கடுக்கான அவதூறுகளை தவ்ஹீத்வாதிகள் மீது அள்ளிவீசினார்கள்.ஆனாலும் நாம் சத்தியத்தில் இருந்த காரணத்தால் அதையும் தாண்டி மக்கள் அலைகடலென தவ்ஹீதின் பக்கம் ஆர்பரித்து வந்தார்கள்.
ஒரு சுழற்சிக்கு பின்னால்,நம்முடைய வளர்சிக்கு பின்னால், தவ்கீத்வாதிகளை நோக்கி அவதூறுக்கணைகள் பறந்துவந்து தாக்குகிறது. ஆனால் ஒரு வித்தியாசம்!இன்று தாக்குபவர்களும்-தாக்கப்படுபவர்களும் தவ்ஹீத்வாதிகள் என்பதுதான் வேதனை கலந்த உண்மை.
ஒருவரைப்பற்றி அவரது ஒழுக்கத்தோடு/மானத்தோடு சம்மந்தப்படுத்தி ஒரு செய்தி கிடைத்தால் அதை விசாரிப்பதர்க்குமுன் ஒரு மூமீனின் எண்ணம் எப்படி இருக்கவேண்டும்? இதோ அல்லாஹ் கூறுகின்றான்;
24:12 முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் - இதனைக் கேள்வியுற்றபோது, தங்களைப் (போன்ற முஃமினானவர்களைப்) பற்றி நல்லெண்ணங் கொண்டு, 'இது பகிரங்கமான வீண் பழியேயாகும்" என்று கூறியிருக்க வேண்டாமா?
*முதலில் நல்லெண்ணம் கொள்ளவேண்டும், பின்பு அவதூறுக்குள்ளான ஆண்/ பெண் இருவரது கேரக்டர்களையும், சம்பவம் நடந்ததாக குறிப்பிடும் இடத்தின் தன்மையையும் ஆராய்ந்து, நான்கு சாட்சிகளை தீரவிசாரித்து செய்தி உறுதிசெய்யப்பட்டால் சம்மந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கவேண்டும். இதுதானே நமக்கு இஸ்லாம் காட்டிய வழிமுறை.
இன்று தவ்ஹீத்வாதிகளில் சிலரின் நடவடிக்கை எப்படியிருக்கிறது? ஒருவரை பாலியல் குற்றம் சாட்டி ஒரு செய்தி கிடைத்தமாத்திரத்தில்,[சகோதரர் முகவைதமிழனின்வார்த்தையில்] 'செர்வர் கிறுக்குப்புடிச்சு கேங் ஆகும் அளவுக்கு பரப்புகிறோமே! இதுதான் குர்'ஆண்-ஹதீஸ் வழிமுறையா? ஒருவர் விபச்சாரம் செய்தது உறுதியாக தெரிந்தால் அவருக்கு தண்டனை கொடுப்பது மட்டும்தான் இஸ்லாமியவழி.அதை உலகம் முழுதும் பரப்புமாறு மார்க்கம் நமக்கு வழிகாட்டியிருக்கிறதா?
சரி! ஆம்பிளைய விடுங்க! ஆம்பிளை அப்படித்தான் இருப்பான் என்று உலகம் சிறிது நாளில் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும். பெண்ணை எண்ணிப்பாருங்கள்!அவள் அடையும் வேதனையையும் அவமானத்தையும் எண்ணிப்பாருங்கள்! அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் மீது அவதூறு சொல்லப்பட்டபோது அவர்கள் அடைந்த வேதனையை அவர்களின் கூற்றிலிருந்து சிறு பகுதி;
'ஆயிஷாவே! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி கிடைத்துள்ளது. நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான். நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி, அவன் பக்கம் திரும்பி விடு. ஏனெனில், அடியான் தன் பாவத்தை ஒப்புக் கொண்டு (மனம் திருந்தி) பாவ மன்னிப்புக் கோரினால் அவனுடைய கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக்கிறான்" என்றார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் பேச்சை முடித்தபோது என் கண்ணீர் (முழுவதுமாக) நின்று போய் விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் எஞ்சியிருக்கவில்லை.
நூல்;புஹாரி,எண் 2661
அபாண்ட அவதூறால் உள்ளம் உடைந்து அழுது,அழுது கண்ணீர் வற்றும் அளவுக்கு அன்னையவர்கள் வேதனைப்பட்டுள்ளார்களே! இதுபோன்றுதானே நாம் பரப்பும் அவதூறால் பாதிக்கப்படும் பெண்களும் வேதனைப்படுவார்கள் என்று என்றாவது சிந்தித்தோமா? அல்லாஹ் கூறுகின்றான்;

إِنَّ الَّذِينَ يَرْمُونَ الْمُحْصَنَاتِ الْغَافِلَاتِ الْمُؤْمِنَاتِ لُعِنُوا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ
எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு.24:௨௩
மேலும்,இவ்வாறு அவதூறுகள் தவ்ஹீத்வாதிகள் மத்தியில் அதிகமானதுக்கு காரணம் மன்னிக்கும் தன்மை இல்லாததுதான். என்மீது ஒருவன் ஒரு அவதூறு சொன்னால்,'
அவனை விட்டேனா பார்' என்று எதிரியின் பிறப்பிலிருந்து ஆய்வுசெய்து அவன்செய்த சிறிய/பெரிய தவறுகள் அத்துனையையும் பரப்புவது.
ஆனால், அருமை சகாபாக்கள் இந்தவிசயத்தில் எப்படி மன்னிக்கும் தன்மையை கையாண்டுள்ளார்கள் என்பதற்கு ஒரு சான்று;
அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள்மீது சொல்லப்பட்ட அவதூறை பரப்பியவர்களில் ஹஸ்ஸான் இப்னு தாபித்[ரலி] அவர்களும் ஒருவர். இதை மனதில்கொண்டு கீழுள்ள செய்தியை படியுங்கள்;
உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்;
நான் ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) அவர்களை ஏசிக் கொண்டே (என் சிற்றன்னை) ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், 'ஹஸ்ஸானை ஏசாதே. ஏனென்றால், அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தரப்பிலிருந்து (எதிரிகளின் வசைக் கவிதைகளுக்கு) பதிலடி தருபவராய் இருந்தார்கள். (ஒரு நாள்) ஹஸ்ஸான் அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் வந்து இணைவைப்பவர்(களான குறைஷி)களுக்கெதிராக வசைக் கவி பாட அனுமதி கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'பிறகு என்னுடைய வமிசாவளியை என்ன செய்வீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், '(அவர்களைப் பற்றி நான் வசைக் கவி கூறும்போது) குழைத்த மாவிலிருந்து முடி உருவப்படுத்து போன்று உங்களை உருவி எடுத்து விடுவேன்" என்று கூறினார்.
நூல்;புஹாரி,எண் 4145
*தன்னைக்குறித்து அவதூறு பரப்பியவர்களில் ஒருவரை 'திட்டாதீர்கள்' என்று அன்னையவர்கள் பெருந்தன்மையோடு சொன்னார்களே! இந்த பண்பு நமக்கு வந்துவிட்டாலே பாதி அவதூறு மறைந்துவிடும். நடுநிலையோடு சிந்திப்போம்! நன்மையை மட்டும் பரப்புவோம்.

புதன், 14 ஜனவரி, 2009

நபித்தோழர்கள்வாழ்வும்-நமதுநிலையும்![பாகம் 1]

ஒரு அரசியல் கட்சியில் அங்கம் வகிக்கும் ஒருவர், அக்கட்சியில் இருக்கும்வரை அக்கட்சியின் தலைவரை வானளாவ புகழ்வதும், அதேபோன்று அந்த தலைவரும் இவரை 'என்னுடய போர்வாள்' என்று புகழ்மாலை சூட்டுவதும் பிற்காலத்தில் இவ்விருவருக்கும் மோதல் ஏற்பட்டு பிரியும்போது, தலைவர் பிரிந்தவரின் அரசியல் வாழ்க்கையை அஸ்தமிக்க செய்யும்வகையில் வசைமாரி பொழிவதும், பிரிந்தவர் தலைவர்மீது வசைமாரி பொழிவதும் அரசியல் அரங்கில் நாம் அன்றாடம் காணும் அலங்கோலங்கள்.

துரதிஷ்டவசமாக, முஸ்லீம் அமைப்புகள்/இயக்கங்களில் இது போன்ற தலைவர்-முக்கியஸ்தர் பிரிவின்போது அரசியல்வாதிகளையும் தாண்டி சேற்றைவாரி பூசிக்கொள்வதை பார்க்கிறோம். மனிதனுக்கு கோபம் என்ற ஒன்று இருக்கும்வரை மனஸ்தாபங்கள் ஒருவருக்கொருவர் ஏற்படுவது இயற்கையே! ஆனால் நமது சமுதாயத்தில் சகோதரர்களுக்குள் ஏற்படும் சிறிய மனஸ்தாபங்கள் ஜென்மப்பகை போல தொடர்வதைப்பார்க்கிறோம்.

தமிழகத்தில் தவ்ஹீத் பிரச்சாரத்தை முன்னெடுத்து சென்ற நமது அறிஞர்களுக்கு மத்தியில் சில பிளவுகள் ஏற்பட்டது.பிரிந்த அந்த அறிஞர்களில் ஒருவர் மற்றவரை சந்தித்து சலாம் கூறியதுண்டா? உங்களுக்குள் பினங்கிக்கொன்டால் மூன்று நாட்களுக்குமேல் பேசாமல் இருக்கவேண்டாம் என்ற நபிமொழி இவர்களுக்கு பொருந்தாதா?

ஆனால், அல்லாஹ்வின் தூதரிடம் பாடம்பயின்ற சத்திய சகாபாக்கள் தமக்குள் பிணக்கு வரும்போது எப்படி நடந்துகொண்டார்கள் என்பதை பார்ப்போம்;

அபுத் தர்தா(ரலி) அறிவித்தார் ;
நான் நபி(ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அபூ பக்ர்(ரலி) தம் முழங்கால் வெளியே தெரியுமளவிற்கு ஆடையின் ஒரு பக்கத்தை (தூக்கிப்) பிடித்தபடி (எங்களை நோக்கி) வந்தார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் தோழர் வழக்காட வந்துவிட்டார்" என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) (நபி - ஸல் - அவர்களுக்கு) சலாம் கூறிவிட்டு, 'இறைத்தூதர் அவர்களே! எனக்கும் கத்தாபின் மகனா(ர் உம)ருககும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. நான் (கோபமாக) அவரை நோக்கி விரைந்தேன். பிறகு (என் செய்கைக்காக) நான் வருந்தி அவரிடம் என்னை மன்னிக்கும்படி கேட்டேன். அவர் என்னை மன்னிக்க மறுத்துவிட்டார். எனவே, உங்களிடம் வந்தேன்" என்று கூறினார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'அபூ பக்ரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!" என்று மும்முறை கூறினார்கள். பிறகு உமர்(ரலி) (அபூ பக்ர் - ரலி - அவர்களை மன்னிக்க மறுத்துவிட்டதற்காக) மனம் வருந்தி அபூ பக்ர்(ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்று, 'அங்கே அபூ பக்ர்(ரலி) இருக்கிறார்களா?' என்று கேட்க வீட்டார், 'இல்லை" என்று பதிலளித்தார்கள். எனவே, அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) நிறம் மாறலாயிற்று. எனவே, அபூ பக்ர்(ரலி) பயந்துபோய் தம் முழங்கால்களின் மீது மண்டியிட்டு அமர்ந்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நானே (வாக்கு வாதத்தை தொடங்கியதால் உமரை விட) அதிகம் அநீதியிழைத்தவனாம் விட்டேன்." என்று இருமுறை கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், '(மக்களே!) அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பினான். 'பொய் சொல்கிறீர்' என்று நீங்கள் கூறினீர்கள். அபூ பக்ர் அவர்களோ, 'நீங்கள் உண்மையே சொன்னீர்கள்' என்று கூறினார்; மேலும் (இறை மார்க்கத்தை நிலை நிறுத்தும் பணியில்) தன்னையும் தன் செல்வத்தையும் அர்ப்பணித்து என்னிடம் பரிவுடன் நடந்து கொண்டார். அத்தகைய என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து)விட்டு விடுவீர்களா?' என்று இரண்டு முறை கூறினார்கள். அதன் பிறகு அபூ பக்ர்(ரலி) மன வேதனைக்குள்ளாக்கப்படவில்லை.

நூல்;புஹாரி,எண் 3661

இந்த ஹதீஸ்சில் கவனிக்கப்பட வேண்டிய அம்சங்களில் சில;

* இருவரும் சாதாரண நபர்கள்அல்ல. சொர்க்கத்தைக்கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்டவர்கள். சொர்க்கம் உறுதி செய்யப்பட்டவர்கள்.

* சண்டையிட்டபின் 'அவன் வீட்டிலையா எனக்கு சாப்பாடு' என்று திமிராக இருக்காமல் நடந்த தவறுக்காக மன்னிப்பு கேட்க ஒருவரை ஒருவர் தேடி வருதல்.

*உமர்[ரலி] அவர்களிடம், அபூபக்கர்[ரலி] மன்னிப்பு கேட்டும், உமர்[ரலி] மன்னிக்க மறுத்த பின்னும் அல்லாஹ்வின் தூதர்[ஸல்]மூலம் உமர்[ரலி] அவர்களிடம் மன்னிப்பைவேண்டுவோம் என்று நபியவர்களை தேடிச்சென்ற நற்பண்பு.

அபூபக்கர்[ரலி]மன்னிப்பு கேட்டும் நாம் கோபத்தில் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோமே என வருத்தி அபூபக்கர்[ரலி] அவர்களை தேடிச்சென்ற உமர்[ரலி]அவர்கள்.

இறைவனின் திருப்தியே இலக்காக கொண்டு வாழ்ந்த அந்த மனிதமேதைகள் எங்கே! தவ்ஹீத், தவ்ஹீத் என்று வாய் கிழிய பேசிக்கொண்டு அற்ப பிரச்சினைக்காக ஆயிரம் கூறாக பிரிந்து அதற்காகவே வாழும் நாம் எங்கே! சிந்திப்போமா?

அது சரி! நாமதான் சகாபக்களை பின்பற்றவேண்டியதில்லையே! அப்புறம் அபுபக்கராவது- உமராவது என்கிறீர்களா?

சனி, 10 ஜனவரி, 2009

இஸ்லாத்தின் பெயரால் காட்டுமிராண்டித்தனம்!


இந்துக்கள் தங்களின் கோவில் திருவிழாக்களின் போது தீமிதிப்பதை நாம் பார்க்கிறோம் அது அவர்களின் மத சம்பத்தப்பட்டது என்பதால் நாம் குறைகூற மாட்டோம். ஆனால் இறைவனை வணக்குவதிலும் பகுத்தறிவுக்கு முரண்படாத வகையில் எளிமையான வழிமுறையை சொல்லித்தந்த மார்க்கம் இஸ்லாம்.
நபி[ஸல்] அவர்களுக்கு பின்னால் உருவாக்கப்பட்ட எந்த விசயமும் அது என்ன பெயரில் வந்தாலும் அது மார்க்கமாகாது. நபி[ஸல்] கூறினார்கள்;
நாம் கட்டளையிடாத ஒன்றை செய்தால் அது ரத்து செய்யப்படும்.[நூல்;புஹாரி]
இப்படி நபியவர்கள் தெளிவாக வழிகாட்டிய பின்னும், நபி[ஸல்] அவர்களின் பேரர் ஹுசைன்[ரலி] அவர்களின் தியாகத்தை நினைவுகூருகிறோம் என்றபெயரில் ஷியாக்கள் சட்டையை கிழித்துக்கொள்வதும், தங்களை தாங்களே கொடூரமாக காயப்படுத்தி கொள்வதையும், தீ மிதிப்பதையும் பார்க்கிறோம்.
இப்படிப்பட்ட செயலை ஷியாக்கள் மட்டுமன்றி, நாங்கள் சுன்னத்வல் ஜமாத்தினர் என்று கூறிக்கொள்ளும் ஒரு சாராரும், ஷியாக்களை பின்பற்றி பஞ்சா எடுப்பதும், தீ மிதிப்பதையும் செய்வதை பார்க்கிறோம். இவர்களின் இந்த செயலை சைபுத்தீன் ரஷாதி-ஜமாலி போன்ற சுன்னத்வல் ஜமாத்தின் காவலர்கள்[?] கண்டு கொள்வதில்லை.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பெரியகுளம் என்ற கிராமத்தில் குறைவான முஸ்லிம்களும், பெருவாரியான இந்துக்களும் வசித்துவருகிறார்கள். இங்கு நாச்சியா தர்கா உண்டு.இதை இந்துக்கள் மாமு நாச்சி அம்மன் ஆலயம் என்ற பெயரில் அழைத்து வருகிறார்கள். இந்த தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாவில், முஸ்லிம்களும் இந்துக்களும் கலந்து இந்த விழாவை நடத்துகிறார்கள்.
வழக்கம் போல இந்த ஆண்டும் நடைபெற்ற விழாவில், தீ மிதிக்கும் வைபவம் நடைபெற்றுள்ளது. இதில் இந்துக்களும், முஸ்லிம்களும் தீ மிதித்துள்ளனர். பெண்கள் பூக்குளித்துள்ளனர் அதாவது தங்கள் தலையில் தீயைகொட்டி நேர்ச்சையை நிறைவேற்றியுள்ளனர். இந்த நிகழ்ச்சியை ' மத நல்லிணக்க நிகழ்ச்சி' பாராட்டுபவர்களும் உண்டு.
என்னதான் தமிழகத்தில் முஸ்லிம்கள் மத்தியில் புரட்சியை, மறுமலர்ச்சியை எர்ப்படுத்திவிட்டோம் என்று தவ்கீத்வாதிகளாகிய நாம் மார்தட்டிக்கொண்டாலும் இன்னும் இஸ்லாத்தின் அடிப்படையை அறியாத ஓராயிரம் பெரியகுளங்கள் உள்ளது என்பதை மனதில்கொண்டு ஏகத்துவ வாதிகள் வேறு பிரச்சினைகளை ஓரம்கட்டிவிட்டு மார்க்கப்பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்லவேண்டும்.

வியாழன், 1 ஜனவரி, 2009

எங்கே செல்லும் இந்த பாதை!


சமீபத்தில் கடலூர் மாவட்டம் கிள்ளைஎன்ற ஊரைச்சேர்ந்த பஷீரா-ஜின்னா தம்பதிகள் கோவில் கட்டி வழிபடுவதை நாம் அறிந்துள்ளோம். இப்போது அதையும் தாண்டி, ஒற்றுமை என்ற பெயரில் பிற மதத்தவருடன் இரண்டற கலந்துவிட்ட முஸ்லிம்களைப்பற்றிய செய்திகளை பார்ப்போம்.
உ.பி.மாநிலம் சந்தன் எனும் ஊரில் முஸ்லிம்களும்,முஸ்லிமல்லாதவர்களும் வணக்க விசயத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் ஒன்றிணைந்து வாழ்கிறார்கள்.முஸ்லிம்கள் நடத்தும் தொழுகையில் இந்துக்கள் கலந்துகொள்கிறார்கள்இந்துக்களின் கோயில் பூஜையில் முஸ்லிம்கள் கலந்துகொள்கிறார்கள்.மஜீத்கான் எனும் முஸ்லீம் அம்மன் கோயிலை பராமரிக்கிறார். கல்லு எனும் இந்து முஸ்லிம்களின் அடக்க தளத்தை பராமரிக்கிறார். சிவசிங் என்ற இந்துவுக்கு ஜாஜகான்பேகம் எனும் முஸ்லீம் மனைவி. இப்படி இரண்டற கலந்தது இன்று நேற்றல்ல எண்ணூறு ஆண்டுகளாக இதுதான் நிலையாம்!
இப்படி ஒன்னு மண்ணாக[?] ஆனதுக்கு ஒரு வரலாறும் உண்டாம். எண்ணூறு ஆண்டுக்கு முன்னாள் இப்பகுதியை ஆண்ட சிங்க்பால்ஜாது என்பவர் இஸ்லாத்தை தழுவியிருக்கிறார்.இருப்பினும்அவர் குடும்பத்தை சேர்ந்த சிலர் இஸ்லாத்திற்கு மாறவில்லையாம்! இவர்களின் வழிதோன்றல்கள்தான் இப்படி பெயர்தாங்கி முஸ்லிம்களாக ஒற்றுமை ,சமாதானம் என்ற பெயரில் மார்க்கத்தை மறந்து வாழ்கிறார்கள்.
இதை பார்க்கும்போது மார்க்கத்தை இந்த மக்கள் இரண்டாம்பட்சமாக கருதிவிட்டார்களா? மார்கத்தை அறிந்துகொள்ளும் எண்ணம் இவர்களுக்கு வரவில்லையா? அந்த பகுதிக்கு இதுவரை எந்தமுஸ்லீம் மேதைகளும் மார்க்கத்தை கொண்டு சேர்க்கவில்லையா? அல்லாஹ்தான் இவர்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும்.
109:1 (நபியே!) நீர் சொல்வீராக: காஃபிர்களே!
109:2 நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
109:3 இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
109:4 அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
109:5 மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
109:6 உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்¢ எனக்கு என்னுடைய மார்க்கம்."
குறிப்பு;தினமலரில் வந்த செய்தியின் அடிப்படையில் இந்த ஆக்கம் எழுதப்பட்டது.

