அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

செவ்வாய், 1 டிசம்பர், 2009

எய்ட்ஸ்;வாசலை விரியத்திறந்து வைத்துக்கொண்டு திருட்டை தடுக்கநினைக்கும் அதிமேதாவிகள்!


بسم الله الرحمن الرحيم

இன்று[1டிசம்பர்] உலக எய்ட்ஸ் தினம் அனுஸ்டிக்கப்படுகிறதுஇந்த தினத்தின் நோக்கம் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி மக்களை அந்த உயிர் கொல்லி நோயிடம் இருந்து காப்பதுதான். நோக்கம் என்னவோ நல்லநோக்கம்தான். ஆனால் அதற்கான வழிமுறைகள்தான் சரியில்லை.எனவேதான் பலகோடி மில்லியன் ரூபாய்கள் உலக அளவில் செலவிடப்பட்டும், அரசும்,தன்னார்வ அமைப்புகளும் பெருமுயற்சி செய்தும் இந்த எய்ட்சால் பாதிக்கப்படுவோர் பட்டியல் நீண்டுகொண்டேதான் உள்ளது.பொதுவாக,ஒருவிசயத்தை நாம் தடுக்கவேண்டுமெனில், அதன் ஆணிவேரை கண்டறிந்து அழிக்கவேண்டும். அல்லாமல் மேல் கிளைகளை வெட்டுவதால் எவ்வித பயனும் இல்லை. அதுபோல்தான் இந்த எய்ட்ஸ் ஒழிக்கப்படவேண்டுமென்றால்,அதற்கு வெறுமனே விழிப்புணர்வு பிரச்சாரங்களோ, எய்ட்ஸ் பாதுகாப்பு மய்யங்களோ தீர்வாகாது.எய்ட்ஸ் நிரந்தரமாக உலகிலிருந்து துடைத்து எறியப்பட்ட வேண்டுமென்றால்,

  • சின்னத்திரையிலும்,வண்ணத்திரையிலும் வரும் ஆபாச காட்சிகள் கண்டிப்பாக நீக்கப்படவேண்டும்.
  • ஆபாச உடைஅணிந்து நடிக்கும் நடிகைகள் மீதும் அவ்வாறு நடிக்கவைத்த இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள் மீதும் விபச்சார தடுப்பு பிரிவின்கீழ் வழக்கு தொடரவேண்டும்.
  • ஆபாசகாட்சிகளை[கவனித்தவுடன்] கத்தரி போட மறக்கும் அதிகாரிகளை கண்டறிந்து அவர்களுக்கு கத்தரி போடவேண்டும்.[அதாவது பணி நீக்கம் செய்யவேண்டும்]
  • ஆபாச பாடல் எழுதும் பாடலாசிரியர்கள் மீது விபச்சார தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு தொடர வேண்டும்.
  • மஞ்சள் படங்களை திரையிடும் திரையரங்குகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுப்பதோடு,தியேட்டர் உரிமமும் ரத்து செய்யப்பட வேண்டும்.
  • ஆபாச படங்கள், செய்திகள் வெளியிடும் பத்திரிக்கைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டவேண்டும்.
  • இந்தியாவில் அனுமதி பெற்றும் பெறாமலும் நடத்தப்படும் அனைத்து விபச்சார விடுதிகளும் மூடப்பட்ட வேண்டும். விபச்சாரம் செய்பவர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் பாரபட்சமின்றி கைதுசெய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
  • விபச்சார தொழிலுக்கு பக்கபலமாக இருக்கும் காவல்துறை 'கருப்பு ஆடுகள் 'மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
  • விபச்சாரிகளை கைதுசெய்தவுடன் அந்தசெய்தியை,'அழகிகள் கைது' என்று போடாமல் விபச்சாரிகள் கைது என்று போடவேண்டும்.
  • கலாச்சார சீரழிவை உண்டாக்கும் டேட்டிங், லவ்வர்ஸ்டே,வீக்எண்டு கொண்டாட்டங்கள் தடுக்கப்படவேண்டும்.
  • பீச்,பார்க் உள்ளிட்ட போது இடங்களில் சில்மிசங்களில் ஈடுபடும் காதலர்கள்[?] மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
  • விடுதிகளில் முறையான ஆவணங்கள் இன்றி அறை ஒதுக்குவதை தடுக்கவேண்டும்.
  • பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை கலக்கும் வகையில் பள்ளி,கல்லூரி ஆண்டு விழாக்களில் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போடுவது நிறுத்தப்படவேண்டும்.
  • நட்சத்திர ஓட்டல்களில் நடைபெறும் நடன நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட வேண்டும்.
  • திருவிழாக்கள் என்றபெயரில்,கலை நிகழ்ச்சி என்றபெயரில் நடத்தப்படும் ஆபாச கச்சேரிகள் நிறுத்தப்படவேண்டும்.
  • மொபைல் போனில்,கிசுகிசு வேண்டுமா?ஹாட் ஜோக் வேண்டுமா? என்று கேட்கும் மொபைல் நிறுவனங்களிடம் எச்சரிக்கவேண்டும்.மொபைல், இன்டர்நெட் முலம் ஆபாசத்தை பரப்பும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

மேற்குறிப்பிட்ட விசயங்களை தடுக்காமல் இன்னும் எத்தனை கோடிகள் செலவு செய்யப்பட்டாலும் அது விழலுக்கு இறைத்த நீர்போன்று ஆகுமே தவிர,எய்ட்சை ஒழிக்கமுடியாது.

இதோ அருள்மறை கூறுகிறது;விபச்சாரத்தின் அருகில்கூட நெருங்காதீர்கள்! அது தெளிவான வெட்கக்கேடானதாகவும், தீமையாகவும் இருக்கிறது.[17;32]

இறைவாக்கை அமுல்படுத்தினால் உலகில் எய்ட்ஸ் இருக்குமா..? எதோ நம்மால முடிஞ்சது புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.