அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

செவ்வாய், 1 டிசம்பர், 2009

எய்ட்ஸ்;வாசலை விரியத்திறந்து வைத்துக்கொண்டு திருட்டை தடுக்கநினைக்கும் அதிமேதாவிகள்!


بسم الله الرحمن الرحيم

இன்று[1டிசம்பர்] உலக எய்ட்ஸ் தினம் அனுஸ்டிக்கப்படுகிறதுஇந்த தினத்தின் நோக்கம் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி மக்களை அந்த உயிர் கொல்லி நோயிடம் இருந்து காப்பதுதான். நோக்கம் என்னவோ நல்லநோக்கம்தான். ஆனால் அதற்கான வழிமுறைகள்தான் சரியில்லை.எனவேதான் பலகோடி மில்லியன் ரூபாய்கள் உலக அளவில் செலவிடப்பட்டும், அரசும்,தன்னார்வ அமைப்புகளும் பெருமுயற்சி செய்தும் இந்த எய்ட்சால் பாதிக்கப்படுவோர் பட்டியல் நீண்டுகொண்டேதான் உள்ளது.பொதுவாக,ஒருவிசயத்தை நாம் தடுக்கவேண்டுமெனில், அதன் ஆணிவேரை கண்டறிந்து அழிக்கவேண்டும். அல்லாமல் மேல் கிளைகளை வெட்டுவதால் எவ்வித பயனும் இல்லை. அதுபோல்தான் இந்த எய்ட்ஸ் ஒழிக்கப்படவேண்டுமென்றால்,அதற்கு வெறுமனே விழிப்புணர்வு பிரச்சாரங்களோ, எய்ட்ஸ் பாதுகாப்பு மய்யங்களோ தீர்வாகாது.எய்ட்ஸ் நிரந்தரமாக உலகிலிருந்து துடைத்து எறியப்பட்ட வேண்டுமென்றால்,

  • சின்னத்திரையிலும்,வண்ணத்திரையிலும் வரும் ஆபாச காட்சிகள் கண்டிப்பாக நீக்கப்படவேண்டும்.
  • ஆபாச உடைஅணிந்து நடிக்கும் நடிகைகள் மீதும் அவ்வாறு நடிக்கவைத்த இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள் மீதும் விபச்சார தடுப்பு பிரிவின்கீழ் வழக்கு தொடரவேண்டும்.
  • ஆபாசகாட்சிகளை[கவனித்தவுடன்] கத்தரி போட மறக்கும் அதிகாரிகளை கண்டறிந்து அவர்களுக்கு கத்தரி போடவேண்டும்.[அதாவது பணி நீக்கம் செய்யவேண்டும்]
  • ஆபாச பாடல் எழுதும் பாடலாசிரியர்கள் மீது விபச்சார தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு தொடர வேண்டும்.
  • மஞ்சள் படங்களை திரையிடும் திரையரங்குகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுப்பதோடு,தியேட்டர் உரிமமும் ரத்து செய்யப்பட வேண்டும்.
  • ஆபாச படங்கள், செய்திகள் வெளியிடும் பத்திரிக்கைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டவேண்டும்.
  • இந்தியாவில் அனுமதி பெற்றும் பெறாமலும் நடத்தப்படும் அனைத்து விபச்சார விடுதிகளும் மூடப்பட்ட வேண்டும். விபச்சாரம் செய்பவர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் பாரபட்சமின்றி கைதுசெய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
  • விபச்சார தொழிலுக்கு பக்கபலமாக இருக்கும் காவல்துறை 'கருப்பு ஆடுகள் 'மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
  • விபச்சாரிகளை கைதுசெய்தவுடன் அந்தசெய்தியை,'அழகிகள் கைது' என்று போடாமல் விபச்சாரிகள் கைது என்று போடவேண்டும்.
  • கலாச்சார சீரழிவை உண்டாக்கும் டேட்டிங், லவ்வர்ஸ்டே,வீக்எண்டு கொண்டாட்டங்கள் தடுக்கப்படவேண்டும்.
  • பீச்,பார்க் உள்ளிட்ட போது இடங்களில் சில்மிசங்களில் ஈடுபடும் காதலர்கள்[?] மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
  • விடுதிகளில் முறையான ஆவணங்கள் இன்றி அறை ஒதுக்குவதை தடுக்கவேண்டும்.
  • பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை கலக்கும் வகையில் பள்ளி,கல்லூரி ஆண்டு விழாக்களில் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போடுவது நிறுத்தப்படவேண்டும்.
  • நட்சத்திர ஓட்டல்களில் நடைபெறும் நடன நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட வேண்டும்.
  • திருவிழாக்கள் என்றபெயரில்,கலை நிகழ்ச்சி என்றபெயரில் நடத்தப்படும் ஆபாச கச்சேரிகள் நிறுத்தப்படவேண்டும்.
  • மொபைல் போனில்,கிசுகிசு வேண்டுமா?ஹாட் ஜோக் வேண்டுமா? என்று கேட்கும் மொபைல் நிறுவனங்களிடம் எச்சரிக்கவேண்டும்.மொபைல், இன்டர்நெட் முலம் ஆபாசத்தை பரப்பும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

மேற்குறிப்பிட்ட விசயங்களை தடுக்காமல் இன்னும் எத்தனை கோடிகள் செலவு செய்யப்பட்டாலும் அது விழலுக்கு இறைத்த நீர்போன்று ஆகுமே தவிர,எய்ட்சை ஒழிக்கமுடியாது.

இதோ அருள்மறை கூறுகிறது;விபச்சாரத்தின் அருகில்கூட நெருங்காதீர்கள்! அது தெளிவான வெட்கக்கேடானதாகவும், தீமையாகவும் இருக்கிறது.[17;32]

இறைவாக்கை அமுல்படுத்தினால் உலகில் எய்ட்ஸ் இருக்குமா..? எதோ நம்மால முடிஞ்சது புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.

வியாழன், 26 நவம்பர், 2009

இறைத்தூதரின் திருமணங்களும்; இடைச்செருகல் விளக்கங்களும்!

புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது சாந்தியும்-சமாதானமும் அகிலத்திற்கோர் அருட்கொடை அண்ணல் நபி[ஸல்] அவர்கள் மீதும், அவர்களை பின்பற்றி வாழ்ந்த வாழுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!

அல்லாஹ்வை ஏற்றுக்கொண்ட முஸ்லிமான ஆண்கள் அதிகபட்சமாக நான்கு திருமணம்வரை செய்துகொள்ள அல்லாஹ் அனுமதியளித்திருப்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். ஆனால் ரசூல்[ஸல்] அவர்களுக்கு இதிலிருந்து அல்லாஹ் விதிவிலக்கு அளித்து அவர்கள் பல திருமணங்களை செய்துகொள்ள அனுமதியளித்துள்ளான்.
يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَحْلَلْنَا لَكَ أَزْوَاجَكَ اللَّاتِي آتَيْتَ أُجُورَهُنَّ وَمَا مَلَكَتْ يَمِينُكَ مِمَّا أَفَاء اللَّهُ عَلَيْكَ وَبَنَاتِ عَمِّكَ وَبَنَاتِ عَمَّاتِكَ وَبَنَاتِ خَالِكَ وَبَنَاتِ خَالَاتِكَ اللَّاتِي هَاجَرْنَ مَعَكَ وَامْرَأَةً مُّؤْمِنَةً إِن وَهَبَتْ نَفْسَهَا لِلنَّبِيِّ إِنْ أَرَادَ النَّبِيُّ أَن يَسْتَنكِحَهَا خَالِصَةً لَّكَ مِن دُونِ الْمُؤْمِنِينَ قَدْ عَلِمْنَا مَا فَرَضْنَا عَلَيْهِمْ فِي أَزْوَاجِهِمْ وَمَا مَلَكَتْ أَيْمَانُهُمْ لِكَيْلَا يَكُونَ عَلَيْكَ حَرَجٌ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا
நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்) இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்) மேலும் அல்லாஹ் மிக மன்னப்பவன்; மிக்க அன்புடையவன்.[33:50 ]

இந்த வசனத்தில் நபியவர்கள் பல திருமணங்களை செய்ய அனுமதியளித்த இறைவன், எதற்காக இந்த அனுமதி என்றால் நபி[ஸல்] அவர்களுக்கு நிர்ப்பந்தம் ஏற்ப்பட்டுவிட கூடாது என்பதற்காக என்று மட்டும் சொல்கிறான். [ஒரு திருமணம் நீங்கலாக] வேறு எந்த திருமணத்திற்கும் எந்த விளக்கமும் இந்த வசனத்திலும் வேறு எந்த வசனத்திலும் நாமறிந்தவரை இல்லை. அதிகப்படியான திருமணங்களை செய்த நபி[ஸல்] அவர்களாவது நான் இன்ன காரனத்திற்காகத்தான் இத்துனை திருமணம் செய்தேன் என்று சொல்லவில்லை. உண்மை இவ்வாறிருக்க, நாமாக நபி[ஸல்] அவர்கள் பல திருமணம் செய்தது ஏன் என்று
சில காரணங்களை சொல்வது வரம்பு மீறலாகும்.

நபி[ஸல்] அவர்கள் பல திருமணம் செய்தது ஏன் என்று ஒரு கட்டுரை மவ்லவி பீஜே அவர்களது தளத்தில் வெளியாகியுள்ளது. அதில் ஒவ்வொரு மனைவியை திருமணம் செய்ததற்கும் ஒவ்வொரு காரணம் சொல்லப்பட்டுள்ளது. அந்த ஆக்கத்தில் காணப்படும் சில முரண்பாடுகளை இங்கே முன்வைக்கிறோம்.
  • அன்னை ஆயிஷா[ரலி] அவர்களை திருமணம் செய்ததற்கு கூறப்பட்டுள்ள காரணம்; அபூபக்கர்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களின் உயிர் நண்பராக இருந்ததால் ,தமக்கும் நபிகள் நாயகத்திற்கும் ஒரு உறவை ஏற்படுத்தவேண்டும் என்று ஆசைப்பட்டுஅபூபக்கர்[ரலி] அவர்கள் வற்புறுத்தியதன் பேரில்தான் ஆயிஷா[ரலி] அவர்களை நபிகள் நாயகம்[ஸல்] அவர்கள் மணந்தார்கள்.

ஹதீஸில் இவர் கூறும் விளக்கத்திற்கு மாற்றமாக உள்ளதை கவனியுங்கள்;

உர்வா இப்னு ஸ¤பைர்(ரஹ்) அறிவித்தார்; நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் (அவர்களின் புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா(ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி) 'நான் தங்களின் சகோதரன் ஆயிற்றே!'' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். உங்களுடைய புதல்வி எனக்கு மணமுடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர் தாம்'' என்று கூறினார்கள்.[புஹாரி எண்; எண் 5081 ]

அபூபக்கர்[ரலி] அவர்கள் வற்ப்புறுத்தியதின் பேரில்தான் அன்னை ஆயிஷா[ரலி] அவர்களை நபி[ஸல்] அவர்கள் மணந்தார்கள் என்ற இவர்களின் விளக்கத்திற்கு மாற்றமாக, அபூபக்கர்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களை சந்தித்து என் மகளை மணந்து கொள்ளுங்கள் என்று ஒரு போதும் கேட்கவில்லை. மாறாக nabi [ஸல்] அவர்கள்தான் அபூபக்கர்[ரலி] அவர்களை சந்தித்து பெண் கேட்கிறார்கள். அப்போது கூட அபூபக்கர்[ரலி] அவர்கள் உடனே சம்மதிக்கவில்லை. நான் உங்கள் சகோதரன் அல்லவா என்று கேட்கிறார்கள். பின்பு நபியவர்கள் விளக்கமளித்தபின் தான் ஒப்புக்கொள்கிறார்கள். உண்மை இவ்வாறிருக்க நபியவர்களை வற்புறுத்தி அன்னை ஆயிஷா[ரலி] அவர்களை திருமணம் செய்துவைத்தார் அபூபக்கர் என்று கூறுவது ஹதீசுக்கு முரணில்லையா..?

  • அன்னை ஹஃப்ஸா[ரலி] அவர்களை மணந்து கொண்டதற்கான கூறப்பட்டுள்ள காரணம்; நபிகள் நாயகம்[ஸல்] அவர்கள் தமது 56 வது வயதில் ஹஃப்ஸா[ரலி] அவர்கள் திருமணம் செய்தார்கள். இவர் நபிகள் நாயகத்தின் மற்றொரு உயிர் நண்பரான உமர்[ரலி] அவர்களின் புதல்வியாவார். தமது விதவை மகலை நபிகள் நாயகம்[sal] மணந்துகொண்டால், நபிகள் நாயகத்துடன் தமது உறவு பலப்படும் என்று விரும்பிய உமர்[ரலி] அவர்கள் வற்புறுத்தியதுதான் இத்திருமணத்திற்கு காரணம்.

ஹதீஸில் இவர் கூறும் விளக்கத்திற்கு மாற்றமாக உள்ளதை கவனியுங்கள்;

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்உமர் இப்னு கத்தாப்(ரலி) (தம் மருமகன்) குனைஸ் இப்னு ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ(ரலி) இறந்துவிட்டதால் (மகள்) ஹஃப்ஸா விதவையானபோது (அவர்களை வேறொவருக்குத் திருமணம் முடித்து வைக்க எண்ணினார்கள்.)-குனைஸ் அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரும், பத்ருப்போரில் பங்கெடுத்தவருமாயிருந்தார்கள். மேலும், மதீனாவில் இறந்தார்கள். உமர்(ரலி) கூறினார்:எனவே, நான் உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களிடம் சென்று, (என் மகள்) ஹஃப்ஸாவைக் குறித்து எடுத்துக் கூறினேன். அதற்கு உஸ்மான்(ரலி), '(தங்கள் மகளை நான் மணந்துகொள்ளும் இந்த) என் விஷயத்தில் நான் யோசிக்க வேண்டியுள்ளது; (யோசித்து என் முடிவைக் கூறுகிறேன்)'' என்று கூறினார்கள். சில நாள்கள் பொறுத்திருந்தேன். பிறகு உஸ்மான்(ரலி) என்னைச் சந்தித்து 'இப்போது திருமணம் செய்துகொள்ளவேண்டாம் என்றே எனக்குத் தோன்றியது'' என்று கூறினார்கள். எனவே, நான் அபூ பக்ர் ஸித்தீக்(ரலி) அவர்களைச் சந்தித்தேன். (அவர்களிடம்) 'நீங்கள் விரும்பினால், என் மகள் ஹஃப்ஸாவைத் தங்களுக்குத் திருமணம் முடித்து வைக்கிறேன்'' என்று கூறினேன். அபூ பக்ர்(ரலி) அமைதியாக இருந்தார்கள். எனக்கு அவர்கள் எந்த பதிலையும் கூறவில்லை. எனவே, உஸ்மான்(ரலி) அவர்களை விட அபூ பக்ர்(ரலி) மீதே நான் மிகவும் மனவருத்தம் கொண்டவனாக இருந்தேன். சில நாள்கள் பொறுத்திருந்தேன். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவைப் பெண் கேட்டார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸாவைத் திருமணம் செய்து வைத்தேன். பிறகு(ஒருநாள்) அபூ பக்ர்(ரலி) என்னைச் சந்தித்து, 'நீங்கள் என்னிடம் ஹஃப்ஸா அவர்களைக் குறித்துச் சொன்னபோது நான் உங்களுக்கு பதிலேதும் கூறாததால், உங்களுக்கு என் மீது மனவருத்தம் இருக்கக்கூடும்'' என்று கூறினார்கள். நான், 'ஆம்'' என்று சொன்னேன். (அதற்கு) அபூ பக்ர்(ரலி), 'நீங்கள் கூறியபோது நான் உங்களுக்கு பதில் கூறாததற்குக் காரணம், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹஃப்ஸா அவர்களை (தாம் மணப்பது) பற்றிப் பேசியதை நான் அறிந்திருந்ததே ஆகும். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் இந்த இரகசியத்தை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை. (எனவேதான், உங்களுக்கு பதிலோதும் கூறவில்லை). இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'ஹஃப்ஸாவை (திருமணம் செய்யாமல்) விட்டிருந்தால், உறுதியாக அவர்களை நான் (மனைவியாக) ஏற்றுக் கொண்டிருப்பேன்..[புஹாரி எண் 5122 ]


அன்னை ஹஃப்ஸா[ரலி] அவர்களை, இவர்கள் கூறியது போல் நபியவர்களை வற்புறுத்தி திருமணம் செய்து வைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் நபியவர்களுக்குத்தான் அன்னை ஹஃப்ஸா[ரலி] அவர்களை திருமனம் செய்துவைக்கவேண்டும் என்று உமர்[ரலி] அவர்கள் எண்ணியதுமில்லை. தமது விதவை மகளுக்கு எல்லா தந்தையும் செய்வதுபோல் மனம் செய்துவைக்க உமர்[ரலி] அவர்கள் எண்ணினார்கள். அதற்காக உஸ்மான்[ரலி] அவர்களையும், அபூபக்கர்[ரலி] அவர்களையும் சந்தித்து விருப்பமா என்கிறார்கள். இதற்கிடையில் நபியவர்கள் அன்னையை பெண் கேட்டதால் அன்னையை நபியவர்களுக்கு உமர்[ரலி] திருமணம் செய்துவைத்தார்கள். மேலும் நபியவர்களை சந்தித்து என்மகளை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று உமர்[ரலி] அவர்கள் சொல்லவேயில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. உண்மை இவ்வாறிருக்க நட்பு என்பதற்காக நபியவர்களை வற்புறுத்தி அன்னையை திருமணம் செய்துவைத்தார் உமர் என்பது ஹதீஸுக்கு முரணில்லையா..?

  • அன்னை ஜைனப் பின்த் ஜஹ்ஷ்[ரலி] அவர்களை மனந்துகொண்டற்காக கூறப்படும் காரணம்; ஜைனப்[ரலி] தனது 35 வயதில் விவாகரத்து செய்யப்பட்டு திக்கற்றவராக இருந்தார். எனவே அவரை நபிகள் நாயகம்[ஸல்] அவர்கள் திருமணம் செய்தார்கள்.

அருள்மறை குர்ஆனில் இவரது விளக்கத்திற்கு மாற்றமாக உள்ளதை கவனியுங்கள்;

அன்னை ஜைனப் பின்த் ஜஹ்ஷ்[ரலி] அவர்களின் திருமணத்தை பொறுத்தவரையில், நபி[ஸல்] அவர்களின் மற்ற திருமணம் போன்றது அல்ல. அன்னையவர்களை நபியவர்களுக்கு அல்லாஹ்வே மனம் முடித்து தந்ததோடு, அதற்கு காரணத்தையும் சொல்கிறான்;

ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவரை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். என்று அல்லாஹ் கூறியிருக்க அதற்கு மாற்றமாக, அன்னையவர்கள் விதவையாக திக்கற்று நின்றதால் நபியவர்கள் திருமணம் செய்தார்கள் என்று இவர் விளக்கமளித்தது இந்த வசனத்திற்கு முரணில்லையா..?

  • அன்னை உம்மு ஸலாமா[ரலி] அவர்களை திருமணம் செய்தது பற்றி கூறப்பட்டுள்ள விளக்கம்; உம்மு சலமாவை நபிகள் நாயகம் திருமணம் செய்வதாக கூறியபோது, நான் வயது முதிர்ந்தவளாக இருக்கிறேன் என் வயதுடையவர்கள் திருமணம் செய்துகொள்வதில்லை. குழந்தை பெறும் வயதை கடந்துவிட்டேன் என்று பதிலளித்தார்கள்.

இப்படி அன்னையவர்கள் சொன்னதாக எந்த நூலில் உள்ளது என்று குறிப்பிடவில்லை. இதற்கு மட்டுமல்ல மொத்த ஆக்கத்திற்கும் மறந்தும் கூட எந்த சான்றும் முன்வைக்கவில்லை. இது ஒரு புறமிருக்க, ஹதீஸில் இவரது கூற்றுக்கு மாற்றமாக உள்ளதை கவனியுங்கள்;

நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போர்வையைப் போர்த்திப்படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. மாதவிடாய்க் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாதவாறு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன். 'உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?' என்று நபி(ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் அவர்களோடு போர்வைக்குள் படுத்துக்கொண்டேன்" என உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். [புஹாரி எண் 323 ]

அன்னை உம்மு சலாமா[ரலி] அவர்கள் தான் வயது முதிர்ந்தவர் என்றும் பிள்ளை பெறும் வயதை கடந்துவிட்டேன் என்றும் கூறியதாக பீஜே கூறுகிறார். ஆனால் ஹதீஸில் அன்னையவர்கள் மாதவிடாய் ஏற்படும் வயதுடையவராகn இருந்துள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. மாதவிடாய் ஏற்படும் வயதுடையவர்கள் பிள்ளை பெறும் தகுதியுடையவர்கள் என்பது உலகறிந்த உண்மை. இவரது கூற்று ஹதீஸுக்குமுரணில்லையா..?

இது போன்று அந்த ஆக்கத்தில் முழுக்க முழுக்க அவரது சொந்த விளக்கமாகவே உள்ளது. மருந்துக்கு கூட குர்ஆண்-ஹதீஸ் ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை. மேலும் அவரது விளக்கம் குர்ஆணுக்கும்- ஹதீஸுக்கும் முரணாக உள்ளதை நாமறிந்தவரை சுட்டிக்காட்டியுள்ளோம். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
குறிப்பு; அந்த ஆக்கம் மாற்று மதத்தவர்களுக்காக உருவாக்கப்பட்டது எனவே குர்ஆண்-ஹதீஸ் ஆதாரங்களை நாங்கள் முன்வைக்கவில்லை என்று கூற வருவார்களேயானால், மாற்று மதத்தவர் திருப்திக்காக குர்ஆண்-ஹதீசுக்கு முரணான விளக்கத்தை முன்வைக்கலாமா என்பதை தெரிவிக்க பீஜே கடமைப்பட்டுள்ளார்.

புதன், 25 நவம்பர், 2009

நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்!

புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது சாந்தியும்-சமாதானமும் அகிலத்திற்கோர் அருட்கொடை அண்ணல் நபி[ஸல்] அவர்கள் மீதும், அவர்களை பின்பற்றி வாழ்ந்த வாழுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!
இந்த உலகில் தோன்றிய, தோன்றவிருக்கிற மனிதர்கள் அனைவரும் மரணத்தை சுவைப்பவர்களே! அந்த மரணத்திற்கு பின் இறைவனின் நீதி விசாரணைக்கு பின் சுவனம் எனும் சுக வாழ்க்கையை அடையவேண்டுமெனில், அதற்கான சேமிப்பு நன்மை மட்டுமே! ஒரு விவசாயி பருவகாலங்களில் தனது நிலத்தில் பயிரிட்டு அதன் மூலம் தானியங்களை சேகரித்து வைத்தால்தான் கோடை காலங்களில் கவலையற்று உண்டு வாழமுடியும். அதுபோல் இறைவன் வழங்கிய ஆயுளைக்கொண்டு இருக்கும் காலத்தில் நன்மைகளை சேகரித்து வைத்தால்தான் மறுமையில் சுவனத்தின் திறவுகோலாக அது அமையும். அதைவிடுத்து மனம் போன போக்கில் நமது வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் மறுமையில் கைசேதப்படும் நிலைவரும். எனவேதான் வல்ல அல்லாஹ் கூறுகின்றான்;
وَلِكُلٍّ وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا فَاسْتَبِقُواْ الْخَيْرَاتِ أَيْنَ مَا تَكُونُواْ يَأْتِ بِكُمُ اللّهُ جَمِيعًا إِنَّ اللّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

ஒவ்வொரு (கூட்டத்த)வருக்கும், (தொழுகைக்கான) ஒரு திசையுண்டு. அவர்கள் அதன் பக்கம் திரும்புபவர்களாக உள்ளனர், நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்; நீங்கள் எங்கு இருப்பினும் அல்லாஹ் உங்கள் யாவரையும் ஒன்று சேர்ப்பான்- நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றல் மிக்கோனாக இருக்கிறான்.[2:148 ]

இந்த வசனத்தில் அல்லாஹ் நன்மையின் பக்கம்நம்மை முந்திக்கொள்ளுமாறு பணிக்கிறான். நண்மையான செயல் என்றால் நாம் நினைப்பது போன்று தொழுகை-நோன்பு-ஹஜ் இதுபோன்றவை மட்டுமல்ல. இதுபோன்ற அமல்களோடு நம் அன்றாட வாழ்வை இறைமறை-இறைத்தூதர்[ஸல்] வழியில் அமைத்துக்கொண்டால் நம்முடைய ஒவ்வொரு அசைவையும் நன்மையானதாக மாற்றமுடியும். நாம் பேசும் பேச்சுக்களில் உண்மையை மையப்படுத்தினால் அது நன்மையாக மாறிவிடும். பொய்கள்-புறம்-அவதூறுகள் தவிர்ந்து கொன்டால் அது நமக்கு நன்மையானதாக மாறிவிடும். வீண் தர்க்கங்கள் தவிர்ந்து கொன்டால் அது நமக்கு நன்மையானதாக ஆகிவிடும். இதுபோக நம்முடைய நடை-உடை-உணவு-வியாபாரம்-இல்லறம்-உறவுமுறை பேணல்-போன்றவற்றில் நம்முடைய செயல்கள் குர்ஆண்-ஹதீஸ் வழியில் இருந்தால் அதுவும் நமக்கு நன்மையானதாக மாறிவிடும். மேலும் சின்ன சின்ன செயல்களுக்கும் பெரிய கூலி அல்லாஹ்வால் வழங்கப்படுகிறது.

உதாரணமாக ஸலாம் கூறுவதை எடுத்துக்கொண்டால்,ஒருவர் அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொன்னால் பத்து நண்மைகளும், அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ் என்றால் இருபது நன்மைகளும், அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு என்றால் முப்பது நன்மையையும் கிடைக்கின்றது. இந்த நன்மைகளை பெறுவதற்காக பலமணி நேரம் நாம் செலவளிக்கவேண்டியதில்லை. ஒரு சில நிமிடங்களில் இந்த நன்மை நமக்கு கிடைத்துவிடும். நம்மில் எத்துனை பேர் ஸலாம் சொல்லுவதில் கவனம் செலுத்துகிறோம்..? இதுபோல் போல் நன்மையை அள்ளித்தரும் பல்வேறு சின்ன சின்ன செயல்கள் நம்மால் பாராமுகமாக விடப்பட்டதற்கு காரணம் நன்மையை சேகரிப்பதில் நமக்கு இருக்கும் ஆர்வமின்மைதான்.ஆனால் அருமை சஹாபாக்கள் நன்மையை அடைந்து கொள்ளும் அமல்கள் என்ன என்பதை ஆர்வத்துடன் நபியவர்களிடம் கேட்டதோடு, அதை உடனடியாக அமுல்படுத்திய காட்சியை ஹதீஸ்களில் காணலாம்.

ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;
நான் (நபி(ஸல்) அவர்களிடம்), 'இறைத்தூதர் அவர்களே! அறப்போர் புரிவதை சிறந்த நற்செயலாக நாங்கள் கருதுகிறோம். எனவே, (பெண்களாகிய) நாங்களும் அறப்போர் புரியலாமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(பெண்களான) உங்களுக்குச் சிறந்த அறப்போர், பாவச் செயல் கலவாத ஹஜ் தான்" என்று பதிலளித்தார்கள்.ஆதாரம்;புஹாரி எண் 2784 ]

ஆண்கள் அறப்போரில் பங்கெடுத்து அதன்மூலம் மிகப்பெரிய நன்மையை ஈட்டிக்கொள்கிறார்களே என்று ஆதங்கம் அடைந்த அன்னையவர்கள் பெண்களுக்கும் இந்த நன்மை கிடைக்காதா என்ற ஆர்வத்தில் அதுபற்றி நபியவர்களிடத்தில் கேட்கிறார்கள் எனில், சஹாபாக்களின் நன்மையை தேடும் தாக்கத்தை புரிந்துகொள்ளலாம்.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்;
ஏழை மக்கள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'பொருளாதாரச் செல்வம் பெற்றவர்கள் உயர்வான பதவிகளையும் நிலையான பாக்கியத்தையும் பெற்றுக் கொள்கிறார்கள். நாங்கள் தொழுவது போன்றே அவர்களும் தொழுகிறார்கள். மேலும் நாங்கள் நோன்பு வைப்பது போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆயினும் அவர்களுக்குப் பொருளாதாரச் சிறப்பு இருப்பதனால் தங்கள் பொருளாதாரத்தின் மூலம் ஹஜ் செய்கின்றனர்;உம்ராச் செய்கின்றனர்; அறப்போரிடுகின்றனர்; தர்மமும் செய்கின்றனர். (ஏழைகளாகிய நாங்கள் இவற்றைச் செய்ய முடிவதில்லை)' என்று முறையிட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நான் உங்களுக்கு ஒரு காரியத்தைக் கற்றுத் தருகிறேன். அதை நீங்கள் செய்து வந்தால் உங்களை முந்திவிட்டவர்களை நீங்களும் பிடித்து விடுவீர்கள். உங்களுக்குப் பிந்தி வருபவர்கள் உங்களைப் பிடிக்க இயலாது. நீங்கள் எந்த மக்களுடன் வாழ்கிறீர்களோ அவர்களும அந்தக் காரியத்தைச் செய்தால் தவிர அவர்களில் நீங்கள் மிகச் சிறந்தவராவீர்கள். (அந்த காரியமாவது) ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33முறை இறைவனைத் துதியுங்கள்; 33 முறை இறைவனைப் புகழுங்கள்; 33 முறை இறைவனைப் பெருமைப படுத்துங்கள்' என்று கூறினார்கள். நாங்கள் இது விஷயத்தில் பலவாறாகக் கூறிக் கொண்டோம். சிலர் ஸுப்ஹானல்லாஹ் 33 முறையும், அல்ஹம்துலில்லாஹ் 33 முறையும் அல்லாஹு அக்பர் 33 முறையும் கூறலானோம். நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று இது பற்றிக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஸுப்ஹானல்லாஹி வல் ஹம்து லில்லாஹி வல்லாஹு அக்பர்" என்று 33 முறை கூறுங்கள். இதனால் ஒவ்வொரு வார்த்தையையும் 33 முறை கூறினார்கள் என அமையும்'. என்று விளக்கம் தந்தார்கள்.ஆதாரம்;புஹாரி எண் 843

இந்த பொன்மொழியில் ஏழை சஹாபாக்கள் வசதி படைத்தவர்கள் தங்களை விட நன்மையில் சில விசயங்களில் முந்துகிரார்களே என்ற ஆதங்கத்தில் நபியவர்களிடம் வந்து நன்மை பெற்றுத்தரும் அமலை பெற்று செல்கிறார்கள் எனில் சஹாபாக்களின் நன்மையை சேகரிக்கும் ஆர்வத்தை புரிந்து கொள்ளலாம்.

அலீ(ரலி) அறிவித்தார்கள்;
(என் துணைவி) ஃபாத்திமா திரிகை சுற்றுவதால் தம் கையில் ஏற்பட்ட காய்ப்பு குறித்து (தம் தந்தை) நபி(ஸல்) அவர்களிடம் முறையிடுவதற்காகச் சென்றார்கள். ஏனெனில், (போர்க் கைதிகளான) அடிமைகள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்திருப்பதாக அவருக்குச் செய்தி வந்திருந்தது. ஆனால், ஃபாத்திமா நபி(ஸல்) அவர்களைக் காணவில்லை. தாம் வந்த நோக்கத்தை ஆயிஷா(ரலி) அவர்களிடம் ஃபாத்திமா கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது, ஆயிஷா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் விவரத்தைத் தெரிவிக்கவே, நபி அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்டிருந்தோம். (நபியவர்களைப் பார்த்த) உடனே, நாங்கள் எழுந்திருக்கப்போனோம். அவர்கள், 'நீங்கள் இருவரும் உங்கள் இடத்திலேயே இருங்கள்' என்று சொல்லிவிட்டு, அவர்களே வந்து எனக்கும் ஃபாத்திமாவுக்கும் இடையே அமர்ந்தார்கள். அவர்களின் பாதங்கள் என் வயிற்றில் பட்டு அதன் குளிர்ச்சியை நான் உணரும் அளவுக்கு (நெருக்கமாக அமர்ந்தார்கள்.) அப்போது அவர்கள், 'நீங்கள் இருவரும் கேட்டதைவிடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? 'நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்லும்போது' அல்லது 'உங்கள் விரிப்புக்குச் செல்லும் போது' முப்பத்து மூன்று முறை 'சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன்) என்றும், முப்பத்து மூன்று முறை 'அல்ஹம்துலில்லாஹ்' (அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்றும், முப்பத்து நான்கு முறை 'அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் சொல்லுங்கள். அது உங்களுக்குப் பணியாள் ஒருவர் இருப்பதை விடச் சிறந்ததாகும்' என்று கூறினார்கள்.ஆதாரம் புஹாரி;எண் 5361

இந்த பொன்மொழியில் திரிகை சுற்றி கையெல்லாம் காய்த்துப்போனதால் பணியாள் கேட்ட தனது அருமை மகள் அன்னை பாத்திமா[ரலி] அவர்களுக்கு, பணியாளை தராமல் மறுமையில் பயனை தரும் அமலை சொல்லித்தருகிறார்கள் நபிகளார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 'சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி' (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே! ஆதாரம்;புஹாரி எண் 6405

எனவே நன்மையை அள்ளித்தரும் அமல்களை அறிவோம். அதை செயல்வடிவில் கொண்டுவந்து மறுமைக்கான சேமிப்பாக்குவோம் இன்ஷா அல்லாஹ்.

வெள்ளி, 13 நவம்பர், 2009

துறவறம்/ கலப்புத் திருமணம் vs கண்ணிய மார்க்கம்!

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அகிலத்தை படைத்து, அதில் மனிதனை படைத்து, மனிதன் வாழ்வின் வழிகாட்டியாக வேதத்தையும் -தூதரையும் தந்த இறைவன் மனிதனின் எல்லாவிதமான விஷயங்களுக்கும் இவ்விரண்டின் மூலம் வழிகாட்டியிருப்பதை காணலாம். அந்த வகையில் உணர்வுகளோடும்-உணர்ச்சிகளோடும் மனிதனை படைத்த இறைவன், அந்த உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் சரியான வடிகால் தேவை என்பதால்தான் திருமணம் என்ற பந்தத்தையும் உருவாக்கினான்.இத்திருமணத்தின் மூலம் தான் மனிதனுக்கு மன அமைதி ஏற்படும் என்று அல்லாஹ் கூறுகின்றான்;

وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.[30:21 ]

இந்த வசனம் திருமணம் மட்டுமே அனைத்துவகையான மன சுமைகளையும் நீக்கி ஆறுதல் அளிக்கும் அருமருந்து என்று கூறுவதை உண்மையான தம்பதிகளால் உணர்ந்து கொள்ளமுடியும். எங்கோ வெவ்வேறு இடத்தில் வெவ்வேறு தாயின் வயிற்றில் பிறந்த ஆணும்-பெண்ணும் திருமணம் எனும் பந்தத்தின் மூலம் இணைந்தவுடன் ஒருவர் மற்றொருவருடன் கலந்துவிடுகிறார்கள் உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் தான். மனைவி மற்றும் அவள் மூலம் பெற்றெடுக்கும் தன் பிள்ளைகளின் அனைத்து வகையான தேவைகளை நிறைவேற்றும் கடமையில் அது கஷ்டமாகவே இருந்தாலும் அதில் ஈடுபடுவதில் ஒரு உண்மையான குடும்பத் தலைவனுக்கு ஏற்படும் இன்பம் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதவை . அதுபோல் தனது கணவனின் உடல் தேவைக்கு மட்டுமன்றி, அவன் உள்ளத்தால் காயம்பட்டாலும் அவனது அனைத்து வலிகளுக்கும் அற்புதமான நிவாரணியாக இருக்கும் ஒரு உண்மையான குடும்பத்தலைவிக்கு அவளது இந்த பணியில் கிடைக்கும் இன்பமும் வார்த்தையால் வர்ணிக்க முடியாதவை. இதை தான் அல்லாஹ் ரத்தின சுருக்கமாக கூறுகின்றான்;

அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்.[2:187 ]
ஆடை என்பது எப்படி மனிதனின் மானத்தை மறைக்கும் காரணியாக இருக்கிறதோ , அது போன்று கணவனின் கண்ணியத்தை காப்பவளாக மனைவியும்- மனைவியின் கண்ணியத்தை காப்பவனாக கணவனும் எல்லா நேரமும் இருக்கவேண்டும் என்று இஸ்லாம் சொல்லிகாட்டுகிறது. மேலும் இந்த திருமண பந்தம் முறித்து துறவறம் எனும் நிலை மேற்கொள்ள ஆரோக்கியமான எந்த ஒரு முஸ்லிமுக்கும் அனுமதியில்லை என்பதை இஸ்லாம் திட்டவட்டமாக தெரிவிக்கிறது.

ஸஅத் இப்னு ஆபி வக்காஸ்(ரலி) அறிவித்தார்கள்;
உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) துறவறம் மேற்கொள்ள நபி(ஸல்) அவர்கள் அனுமதியளிக்கவில்லை. (அப்படி) துறவறம் மேற்கொள்ள அவருக்கு (மட்டும்) நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்திருந்தால் (ஆண்மை நீக்கம் செய்துகொள்வதற்காக) நாங்கள் காயடித்துக் கொண்டிருப்போம்.
புஹாரி எண் 5074

இன்றைய நவீன உலகில் சிலர் குடும்ப வாழ்க்கை என்பது இறை நினைவை விட்டும் தடுத்துவிடும். மேலும் துறவறம் மட்டுமே மன அமைதியை தரும் என்று கூறி துறவறம் மேற்கொள்வதை பார்க்கிறோம். அப்படி துறவறம் மேற்கொண்டவர்களால் தனது உணர்வை கட்டுப்படுத்தி அவர்களால் இருக்கமுடிந்ததா என்றால் இல்லை. பல்வேறு மத குருமார்கள் பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டது உலகறிந்த உண்மையாகும். இது ஒரு புறமிருக்க துறவறம் மன அமைதியை தராது என்ற இஸ்லாத்தின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் துறவறம் மேற்கொண்டு பின்பு மன வாழ்க்கையில் சங்கமித்து மன அமைதிகண்ட ஒருவரின் கூற்று உண்மை படுத்துவதை பாரீர்;

மூன்றாண்டுக்கு முன் "மாயமான' துறவி, இப்போது துறவறத்தை துறந்து, விவசாயியாகி விட்டார்.
இது குறித்து சுவாமி கூறுகையில்,"ஒரு மத நிறுவனத்தில் பணம் சேரும் போது, தங்களது சொந்த ஆதாயங்களுக்காக பக்தர்கள் அதில் நுழைகின்றனர். சீர்கேடு ஆரம்பிக்கிறது. என் மனசாட்சிப்படி, மடத்தை விட்டு வெளியேறுவதற்கு முன், அதன் கணக்குகளை மக்கள் முன் வெளியிட தீர்மானித்தேன். துறவு வாழ்வில் கிடைக்காத அமைதி, நிம்மதி இல்லறத்தில் எனக்குக் கிட்டியது. இனி மடத் துக்குத் திரும்புவதற்கு வாய்ப்பில்லை. சுவாமி பஸவேஸ்வரரின் "காயகதர்ம'த்தை கடைப்பிடிப்பதன் மூலம் இப் போது தான் அவரது உண்மையான சீடனாக நான் வாழ்கிறேன்' என்று மனம் திறந்து பேசினார். அவர் மனைவி கீதா,"நான் இனி வேறு எந்தப் பணியிலும் ஈடுபடப் போவதில்லை. இல்லத்தரசியாகவே இருக்க விரும்புகிறேன். நானும் என் கணவரும் எதிர்கொண்ட பிரச்னைகளே இந்த உலகுக்கு நாங்கள் கொடுக்க விரும்பும் செய்தி' என்று கூறுகிறார். [தினமலர்]

எனவே இஸ்லாம் கூறும் இல்லற வாழ்க்கையே சிறந்தது என்பதை மேற்கண்ட செய்தி வலுவாக உறுதிப்படுத்துகிறது. இது ஒருபுறமிருக்க, சில அதிமேதாவிகள் சாதி வேறுபாடு ஒழிய கலப்புத் திருமணமே சிறந்தது என்ற தத்துவத்தை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொள்வதையும், அத்தகைய திருமணத்தை அரசே அங்கீகரித்துள்ளதையும் பார்க்கிறோம் . ஆனால் இஸ்லாம் ஒருபோதும் கலப்பு திருமணத்தை ஆதரிக்கவில்லை. ஒரு முஸ்லிம் ஆணாயினும்- பெண்ணாயினும் முஸ்லிமல்லாத ஒரு ஆணையோ- முஸ்லிமல்லாத பெண்ணையோ திருமணம் செய்வதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை.

அல்லாஹ் கூறுகின்றான்;

أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا جَاءكُمُ الْمُؤْمِنَاتُ مُهَاجِرَاتٍ فَامْتَحِنُوهُنَّ اللَّهُ أَعْلَمُ بِإِيمَانِهِنَّ فَإِنْ عَلِمْتُمُوهُنَّ مُؤْمِنَاتٍ فَلَا تَرْجِعُوهُنَّ إِلَى الْكُفَّارِ لَا هُنَّ حِلٌّ لَّهُمْ وَلَا هُمْ يَحِلُّونَ لَهُنَّ وَآتُوهُم مَّا أَنفَقُوا وَلَا جُنَاحَ عَلَيْكُمْ أَن تَنكِحُوهُنَّ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ وَلَا تُمْسِكُوا بِعِصَمِ الْكَوَافِرِ وَاسْأَلُوا مَا أَنفَقْتُمْ وَلْيَسْأَلُوا مَا أَنفَقُوا ذَلِكُمْ حُكْمُ اللَّهِ يَحْكُمُ بَيْنَكُمْ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ
ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்கள் ஹிஜ்ரத் செய்து (நாடு துறந்தவர்களாக) உங்களிடம் வந்தால், அவர்களை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள், அல்லாஹ் அவர்கள் ஈமானை நன்கறிந்தவன், எனவே அவர்கள் முஃமினான (பெண்கள்) என நீங்கள் அறிந்தால், காஃபிர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விடாதீர்கள், ஏனெனில், அந்த பெண்கள் அந்த ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. அந்த ஆண்கள் இந்தப் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. (ஆனால், இப் பெண்களுக்காக) அவர்கள் செலவு செய்திருந்ததை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள், அன்றியும் நீங்கள் அப்பெண்களுக்குரிய மஹரை கொடுத்து அவர்களை விவாகம் செய்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை, மேலும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பெண்களின் விவாக பந்தத்தை நீங்கள் பற்றிப்பிடித்துக் கொள்ள வேண்டாம், அன்றியும், நீங்கள் செலவு செய்திருந்ததை (அவர்கள் போய்ச் சேருவோரிடம்) கேளுங்கள், (அவ்வாறே ஈமான் கொண்டு உங்களிடம் வந்து விட்டோருக்காகத்) தாங்கள் செலவு செய்ததை அவர்கள் (உங்களிடம்) கேட்கலாம் - இதுவே அல்லாஹ்வுடைய கட்டளையாகும், உங்களிடையே அவன் (இவ்வாறே) தீர்ப்பு வழங்குகிறான் - மேலும், அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.[60:10 ]

இந்த வசனத்தில் ஒரு முஸ்லிம் முஸ்லிமல்லாதவர்களை திருமணம் செய்வது கூடாது என்று அல்லாஹ் தெளிவாகவே கூறுகின்றான். காரணம் பலவாக இருந்தாலும் கலப்பு திருமணம் பெரும்பாலும் நிலைப்பதில்லை. அதில் ஒன்று ஆணும்-பெண்ணும் வெவ்வேறு மதத்தவராக இருந்தால் அவர்கள் காதலித்து கலப்பு திருமணம் செய்யும்போது, எந்த மதத்தின் அடிப்படையில் திருமணம் செய்வது, பிறக்கும் பிள்ளையை எந்தமதத்தில் அடிப்படையில் வளர்ப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் வரும். அப்போது கணவன் விட்டுக்கொடுத்தால் கணவனின் உரிமை அங்கே பாதிக்கப்படும். மனைவி விட்டுக்கொடுத்தால் அங்கே மனைவியின் உரிமை பதிக்கப்படும். வெளிப்படையாக கணவனோ-மனைவியோ விட்டுக்கொடுத்து ஏதாவது ஒரு மதத்தின் சாயலில் வாழ முற்ப்பட்டாலும் அங்கே மனதளைவில் இருவரில் ஒருவர் குமைந்துகொண்டு போலித்தனமான வாழ்க்கை வாழ நேரிடும். எனவேதான் இஸ்லாம் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதற்கே! எனவே ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமைத்தான் திருமணம் செய்ய வழிகாட்டுகிறது. இந்த கலப்பு திருமணம் என்பது கதைக்கு உதவாததுஎன்பதற்கு நிகழ்கால சம்பவம் ஒன்று சான்றாக உள்ளது.

திண்டுக்கல் : ஒன்றரை ஆண்டு காதலித்து திருமணம் செய்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, எந்த மத சம்பிராயப்படி திருமணம் செய்வது என்ற தகராறில் பிரிந்து சென்றனர். திண்டுக்கல் லட்சுமணபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (27). கோவையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது தோழி ஒருவர் மூலம் அறிமுகம் ஆன சென்னை அசோக்நகர் முகமது என்பவர் மகள் ரியாஸ்பாத்துமாவை (19) ஒன்றரை ஆண்டுகளாக காதலித்தார். ரியாஸ் பாத்துமாவிற்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்யவே, அவர் வீட்டை விட்டு வெளியேறி காதலன் தங்கியிருந்த கோவைக்கு சென்றார். அங்கிருந்து இந்த ஜோடி திருமணம் செய்ய திண்டுக்கல் வந்தது. இதற்கிடையில் ரியாஸ்பாத்துமாவை காணவில்லை என அசோக்நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதனால் இந்த ஜோடி திண்டுக்கல் மகளிர் போலீஸ் எஸ்.ஐ.,கீதாதேவியிடம், தாங்கள் திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்தனர். ஆனால் இந்து முறைப்படி திருமணம் செய்வதா, முஸ்லிம் முறைப்படி திருமணம் செய்வதா என ஸ்டேஷனில் காதல் ஜோடிகளுக்குள் விவாதம் நடந்தது. இது தகராறாக மாறி இருவரும் பிரிந்து தங்களது வீட்டிற்கு திரும்பினர்.[தினமலர்]

திருமணத்திற்கு முன்பே இங்கே கருத்து வேறுபாடு எனில் வருங்காலம் எப்படி இருக்கும் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை. இதுதான் எதார்த்தம்! எனவே இன்றைய காலத்து ஆசாபாசங்களுக்கு கட்டுப்பட்டு காதல்-கத்திரிக்காய் என்று மனதை அலைபாயவிட்டு அந்நிய மதத்தவரை திருமணம் செய்து அல்லல்படுவதை விட்டு அல்லாஹ் அனுமதித்த வகையில் அருமையான திருமண பந்தத்தில் இணைய சமுதாயம் முன்வரவேண்டும். அதுதான் நிரந்தர மகிழ்ச்சிக்கும் மறுமை வெற்றிக்கும் வழிவகுக்கும்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்

செவ்வாய், 10 நவம்பர், 2009

வான் மழையும்-படிப்பினையும்!

அல்லாஹ்வின் திருப்பெயரால்....
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சில நாட்களாக பருவமழை பெரும் அளவில் பெய்துவருகிறது. தமிழக அளவில் மட்டும் சுமார் என்பது பேர்வரை இன்றளவில் மரணித்து விட்டதாக செய்திகள் கூறுகின்றன. இதற்கிடையில் இந்த மழை பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை பார்க்கலாம். முதலாவதாக மழையை மனிதனால் வரவழைக்க முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது. சிலர் சொல்வார்கள்; இசையால் மழையை வரவழைக்கமுடியும், மரங்களை வளர்த்துவிட்டால் மழையை வரவழைத்து விடமுடியும், யாகங்கள் நடத்தினால் மழையை வரவழைத்துவிட முடியும், தவளைக்கும்-தவளைக்கும் கல்யாணம், கழுதைக்கும்-மரத்துக்கும் கல்யாணம் இப்படியாக சில மூடநம்பிக்கை சடங்குகளை செய்தால் மழையை வரவழைத்து விடமுடியும் என்பார்கள். ஆனால் இது நிச்சயமாக வெறும் கற்பனையே அன்றி வேறல்ல என்பதை நாம் நடைமுறையில் கண்டு வருகிறோம். அதுமட்டுமன்றி பெய்யக்கூடிய மழையை எந்த ஊரில் பெய்யும் என்று எவராலும் சொல்லமுடியாது. காரணம் மழையை இறக்கும் அதிகாரம் அல்லாஹ்விற்கு மட்டுமே உரியதாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்;
அல்லாஹ் எத்தகையவன் என்றால் அவன் தான் வானங்களையும், பூமியையும் படைத்து வானத்திலிருந்து மழையையும் பொழியச் செய்து அதைக் கொண்டு கனிவர்க்கங்களையும் உங்களுக்கு - ஆகாரமாக வெளிப்படுத்தித் தன் கட்டளையினால் கடலில் செல்லுமாறு கப்பலை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தும், ஆறுகளையும் உங்களுக்கு வசப்படுத்தித்தந்தான்.[14:32 ]

இந்த வசனத்தில் வானத்திலிருந்து மழையை இறக்குவது நானே என்று கூறும் இறைவன்,வேறு ஒரு வசனத்தில் மழை மட்டுமன்றி ஐந்து விஷயங்கள் பற்றிய ஞானம் தனக்கு மட்டுமே உரியது என்று கூறுகின்றான்;

நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்.[31:34 ]

மேற்கண்ட வசனங்கள் மழை என்பது அல்லாஹ்வின் அதிகாரத்திற்குட்பட்டது என்பதும் அது எப்போது, எங்கே எந்த அளவு பெய்யும் என்பதும் மனிதனின் ஆற்றலுக்கு உட்பட்டது அல்ல என்பதை அறியமுடிகிறது. அதனால்தான் மழை தொடங்கிய பின்னும் கூட வானிலை ஆய்வு மைய்யங்களால் கூட துல்லியமான மழை அளவை சொல்லமுடியவில்லை என்பதை நாம் கண்கூடாக காண்கிறோம். இது ஒருபுறமிருக்க, மனிதனின் மிக முக்கியமான ஆதாரமாக நீர்நிலைகள் விளங்குகின்றன. அந்த நீர்நிலைகள் மூலமாகத்தான் மனிதன் தானும் பருகி, கால்நடைகளுக்கும் புகட்டி விவசாயமும் மேற்கொள்கிறான். அப்படிப்பட்ட நீர்நிலைகள் பொய்த்துவிடாமல் இருக்க மழை மிகமிக அவசியமாகும். இந்த மழை விஷயத்தில் இன்னும் சில விஷயங்களை இஸ்லாம் நமக்கு கற்றுத்தருகிறது. குறிப்பாக பருவமழை தாமதமாக வறட்சி தென்படுமாயின், அந்த மழையை வேண்டி என்ன செய்யவேண்டும் என்பதற்கும் இஸ்லாம் வழிகாட்டியுள்ளது.

மழை வேண்டி தொழுதல்;
அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்கள் திடலுக்குச் சென்று மழை வேண்டினார்கள். அப்போது கிப்லாவை நோக்கியவர்களாகத் தம் மேலாடையை மாற்றிப் போட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 1012
இந்த ஹதீஸின் மூலம் மழை வேண்டி இரு ரக்அத்துகள் தொழவேண்டும் என்றும் அத்தொழுகை திடலில்தான் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் விளங்கிக்கொள்ளலாம். மேலும் தொழுகைக்கு பின் அல்லாஹ்விடத்தில் பிரார்த்திக்கவேண்டும்;
அனஸ்(ரலி) அறிவித்தார்கள்;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் பிரார்த்தனை எதிலும் தம் கைகளை (மிக உயரமாகத்) தூக்குவதில்லை; மழை வேண்டிப் பிராத்திக்கையில் தவிர. ஏனெனில், அதில் அவர்கள் தம் இரண்டு கைகளையும் தம் அக்குள்களின் வெண்மை தெரியும் அளவிற்கு உயர்த்துவது வழக்கம். அபூ மூஸா(ரலி) கூறினார்: நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்; மேலும், (அப்போது) தம் இரண்டு கைகளையும் உயர்த்தினார்கள்.
ஆதாரம்; புஹாரி எண் 3565

மழை வரும்போது நபியவர்களின் மனநிலை;
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;
மேகத்தையோ அல்லது (சூறாவளிக்) காற்றையோ கண்டால், நபி(ஸல்) அவர்களின் முகத்தில் (ஒருவிதமான கலக்கத்தின்) ரேகை தென்படும். (ஒருநாள்) நான், 'இறைத்தூதர் அவர்களே! மக்கள் மேகத்தைக் காணும்போது அது மழை மேகமாக இருக்கலாம் என்றெண்ணி மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால், தாங்கள் மேகத்தைக் காணும்போது ஒருவிதமான கலக்கம் தங்கள் முகத்தில் தென்படக் காண்கிறேனே (ஏன்)?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆயிஷா! அதில் (அல்லாஹ்வின்) வேதனை இருக்கலாம் என்பதால் என்னால் கலக்கமடையாமல் இருக்க இயலவில்லை. ('ஆத்' எனும்) ஒரு சமூகத்தார் (சூறாவளிக்) காற்றினால் வேதனை செய்யப்பட்டனர். (அந்தச்) சமூகத்தார் (மேகமாக வந்த) அந்த வேதனையைப் பார்த்துவிட்டு, 'இது நமக்கு மழையைப் பொழிவிக்கும் மேகம்' என்றே கூறினர்' என பதிலளித்தார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 4829

வானில் மழை மேகம் தென்பட்டால் இந்த மேகம் இறைவனின் அருளை பொழியும் மழை மேகமா..? அல்லது அவனது தண்டனையை இறக்கிவைக்கும்மேகமா.? என்றெல்லாம் நபியவர்கள் கலக்கம் அடைந்துள்ளார்கள். காரணம் முன்னர் வாழ்ந்த சமூகத்தார் அல்லாஹ்வால் அழிக்கப்பட்டதை கவனத்தில் கொண்டு அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் கலக்கம் அடைகிறார்கள். ஆனால் இன்று நாமோ மழை மேகத்தை கண்டுவிட்டால் நம்முடைய உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளுகிறது. இந்த மேகம் அல்லாஹ்வின் அருள் மேகமா..? அல்லது அல்லாஹ்வின் தண்டனைக்குரிய மேகமா என்றெல்லாம் நாம் கவலைப்படுவதில்லை. அதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதில்லை. இதுதான் நமது நிலை. ஆனால் அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள்,

நபி(ஸல்) அவர்கள் மழையைக் காணும்போது 'பயனுள்ள மழையாக (ஆக்குவாயாக!)" என்று கூறுவார்கள்.[புஹாரி எண் 1032 ]

மழையை கண்ட நாம் என்றாவது இவ்வாறு பிரார்த்தித்துள்ளோமா என்று ஒவ்வொருவரும் நம்மை நாமே கேட்டுக்கொள்வது சிறந்தது. இன்னும் சொல்லப்போனால் மழையை வேண்டி பிரார்த்திப்பவர்கள் உண்டு. இன்னும் சிலர் மழை பைத் என்று சில வார்த்தைகளை சொல்லிக்கொண்டு தெருவை வலம் வருவதும் உண்டு. ஆனால் அதிகப்படியாயான மழை பெய்யும்போது அதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு கேட்கும் பழக்கம் ஏனோ நம்மிடம் இல்லாமல் போனது வேதனைக்குரியது.

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு முறை மக்களைப் பஞ்சம் வாட்டியது. ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒரு கிராமவாசி எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. குழந்தை குட்டிகள் பசியால் வாடுகின்றனர். எனவே எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் தம் இரண்டு கைகளையும் உயர்த்தினார்கள். அந்த நேரத்தில் வானத்தில் எந்த மழை மேகத்iயும் நாங்கள் பார்க்கவில்லை. என் உயிர் எவனுடைய கைவசனம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக நபி(ஸல்) அவர்கள் தம் கைகளைக் கீழே இறக்கும் முன்பாக மலைகளைப் போல் மேகங்கள் திரண்டு வந்தன. நபி(ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்குவதற்குள்ளாக மழை கொட்டி அவர்களின் தாடியிலிருந்து வழிந்ததை நான் பாத்தேன். அன்றைய தினமும் அதற்கடுத்த நாளும் அதற்குமடுத்த நாளும் அதற்கு மறு ஜும்ஆ வரையிலும் எங்களுக்கு மழை பொழிந்தது. (மறு ஜும்ஆவில்) அதே கிராமவாசி அல்லது வேறொருவர் எழுந்து 'இறைத்தூதர் அவர்களே! கட்டிடங்கள் இழுந்து விழுகின்றன. செல்வங்கள் மூழ்குகின்றன. எனவே எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்றார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைகளை உயர்த்தி 'இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களை நோக்கி (இதை அனுப்புவாயாக!) எங்களுக்குக் கேடு தருவதாக (இம்மழையை) ஆக்கி விடாதே!" என்று கூறினார்கள். மேகம் உள்ள பகுதியை நோக்கி நபி(ஸல்) அவர்கள் சைகை செய்த போதெல்லாம் அம்மேகம் விலகிச் சென்றது. மதீனா நகர் பெரும் பள்ளமாக மாறியது. (இம்மழையால்) 'கனாத்' எனும் ஓடை ஒரு மாதம் ஓடியது. பல்வேறு பகுதிகளிலிருந்து வருபவர்களும் இம்மழையைப் பற்றிப் பேசாமலிருந்ததில்லை.
நூல்;புஹாரி.

இந்த அடிப்படையில் நாமும் மழையின் பாதிப்பில் இருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடவேண்டும்.

மழையின் பெறவேண்டிய மிக முக்கியமான படிப்பினை;

அல்லாஹ் கூறுகின்றான்;

பூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுள்ளதாகும் அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது (புற் பூண்டுகள் கிளம்பிப்) பசுமையாக வளர்கிறது (இவ்வாறு மரித்த பூமியை) உயிர்ப்பித்தவனே, நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக உயிர்ப்பிக்கிறவன் நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்.[41:௩௯ ]

இந்த வசனத்தில் மிகப்பெரிய படிப்பினை உள்ளது. காய்ந்து சருகாக இறந்து காட்சியளிக்கும் பூமியின் புற்பூண்டுகள், அதன் மீது அல்லாஹ்வின் அருள் மாரி பொழிந்தவுடன் பச்சை பசேல் என்று முளைப்பதை பார்க்கிறோம். இதுபோன்று தான் நாம் இறந்தவுடன் அல்லாஹ் நம்மை உயிர்ப்பிப்பான். அப்போது நம் வாழ்வின் ஒவ்வொரு வினாடி செயலுக்கும் நாம் பதில் சொல்லவேண்டும் என்ற சிந்தனை இந்த மழையின் மூலம் பூமி வெளியாக்கும் பயிரினங்கள் மூலம் நாம் பெறவேண்டிய படிப்பினையாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் அவனை சந்திக்கும் அந்த நாளில், அவன் பொருந்திக்கொண்டவர்களாக சந்திக்க கிருபை செய்வானாக!

சனி, 31 அக்டோபர், 2009

தாடியிலும் தடுமாற்றமா...?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

தாடி வைப்பது நபி[ஸல்] அவர்களால் வலியுறுத்தப்பட்ட சுன்னத் என்பதை முஸ்லிம்கள் அனைவரும் விளங்கி வைத்துள்ளோம். அதனால்தான் சமீபத்தில் கூட ஒரு மாணவன் தான் பயிலும் கல்வி நிலையம் தாடி வைப்பதற்கு தடை விதித்ததை எதிர்த்து கோர்ட்டு சென்றதால் கல்வி நிலையத்தால் நீக்கப்பட்டு, பின்பு கோர்ட்டு அந்த மாணவரை மீண்டும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டதையும், இதன் மூலம் அந்த மாணவன் தனது மார்க்க உரிமையை நிலைநாட்டியதையும் நாம் அறிவோம். இது ஒருபுறமிருக்க, முஸ்லிம்களில் தாடி வைப்பவர்கள் மிக குறைவாக இருந்தாலும், தாடி எந்த அளவு வைப்பது எனபதில் கருத்து வேறுபாடு கொள்வதில் நிறைவாகவே உள்ளனர். காரணம் அவர்கள் எந்த அறிஞரிடம் தாடியின் அளவு பற்றி கேட்கப்படுகிறதோ , அந்த அறிஞர் தான் வைத்திருக்கும் தாடியின் அளவை ஒட்டியே ஃபத்வா வழங்குவதால் இந்த குழப்பம் நீடிக்கிறது. அதிலும் குறிப்பாக பீஜே என்பவர் வைத்திருக்கும் தாடியின் அளவு எல்லோரும் அறிந்த ஒன்றுதான். தனக்கு அவ்வாறு வைப்பதுதான் வசதிப்படுகிறது என்பது அவரது நிலையாக இருக்குமானால், அது அவருக்கும் அல்லாஹ்வுக்கும் உள்ள விஷயம். ஆனால், இவர் தான் எந்த அளவு தாடி வைத்துள்ளாரோ அதையே மார்க்கத்தின் அளவாக காட்ட முற்படுகிறார்.

மும்பையில் நடைபெற்ற கேள்வி-பதில் நிகழ்ச்சியில் தாடி பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, தாடி வைக்கவேண்டும் என்று மார்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த அளவு என்று வரையறுத்து சொல்லப்படவில்லை எனவே தலைமுடி பற்றி ரசூல்[ஸல்] சொன்னதன் அடிப்படையில் நாங்கள் தாடியின் அளவு பற்றி முடிவெடுத்துள்ளோம் என்று சொல்லிவிட்டு,ஒரு சிறுவன் பாதி தலையை சிரைத்து பாதி முடி வைத்தவனாக வருகிறான். அவனை பார்த்த நபி[ஸல்] அவர்கள், என்ன இது..? ஒன்னு முழுசா முடிவை! இல்லன்னா முழுசா சிரை[அதாவது மொட்டை போடு] என்று சொன்னார்கள். [இது எந்த நூலில் உள்ளது என்று அவர் குறிப்பிடவில்லை] இதிலிருந்து என்ன வெளங்குது..? முழுசா முடியை விடு அப்பிடீன்னு நபியவர்கள் சொன்னதுனால தலைல முடிய வெட்டாம விட்டா பொம்பள மாதிரி வளந்துரும். அப்புறம் சடை போடலாம். பின்னல் பின்னலாம். இப்படி எடுத்துக்கொள்வதா? இந்த மாறி யாரும் இந்த விஷயத்தை எடுத்துக்கிறது கெடயாது. இதே மாரிதான் தாடிய முழுமையா விடுங்கள் என்றால் என்ன அர்த்தம்னா..? அகல வாக்கில் ஒதுக்காமல் முகத்தில் தாடி எந்த அளவு படர்ந்துள்ளதோ அதை ஒன்றும் செய்யாமல், நீள வாக்கில் அவரவர் தமக்கு எது அழகு என்று கருதுகிறாரோ அந்த அளவுக்கு குறைத்துக்கொள்ளலாம் என்று கூறுகிறார். இவர் சுட்டிக்காட்டியதற்கு ஒப்பான ஒரு செய்தி புஹாரியில் கிடைக்கிறது.

நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார் இப்னு உமர்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குடுமி ('கஸஉ') வைத்துக் கொள்ளக் கூடாதெனத் தடை விதித்ததை நான் செவியேற்றேன்' என்று கூறினார்கள்.உபைதுல்லாஹ்(ரஹ்) அவர்களிடம் இது பற்றி கேட்கப்பட்டபோது, 'கஸஉ' என்பது அவனுடைய தலையில் முடி எதுவும் இல்லாதிருக்க அவனுடைய நெற்றியில் மட்டும் முடியை அப்படியேவிட்டுவிடுவதாகும். (இதுதான் கூடாது). இவ்வாறே தலையின் ஒரு பக்கம் மட்டும் முடியை மழித்து மறுபக்கம் அப்படியேவிட்டு விடுவதும் கூடாது' என்று கூறினார்கள் எனத் தெரிவித்தார்கள்.

ஆதாரம்;புஹாரி எண் 5920 ]

இந்த செய்தியை கவனமாக படித்தால், இதில் தனது தலையில் பாதியை சிரைத்து பாதியை விட்டுவிடுவது கூடாது[உதாரணம்; சில அய்யர்கள் போன்று] என்றுதான் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து தாடியை குறைப்பதற்கு எப்படி சட்டமெடுக்கs முடியும்..? சரி! தாடி சம்மந்தமான் வேறு ஹதீஸ்களே இல்லையென்றால் இதிலிருந்து எதாவது சட்டம் எடுக்கமுடியுமா என்று யோசிக்கலாம். ஆனால் தாடி சம்மந்தமாக ஏராளமான ஹதீஸ்கள் உள்ளனவே!அல்லாஹ் அருள் மறை குர்ஆனில் கூறுகின்றான்;

(இதற்கு ஹாரூன்;) "என் தாயின் மகனே! என் தாடியையோ என் தலை (முடி)யையோ பிடி(த்திழு)க்காதீர்கள்; 'பனீ இஸ்ராயீலிடையே நீங்கள் பிரிவினையை உண்டாக்கி விட்டீர்கள்; என் வார்த்தைக்காக நீங்கள் காத்திருக்கவில்லை!' என்று நீர் கூறுவீரோ என நிச்சயமாக நான் அஞ்சினேன்" என்று கூறினார்.[அல்குர்ஆன்20:94 ]

நபி மூஸா[அலை] அவர்கள் அல்லாஹ்விடம் வேதம் வாங்குவதற்காக நாற்பது இரவுகள் சென்ற வேளையில் தனது சமூகத்தை தனது சகோதரும் நபியுமான ஹாரூன்[அலை] அவர்களின் பொறுப்பில் விட்டு செல்கிறார்கள். மூஸா[அலை] அவர்கள் திரும்பி வருபோது, மக்கள் சாமிரி என்பவனின் தூண்டுதலால் காளை கன்றை வணங்கியதை அறிந்து கோபமுற்றவர்களாக தனது சகோதரர் ஹாரூன்[அலை] அவர்களின் தாடியையும் தலைமுடியையும் பிடித்தபோது, ஹாரூன்[ சொன்ன வார்த்தைகள் தான் மேல் உள்ளவசனம். இதில் இந்த அதிமேதாவி அளவுக்கு ஹாரூன்[அலை] அவர்களுக்கு தாடி இருந்திருக்குமானால் மூஸா[அலை] அவர்களால் பிடித்திருக்கமுடியுமா..? சிந்திக்கவேண்டுகிறோம். இந்த அதிமேதாவிகள் இப்படியும் கூறலாம்; அதாவது மூஸா[அலை] மற்றும் ஹாரூன்[அலை] ஆகியோர் முன்னால் வாழ்ந்த நபி மார்கள். எனவே அவர்களை நாம் பின்பற்ற வேண்டியதில்லை என்று. எனவே நபி[ஸல்] அவர்களின் தாடி எப்படி இருந்தது என்பதை பார்ப்போம்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' மீசையை நன்கு ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளரவிடுங்கள். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.ஆதாரம்;புஹாரி எண் 5893 ]

இந்த பொன்மொழியில் இரண்டு விஷயங்களை சொன்ன நபி[ஸல்] அவர்கள், ஒன்றை நறுக்க சொல்கிறார்கள். மற்றொன்றை வளர விட சொல்கிறார்கள் எனில், தாடியில் கை வைக்கக்கூடாது என்பது தெளிவு. அப்படியாயின் தரையை தொடும் அளவுக்கு வளர்க்க சொல்கிறீர்களா என்று சிலர் கேட்கலாம். தாடியை நீங்கள் வெட்டாமல் விட்டால் அது ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டி வளராது[சிலருக்கு விதிவிலக்காக இருக்கலாம்]. பெண்கள் தங்களின் முடியை வெட்டுவதில்லை. அதற்காக எல்லா பெண்களுக்கும் தரையை தொடும் அளவுக்கு முடியிருக்கிறதா என்றால் இல்லை. எனவே எவருக்கேனும் தரையை தொடும் அளவுக்கு தாடி வருமேயானால் அவர் வெட்டினால் அது அவரது நிர்பந்தம் என்று சொல்லலாம். நிர்பந்தத்திற்கு மார்க்கத்தில் தடையில்லை என்பதை நாம் அறிவோம்.

நபி[ஸல்] அவர்களின் தாடி அளவு;

ஹுதைபியா உடன்படிக்கையின் போது நபி[ஸல்] அவர்களுடன் சமாதானம் பேச வந்தவர்களில் முதலாமவரான உர்வா இப்னு மஸ்வூத் அஸ்ஸகஃபீ என்பவர், நபி(ஸல்) அவர்களுடன் பேசும் போதெல்லாம் அவர்களின் தாடியைப் பிடித்தபடி இருந்தார். அப்போது முகீரா இப்னு ஷுஅபா(ரலி) (கையில்) வாளுடனும் தலையில் இரும்புத் தொப்பியுடனும் நபி(ஸல்) அவர்களின் தலைப்பக்கமாக நின்றிருந்தார்கள். எனவே உர்வா, நபி(ஸல்) அவர்களின் தாடியைப் பிடிக்க முனைந்த போதெல்லாம் முகீரா(ரலி), அவரின் கையை வாளுறையின் (இரும்பாலான) அடிமுனையால் அடித்து, 'உன் கையை அல்லாஹ்வின் தூதருடைய தாடியிலிருந்து அப்புறப்படுத்து" என்று கூறிய வண்ணமிருந்தார்கள். [ஹதீஸ் சுருக்கம் புஹாரி எண் 2731 ]

இந்த ஹதீஸில் உர்வா என்பவர் நபி[ஸல்] அவர்களின் தாடியை பிடிக்கும் அளவுக்கு நபி[ஸல்] அவர்களின் தாடி பெரியதாக இருந்துள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.

அபு மஃமர் கூறினார்: 'நபி(ஸல்) அவர்கள் லுஹரிலும் அஸரிலும் (எதையேனும்) ஓதுவார்களா?' என்று கப்பாப்(ரலி) அவர்களிடம் கேட்டோம். அதற்கவர் 'ஆம்' என்றார். 'நீங்கள் அதை எப்படி அறிந்து கொண்டீர்கள்?' என்று நாங்கள் கேட்டோம். 'நபி(ஸல்) அவர்களின் தாடி அசைவதிலிருந்து இதை அறிந்து கொள்வோம்' என்று கப்பாப்(ரலி) பதிலளித்தார்.

ஆதாரம்; புஹாரிஎண் 746 ]

இந்த ஹதீஸில் நபி[ஸல்] அவர்களின் தாடி அசைவை கொண்டு நபி[ஸல்] அவர்கள் ஓதுவதை அறிந்துள்ளனர் சகாபாக்கள். தாடி பெரியதாக இருந்தால்தான் ஓதும்போது தாடி அசையும். இல்லையேல் நாடிதான் அசையும் என்பது குறிப்பிடத்தக்கது.

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு முறை மக்களைப் பஞ்சம் வாட்டியது. ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒரு கிராமவாசி எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. குழந்தை குட்டிகள் பசியால் வாடுகின்றனர். எனவே எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் உயர்த்தி தம் இரண்டு கைகளையும் உயர்த்தினார்கள். அந்த நேரத்தில் வானத்தில் எந்த மழை மேகத்தையும் நாங்கள் பார்க்கவில்லை. என் உயிர் எவனுடைய கைவசனம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக நபி(ஸல்) அவர்கள் தம் கைகளைக் கீழே இறக்கும் முன்பாக மலைகளைப் போல் மேகங்கள் திரண்டு வந்தன. நபி(ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்குவதற்குள்ளாக மழை கொட்டி அவர்களின் தாடியிலிருந்து வழிந்ததை நான் பாத்தேன். [ஹதீஸ் சுருக்கம் புஹாரி எண் 933 ]

இந்த ஹதீஸில் நபி[ஸல்] அவர்களின் தாடியிலிருந்து நீர் வடிகிறது எனில் தாடி நீளமாக இருந்தாலே இது சாத்தியம். இப்போதுள்ள நவீன வாதிகள் மாதிரி 'சுரண்டி' வைத்திருந்தால் சாத்தியமாகாது என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.

சஹாபாக்களின் தாடி;

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் என்று (பெயர்) சொல்லப்படும். அவர் (பரீரா தம்மைப் பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தம் தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது.[ஹதீஸ் சுருக்கம் புஹாரி எண் 5283 ]

கண்ணீர் தாடி வழியாக வழிய வேண்டுமானால், பெரியதாடியாக இருந்தாலே சாத்தியம் என்பதை புரிந்துகொள்க. ஆக நபி[ஸல்] அவர்கள் மற்றும் சகாபாக்கள் தாடியை பெரிதாகவே வைத்துஇருந்தனர். அவர்கள் இந்த நவீனவாதிகள் போன்று முகத்தில் தாடி எங்கிருக்கிறது என்று தேடும் அளவுக்கு தாடி வைக்கவில்லை என்பது மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து விளங்கலாம்.

அவ்வளவு ஏன் மடையன் அபூஜஹ்ல் கூட தாடி என்றால் பெரிதாகத்தான் இருக்கவேண்டும் என்று விளங்கியிருந்தான்; பெரிதாகவே தாடி வைத்திருந்தான். அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் "அபூ ஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?' என்று நபி(ஸல்) அவர்கள் (பத்ருப் போர் முடிந்த போது) கேட்டார்கள். உடனே இப்னு மஸ்வூத்(ரலி) (அவனைப் பார்த்து வரச்) சென்றார்கள். அப்போது அவனை அஃப்ராவின் இரண்டு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகிய இருவரும பலமாகத்) தாக்கி விடவே, அவன் குற்றுயிராக இருக்கக் கண்டார்கள். அப்போது இப்னு மஸ்வூத்(ரலி) அவனுடைய தாடியைப் பிடித்துக் கொண்டு, 'அபூ ஜஹ்ல் நீ தானே!" என்று கேட்டார்கள். "நீங்கள் கொன்றுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக... அல்லது தன்னுடைய (சமுதாயத்து) மக்களாலேயே கொல்லப்பட்டுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக... ஒருவன் உண்டா?' என்று (தன்னைத் தானே பெருமைப்படுத்தியபடி) அவன் கேட்டான்.[புஹாரி எண் 3962 ]

இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள், அபூ ஜஹ்ல் உடைய தாடியை பிடித்துக்கொண்டு அவனிடம் பேசுகிறார்கள் எனில், அபூஜஹ்ல் உடைய தாடி அந்த அளவுக்கு பெரிதாக இருந்திருக்கிறது. ஆக தாடி என்றால் பிடிக்கும் அளவுக்கு பெரிதாக இருக்கவேண்டும் என்று அபூ ஜஹ்ல் விளங்கியது கூட இந்த குர்ஆண்-ஹதீஸ் பேசும் மேதைக்கு விளங்கவில்லை என்பதற்காக அபூ ஜஹ்ல் பற்றியதை குறிப்பிட்டோம் மாறாக ஆதாரத்திற்காக அல்ல.

ஆகவே அன்பானவர்களே! நபி[ஸல்] அவர்களும், சகாபாக்களும் தாடியை பெரிதாகவே வைத்துள்ளார்கள் என்பதற்கு பல்வேறு ஹதீஸ்களை ஆதாரமாக வைத்துள்ளோம். எனவே தாடி சுன்னத் என்பதை உணர்ந்து பெற்றோர்- மனைவி மக்கள் எதிர்ப்பையும் மீறி தாடிவைக்கும்சகோதரர்கள், நபி[ஸல்] அவர்கள் வைத்தது போன்று முழுமையாக தாடி வைக்க முன்வாருங்கள். தனிநபர் மனோ இச்சை அடிப்படையிலான ஃபத்வாக்களை புறந்தள்ளுங்கள். நிர்பந்தம் காரணமாக நீங்கள் தாடியை குறைத்தால் அதுபற்றிய விஷயம் அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் மத்தியில் உள்ளதாகும்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.








சனி, 24 அக்டோபர், 2009

கோ எஜுகேஷனும்; கோணல் நிலைப்பாடும்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

இந்திய அளவில் மட்டுமன்றி உலக அளவிலும் கூட ஆண்களும்-பெண்களும் இணைந்து படிக்கும் கோ எஜுகேஷன் எனும் கல்வி நிலையங்களே பெருமளவில் உள்ளன. இத்தகைய கல்வி நிலையங்களில் கல்வி கற்பது மார்க்க அடிப்படையில் சரியல்ல என்றாலும், நிர்பந்தம் காரணமாக நமது சமுதாய மாணவ-மனைவியர் கல்வி கற்று வருகின்றனர். இந்த கோ எஜுகேஷன் கல்வி பற்றி பீஜே எனும் அறிஞர், தனது இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா..? என்ற நூலில்

'இஸ்லாம் கல்வியை வலியுறுத்தும் அளவுக்கு வேறு எந்த மதமும் வலியுறுத்தியதில்லை. கற்பவர்களை ஆண் பெண் பேதமின்றி இஸ்லாம் பாராட்டுகிறது. ஆயினும் ஆணும் பெண்ணும் சேர்ந்து பயிலும் முறையைத்தான் இஸ்லாம் எதிர்க்கிறது' என்று பதிவு செய்துள்ளார். அதாவது ஆணும் பெண்ணும் சேர்ந்து பயிலும் கோ எஜுகேஷன் முறைக்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை என்று கூறுகிறார். ஆனால் இந்த தடைக்கு அவர் எந்த சான்றையும் முன்வைக்கவில்லை. ஆயினும் சில காரணங்களை முன்வைக்கிறார்.

  • அதாவது கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களால் வஞ்சித்து அனுபவிக்கும் செய்திகளும் , சக மாணவர்களால் ஏமாற்றப்படுவதும் அன்றாட செய்திகளாகிவிட்டன.
  • இவ்வாறு சேர்ந்து படிப்பதால்தான் ஆண்களின் கவனமும் சிதறடிகப்படுகின்றன.பெண்கள் தனியாக படித்தால் படிப்பு ஏறாது என்று கூறமுடியாது.
  • எதில் பாதுகாப்பு அதிகமோ அந்த வழியில் நின்று பெண்களுக்கே உரிய கல்லூரியில் பெண்கள் பயிலுவதுதான் அவர்களுக்கு பாதுகாப்பானது என்று இஸ்லாம் கூறுகிறது என்ற கருத்தை பதிவு செய்துள்ளார். அதாவது கோ-எஜுகேஷனுக்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை என்று திடமாக மறுக்கிறார்.

இதே அறிஞர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடிய நிகழ்ச்சியில் கோ-எஜுகேஷன் கூடுமா என்ற கேள்விக்கு, நபி[ஸல்] அவர்கள் காலத்தில் இதுபோன்ற கல்விக்கூடங்கள் வைத்து கற்றுக்கொடுத்தல் என்ற நடைமுறை இருந்ததில்லை. எனவே கல்வியை விட்டுப்புட்டு பொதுவாக ஒரு சபையில் ஆண்களும்-பெண்களும் சேர்ந்து உக்காருவதற்கு மார்க்கத்தில் அனுமதியிருக்கிறதா..? அப்பிடீன்னு பாத்தம்னா அனுமதியிருக்குது. நபிகள் நாயகம்[ஸல்] பெண்கள் பள்ளிவாசலுக்கு தொழ வந்தார்கள்.. அந்த அடிப்படையில் ஆண்களும்-பெண்களும் சேர்ந்து படித்தல் என்பதில, ஒரு சபைல சேர்ந்து உக்காருதல் என்பதில தப்பு கெடயாது...பக்கத்து பக்கத்துல உக்காரலன்னா தப்பில்லை. என்கிறார். அதாவது கோ-எஜுகேஷன் கூடும் என்று கூறி தனது முந்தய 'கூடாது' என்ற நிலைக்கு முரண்படுகிறார். சரி! இது ஒருபுறமிருக்க பெண்கள் தொழுகைக்கு பள்ளிக்கு வந்தார்கள் என்பதை கோ-எஜுகேஷனுக்கு ஆதாரமாக கொள்ளமுடியுமா என்றால் நிச்சயமாக முடியாது. ஏனெனில் முதலாவது பள்ளிக்கு தொழுகைக்கு வருவதற்கும்-கல்லூரியில் கல்வி கற்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. ஆண்களாகிய நம்மையே எடுத்துக்கொண்டாலும் பள்ளிவாசலில் தொழுகைக்கு நிற்கும் போது நமக்குள்ள இறையச்சம், ஒரு மதரசாவில் இருக்கும்போதோ, ஒரு கல்லூரியில் இருக்கும்போதோ இருக்கிறதா...? இல்லையே! மேலும் பெண்கள் நபி[ஸல்] அவர்கள காலத்தில் தொழுகைக்கு வந்தார்கள். அதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் ஐவேளை தொழுகைக்கும் பள்ளிக்கு வந்தார்கள் என்று நாமறிந்தவரை எந்த ஹதீசும் கிடையாது. பெண்கள் எந்த வக்துக்கு பள்ளிக்கு வந்தார்கள் என்பதை கீழ்கண்ட ஹதீஸ்கள் தெளிவாக விளக்குகிறது;

  • இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "உங்களிடம், பெண்கள் இரவில் பள்ளிவாசலுக்குச் செல்ல அனுமதி கோரினால் அவர்களுக்கு அனுமதி வழங்குங்கள்." என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். [புஹாரி எண் 865 ]

இந்த ஹதீஸில் 'இரவில்' என்ற வார்த்தையை நபி[ஸல்] அவர்கள் சேர்த்து கூறியதன் மூலம் பெண்கள் தொழுகைக்கு இரவில் மட்டுமே பள்ளிக்கு வரவேண்டும் என்பதை விளங்கலாம். இல்லை இல்லை எல்லா வக்துக்கும் வரலாம் என்று வாதிடுவார்களானால், 'இரவில்' என்று நபி[ஸல்] அவர்கள் தேவைஇல்லாமல் கூறினார்களா என்பதை விளக்கவேண்டும்.

  • இப்னு உமர்(ரலி) அறிவித்தார். உமர்(ரலி) உடைய மனைவியரில் ஒருவர் ஸுப்ஹ், இஷாத் தொழுகைகளைப் பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழச் செல்வார். அவரிடம் 'உங்கள் கணவர்) உமர்(ரலி) ரோஷக்காரராகவும் இதை விரும்பாதவராகவும் இருப்பதைத் தெரிந்து கொண்டே நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள்' என்று கேட்கப் பட்டது. அதற்கு 'அவர் என்னைத் தடுக்க முடியாது. ஏனெனில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நீங்கள் தடுக்காதீர்கள் என்று நபி(ஸல்) கூறியுள்ளனர்' என்று பதிலுரைத்தார். [புஹாரிஎண் 900 ]

இந்த ஹதீஸ் பெண்கள் பஜ்ர் மற்றும் இஷா தொழுகையில் மட்டுமே பங்கெடுப்பவர்களாக நபி[ஸல்] அவர்கள் காலத்தில் இருந்துள்ளார்கள்என்பதை தெளிவாக விளக்குகிறது. மேலும் இவ்வாறு பெண்கள் பள்ளிக்கு வருவது இருட்ட்டின் காரணமாக மற்றவர்கள் அறியமுடியாது என்பதை பின்வரும் ஹதீஸ் நமக்கு விளக்குகிறது.

  • ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைநம்பிக்கையுள்ள பெண்கள் தங்களின் ஆடைகளால் போர்த்திக் கொண்டு நபி(ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகை முடிந்ததும் தங்களின் இல்லங்களுக்குத் திரும்புவார்கள். இருட்டின் காரணமாக அவர்களை ஒருவரும் அறிந்து கொள்ளமுடியாது.[புஹாரிஎண் 578 ]

எனவே பஜ்ர் மற்றும் இஷா தொழுகை நீங்கலாக வேறு எந்த தொழுகைக்கும் நபி[ஸல்] அவர்கள் காலத்து பெண்கள் பள்ளிக்கு சென்றதில்லை என்பது தெளிவு. நிலை இவ்வாறிருக்க பட்டப்பகலில் விதவிதமான ஆடையுடன் பெண்கள்-ஆண்களோடு பயில கல்லூரிக்கு செல்வதற்கு இது ஆதாரமாகுமா..? சிந்திக்கவேண்டுகிறோம். இப்படி நாம் சொல்லும்போது அப்படியாயின் இரவு நேர கல்லூரிக்கு செல்லமா என்று சில விதண்டாவாதங்கள்' கேள்வி எழுப்பலாம்..? பெண்கள் பள்ளிக்கு தொழுகைக்கு வந்ததை கோ-எஜுகேஜனுக்கு ஆதாரமாக கொள்ளமுடியாது என்பதோடு, அது பகலோ-இரவோ எந்த காலத்திற்கும் இந்த ஹதீஸை சான்றாக கொள்ளமுடியாது என்பதை திட்டவட்டமாக கூறுகிறோம். ஆக முன்னுக்கு பின் முரானான ஃபத்வாக்களை சம்மந்தமில்லாத சான்றுகளுடன் வழங்குவதை மக்களே புரிந்து கொள்ளுங்கள்.

சரி! கோ எஜுகேஷனுக்கு தடை ஏதாவது இருக்கிறதா என்றால், நாமறிந்தவரை இருக்கிறது.

(நாங்கள் உங்களை அணும் மார்க்க விளக்கங்களை கேட்க முடியாதவாறு) தங்களிடம் (எப்போதும்) ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார். எனவே, தாங்களாகவே எங்களுக்கென்று ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள்' என்று பெண்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அவர்களும் அப்பெண்களுக்கென ஒரு நாளை வாக்களித்து, அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள். (மார்க்கக் கட்டளைகளை) ஏவினார்கள். அவர்கள் தங்களின் அறிவுரையில் 'உங்களில் ஒரு பெண் தன் குழந்தைகளில் மூவரை (மரணத்தின் மூலம்) இழந்துவிட்டாள் என்றால் அந்தக் குழந்தைகள் அப்பெண்ணை நரகத்துக்குச் செல்லாமல் தடுத்துவிடக் கூடியவர்களாக இருப்பார்கள்' என்று கூறினார்கள். அப்போது ஒரு பெண், 'இரண்டு குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டால்?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இரண்டு, குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டாலும் தான்' என்று கூறினார்கள்" அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.

[ஆதாரம் புஹாரி எண் 101 ]

இந்த பொன்மொழியில், எப்போதும் ஆண்கள் சூழ நபி[ஸல்] அவர்கள் இருப்பதால் தங்களால் நபியவர்களிடத்தில் மார்க்கத்தை கற்றுக்கொள்ள முடியவில்லை என்ற ஆதங்கத்தை பெண்கள் வெளிப்படுத்தி தங்களுக்கென ஒரு நாளை ஒதுக்கவேண்டும் என்று கோரியபோது, கோ-எஜுகேஷன் மார்க்கத்தில் அனுமதிக்கபட்டதுதான் என்றால்,

பெண்களே! எதற்கு உங்களுக்கு தனி நாள்..? வாருங்கள்! ஆண்கள் உள்ள இந்த சபையில் நீங்கள் ஒருபக்கம் அமர்ந்து உபதேசங்களை கேளுங்கள் என்று நபி[ஸல்] அவர்கள் சொல்லியிருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் பெண்களுக்கென ஒரு நாளை ஒதுக்கி நபி[ஸல்] அவர்கள் உபதேசம் செய்கிறார்கள் எனில், கோ-எஜுகேஷன் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது அல்ல என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும் நபி[ஸல்] அவர்கள் பெண்களுக்கு பொதுவான உபதேசத்திற்காக தனி நாளை ஒதுக்கினார்கள் என்றும் இது கல்வியை குறிக்காது என்று எவரும் கூறவருவார்களேயானால், மேற்கண்ட ஹதீஸை இமாம் புஹாரி ரஹ்மத்துல்லாஹிஅலைஹி அவர்கள் 'கல்வி' என்ற பாடத்தில் பதிவு செய்துள்ளதையும் இங்கு குறிப்பிட கடமைப்பட்டுள்ளோம்.

எனவே கோ-எஜுகேஷனுக்கு மார்க்கத்தில் நேரடியாக அனுமதி எதுவும் இல்லை. ஆனால் தடை இருக்கிறது என்பதை மேற்கண்ட ஹதீஸின் மூலம் விளங்கலாம். நிர்பந்தம் என்பது அல்லாஹ்வுக்கும் சம்மந்தப்பட்டவர்களுக்கும் உள்ள விஷயம். எனவே நாம் அன்பாக வேண்டுவது என்னவெனில், மார்க்க விஷயத்தில் யார் எது சொன்னாலும் அதை அப்படியே நம்பிவிடாமல் சொன்ன கருத்துக்களை சீர்தூக்கி பாருங்கள். தவறானதை எவ்வளவு பெரிய அல்லாமா சொன்னாலும் தூக்கி வீசுங்கள். சரியானதை ஒரு பாமரன் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளுங்கள். இதுதான் நமது இம்மை-மறுமைக்கு பயனளிக்கும்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

நபிகள் நாயகத்தின் பரிந்துரையில் சில தள்ளுபடி செய்யப்படும்..?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது சாந்தியும் சமாதானமும் அகிலத்திற்கோர் அருட்கொடையாம் அண்ணல் நபி[ஸல்] அவர்கள் மீதும், அவர்களின் அடியொற்றி வாழ்ந்த, வாழுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!
ஆதமின் மக்கள் அனைவரும் தவறு செய்யக்கூடியவர்களே! அதிலும் குறிப்பாக முஸ்லிம்களும் தவறு செய்யக்கூடியவர்களே! இந்நிலையில் உலகம் அழிக்கப்பட்டு மறுமை நாளில் அனைவரும் நியாயத்தீர்ப்புக்காக நமது ரட்சகனின் முன் நிற்கும் வேளையில், மக்கள் நபிமார்களிடம் பரிந்துரைக்காக செல்வார்கள். அப்போது ஒவ்வொரு நபியும் அடுத்த நபியை கைகாட்டி அவர்களிடம் செல்லுங்கள் என்று கூற, இறுதியாக நபிகள் நாயகம்[ஸல்] அவர்கள் இறைவன் முன் சஜ்தாவில் விழுவார்கள். இறைவனின் கட்டளைப்படி பரிந்துரை செய்வார்கள். என்பதை நாமெல்லாம் அறிந்து வைத்துள்ள செய்திதான். இந்த பரிந்துரை பற்றி ரசூல்[ஸல்] அவர்கள் கூறும்போது;
حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ مُسْتَجَابَةٌ فَتَعَجَّلَ كُلُّ نَبِيٍّ دَعْوَتَهُ وَإِنِّي اخْتَبَأْتُ دَعْوَتِي شَفَاعَةً لِأُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ فَهِيَ نَائِلَةٌ إِنْ شَاءَ اللَّهُ مَنْ مَاتَ مِنْ أُمَّتِي لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا ‏
"ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு (சிறப்புப்) பிரார்த்தனை ஒவ்வோரு நபிக்கும் இருந்தது. அனைத்து நபிமாரும் அந்தப் பிரார்த்தனையை அவசரப்பட்டு (இம்மையிலேயே) கேட்டுவிட்டனர். நான் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகத் தக்கவைத்திருக்கிறேன். அல்லாஹ் நாடினால், என் சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் மரணித்தவருக்கு அது கிடைக்கும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).[முஸ்லிம்எண்: 296 ]

இந்த பரிந்துரை பற்றி ஒரு முஸ்லிமல்லாதவர்களின் நிகழ்ச்சியில் ஒரு பெண்மணி, குர்ஆனில் பரிந்துரை இல்லை என்று வருகிறது; ஆனால் ஹதீஸில் லா இலாஹஇல்லல்லாஹ் என்ற கலிமாவை மொழிந்தவரை நபிகள் நாயகம் பரிந்துரை செய்து சொர்க்கத்துக்கு அழைத்து செல்வார் என்று வருகிறதே? இது இரண்டும் முரண்படுகிறதே..? என்ற கேள்விக்கு பதிலளித்த பீஜே எனும் அறிஞர்,
அல்லாஹ்வின் அனுமதியின்றி அவனிடம் பரிந்துரை செய்வது யார் என்று அல்லாஹ் கேட்கிறான். எனவே அல்லாஹ் நாடியவர்களுக்கு பரிந்து செய்ய அனுமதிப்பான். அந்த வகையில் நபிகள் நாயகம் பரிந்துரை செய்வார்கள். ஆனால் அதில் சிலருக்கான பரிந்துரையை அல்லாஹ் நிராகரித்துவிடுவான்; முஹம்மதே! நீ செஞ்சுட்டே; ஆனா தப்பு. இன்னின்ன ஆள்களுக்கு நீ பன்னீருக்கக்கூடாது . இவங்க எப்பிடி ஆளு தெரியுமா..? நீ நல்லவங்கன்னு நெனச்சுக்கிட்டுருக்க.. ஒன்னையையும் ஏமாத்தீட்டு நல்லவனா நடிச்சவங்க இவன்லாம். இவனுககெல்லாம் பரிந்துரை பண்ணினா நான் எத்துக்கிரமாட்டேன்னு கடவுள் சொல்வாரு...
என்று பதிலளிக்கிறார்.

அன்பானவர்களே! நன்றாக மேற்கண்ட அவரின் பதிலை படியுங்கள். அதாவது நபி[ஸல்] அவர்களை பரிந்துரை செய்ய சொல்லும் இறைவன், நபி[ஸல்] அவர்கள் சிலருக்கு செய்யும் பரிந்துரையை நிராகரிப்பான் என்கிறார். அதோடு நபி[ஸல்] அவர்கள் தப்பான சிலருக்கு பரிந்துரை செய்வார்கள் என்ற தோற்றத்தையும் தருகிறார். நாம் ஆரம்பத்தில் வைத்துள்ள ஹதீஸில் நபி[ஸல்] அவர்கள் தான் யாருக்கு பரிந்துரை செய்வேன் என்று அதாவது அல்லாஹ்விற்கு இனைவைக்கதவர்களுக்கு மட்டும் பரிந்துரை செய்வதாக தெளிவுபடுத்தியுள்ள நிலையில், அல்லாஹ்வால் நிராகரிக்கக்கூடிய பரிந்துரையை அல்லாஹ்வின் தூதர் செய்வார்கள் என்று இவர் வாய் கூசாமல் கூறுகிறார். சரி! நபி[ஸல்] அவர்கள் பரிந்துரை ஏதாவது நிராகரிக்கப்படுமா என்பதை கீழ்கண்ட ஹதீஸை பாருங்கள்;

மஅபத் இப்னு ஹிலால் அல்அனஸீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். பஸ்ராவாசிகளில் சிலர் (ஓரிடத்தில்) ஒன்று கூடினோம். பிறகு நாங்கள் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் சென்றோம். அனஸ்(ரலி) அவர்களிடம் பரிந்துரை (ஷஃபாஅத்) பற்றிய நபிமொழியைக் கேட்பதற்காக எங்களுடன் ஸாபித் அல் புனானீ(ரஹ்) அவர்களையும் அழைத்துச் சென்றறோம். அனஸ்(ரலி) அவர்கள் தங்களின் கோட்டையில் 'ளுஹா' தொழுதுகொண்டிருக்கையில் நாங்கள் அவர்களிடம் போய்ச்சேர்ந்தோம். பிறகு நாங்கள் உள்ளே செல்ல அனுமதி கேட்க, எங்களை அவர்கள் (உள்ளே நுழைய) அனுமதித்தார்கள். அப்போது அவர்கள் தங்களின் விரிப்பில் அமர்ந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் ஸாபித்(ரஹ்) அவர்களிடம் 'பரிந்துரை பற்றிய நபிமொழிக்கு முன்னால் வேறு எதைப் பற்றியும் கேட்காதீர்கள்' என்று சொன்னோம். உடனே ஸாபித்(ரஹ்) அவர்கள், 'அபூ ஹம்ஸா! (அனஸ்!) இதோ இவர்கள் பஸ்ராவாசிகளான உங்கள் சகோதரர்கள் ஆவர். பரிந்துரை (ஷஃபாஅத்) பற்றிய நபிமொழியை உங்களிடம் கேட்பதற்காக இங்கு வந்திருக்கிறார்கள்' என்றார்கள். அப்போது அனஸ்(ரலி) கூறினார்:
முஹம்மத்(ஸல்) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள். (பீதி மிகுந்த) மறுமை நாள் நிகழும்போது மக்கள் சிலர் சிலரோடு அலைமோதுவார்கள். அவர்கள் (ஆதி மனிதர்) ஆதம்(அலை) அவர்களிடம் சென்று '(இந்தச் சோதனையான கட்டத்திலிருந்து எங்களைக் காக்க) எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்துரை செய்யுங்கள்' என்று சொல்வார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள், 'அந்தத் தகுதி எனக்கு இல்லை; நீங்கள் இப்ராஹீம்(அலை) அவர்களைப் போய் பாருங்கள். ஏனென்றால், அவர் அளவிலா அருளாள(னான இறைவ)னின் உற்ற நண்பராவார்' என்று கூறுவார்கள். உடனே மக்கள் இப்ராஹீம்(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது இப்ராஹீம்(அலை) அவர்களும், 'அந்தத் தகுதி எனக்கு இல்லை; நீங்கள் மூஸாவிடம் செல்லுங்கள். ஏனென்றால், அவர் அல்லாஹ்வுடன் உரையாடியவராவார்' என்று சொல்வார்கள். உடனே, மக்கள் மூஸா(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது மூஸா (அலை) அவர்களும் அதற்கு(த் தகுதியானவன்) நான் அல்லன்; நீங்கள் ஈசாவைப் போய் பாருங்கள். ஏனென்றால், அவர் அல்லாஹ்வின் ஆவியும் அவனுடைய வார்த்தையும் ஆவார்' என்று சொல்வார்கள். உடனே, மக்கள் ஈசா(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது ஈசா(அலை) அவர்கள் அதற்கு(த் தகுதியானவன்) நான் அல்லன்; நீங்கள் முஹம்மத்(ஸல்) அவர்களைப் போய் பாருங்கள்' என்று சொல்வார்கள். உடனே, மக்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், 'நான் அதற்குரியவன் தான்' என்று சொல்லிவிட்டு, (மக்களுக்காகப் பரிந்துரைக்க) என் இறைவனிடம் அனுமதி கேட்பேன். அப்போது எனக்கு அனுமதியளிக்கப்படும். தற்போது எனக்குத் தோன்றாத புகழ்மாலைகளையெல்லாம் அப்போது நான் இறைவனைப் போற்றிப் புகழும் வகையில் எனக்கு அவன் என்னுடைய எண்ணத்தில் உதயமாக்குவான். அந்தப் புகழ்மாலைகளால் நான் அவனைப் (போற்றிப்) புகழ்வேன். அவனுக்காக (அவன் முன்) நான் சஜ்தாவில் (சிரவணக்கத்தில்) விழுவேன். அப்போது (இறைவனின் தரப்பிலிருந்து), 'முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; உங்களுக்காகச் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்' என்று சொல்லப்படும். அப்போது நான், 'என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்' என்பேன். அப்போது, 'செல்லுங்கள்; எவருடைய உள்ளத்தில் வாற்கோதுமையின் எடையளவு இறைநம்பிக்கை இருந்தோ அவரை நரகத்திலிருந்து அப்புறப்படுத்துங்கள்' என்று சொல்லப்படும். எனவே, நான் சென்று அவ்வாறே செய்வேன். பிறகு திரும்பி வந்து, அதே புகழ்மாலைகளைக் கூறி (மீண்டும்) அவனை நான் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் நான் விழுவேன். அப்போதும். 'முஹம்மதே! தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும் பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்' என்று கூறப்படும். அப்போது நான், 'என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்; என்று சொல்வேன். அப்போது 'சொல்லுங்கள்; யாருடைய உள்ளத்தில் 'அணுவளவு' அல்லது 'கடுகளவு' இறை நம்பிக்கை இருந்தோ அவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்' என்று சொல்லப்படும். நான் சென்று, அவ்வாறே செய்துவிட்டு, மீண்டும் திரும்பி வந்து அதே புகழ்மாலைகளைக் கூறி அவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் விழுவேன். அப்போதும், 'முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்; சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்' என்று (இறைவனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும். அப்போது நான், 'என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்' என்பேன். அதற்கு அவன், 'செல்லுங்கள்: எவருடைய உள்ளத்தில் கடுகு மணியை விட மிக மிகச் சிறிய அளவில் இறைநம்பிக்கை இருக்கிறதோ அவரை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்' என்று சொல்வான். அவ்வாறே நான் சென்று அ(த்தகைய)வரை நரகத்திலிருந்து வெளியேற்றுவேன். நான்காம் முறையாக நான் இறைவனிடம் சென்று அதே (புகழ்மாலைகளைக்) கூறி இறைவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் விழுவேன். அப்போது, 'முஹமமதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; செவியேற்கப்படும். கேளுங்கள்; அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்' என்று (இறைவனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும். அப்போது நான், 'என் இறைவா! (உலகில்) லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று சொன்னவர்களின் விஷயத்தில் (பரிந்துரை செய்ய) எனக்கு அனுமதி வழங்குவாயாக' என்று நான் கேட்பேன். அதற்கு இறைவன், என் கண்ணியத்தின் மீதும், மகத்துவத்தின் மீதும், பெருமையின் மீதும் ஆணையாக! 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று சொன்னவர்களை நான் நரகத்திலிருந்து நிச்சயமாக வெளியேற்றுவேன்' என்று சொல்வான்.
[ஆதாரம் புஹாரி எண் 7510 ]

அன்பானவர்களே! இந்த ஹதீஸில் நபி[ஸல்] அவர்களின் பரிந்துரையை கேட்ட இறைவன், அவர்களின் எந்த ஒரு பரிந்துரையாயாவது நிராகரித்தானா..? இல்லையே! அவ்வாறிருக்க, குர்ஆனில் இல்லாத-ஹதீஸில் இல்லாத ஒரு விஷயத்தை அதுவும் நபி[ஸல்] அவர்கள் சம்மந்தப்பட்ட விஷயத்தை சர்வ சாதரணமாக சொல்கிறார் எனில், மக்களே புரிந்து கொள்ளுங்கள். மேலும், சிலர் அது முஸ்லிமல்லாதவர் நிகழ்ச்சி எனவே அவர்கள் 'வெளங்கிக்' கொள்வதற்காக அவ்வாறு பேசினார் என்று யாரேனும் கூற முன்வருவார்களானால், அவர்களிடம் நாம் ஒரு கேள்வியை வைக்கிறோம்;
  • முஸ்லிமல்லாதவர்கள் 'வெளங்கிக்' கொள்வதற்காக மார்க்கத்தில் இல்லாத ஒன்றையோ, அல்லது கூட்டியோ-குறைத்தோ சொல்லலாமா..? என்ற எமது கேள்விக்கு பதிலளிக்கட்டும்!

செவ்வாய், 20 அக்டோபர், 2009

இறைவா! இவர்களுக்கு நேர்வழிகாட்டுவாயாக!!

நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?[2:107 ]

  • நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்![7:194 ]
  • அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ, அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களாவார்கள்.[16:20 ]
  • மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே.[22:73 ]
  • அல்லாஹ் உங்களுக்குக் கெடுதியை நாடினால், அவனிடமிருந்து உங்களைப் பாதுகாப்பவர் யார்? அல்லது அவன் உங்களுக்கு ரஹ்மத்தை நாடினால் (அதை உங்களுக்குத் தடை செய்பவர் யார்?) அல்லாஹ்வையன்றி (வேறு யாரையும்) பாதுகாவலனாகவும், உதவியாளனாகவும் அவர்கள் காணமாட்டார்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.[33:17 ]
  • நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்;. இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்;. யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.[4:48 ]

அறிவுடைய மக்களுக்கு அல்லாஹ்வின் வார்த்தைகளே போதுமானது.

படம் நன்றி;தினத்தந்தி

புதன், 16 செப்டம்பர், 2009

இனிய பெருநாளே........ ஈகைத்திருநாளே!


இறைவனின் மாபெரும் அருளை அள்ளித்தரும் புனிதமிக்க ரமலானில் அவனது கட்டளையை ஏற்று உண்ணல்-பருகல்-உறவுகொள்ளல் தவிர்த்து ஒருமாதகாலம் நோன்பு நோற்று இறையச்சம் எனும் ஒளியை இனிதே இதயத்தில் ஏந்தி, ஈகைத்திருநாளை கொண்டாடும் எனது இஸ்லாமிய சகோதர-சகோதரிகளுக்கு எமது இதயம் கனிந்த ஈத் முபாரக்.

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

இஸ்லாத்தின் பார்வையில் சிறந்தவைகள்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே; அவனது சாந்தியும்-சமாதானமும் அகிலத்திற்கோர் அருட்கொடையாம் அண்ணல் நபி[ஸல்] அவர்கள் மீதும், அவர்களை பின்பற்றி வாழ்ந்த, வாழுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!

நம்முடைய வாழ்வில் நாம் செய்யும் செயல்களில் எவை அனுமதிக்கப்பட்டவை என்பதையும் எவைகள் அனுமதிக்கப்படாதவை என்பதையும் நம்மில் பலர் அறிந்து வைத்துள்ளனர். அதே நேரத்தில் நமது வாழ்வின் செயல்கள் மற்றும் நமது அமல்களில் எவைகள் சிறந்தவை என்பதையும், இன்னும் இஸ்லாம் எவைகளை சிறந்தவை என்று கூறுகிறது என்பதில் சிலவற்றை பார்க்கவிருக்கிறோம்.
இஸ்லாத்தில் சிறந்தது
'இறைத்தூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது?' என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு 'எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரின் செயலே சிறந்தது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். நூல்;புஹாரி எண் 11 ]


'ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் 'இஸ்லாத்தில் சிறந்தது எது' எனக் கேட்டதற்கு, '(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்' என்றார்கள்" என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.[நூல்;புஹாரி எண் 12 ]
'நற்செயல்களில் சிறந்தது

'செயல்களில் சிறந்தது எது?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டதற்கு, 'அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்வது' என்றார்கள். 'பின்னர் எது?' என வினவப்பட்டதற்கு, 'இறைவழியில் போரிடுதல்' என்றார்கள். 'பின்னர் எது?' என்று கேட்கப்பட்டதற்கு, 'அங்கீகரிக்கப்படும் ஹஜ்' என்றார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.[புஹாரி எண் 26 ]

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நற்செயல்களில் சிறந்தது எது?' என்று கேட்டேன். அவர்கள், 'தொழுகையை அதற்குரிய வேளையில் தொழுவது" என்று கூறினார்கள். 'பிறகு எது (சிறந்தது?)" என்று கேட்டேன் அவர்கள், 'பிறகு தாய்தந்தையருக்கு நன்மை செய்வது" என்று பதிலளித்தார்கள். நான், 'பிறகு எது (சிறந்தது?)" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'இறைவழியில் அறப்போரிடுவதாகும்" என்று பதில் சொன்னார்கள்.[புஹாரி எண் 2782 ]

உலகத்தைவிட சிறந்தது;

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" இறைவழியில் காலையில் சிறிது நேரம் அல்லது, மாலையில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது உலகத்தையும் அதிலுள்ள பொருட்களையும் விடச் சிறந்தது. உங்களில் ஒருவரின் வில்லின் அளவுக்குச் சமமான, அல்லது ஒரு சாட்டையளவுக்குச் சமமான (ஒரு முழம்) இடம் கிடைப்பது உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்தது. சொர்க்கவாசிகளில் (ஹூருல் ஈன்களில்) ஒரு பெண், உலகத்தாரை எட்டிப் பார்த்தால் வானத்திற்கும் பூமிக்குமிடையே உள்ள அனைத்தையும் பிரகாசமாக்கி விடுவாள்; பூமியை நறுமணத்தால் நிரப்பி விடுவாள். அவளுடைய தலையிலுள்ள முக்காடோ உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாகும்.[புஹாரி எண் 2796 ]

இறைவனிடத்தில் சிறந்தது
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' அல்லாஹ் (மறுமையில்) சொர்க்கவாசிகளை நோக்கி 'சொர்க்கவாசிகளே!' என்று அழைப்பான். அவர்கள் 'எங்கள் அதிபதியே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம். நன்மை அனைத்தும் உன் கரங்களிலேயே உள்ளது' என்று பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ் நீங்கள் திருப்தியடைந்தீர்களா?' என்று கேட்பான். மக்கள் 'எங்கள் அதிபதியே! நாங்கள் திருப்தியடையாமலிருக்க எங்களுக்கு என்ன? நீ உன் படைப்புகளில் எவருக்கும் வழங்கியிராதவற்றை எங்களுக்கு வழங்கியிருக்கிறாயே!' என்று பதிலளிப்பார்கள். அதற்கு அல்லாஹ், 'இதைவிடவும் சிறந்ததை நான் உங்களுக்கு வழங்கட்டுமா?' என்று கேட்பான். சொர்க்கவாசிகள் 'எங்கள் அதிபதியே! இதைவிடச் சிறந்தது எது?' என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் 'உங்களின் மீது என் திருப்தியைப் பொழிகிறேன். இனி என்றுமே உங்களின் மீது நான் கோபப்படமாட்டேன்' என்று சொல்வான். என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.[புஹாரி எண் எண் 7518 ]

கடமையல்லாத தொழுகையை நிறைவேற்றும் இடத்தில் சிறந்தது;
ஒரு மனிதனின் தொழுகைகளில் சிறந்தது அவன் தன்னுடைய வீட்டில் தொழுவது தான்; கடமையான தொழுகையைத் தவிர' என்றார்கள்.[புஹாரி எண் 7290 ]
சகுனத்தில் சிறந்தது;
அபூ ஹுரைரா(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'பறவை சகுனம் ஏதும் கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியாகும்' என்று கூறினார்கள். மக்கள், 'நற்குறி என்பது என்ன இறைத்தூதர் அவர்களே?' என்று கேட்டார்கள் அதற்கு அவர்கள், 'நீங்கள் செவியுறுகிற நல்ல (மங்கலகரமான) சொல்தான்' என்று பதிலளித்தார்கள்.[புஹாரி எண் 5755 ]
தர்மத்தில் சிறந்தது;
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! தருமத்தில் சிறந்தது எது?' என்று கேட்டார். 'நீங்கள் ஆரோக்கியமுள்ளவராகவும், பொருளாசை கொண்டவராகவும் செல்வந்தராக விரும்பிய வண்ணம் வறுமையை அஞ்சியவராகவும் இருக்கும்போது தர்மம் செய்வதே சிறந்த தர்மம் ஆகும். உன் உயிர் தொண்டைக் குழியை அடைந்து விட்டிருக்க, 'இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்; இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்" என்று சொல்லும் (நேரம் வரும்) வரை தருமம் செய்வதைத் தள்ளிப் போடாதே. (உன் மரணம் நெருங்கி விடும்) அந்த நேரத்திலோ அது இன்னாருக்கு (உன் வாரிசுகளுக்கு) உரியதாய் ஆம் விட்டிருக்கும்" என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.[புஹாரி எண் 2748 ]
செல்வத்தில் சிறந்தது;
'ஒரு காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அன்று முஸ்லிமின் செல்வங்களில் ஆடுதான் சிறந்தது. குழப்பங்களிலிருந்து மார்க்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள அந்த ஆட்டைக் கூட்டிக் கொண்டு அவன் மலைகளின் உச்சியிலும் மழை பெய்யும் இடங்களிலும் சென்று வாழ்வான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவித்தார்.[புஹாரி எண் 19 ]

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

பொது சொத்தை கைவைத்தால்....

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது சாந்தியும்- சமாதானமும் அகிலத்திற்கோர் அருட்கொடை நபி[ஸல்] அவர்கள் மீதும், அவர்களின் அடியொற்றி வாழ்ந்த, வாழுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!
மீண்டும் ஒரு இடைத்தேர்தலை தமிழகம் சந்திக்கிறது. இத்தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், தமது கட்சி வேட்பாளரை தேர்வு செய்யும் நேர்காணலின்போது தேர்தலில் எவ்வளவு தொகை செலவு செய்வீர்கள் என்று தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் வினவுவதாக கேள்விப்பட்டுள்ளோம். அதை நிரூபிக்கும் வகையில், தேர்தல் நேரத்தில் வாக்குகளை பெற கோடிகளை இறைப்பதையும் நாம் காண்கிறோம். இதற்கு காரணம் இவர்களுக்கு வழங்கும் சம்பளத்தை வைத்து செலவு செய்ததை ஈடுகட்டி விடலாம் என்பதால் அல்ல. மாறாக, ஒன்றை விதைத்தால் பத்தை அறுவடை செய்யும் அதிகாரம் பதவிக்கு இருக்கிறது. அதன் மூலம் மக்களின் வரிப்பணத்தின் மூலம் உருவான அரசின் கஜானாவிலும் சுருட்டலாம். காண்ட்ராக்ட் என்ற பெயரில் சுருட்டலாம். பல்வேறு காரியங்கள் செய்து கொடுத்து கையூட்டு பெறலாம். இவ்வாறான பல்வேறு வழிகளில் மக்களின் உழைப்பால் உருவான வரிப்பணங்கள் இவர்களின் முதலீடாக இருக்கிறது. மேலும், அரசியல் கட்சிகள் ஒவ்வொரு கட்சியும் அடுத்த கட்சியை பற்றி ஊழல் செய்தவர்கள் என்று முழங்குவதுண்டு. அந்த அரசியல் கட்சிகளுக்கு இணையாக முஸ்லீம் சமுதாய அமைப்புகளும் தமது சக முஸ்லீம் அமைப்புகளை சுனாமியில் சுருட்டிவிட்டார்கள் என்பது போன்ற ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்குவதை பார்க்கிறோம். அதே சுனாமி பணத்தில் இவர்கள் சீருடை வாங்கிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டுபவர்களும் உண்டு.[இத்தகைய பரஸ்பர குற்றச்சாட்டு உண்மையா பொய்யாஎன்பது அல்லாஹ் அறிந்தவன்] இது ஒருபுறமிருக்க, அரசியல் கட்சிகள் சுருட்டுவதற்கும் முஸ்லீம் அமைப்புகள் சுருட்டுவதற்கும் வித்தியாசம் உள்ளது. அரசியல் கட்சிகளை பற்றிஅரசியல் வாதிகளை பற்றி மக்கள் தெளிவாக விளங்கி வைத்துள்ளார்கள். ஆனால் சமுதாய அமைப்புகளை பொருத்தமட்டில் எந்த சமுதாய அமைப்பாக இருந்தாலும் அவை 99 சதவிகிதம் முஸ்லிம்களின் உதவியை கொண்டு, அதிலும் குறிப்பாக வளைகுடாவில் இளமையை தொலைத்து வாழும் சகோதரர்களின் உதவியை கொண்டுதான் இயங்குகிறது என்பதும், இந்த சமுதாய அமைப்புகள் மீது அந்த அமைப்புகளில் அங்கம் வகிக்கும் சகோதரர்கள் அளப்பரிய நம்பிக்கை வைத்து தங்களின் பொருளாதாரத்தை வழங்குகிறர்கள் என்பதும் எவரும் மறுக்க முடியா உண்மையாகும். அப்படிப்பட்ட அமைப்பு எந்த நோக்கத்திற்காக வசூல் செய்தார்களோ அதற்கு செலவிடாமல் அமுக்கி கொண்டால், அல்லது வேறு வகைக்கு செலவு செய்தால் அவர்களின் மறுமை நிலை இதோ ஒரே ஒரு பொன்மொழி;

‏ நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கிப் (போருக்குப்) புறப்பட்டோம்; அல்லாஹ் எங்களுக்கு வெற்றியளித்தான். அப்போ(ரின் போ)து நாங்கள் தங்கத்தையோ வெள்ளியையோ போர்ச் செல்வங்களாக அடையவில்லை. உபயோகப் பொருட்கள், உணவுப் பொருட்கள், ஆடைகள் ஆகியவற்றையே போர்ச்செல்வங்களாகப் பெற்றோம். பிறகு நாங்கள் (மதீனாவுக்கு அருகிலுள்ள) 'வாதீ(அல்குரா)' எனுமிடத்தை நோக்கிச் சென்றோம். 'பனூ ளுபைப்' குலத்தின் ஜுதாம் குடும்பத்தைச் சேர்ந்த ரிஃபாஆ பின் ஸைத் என்பவர் அல்லாஹ்வின் தூதருக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்த (மித்அம் என்றழைக்கப்பட்ட) ஓர் அடிமையும் உடனிருந்தார்.நாங்கள் அந்தப் பள்ளத்தாக்கில் இறங்கியபோது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் அந்த அடிமை எழுந்து அவர்களது சிவிகையை (ஒட்டகத்திலிருந்து) இறக்கிக் கொண்டிருந்தார். அப்போது (எங்கிருந்தோ வந்த) ஓர் அம்பால் அவர் தாக்கப்பட்டு உயிரிழந்தார். அப்போது நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவருக்கு வாழ்த்துகள்! இறைவழியில் உயிர்த்தியாகம் செய்யும் பேறு அவருக்குக் கிடைத்ததே" என்று கூறினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! கைபர் போரில் கிடைத்த போர்ச் செல்வங்கள் பங்கிடப்படும் முன்பே (அனுமதியின்றி) அவர் எடுத்துக்கொண்ட போர்வை அவருக்கு நரக நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது" என்று கூறினார்கள்.(இதை கேட்ட) மக்கள் திடுக்குற்றனர். அப்போது ஒருவர் ஒரு/இரு செருப்பு வாரைக் கொண்டு வந்து, "(இதை) நான் கைபர் போரின்போது (பங்கிடுமுன்) எடுத்துக் கொண்டேன்" என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (இதைத் திருப்பித் தராமல் இருந்திருந்தால்) "இவை, நரகத்தின் செருப்பு வார்/கள் (ஆகியிருக்கும்) என்று கூறினார்கள்.அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).[முஸ்லிம்]

போரில் கிடைக்கும் பொருட்களை நபி[ஸல்] அவர்கள், போரில் பங்கெடுத்தவர்களுக்கு பகிர்ந்தளிப்பது வழக்கம். அவாறு பகிர்ந்தளிப்பதற்கு முன்பே ஒருவர் ஒரு போர்வையை சுருட்டிக்கொன்டதால் அவர் இறைவழியில் போரிட்டு உயிர்துறந்த போதும், அவர் சுருட்டிய போர்வை அவருக்கு நரகத்தை பெற்றுத்தருகிறது. மேலும் நபியவர்களுக்கு தெரியாமல் சுருட்டிக்கொண்ட இரு செருப்பு வார், திருப்பி தந்திருக்காவிட்டால் நரகத்தின் செருப்புவாராக ஆகியிருக்கும் என்றால், போரில் பங்கெடுத்தவர்களுக்கு அதில் கிடைக்கும் பொருட்கள் ஆகுமானவையாக இருந்ததும், அவைகளை உரியமுறையில் நபி[ஸல்] அவர்கள் பகிர்ந்தளிப்பதற்கு முன்னால் எடுத்துக்கொண்டதால் அந்த செயலின் காரணமாக நரகம் செல்கிறார்கள் எனில், பொது பணத்தை அல்லது சொத்துக்களை எந்த வித உரிமையும் இல்லாதவர்கள் சுருட்டிக்கொள்வது அல்லது தவறான வழியில் அந்த பொது சொத்தை பயன்படுத்துவது எங்கே கொண்டு பொய் சேர்க்கும் என்பthai மேற்கண்ட நபிமொழி நமக்கு உணர்த்தும் பாடமாக இருக்கிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ், பொது சொத்துக்கள் மற்றும் செல்வங்கள் விஷயத்தில் நேர்மையை கையாளக்கூடியவர்களாக நம்மை ஆக்கியருள்வானாக!

புதன், 29 ஜூலை, 2009

மத்ஹபுகளின் பார்வையில் பராஅத்!

ஷாஃபி மத்ஹப் நூலான இஆனதுத் தாலிபீன் என்ற நூலில் கூறப்பட்டிருப்பதைப் பாருங்கள்
وكذلك يحرم الصوم بعد نصف شعبان لما صح من قوله صلى الله عليه وسلم إذا انتصف شعبان فلا تصوموا ( إعانة الطالبين ج: 2 ص: 273)
ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராம் ஆகும். ஏனென்றால் ” ஷஅபான் பாதியயை அடைந்து விட்டால் நோன்பு நோற்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது. (நூல் : இஆனா பாகம் : 2 பக்கம் : 273)
மத்ஹபைப் பின்பற்றுபவர்கள்தான் பள்ளிவாசலுக்குத் தொழவரவேண்டும் என்று ஒவ்வொரு பள்ளியிலும் போடு மாட்டி வைத்துள்ளிர்களே நீங்கள் உங்கள் மத்ஹபிலேயே ஹராம் எனக் கூறப்பட்ட ஒரு காரியத்தை எப்படிச் செய்கிறீர்கள். இவ்வாறு மத்ஹப் நூற்களில் உள்ளது உண்மைதானா? என்று உங்களுடைய ஆலிம் பெருமக்களிடம் கேட்டுப்பாருங்கள். உண்மையை நிலையை உணர்வீர்கள்.
ومن البدع المذمومة التي يأثم فاعلها ويجب على ولاة الأمر منع فاعلها صلاة الرغائب اثنتا عشرة ركعة بين العشاءين ليلة أول جمعة من رجب وصلاة ليلة نصف شعبان مائة ركعة (إعانة الطالبين ج: 1 ص: 270)
ரஜப் மாத்தின் முதல் வெள்ளிக் கிழமை இரவில் மஃரிப் , இஷாவிற்கு மத்தியில் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுவதும். ஷஅபான் பதினைந்தாம் இரவில் நூறு இரக்அத்துகள் சிறப்பாக தொழுவதும் பழிக்கப்படவேண்டிய பித்அத்துகளாகும். அவ்வாறு தொழுபவன் பாவியாவான். இதை செய்பவனை தடுப்பது ஆட்சியாளர்கள் மீது கடமையாகும். (ஷாஃபி மத்ஹப் நூல் : இஆனா பாகம் : 1 பக்கம் : 270 )
فائدة أما الصلاة المعروفة ليلة الرغائب ونصف شعبان ويوم عاشوراء فبدعة قبيحة وأحاديثها موضوعة (فتح المعين ج: 1 ص: 270)
(ரஜப் மாதத்தின்) குறிப்பிட்ட ஒரு இரவிலும், ஷஅபான் பதினைந்தாம் இரவிலும் , ஆஷுரா உடைய நாளிலும் தொழப்படும் குறிப்பிட்ட தொழுகைகள் மோசமான பித்அத்களாகும். அவைகளைப் பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் இட்டுக் கட்டப்பட்டவையாகும் (ஷாஃபி மத்ஹப் நூல் : ஃபத் ஹுல் முயீன் பாகம் : 1 பக்கம் : 270 )
وإسراج السرج الكثيرة في السكك والأسواق ليلة البراءة بدعة وكذا في المساجد (البحر الرائق ج: 5 ص: 232)
பராஅத் இரவில் தெருக்களிலும், கடைவீதிகளிலும், அவ்வாறே பள்ளிவாசல்களிலும் அதிகமான விளக்குகளை எரிய வைப்பது பித்அத்தான காரியமாகும். (ஹனபி மத்ஹப் நூல் அல் பஹ்ருர் ராயிக் பாகம் : 5 பக்கம் : 232)
நன்றி;த.த.ஜ.நெட்

செவ்வாய், 21 ஜூலை, 2009

கிரகணங்களும்- இஸ்லாமியர்களும்!

சூரிய- சந்தி கிரகணங்கள் ஏற்படுவதை பற்றி அவ்வப்போது நாம் கேள்விப்படுகிறோம். நம்மில் பலர் அதை பார்த்தவர்களும் உண்டு. கிரகணங்கள் தோன்றுவதாக விஞ்ஞானிகள் அறிவித்துவிட்டால் நம்மில் பெரும்பாலோருக்கு பெருமகிழ்ச்சி. வானிலை ஆய்வு மையங்கள் கிரகனங்களை பார்வையிட ஏற்பாடு செய்துள்ள இடங்களுக்கு சென்று பார்வையிடுவது. பைனாகுளர் மூலமாகவும், வெல்டிங் செய்பவர்கள் பயன்படுத்தும் கவசங்கள் மூலமாகவும் பார்வையிடுவது. இவ்வாறாக கிரகணங்களை ஒரு ஜாலியாக கருதுகிறோம். ஆனால் உண்மையில் ஒரு முஸ்லீம் கிரகணம் ஏற்படும்போது மற்ற நாட்களை விட அல்லாஹ்வை அதிகமதிகம் அஞ்சவேண்டிய நாட்களாகும்.
கிரகணத்தை கண்டு பயந்த நபி[ஸல்] அவர்கள்;
*சூரிய கிரகணம் ஏற்பட்டபோது நபி(ஸல்) அவர்கள் கியாமத் நாள் வந்துவிட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்று எழுந்தார்கள்.[புஹாரி எண் 1059 ]
*நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தபோது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஆடையை இழுத்துக் கொண்டு பள்ளிக்குள் நுழைந்தோம்.[புஹாரி எண் 1040 ]
கிரகணங்கள் அல்லாஹ்வின் அத்தாட்சியாகும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "எந்த மனிதனின் மரணத்திற்காகவும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் பிடிப்பதில்லை. அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். அதன் மூலம் அல்லாஹ் தன்னுடைய அடியார்களை எச்சரிக்கிறான்'.[புஹாரி எண் 1048 ]
கிரகணத்தின் போது நபி[ஸல்] அவர்களுக்கு எடுத்துக்காட்டப்பட்ட சுவர்க்கமும்-நரகமும்.
*இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது (அதற்காகத்) தொழுதார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் நின்ற இடத்தில் எதையோ பிடிக்க முயன்றுவிட்டுப் பின்வாங்கினீர்களே?' என்று நபித்தோழர்கள் கேட்டனர். 'எனக்குச் சுவர்க்கம் எடுத்துக் காட்டப் பட்டது. அதிலிருந்து ஒரு குலையைப் பிடித்தேன். அதை நான் எடுத்திருந்தால் உலகம் உள்ளளவும் அதை நீங்கள் புசித்திருப்பீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.[புஹாரி எண் 748 ]
*அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்;.
சூரிய கிரகணம் ஏற்பட்ட சமயத்தில் நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். பின்னர் 'இன்று எனக்கு நரகம் எடுத்துக் காட்டப்பட்டது. அது போன்ற (மோசமான) கோரக் காட்சி எதையும் நான் கண்டதில்லை' எனக் கூறினார்கள். [புஹாரி எண் 431 ]
கிரகணங்களின் போது செய்ய வேண்டிய அமல்கள்;
தொழுகைக்கு அழைப்பு விடுத்தல்;
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது அஸ்ஸலாத்து ஜாமிஆ(தொழுகைக்குத் தயாராகுக!) என்று அழைப்புக் கொடுக்கப்பட்டது. [புஹாரி எண் 1045 ]
ஜமாஅத்தாக தொழுகை நடத்துதல்;
அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்கள்; நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.[புஹாரி எண் 1062 ]
தொழும் முறை;
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;ஒரு முறை சூரியக் கிரகணம் ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள் எழுந்துநின்று நீண்ட அத்தியாயம் ஒன்றை ஓதித் தொழுதார்கள். பிறகு நீண்ட நேரம் ருகூவு செய்தார்கள். பிறகு தலையை உயர்த்தி மற்றோர் அத்தியாயத்தை ஓதினார்கள். பிறகு மற்றொரு ருகூவு செய்து முடித்தார்கள். ஸஜ்தாவும் செய்தார்கள். இவ்வாறே இரண்டாம் ரக்அத்திலும் செய்தார்கள். [புஹாரி எண் 1212 ]
கிரகணம் விலகும் வரை தொழுதல்;
'சூரிய, சந்திர கிரகணங்கள் இரண்டும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவை. எனவே இவற்றை நீங்கள் கண்டால் அவை உங்களைவிட்டு விலக்கப்படும் வரை தொழுங்கள்![புஹாரி எண் 1212 ]
உரை நிகழ்த்துதல்;
அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்கள்;
(ஒரு முறை) சூரிய கிரகணம் ஏற்பட்டபோது நான் (என் சகோதரி) ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது மக்கள் நின்று (ம்ரகணத் தொழுகை) தொழுது கொண்டிருந்தார்கள். (அவர்களுடன்) ஆயிஷாவும் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். நான் 'மக்களுக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி) அவர்கள் தங்களின் கையால் வானத்தைக் காட்டி சைகை செய்து 'சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்)' என்று கூறினார்கள். நான் 'ஏதேனும் அடையாளமா?' என்று கேட்டேன். 'ஆம்' என்பதைப் போன்று ஆயிஷா(ரலி) அவர்கள் தங்களின் தலையால் சைகை செய்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும், அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு(ப் பின்வருமாறு) கூறினார்கள்: நான் இதுவரை காணாத யாவற்றையும் - சொர்க்கம், நரகம் உள்பட அனைத்தையும் இதோ இந்த இடத்தில் (தொழுகையில் இருந்தபோது) கண்டேன். மேலும், நீங்கள் தஜ்ஜாலின் சோதனைக்கு நெருக்கமான அளவிற்கு மண்ணறைகளில் சோதிக்கப்படுவீர்கள் என்று எனக்கு வஹீ (இறைச்செய்தி) (இறை அறிவிப்பு) அறிவிக்கப்பட்டது. (மண்ணறையில் தம்மிடம் கேள்வி கேட்கும் வானவரிடம்), இறைநம்பிக்கையாளர் ஒருவர் அல்லது 'முஸ்லிம்' '(இவர்கள்) முஹம்மத்(ஸல்) அஆவார்கள். அன்னார் தெளிவான சான்றுகளை எங்களிடம் கொண்டு வந்தார்கள். நாங்கள் (அவர்களின் அழைப்பை) ஏற்று நம்பிக்கை கொண்டோம்' என்று பதிலளிப்பார். அப்போது, '(தம் நற்செயல்களால் பயனடைந்த) நல்லவராக நீர் உறங்குவீராக! நீர் உறுதி(யான நம்பிக்கை) கொண்டிருந்தவர் என்று நாம் அறிவோம்' என்று (அவரிடம்) சொல்லப்படும். 'நயவஞ்சகர்' அல்லது 'சந்தேகங் கொண்டவர்' மண்ணறைக்கு வரும் வானவரின் கேள்விகளுக்கு), 'மக்கள் எதையோ சொன்னார்கள்; அதையே நானும் சொன்னேன். (மற்றபடி வேறொன்றும்) எனக்குத் தெரியாது' என்று கூறுவார். [புஹாரி எண் 7287 ]
அன்பான முஸ்லிம்களே! கிரகணங்கள் நாம் மகிழும் விஷயமல்ல. மாறாக, அவை நமக்கு இறைவனின் எச்சரிக்கை செய்தியாகும். எனவே, கிரகணம் எப்போது ஏற்ப்பட்டாலும் அந்த நாளில் அல்லாஹ்வை தொழுது, அவனை புகழ்ந்து அவனிடம் பாவமன்னிப்பு தேடி, சுவர்க்கத்தை அடைய முயற்ச்சிப்போமாக!

வியாழன், 16 ஜூலை, 2009

அடாடா! இதுக்கும் கூட தண்டனையா..?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيم
அல்லாஹ் தன்னுடைய அடியார்கள் எப்படியேனும் சுவர்க்கம் வந்துவிட வேண்டும் என்ற ஆசையினால், நாம் செய்யும் சின்ன சின்ன அமல்களுக்கும் ஏராளமான நன்மைகளை வாரி வழங்குவதை இதற்கு முந்தைய ஆக்கத்தில் பார்த்தோம். இதில் அல்லாஹ்வின் - அவனது தூதரின் கட்டளைகளை புறக்கணித்து நாம் செய்யும் தீமைகள் நமது பார்வையில் சிறியதாகவே தெரிந்தாலும் அதற்கும் அல்லாஹ் தண்டனையை அளிப்பான்.[நாடினால் மன்னிப்பான்] அவ்வாறு நமது பார்வையில் சாதரணமாக தெரியக்கூடிய சில தீமைகளும் அதற்கு அல்லாஹ் அளிக்கக்கூடிய தண்டனைகளையும் இந்த ஆக்கத்தில் பார்ப்போம்.
நபி(ஸல்) அவர்கள் மக்கா அல்லது மதீனாவில் ஒரு தோட்டத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்தபோது, கப்ரில் வேதனை செய்யப்படும் இரண்டு மனிதர்களின் சப்தத்தைச் செவியுற்றார்கள். அப்போது, 'இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை" என்று சொல்லிவிட்டு, 'இருப்பினும் (அது பெரிய விஷயம்தான்) அவ்விருவரில் ஒருவர், தாம் சிறு நீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்' என்று கூறிவிட்டு ஒரு பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் 'நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?' என்று கேட்கப்பட்டதற்கு, 'அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். [நூல்;புஹாரி எண் 216 ]
இந்த பொன்மொழியில், நாம் சாதாரணமாக கருதும் இரண்டு விஷயங்களுக்காக கப்ரில் வேதனை தரப்படும் என்பதை அறியமுடிகிறது. நம்மில் சிலர் சிறுநீர் கழிக்கும்போது பார்த்தால் மக்கள் வந்துபோகும் இடங்களில் அணிந்திருக்கும் ஆடையை தொடை தெரியும் அளவுக்கு இழுத்துவிட்டு யாரைப்பற்றியும் கவலைப்படாமல் சாதரணமாக சிறுநீர் கழிப்பதை பார்க்கலாம். இன்னும் சிலர் கால்நடைகளைப்போல் சிறுநீர் கழித்துவிட்டு சுத்தம் செய்யாதவர்களும் உண்டு. இதை பெரிய குற்றமாக அவர்கள் கருதுவதில்லை. ஆனால் இதற்கு கப்ரில் வேதனை தரப்படுகிறது. மேலும், புறம் பேசாதவர்களை காண்பது அரிது. அதுவும் நடைமுறையில் பெரிய தவறாக கருதப்படுவதில்லை. ஆனால், அதற்கும் கப்ரில் வேதனையுண்டு என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்" (முன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்த) பெண்ணொருத்தி ஒரு பூனை(க்குத் துன்பம் தந்த) விஷயத்தில் வேதனைப்படுத்தப்பட்டாள். அந்தப் பூனையை அது பசியால் துடித்துச் சாகும் வரை அவள் அடைத்து வைத்திருந்தாள். அதன் காரணத்தால் அவள் நரகத்தில் புகுந்தாள். அப்போது அல்லாஹ்வே மிக அறிந்தவன் - 'நீ அதைக் கட்டிவைத்து அதற்குத் தீனி போடவுமில்லை; தண்ணீர் தரவுமில்லை; அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்) கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து விடவுமில்லை" என்று அல்லாஹ் கூறினான். [நூல்;புஹாரி எண் 2365 ]
இந்த பொன்மொழியில், ஒரு பூனையை சரியாக பராமரிக்காமல் அதை சாகடித்த காரணத்தால் நரகத்தில் வேதனை செய்யப்படுகிறாள் எனில், கால்நடைகளை வளர்ப்பவர்கள் அதற்கு உரிய நேரத்தில் தண்ணீர், உணவு தரவேண்டும். அதோடு அது நோய்வாய்பட்டால் அதற்கு மருத்துவம் செய்யவேண்டும். அதன் மூலம் வருவாய் வந்தால் அதை பராமரிப்பது. அதன் மூலம் வருவாய் வரவில்லையானால் அதை பட்டினி போடுவது இவ்வாறான செயல்களை செய்பவர்களும், தெருவில் சும்மா படுத்திருக்கும் நாயை கல்லால் அடிப்பவர்களும், கழுதையின் வாலில் மட்டையை கட்டி அதில் நெருப்பு வைத்து அது விரண்டோடுவதை பார்த்து ரசிப்பவர்களும், சேவல் சண்டை- கிடாய் சண்டை - மஞ்சு விரட்டு- ஜல்லிக்கட்டு- ரேக்ளா ரேஸ் இதுபோன்ற போட்டியில் வாயில்லா ஜீவன்களை வதைப்பவர்களும் மேற்கண்ட நபிமொழியை கண்டு திருந்தவேண்டும் இல்லையேல் நரகில் வருந்தவேண்டும்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுக்கு நான் ஒரு தலையணையை (ஈச்ச நாரை அடைத்துத்) தயாரித்தேன். அதில் உருவப் படங்கள் வரையற்பட்டிருந்தன. அது சிறிய மெத்தை போன்றிருந்தது. நபி(ஸல்) அவர்கள் வந்ததும் (அதைப் பார்த்துவிட்டு) இரண்டு கதவுகளுக்கிடையே நின்றார்கள். அவர்களின் முகம் (கோபத்தால் நிறம்) மாறத் தொடங்கியது. நான், 'நாங்கள் என்ன (தவறு) செய்து விட்டோம்? இறைத்தூதர் அவர்களே!" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'என்ன இந்தத் தலையணையில்?' என்று (கோபமாகக்) கேட்டார்கள். நான், 'இது, நீங்கள் (தலைவைத்துப்) படுத்துக் கொள்வதற்காக தங்களுக்கென நான் தயாரித்த தலையணை" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், 'உருவப் படம் உள்ள வீட்டினுள் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்பதும், உருவப் படத்தைச் செய்வதன் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவான் என்பதும் அப்போது அல்லாஹ் (உருவப் படத்தைச் செய்தவர்களை நோக்கி), 'நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள்' என்று சொல்வான் என்பதும் உனக்குத் தெரியாதா?' என்று கேட்டார்கள்.[நூல்;புஹாரி எண் 3224 ]
இந்த பொன்மொழியில் உயிர் உள்ளவைகளின் உருவப்படம் பற்றி நபியவர்கள் கடுமையாக கண்டிப்பதோடு, அதற்கு மறுமையில் வேதனையுண்டு என்பதையும் சொல்லிக்காட்டுகிறார்கள். முஸ்லீம் ஓவியர்கள் உயிர்உள்ளவைகளின் உருவப்படங்கள் வரைவதை விட்டொழிக்கவேண்டும். வீடுகளில் முன்னோர்கள் தொடங்கி முந்தாநாள் பிறந்த குழந்தை வரை போட்டோ எடுத்து வரிசையாக மாட்டி வைத்திருப்பவர்களும், அழகுக்காக வீடுகளில் மிருகங்கள்- பறவைகளின் உருவங்கள் அடங்கிய பாய்கள்-போர்வைகள்- தலையணைகள்-திரைசீலைகள் பயன்படுத்துவோர் அதை மாற்றவேண்டும்.
'ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக திட்டமிட்டு சொன்னால், அவர் (மறுமையில்) இரண்டு வாற்கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் போடும்படி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால், அவரால் ஒருபோதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது.) 'தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்' அல்லது 'தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில் 'அவர்களின் உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறவரின் காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும். (உயிரினத்தின்) உருவப் படத்தை வரைகிறவர் அதற்கு உயிர் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார். ஆனால், அவரால் உயிர் கொடுக்க முடியாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.[நூல்;புஹாரி எண் 7042 ]
இந்த நபிமொழியில் காணாத கனவை கண்டதாக 'ரீல்' விடுபவர்களை பற்றி விவரிக்கிறது. இன்று நம்மில் சிலர் தன் காதலியிடம், அவளை பற்றி எந்த கனவு காணாத நிலையிலும் உன்னை கனவில் அப்படி கண்டேன் இப்படி கண்டேன் என்று புளுகுவதும், நண்பர்களுக்கு மத்தியில் தன் இமேஜை உயர்த்துவதற்காக நேற்று கனவில் பிரபலமான நடிகை என் கனவில் வந்து என்னையே திருமணம் செய்வேன் என்று ஒத்தக்காலில் நின்றார்aஎன்று புளுகுவதும், இதையெல்லாம் தாண்டி சிலர் நான் ரசூல்[ஸல்] அவர்களை கனவில் கண்டேன் என்று பினாத்துவதும் நடைமுறையில் பார்க்கிறோம். இப்படிப்பட்டவர்கள் இரு வார்கோதுமைகளை முடிச்சுபோடும்வரை வேதனை செய்யப்படுவர் எனில், ஏன் புரூடா விடவேண்டும் ?ஏன் தண்டனையை அனுபவிக்கவேண்டும்? சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். அடுத்து ஒட்டுக்கேட்பவர் காதில் ஈயத்தை காச்சி ஊற்றப்படும் என்பதை கவனத்தில் கொண்டு அடுத்தவீட்டில் என்ன நடக்கிறது என்பதை சுவரில் காதைஒட்டிவைத்து கேட்பவர்கள் சிந்திக்கவேண்டும்.
நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்;
புறாக்களின் மார்பு பகுதியை போல் சிகைக்கு கருப்பு சாயம் பூசுகின்ற ஒரு கூட்டம் இறுதிக்காலத்தில் தோன்றுவர். அவர்கள் சுவனத்தின் வாடையை கூட நுகரமாட்டார்கள்.[நூல் நசயீ]
சிலருக்கு இளநரை ஏற்படுவதுண்டு. அவர்கள் கூட தலைக்கு பெரும்பாலும் 'டை' அடிப்பதில்லை. ஆனால் கிழநரை ஏற்பட்ட கிழங்கள் கருப்பு கலரில் 'டை' அடித்துக்கொண்டு மைனராக வலம்வருவதை பார்க்கிறோம். இவர்கள் இந்த நபிமொழியை சிந்திக்கவேண்டும். கருப்பு அல்லாத வேறு கலரை கொண்டு தமது நரையை மாற்ற முன்வரவேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ், பாவங்களில் சிறியதோ- பெரியதோ அனைத்தையும் தவிர்ந்து நடக்க நமக்கு அருள் புரிவானாக!

செவ்வாய், 14 ஜூலை, 2009

அட! இதுக்கும் கூட நன்மையா..?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيم
மனிதர்களை படைத்த இறைவன் தன்னுடைய அடிமைகளான மனிதர்கள் மீது அளப்பரிய அன்பு கொண்டவன். ஒரு தாய் தன் பிள்ளை மீது காட்டும் அன்பை விட அல்லாஹ் தன் அடியார்கள் மீது காட்டும் அன்பு அளப்பரியது.
உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார்கள்;
(ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்காக(த் தன் குழந்தையைத் தேடினாள்). குழந்தை கிடைக்கவில்லை. எனவே), கைதிகளில் எந்தக் குழந்தையைக் கண்டாலும், அதை (வாரி) எடுத்து(ப் பாலூட்டினாள். தன் குழந்தை கிடைத்தவுடன் அதை எடுத்து)த் தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். அப்போது 'எங்களிடம் நபி(ஸல்) அவர்கள், 'இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள்!' என்றார்கள். நாங்கள், 'இல்லை, எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது' என்று சொன்னோம். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்களின் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்' என்று கூறினார்கள்.[நூல்; புஹாரி எண் 5999 ]
நம் மீது அளவற்ற அன்பு கொண்ட இறைவன் நாம் நரகம் சென்று விடக்கூடாது என்பதற்காக நாம் செய்யும் சின்ன சின்ன செயல்களுக்கும் நன்மைகளை வழங்குகிறான். அவற்றில் சிலவற்றை இந்த ஆக்கத்தில் பார்ப்போம்.
எண்ணத்திற்கும் கூலி வழங்கும் வள்ளல்;
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்;
(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதிவிட்டான். பிறகு அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்யவேண்டும் என (மனத்தில்) எண்ணிவிட்டாலே அதைச் செயல்படுத்தாவிட்டாலும் அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும்விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழு நூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால் ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கைவிட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான்.[நூல்; புஹாரி எண் 6491 ]
இந்த நபி மொழியில் வல்லோனின் வள்ளல்தன்மையை பாருங்கள். நாம் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் மட்டும் பசியடங்கிவிடாது. சாப்பிட்டால்தான் பசியடங்கும். ஆனால் நாம் ஒரு நன்மையான செயலை செய்ய நினைத்து செய்யாமல் விட்டுவிட்டால் கூட நாம் செய்ய நினைத்த அந்த என்னத்திற்கு ரஹ்மான் கூலிதருகிறான். அதுமட்டுமா ஒரு தீமையை செய்ய நினைத்து அதை அல்லாஹ்வுக்கு பயந்து செய்யாமல் விட்டால் அதையும் நன்மைக்குரியதாக கருதி நன்மையை பதிவு செய்கிறான். மேலும் ஒரு நல்ல செயலுக்கு பன்மடங்கு நன்மையை பதிவு செய்யும் ரஹ்மான், தீமைக்கு மட்டும் ஒரே ஒரு தீமையாக பதிவு செய்கிறான் எனில், நம் மீதுதான் நாயனுக்கு எத்துனை பாசம்?
மனைவிக்குஊட்டும் உணவுக்கும் கூலி;
நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடிச் செலவழிக்கிற எதுவாயினும் அதற்குரிய பலன் உங்களுக்கு அளிக்கப்பட்டே தீரும். உங்கள் மனைவியின் வாயில் ஊட்டும் (ஒரு கவளம்) உணவாயினும் சரியே' என்றார்கள். [நூல்; புஹாரி எண் 6373 ]
தம்பதியர் ஒவ்வொருவரும் தங்களுக்கிடையில் இருக்கும் காதலை வெளிப்படுத்தும் முகமாக ஒருவருக்கொருவர் உணவை ஊட்டி விடுவது சாதாரண விஷயம். இதில் இறைவனுக்கு செய்யும் எந்த அமலுமில்லை. ஆனாலும், மனைவியை பராமரிப்பது அவள்மீது அன்பு செலுத்துவது ஆகியவற்றை நம்மீது இறைவன் விதியாக்கியுள்ளான் என்ற எண்ணத்தில் ஒருவன் தன் மனைவியின் வாயில் ஒரு கவள உணவை ஊட்டினால் அதற்கும் நன்மையை இறைவன் அளிப்பதை நினைக்கும்போது அவன் எவ்வளவு பெரிய கருணையாளன் என்பதை புரிந்து கொள்ளலாம்.
நாய்க்கு உதவினாலும் நன்மையே;
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் 'ஒருவர் ஒரு பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையானத் தாகம் ஏற்பட்டது. அவர் (வழியில்) ஒரு கிணற்றைக் கண்டார். உடனே அதில் இறங்கித் தண்ணீர் குடித்தார். பிறகு (ம்ணற்றைவிட்டு) அவர் வெளியே வந்தார். அப்போது நாய் ஒன்று தாகத்தால் (தவித்து) நாக்கைத் தொங்கவிட்டபடி ஈரமண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அந்த மனிதர் (தம் மனத்திற்குள்) 'எனக்கு ஏற்பட்டதைப் போன்ற (அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கிறது போலும்' என்று சொல்லிக்கொண்டார். உடனே (மீண்டும்) அக்கிணற்றில் இறங்கித் (தண்ணீரைத் தோலால் ஆன) தன்னுடைய காலுறையில் நிரப்பிக்கொண்டு அதைத் தம் வாயால் கவ்வியபடி (மேலேறி வந்து) அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் இதற்கு நன்றியாக அவரை (அவரின் பாவங்களை) மன்னித்தான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைச் செவியேற்ற) மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! மிருகங்களுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு (மறுமையில்) நற்பலன் கிடைக்குமா?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(ஆம்:) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவும்பட்சத்தில் மறுமையில்) அதற்கான நற்பலன் கிடைக்கும்' என்று கூறினார்கள். [நூல்; புஹாரி எண் 6009 ]
நாய் வளர்ப்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது [இரு விஷயங்களுக்கன்றி] பொதுவாக நாயை யாரும் கண்டுகொள்வதில்லை. யாரையாவது திட்டுவதாக இருந்தால் கூட சீ நாயே! என்று திட்டுபவர்களை பார்க்கிறோம். அத்தகைய மதிப்பில்லாத நாய்க்கு நீர் புகட்டியதற்காக ஒருவரின் பாவங்களை இறைவன் மன்னிக்கிறான் என்றால் அவனின் அருளுக்குத்தான் எல்லையுண்டோ;
மரம் நட்டாலும் மகத்தான கூலி;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' ஒரு முஸ்லிம் மரம் ஒன்றை நட்டு அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது (மற்ற) உயிரினமோ உண்டால் (அதன் காரணத்தால்) ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்காமல் இருப்பதில்லை.[நூல்; புஹாரி எண் 6012 ]
மரம் நடுவதில் இறைவனுக்கு செய்யும் அமல் எதுவுமில்லை. ஆனாலும், அந்த மரத்தின் மூலம் தனது படைப்பினங்கள் பயனடைந்தால், அந்த மரத்தை நட்டியவருக்கு அல்லாஹ், தர்மம் செய்த கூலியை வழங்கி தனது தாராள கருணையை காட்டுகின்றான்.
முள்ளை அகற்றினாலும் கூலி;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒருவர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பாதையில் முட்கிளையொன்றைக் கண்டு அதை எடுத்து (எறிந்து)விட்டார். அவரின் இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்களிலிருந்து) மன்னிப்பு வழங்கினான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.[நூல்; புஹாரி எண் 2472 ]
நாம் நடந்து செல்லும் பாதைகளில் மக்களுக்கு இடையூறு தரும் அல்லது துன்பம் தரும் முள்ளையோ அல்லது கல்லையோ அகற்றினாலும் அதற்கும் கூலியுண்டு என்று நபியவர்கள் கூறியிருக்க, இன்று நடைபாதைகளில் இது போன்றவைகளை கண்டும் காணாமல் செல்லும் நம்மவர்கள் இனியேனும் அவைகளை அகற்றும் நற்செயலை செய்து நன்மையை பெற முன்வரவேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ், அவனிடத்தில் நன்மையை பெற்றுத்தரும் எல்லா அமல்களையும் செய்யக்கூடியவர்களாக நம்மை ஆக்கியருள்வானாக!