இன்னும்கெடுவோம்நாங்கள்; என்னபந்தயம்..?

அல்லாஹ் தன் அருள்மறை மூலமும், தனது திருத்தூதர்[ஸல்] அவர்கள் மூலமும் சுவனத்திற்க்கான வழியை தெளிவாக அடையாளம் காட்டிய பின்னும் ஷைத்தானின் அடிச்சுவட்டை நன்மை என்றபெயரில் செய்துவரும் முஸ்லிம்களை நாம் பார்க்கிறோம்.

தமிழகத்தில் ஏகத்துவ எழுச்சிக்குப்பின் சற்றேமந்தமான தர்காவழிபாடு, ஷேய்க்அப்துல்லா ஜமாலி போன்றோரின் வருகைக்குப்பின் மீண்டும் புத்துணர்வு பெற்றுஉள்ளதை நாம் மறுக்கமுடியாது.சமீபத்தில் நடைபெற்ற ஏர்வாடி சந்தனகூட்டுகாட்சிகள் நமக்கு இதை படம்பித்து காட்டுகிறது.

கப்ருகளை பூசாதீர்கள்; கப்ருகளில் விளக்கு ஏற்றாதீர்கள்; கப்ருகளை உயரமாக ஆக்காதீர்கள் என்றெல்லாம் நபியவர்கள் கிளிப்பிள்ளைக்கு சொன்னதுபோல் சொல்லியிருந்தும் முஸ்லிம்களில் ஒருகூட்டம் மகான் மீது கொண்ட பக்தியின் காரணமாக நபியவர்களின் கூற்றை கண்டு கொள்வதில்லை.

இவர்களின் அறியாமை எங்கே கொண்டுபோய் நிறுத்தியுள்ளது என்றால், இந்து தளங்களில் வசதிபடைத்தோர் தங்கத்தால் சிலைசெய்து/ அல்லது சிலையின் உறுப்பில் ஒரு பாகத்தை செய்து வழங்குவர். அதுபோல ஆந்திராவை சேர்ந்த ஒரு ஏர்வாடி இப்ராஹீம் பாதுஷாவின் பக்தர்[முஸ்லிம்தான்] சமாதிக்கு பத்துலட்சம் செலவில் வெள்ளிக்கவசம் செய்து பொருத்தியுள்ளார். எத்துணையோ முஸ்லிம் ஏழைகள் ஒருவேளை சாப்பாடிற்கு வழியில்லாமல் கஷ்டப்படும் நாட்டில், இந்த தொழிலதிபர் அதைப்பற்றி கவலைப்படாமல் அல்லாஹ் வழங்கிய அருட்கொடையான செல்வத்தை அல்லாஹ்வும், அவன்தூதரும் காட்டித்தராத முழுக்க முழுக்க பிற மத கலாசாரத்தின் அடிப்படையில் செலவிடுகிறார் எனில், இதைப்பற்றி அல்லாஹ் கேட்கமாட்டான் என்ற என்னமா? அல்லது இப்ராஹீம் பாதுஷா பார்த்துக்கொள்வார் என்றநினைப்பா?
அல்லாஹ்வின் பாதையல்லாத வழியில் செலவிடுபவருக்கு அல்லாஹ் கூறும் உதாரணம்;

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
2:266
أَيَوَدُّ أَحَدُكُمْ أَن تَكُونَ لَهُ جَنَّةٌ مِّن نَّخِيلٍ وَأَعْنَابٍ تَجْرِي مِن تَحْتِهَا الأَنْهَارُ لَهُ فِيهَا مِن كُلِّ الثَّمَرَاتِ وَأَصَابَهُ الْكِبَرُ وَلَهُ ذُرِّيَّةٌ ضُعَفَاء فَأَصَابَهَا إِعْصَارٌ فِيهِ نَارٌ فَاحْتَرَقَتْ كَذَلِكَ يُبَيِّنُ اللّهُ لَكُمُ الآيَاتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ
உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? - அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன - இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான்.2:௨௬௬
அறியாமையில் உள்ள முஸ்லிம்களே திருந்துங்கள்! அல்லாஹ்,மற்றும் அவன் தூதரின் வழிக்கு திரும்புங்கள்!!

படம்நன்றி;தினத்தந்தி.