அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

சனி, 24 ஜனவரி, 2009

நபித்தோழர்கள்வாழ்வும்--நமதுநிலையும்[பாகம் 4]

'சந்தேகப்புயலடிச்சா அங்கே சந்தோசம் தொலைந்துவிடும்' என்ற வாக்கிற்கேற்ப இன்று நமக்கு மத்தியில் ஏற்படும் சந்தேகங்கள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதை பார்க்கிறோம்.
கணவன்-மனைவிக்கு இடையில் ஏற்படும் சந்தேகங்கள் குடும்ப நலனை பாதிக்கிறது.
பெற்றோர்-பிள்ளைகள் இடையில் ஏற்படும் சந்தேகங்கள் அன்பு பிணைப்புக்கு வேட்டுவைக்கிறது.
நண்பர்கள் மத்தியில் ஏற்படும் சந்தேகங்கள் பகைமை நெருப்பை மூட்டுகிறது.
இயக்க தலைவர்களுக்கு மத்தியில் ஏற்படும் சந்தேகங்கள் சமுதாய நலனை பாதிக்கிறது.
இதற்கு தீர்வுதான் என்ன? ஒரே வழி சந்தேகத்தை விட்டொழிப்பதுதான்! அல்லாஹ் கூறுகின்றான்;

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِّنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَّحِيمٌ
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.49:12

இன்று நமது நிலைஎன்ன? எடுத்ததெர்க்கெல்லாம் சந்தேகம். ஒரு ஆணையும் பெண்ணையும் தனியாக பேசிக்கொண்டிருக்கும் நிலையில் கன்டால் அவ்விருவருக்கு மத்தியில் என்ன உறவு, என்ன விசயமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் விசாரிப்பதற்கு முன்பே, அவ்விருவருக்கும் மத்தியில் எதோ இருக்கிறது என்று சந்தேக முடிவெடுத்து, அந்த முடிவை உண்மைப்படுத்துவதற்க்காக துருவித்துருவி விசாரணை நடத்துவது. இதுதானே நம்மிடையே இன்று நடந்துகொண்டிருக்கிறது.

விளைவுகள் என்ன? தவறு செய்தவர்களை விட சந்தேகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ளதைக்கானலாம்.
காவல்த்துறையின் சந்தேக நடவடிக்கை சிலநேரங்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதையும் பல நேரங்களில் அப்பாவிகள் வாழ்க்கை கேள்விக்குறியாக ஆக்கப்படுவதையும் காணலாம்.

மேலும்,மனிதன் என்ற அடிப்படையில் என்றோ ஒருநாள் ஒருதவறு செய்தான் என்பதற்காக அவனை எப்போதும் அந்த தவறை செய்யக்கூடியவனாகவே சந்தேகத்துடன் பார்ப்பது நம்மிடையே அதிகமாக உள்ளதை பார்க்கிறோம். நல்லவன் கெட்டவனாகவும், கெட்டவன் நல்லவனாகவும் மாறுவது மனித இயல்புதான் என்பதை மறந்து, தங்களை தாங்களேதூய்மைப்படுத்துவதை பார்க்கிறோம். அல்லாஹ் கூறுகின்றான்;


أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ يُزَكُّونَ أَنفُسَهُمْ بَلِ اللّهُ يُزَكِّي مَن يَشَاء وَلاَ يُظْلَمُونَ فَتِيلاً
(நபியே!) தங்களைத் தாங்களே பரிசுத்தமானவர்கள் என்(று கூறிக்கொள்)பவர்களை நீர் பார்க்கவில்லையா? (அவர்கள் கூறுவதுபோல்) அல்ல! அல்லாஹ் தான் நாடியவர்களைப் பரிசுத்தம் ஆக்குவான். (இது விஷயத்தில்) எவரும் ஓர் அணுவளவும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள். 4:49

மேலும்,
மற்றவர்கள் சந்தேகப்படும் சூழ்நிலையும் நாம் ஏற்படுத்திவிடக்கூடாது.
ஸஃபிய்யா பின்த்து ஹுயை(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில் தங்கி) இஃதிகாஃப் இருந்தார்கள். ஓர் இரவில் அவர்களைச் சந்திப்பதற்காக அவர்களிடம் நான் சென்றேன். நான் அவர்களிடம் (சிறிது நேரம்) பேசிவிட்டு திரும்பிச் செல்ல எழுந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்களும் என்னைத் திருப்பியனுப்புவதற்காக என்னுடன் வந்தார்கள். -உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களின் வீடே அவர்களின் இருப்பிடமாக இருந்தது. (என அறிவிப்பாளர் கூறுகிறார்.) அப்போது அன்சாரிகளில் இருவர்அந்த வழியாகச் சென்றார்கள். அவர்கள் நபி(ஸல்) அவர்களைக் கண்டவுடன் விரைந்து நடக்கலானார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'நிதானமாகச் செல்லுங்கள். இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த்து ஹுயை தான்" என்றார்கள். இதைக் கேட்ட அவ்விருவரும், 'அல்லாஹ் தூயவன் இறைத்தூதர் அவர்களே! (தங்களையா நாங்கள் சந்தேகிப்போம்)" என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், 'ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் (கூட) ஓடுகிறான். உங்கள் உள்ளங்களில் அவன் தீய எண்ணம் எதையேனும் போட்டு விடுவான்.. அல்லது உங்கள் உள்ளங்களில் (சந்தேகம்) எதையாவது அவன் போட்டு விடுவான்... என்று நான் அஞ்சினேன்" என்றார்கள்.
நூல்;புஹாரி,எண் 3281

எனவே, மூமீன்கள்மீது நல்லெண்ணம் கொள்வோம்- [வெளிப்படையான] தவறுகளையன்றி, மற்றவைகளை துருவித்துருவி ஆராய்ந்து நமக்கு மத்தியில் நல்லிணக்கத்தை கெடுத்துக்கொள்ளாமல் அனைவரும் சகோதர்களாக வாழ்வோம்!

கருத்துகள் இல்லை: