அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

சனி, 10 ஜனவரி, 2009

இஸ்லாத்தின் பெயரால் காட்டுமிராண்டித்தனம்!


இந்துக்கள் தங்களின் கோவில் திருவிழாக்களின் போது தீமிதிப்பதை நாம் பார்க்கிறோம் அது அவர்களின் மத சம்பத்தப்பட்டது என்பதால் நாம் குறைகூற மாட்டோம். ஆனால் இறைவனை வணக்குவதிலும் பகுத்தறிவுக்கு முரண்படாத வகையில் எளிமையான வழிமுறையை சொல்லித்தந்த மார்க்கம் இஸ்லாம்.
நபி[ஸல்] அவர்களுக்கு பின்னால் உருவாக்கப்பட்ட எந்த விசயமும் அது என்ன பெயரில் வந்தாலும் அது மார்க்கமாகாது. நபி[ஸல்] கூறினார்கள்;
நாம் கட்டளையிடாத ஒன்றை செய்தால் அது ரத்து செய்யப்படும்.[நூல்;புஹாரி]
இப்படி நபியவர்கள் தெளிவாக வழிகாட்டிய பின்னும், நபி[ஸல்] அவர்களின் பேரர் ஹுசைன்[ரலி] அவர்களின் தியாகத்தை நினைவுகூருகிறோம் என்றபெயரில் ஷியாக்கள் சட்டையை கிழித்துக்கொள்வதும், தங்களை தாங்களே கொடூரமாக காயப்படுத்தி கொள்வதையும், தீ மிதிப்பதையும் பார்க்கிறோம்.
இப்படிப்பட்ட செயலை ஷியாக்கள் மட்டுமன்றி, நாங்கள் சுன்னத்வல் ஜமாத்தினர் என்று கூறிக்கொள்ளும் ஒரு சாராரும், ஷியாக்களை பின்பற்றி பஞ்சா எடுப்பதும், தீ மிதிப்பதையும் செய்வதை பார்க்கிறோம். இவர்களின் இந்த செயலை சைபுத்தீன் ரஷாதி-ஜமாலி போன்ற சுன்னத்வல் ஜமாத்தின் காவலர்கள்[?] கண்டு கொள்வதில்லை.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பெரியகுளம் என்ற கிராமத்தில் குறைவான முஸ்லிம்களும், பெருவாரியான இந்துக்களும் வசித்துவருகிறார்கள். இங்கு நாச்சியா தர்கா உண்டு.இதை இந்துக்கள் மாமு நாச்சி அம்மன் ஆலயம் என்ற பெயரில் அழைத்து வருகிறார்கள். இந்த தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாவில், முஸ்லிம்களும் இந்துக்களும் கலந்து இந்த விழாவை நடத்துகிறார்கள்.
வழக்கம் போல இந்த ஆண்டும் நடைபெற்ற விழாவில், தீ மிதிக்கும் வைபவம் நடைபெற்றுள்ளது. இதில் இந்துக்களும், முஸ்லிம்களும் தீ மிதித்துள்ளனர். பெண்கள் பூக்குளித்துள்ளனர் அதாவது தங்கள் தலையில் தீயைகொட்டி நேர்ச்சையை நிறைவேற்றியுள்ளனர். இந்த நிகழ்ச்சியை ' மத நல்லிணக்க நிகழ்ச்சி' பாராட்டுபவர்களும் உண்டு.
என்னதான் தமிழகத்தில் முஸ்லிம்கள் மத்தியில் புரட்சியை, மறுமலர்ச்சியை எர்ப்படுத்திவிட்டோம் என்று தவ்கீத்வாதிகளாகிய நாம் மார்தட்டிக்கொண்டாலும் இன்னும் இஸ்லாத்தின் அடிப்படையை அறியாத ஓராயிரம் பெரியகுளங்கள் உள்ளது என்பதை மனதில்கொண்டு ஏகத்துவ வாதிகள் வேறு பிரச்சினைகளை ஓரம்கட்டிவிட்டு மார்க்கப்பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்லவேண்டும்.

கருத்துகள் இல்லை: