அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

செவ்வாய், 27 ஜனவரி, 2009

முஸ்லிமல்லாதவர்களுக்காக நிவாரனம்வேண்டி பிரார்த்திக்கலாமா?

தமிழக முஸ்லிம்களில் அரசியல் கட்சிகளில் அங்கம்வகிப்பவர்களும், நடிகர்களை நேசிப்பவர்களும் தங்களின் தலைவருக்கு/ நேசருக்கு நோய் என்றால் அவருக்காக அல்லாஹ்விடம் து'ஆ செய்வதும், சிலநேரங்களில் அவர்களுக்காக மொட்டை போட்டுக்கொள்வதையும் பார்க்கிறோம்.

பராஉ வின் ஆஸிப்(ரலி) அறிவித்தார்;
நபி(ஸல்) அவர்கள் ஏழு செயல்களைச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்; ஏழு செயல்களிலிருந்து எங்களைத் தடுத்தார்கள். அவை (செய்யும்படிக் கட்டளையிட்ட ஏழு செயல்கள்) இவை தாம்;
1. நோயாளிகளை நலம் விசாரிப்பது.
2. ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வது.
3. தும்மியவருக்கு அவர், 'அல்ஹம்துலில்லாஹ்' ('அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்' என்று) சொன்னால், 'யர்ஹமுக்கல்லாஹ்' (அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக!) என்று பிரார்த்திப்பது.
4. சலாமுக்கு (முகமனுக்கு) பதிலுரைப்பது.
5. அக்கிரமத்திற்குள்ளானவருக்கு உதவுவது.
6. விருந்துக்காக அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக் கொள்வது.
7. சத்தியம் செய்தவரின் சத்தியத்தை நிறைவேற்ற உதவுவது.

நூல்;புஹாரி,எண் 2445

இந்த ஹதீஸில் நோய் விசாரிப்பது நபியவர்களால் கட்டளையிடப்பட்டுள்ளதாலும், முஸ்லிம்கள்-முஸ்லிமல்லாதவர்கள் என்று நபி[ஸல்]அவர்கள் பிரித்து கூறாததாலும் முஸ்லிமல்லாதவர்களுக்கு நிவாரணம் வேண்டி து'ஆ செய்யலாம் என்ற முடிவுக்கு சிலர்வரலாம். ஆனால் நபி[ஸல்]அவர்கள் முஸ்லிம்களை நோய்விசாரிக்கும்போது அவர்களுக்கு நிவாரணம் வேண்டி பிரார்த்தித்துள்ளார்கள். அதே நேரத்தில் முஸ்லிமல்லாத நோய்வாய்பட்டவர்களை சந்திக்கும்போது, அவர்களிடத்தில் தாஃவா மட்டும்தான் செய்துள்ளார்கள்.

முஸய்யப் இப்னு ஹஸ்ன் இப்னி அபீ வஹ்ப்(ரலி) அறிவித்தார் ;
அபூ தாலிப் அவர்களுக்கு மரண வேளை வந்துவிட்டபோது நபி(ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அப்போது அபூ ஜஹ்ல் அவரருகே இருந்தான். நபி(ஸல்) அவர்கள், 'என் பெரிய தந்தையே! 'லா இலாஹ இல்லல்லாஹ்' - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை' என்று சொல்லுங்கள். இச்சொல்லை (நீங்கள் சொல்லிவிட்டால் அதை) வைத்து (மறுமையில் நரகத்திலிருந்து விடுதலை கேட்டு) உங்களுக்காக அல்லாஹ்விடம் நான் வாதாடுவேன்" என்று கூறினார்கள். அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவும், 'அபூ தாலிபே! (பெரியவர், உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா புறக்கணிக்கப் போகிறீர்கள்?' என்று கேட்டனர். அவ்விருவரும் இவ்வாறே தொடர்ந்து அவரிடம் பேச இறுதியில் அவர், '(என் இறப்பு என் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில் தான் (நிகழும்)" என்று அவர்களிடம் கூறினார். எனவே, நபி(ஸல்) அவர்கள், 'நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரக்கூடாது என்று) எனக்குத் தடைவிதிக்கப்படும் வரை" என்று கூறினார்கள். அப்போதுதான், 'இணைவைப்பவர்கள் நரகவாசிகள் தாம் என்பது தெளிவாகிவிட்ட பின்பும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவதற்கு, அவர்கள் உறவினர்களாயிருந்தாலும் கூட இறைத்தூதருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் உரிமையில்லை" என்னும் (திருக்குர்ஆன் 09: 113) திருக்குர்ஆன் வசனமும, '(நபியே!) நீங்கள் விரும்பியவரை உங்களால் நேர்வழியில் செலுத்தி விட முடியாது" என்னும் (திருக்குர்ஆன் 28:56) திருக்குர்ஆன் வசனமும அருளப்பட்டன.
நூல்;புஹாரி,எண் 3884

இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இறைத்தூதர்[ஸல்]அவர்களுக்கு அரணாக இருந்த அபூதாலிப் அவர்கள் நோய்வாய்ப்பட்டபோது, அபூதாலிப் அவர்களுக்கு நிவாரனம்வேண்டி நபி[ஸல்]அவர்கள் து'ஆ செய்யவில்லை. மாறாக அபூதாலிப் அவர்களை இஸ்லாத்தின்பால் அழைக்கும் தாஃவா தான் செய்தார்கள் என்பதிலிருந்து முஸ்லிமல்லாதவர்களுக்காக நோய்நிவாரணம் தேடக்கூடாது என்பதை விளங்கலாம்.மேலும்,

அனஸ்(ரலி) கூறினார் யூதர்களின் அடிமையொருவர் நபி(ஸல்) அவர்களுக்கு ஊழியம் செய்துவந்தார். அவர் நோயுற்றுவிட்டார். அவரை உடல் நலம் விசாரிக்கச் சென்ற நபி(ஸல்) அவர்கள் 'இஸ்லாத்தை ஏற்றுக் கொள்' என்று கூறினார்கள். அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்டார்.
நூல்;புஹாரி,எண் 5657

இந்த செய்தியிலும் நோயாளியிடம் நபியவர்கள் தாஃவா மட்டுமே செய்துள்ளனர் என்பதை வைத்துப்பார்க்கும்போது, முஸ்லிமல்லாதவர்களின் நேர்வழிக்காக அல்லாஹ்விடம் நாம் து'ஆ செய்யலாமேயன்றி அவர்களுக்காக வேறு எந்த து'ஆவும் செய்ய அனுமதியில்லை என்பதை விளங்கிக்கொள்ளலாம். எனவே முஸ்லிம்கள் இதுபோன்ற செயல்களைவிட்டும் தவிர்ந்துகொள்வது சிறந்ததாகும்.

கருத்துகள் இல்லை: