அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வெள்ளி, 1 ஜூன், 2012

நீதிமன்றத் தீர்ப்புகள்; ஒரு இஸ்லாமியப் பார்வை- தொடர்[3]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

மூகத்தை சீரழிக்கும் குற்றவாளிகள் முதல், மத்திய நடுவன் அரசு தொடங்கி, மாநில அரசு வரை நடுங்குவது நீதிமன்றங்களைப் பார்த்துத் தான் என்றால் அது மிகையல்ல. அப்படிப்பட்ட நீதிமன்றங்களின் சில தீர்ப்புகள் அறிவுப்பூர்வமாகவும், சில தீர்ப்புகள் கேலிக்குரியதாகவும் அமைந்து விடுகின்றன. அந்த வகையில் சமீபத்தில் நீதிமன்றங்களில் வழங்கப்பட்டுள்ள சில தீர்ப்புகளில் நமது பார்வையை செலுத்துவோம்.

விளையாட்டு என்பது மனிதனுக்கு மனதளவிலும், உடலளவிலும் ஒரு மாறுதலைக் கொண்டு வருவதனால் விளையாட்டு அவசியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அந்த வகையில் உடலுக்கு வலுவூட்டுவதொடு, நீண்டநேரம் மூச்சை விடாமல் இருக்கும் பயிற்சியை வழங்கும் கபடி, உடல் வலிமை தரும் கால்பந்து, கைகளுக்கும், உடலுக்கும் வலுவூட்டுவதொடு சிறந்த தற்காப்புக் கலையாகவும் விளங்கும் சிலம்பம், மான்கொம்பு போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் நடைமுறையில் இருந்துள்ளன. இத்தகைய அறிவுக்கும் உடலுக்கும் பயன்தரும் விளையாட்டுகளை ஒழிக்கும் வகையில் எவ்வித பயனுமற்ற சூதாட்டமும், கிரிக்கெட்டும் இன்று மக்களை ஆட்கொண்டுள்ளது. இதில் சூதாட்டம் எனப்படும் சீட்டுக்கட்டு விளையாட்டில் பல்வேறு பரிமாணங்கள் உண்டு. அதில் ஒன்றுதான் ரம்மி ஆட்டம் என்பதாகும். இந்த ரம்மி ஆட்டம் ஆடுவது சட்டரீதியாக சரியானதா? என்பதில், சட்ட வல்லுனர்களுக்கு மட்டுமன்றி நீதிமான்களுக்கே குழப்பமாக உள்ளது போலும். 

சென்னையில் உள்ள ஒரு கலாசார சங்கத்தில் ரெய்டு நடத்திய போலீசார், அங்கே அப்போது மங்காத்தா என்ற சூதாட்டத்தை ஆடுவதாக கூறி 56 பேர் மீது வழக்கு தாக்கல் செய்தனர். 178 பண டோக்கன்களையும் கைப்பற்றினர். இதை எதிர்த்து அந்த சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ''ரம்மி சீட்டு விளையாட்டு சூதாட்ட குற்றத்தின் கீழ் வராது. அது மனரீதியான திறமையை வளர்க்கும் விளையாட்டு. பந்தயமாக பணம் கட்டியோ, கட்டாமலோ ரம்மி விளையாடுவது சூதாட்டம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. எனவே ரம்மி சீட்டு விளையாடுவதை தடுக்கும் விதமாக போலீசார் தலையிடக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. 

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் விசாரித்தார். அவர், ''வாய்ப்பை ஏற்படுத்தி பணத்தை கொட்டிக் கொடுக்கும் மற்ற சீட்டுக்கட்டு ஆட்டங்களைப் போல், ரம்மி ஆட்டத்தை கருத முடியாது. பல திறமையான அம்சங்களை உள்ளடக்கிய ஆட்டம் என்று சுப்ரீம் கோர்ட்டு உட்பட பல கோர்ட்டுகளில் ரம்மி பற்றி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. எனவே மனுதாரர் கூறுவதுபோல், அவர்கள் ரம்மி ஆட்டம்தான் ஆடியிருந்தால் அதில் குற்றம் கண்டுபிடிக்க முடியாது. பணம் வைத்து ரம்மி ஆடியிருந்தாலும் அது குற்றமல்ல. எனவே மனுதாரர் சங்கத்தை தொந்தரவு செய்யக்கூடாது' என்று தீர்ப்பளித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் போலீசார் அப்பீல் செய்தனர். இந்த அப்பீல் வழக்கை நீதிபதிகள் டி.முருகேசன், பி.பி.எஸ்.ஜனார்த்தன ராஜா ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: ரம்மி சீட்டாட்டம், மனிதனின் திறமையை பரிசோதிக்கும் ஒரு விளையாட்டாகத்தான் உள்ளது. திறமைக்காகவும், பொழுதுபோக்குக்காகவும் ரம்மி விளையாடும்போது அதில் போலீசார் தலையிடக் கூடாது. அதற்கு போலீசாருக்கு உரிமை இல்லை.
ஆனால் திறமையை சோதிக்கும் அதே ரம்மி ஆட்டத்தை பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் பணம் வைத்து விளையாடும்போது, அதை ஒரு சூதாட்டத்துக்கான ஆட்டமாகவே கருத வேண்டும். அதுபோன்ற நிலையில் சூதாட்டத்தை தடுக்கும் நோக்கத்தில், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று சோதனை மேற்கொள்ளவும், பணம் வைத்து ரம்மி ஆடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு அதிகாரம் உண்டு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட இந்த ரம்மி விசயத்தில் நீதிபதிகளுக்கே முரண்பட்ட பார்வை இருப்பதையும், உச்சநீதி மன்றம் ஒருவகையான தீர்ப்பும் உயர்நீதிமன்றம் ஒருவகையான தீர்ப்பும் வழங்கியுள்ளதைப் பார்க்கிறோம். இப்படியெல்லாம் பணம் வைத்து விளையாண்டால் தான் தவறு என்று சொல்லி ஆதரவு அளிக்கும் அளவுக்கு ரம்மி மனிதனுக்கு ஊட்டச்சத்து தரக்கூடிய ஒன்றா? ரம்மியாக இருந்தால் என்ன? வேறு வகை சூதாட்டமாக இருந்தால் என்ன? மொத்தத்தில் சூதாட்டம் என்பதே மனிதகுலத்திற்கு கேடுதானே! சூதாட்டங்களால் நடுத்தெருவுக்கு வந்த குடும்பங்கள் எத்தனை? சூதாட்டத்தால் ஏற்பட்ட சண்டைகள் எத்தனையோ? இதெல்லாம் நீதிமான்கள் அறியாத ஒன்றா? நீதிமான்கள் செய்யவேண்டியது என்ன? ஒரே தீர்வு சூதாட்டத்திற்கு தடைவிதிப்பதுதான்.

இதோ சூதாட்டம் பற்றி திருமறை குர்ஆன் வழிகாட்டுகிறது;

நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே 

பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் 

தடுத்து விடத்தான். எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? [அல்-குர்ஆன் 5 ;91 ]

ரம்மி ஆட்டத்தில் நீதிபதிகள் ஆட்டத்தை [தடுமாற்றத்தை] பார்த்த நாம், அடுத்து பார்க்க விருப்பது பரபரப்பான ஓரினச் சேர்க்கை சம்மந்தமானதாகும். ஆதிமனிதனை படைத்த கடவுள் அந்த மனிதன் மகிழ்வுற இன்னொரு ஆன் மகனை படைக்கவில்லை. மாறாக அங்கே ஒரு பெண்ணைப் படைத்து அந்த பெண்ணை ஆதிமனிதனுக்கு ஜோடியாக்கி, அவர்களை இன்புற்று வாழச் செய்து அவ்விருவர் மூலமாக மனித சமுதயத்தை பல்கிப் பெருகச் செய்தான். ஒரு ஆனும் பெண்ணும் இணைவதுதான் இயற்கை. ஆனும் பெண்ணும் இணையும் வகையில் தான் அவர்களின் உடலமைப்பும் வடிவமைக்கப் பட்டுள்ளது. மனிதர்கள் மட்டுமன்றி கால்நடைகள், பறவைகள், தாவரங்கள் இவைகள் கூட ஜோடி ஜோடியாகவே படைக்கப்பட்டு, அவைகள் கூட எதிர்பாலினத்தில் தான் இன்புற்று மகிழ்கின்றன. ஒரு ஆன் சிங்கம் இன்னொரு ஆன் சிங்கத்தை உறவுக்கு பயன்படுத்தியதாக காண முடியாது. காரணம் அவைகள் இயற்கையை மீறவில்லை. ஆனால் மனிதன் எங்கும் எதிலும் புதுமையாக செய்வேன் என்று கிளம்பி இன்று நாகரீகம் என்ற பெயரில் ஒருபால் உறவு எனும் ஓரினச்சேர்க்கையில் வந்து நிற்கிறான். இந்த ஓரினச் சேர்க்கை இயற்கைக்கு எதிரானது மட்டுமன்றி, மனிதனை அழித்தொழிக்கும் கொடிய எயிட்ஸ் நோய் போன்றவற்றை பரப்பும் காரணியாக உள்ளது. 

ஒரு சாமான்ய மனிதன் தவறு செய்தால் அவனை அந்த தவறிலிருந்து தடுத்து நிறுத்தும் கடிவாளம் போடவேண்டிய இடத்தில் உள்ள நீதிமன்றம், கடந்த 2009ம் ஆண்டு, ''அந்தரங்கமான ஒரு இடத்தில், இரண்டு நபர்கள் சம்மதித்து, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் அது குற்றம் அல்ல என்ற ஒரு தீர்ப்பை டெல்லி ஐகோர்ட்டு வழங்கியது. அந்த தீர்ப்பில், ஓரினச்சேர்க்கை குற்றம் என்று கூறி, அதற்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ள இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377 திருத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறி இருந்தனர்.

நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த தீர்ப்பினை எதிர்த்து பாரதீய ஜனதா தலைவர் பி.பி.சிங்கால், ஓரினச்சேர்க்கை எதிர்ப்பாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் வழக்குகளை தாக்கல் செய்தனர். இந்த அப்பீல் வழக்குகளை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாய் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த ஓரினச் சேர்க்கை விசயத்தில் நீதிமன்றத்தில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் ஓரினச் சேர்க்கை குற்றம்தான்' என்றும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் '(இருவர் சம்மதத்துடனான) ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என்ற ஐகோர்ட்டு தீர்ப்பில் எந்த சட்டத்தவறும் இல்லை என்று மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது' என்றும் முன்னுக்குப் பின் முரணாக வாதங்கள் வயப்பட்டு நீதிபதிகளின் கண்டனத்திற்கு இலக்கான மத்திய அரசு, இறுதியில் ஒரு வழியாக,


ஓரினச்சேர்க்கை சட்டப்படி குற்றம் அல்ல என்பதுதான் மத்திய அரசின் நிலை ஆகும். ஐகோர்ட்டு தீர்ப்பில் இருந்து, ஓரினச்சேர்க்கை குற்றம் என்பது ஓரினச் சேர்க்கையாளர்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும் என்பதை தெரிந்துகொண்டோம். தெளிவு பெற்றோம். ஐகோர்ட்டின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டோம். அதற்கு எதிராக அரசு அப்பீல் செய்யவில்லை'' என்று முடித்துக் கொண்டது. இனி உச்சநீதிமன்றம் இந்த விசயத்தில் முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகளோ மாறிவரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப, ஓரினச்சேர்க்கை மீதான பார்வையிலும் மாற்றம் வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். ஏற்கனவே ஓரினச்சேர்க்கை குற்றம் என்று கூறி, அதற்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ள இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377 திருத்தப்பட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்ற  நீதிபதிகள் கூறியுள்ள நிலையில், மத்திய அரசும் ஓரினச்சேர்க்கைக்கு ஒத்து ஊதிவிட்ட நிலையில், இனி ஓரினச் சேர்க்கைக்கு பச்சைக்கொடி காட்டுவதற்கு எந்த தடையும் உச்சநீதிமன்றத்திற்கு இல்லை. ஆனால் எதார்த்தம் என்ன? 

இந்த விசயத்தில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் 2009 ல் வழங்கிய தீர்ப்பில் கூறியுள்ள, ''அந்தரங்கமான ஒரு இடத்தில், இரண்டு நபர்கள் சம்மதித்து, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் அது குற்றம் அல்ல என்ற கருத்துப் பிரகாரம், இதே உரிமையை விபச்சாரம் மற்றும் கள்ளக்காதல், முறைகேடான உறவில் ஈடுபடுபவர்களும் கையிலெடுத்தால், ஒரு ஆனும் பெண்ணும் அந்தரங்கமான ஒரு இடத்தில் இருவரும் சம்மதித்து திருமணத்திற்கு செய்யாமலேயே கூடினாலும் யாரும் தடுக்க முடியாதே! விடுதிகளில் விபச்சாரம் செய்யும் ஆனும் பெண்ணும், விரும்பித்தானே செய்கிறார்கள். அவர்களை காவல்துறை கைது செய்வதும் நீதிபதிகளின் இந்த தீர்ப்பின் அடிப்படையில் தவறுதானே! எந்த ஆனும் எந்த பெண்ணும் பரஸ்பரம் சம்மதித்து உறவு கொண்டால் அதை தடுக்கும் உரிமை இல்லாமல் போகுமே? அதைத்தான் நீதிமன்றம் விரும்புகிறதா? இதைத்தான் மத்திய அரசும் விரும்புகிறதா? இதுதான் மக்கள் நலன் நாடும் தீர்வுகளா? சிந்திக்க வேண்டும். ஒரு பாலினச் சேர்க்கை என்பது உரிமை சம்மந்தப்பட்டதல்ல. அது ஒழுக்ககேட்டின் உச்சம். அது தடைசெய்யப் பட்டே தீரவேண்டிய ஒரு மிகப்பெரிய தீமையாகும். இதைப்பற்றி திருமறைக் குர்ஆன் ஒரு தீர்க்கமான தீர்வை சொல்கிறது. இதுபோன்ற ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட மாபாவிகள் நிலை என்னவானது என்று விளக்குகிறது.

ஓரினச் சேர்க்கையை சர்வசாதரணமாக செய்துவந்த ஒரு பகுதி மக்களிடம் கடவுளின் தூதராக லூத் [அலை] அவர்கள் வருகிறார்கள். பல்வேறு உபதேசங்களை அந்த மக்களுக்கு வழங்குகிறார்கள். பெண்களை விட்டுவிட்டு வேறு வழியில் நீங்கள் முறையற்ற தீய செயலை செய்கிறீர்களா? இதோ என்னுடைய புதல்விகள்; உங்களுக்கு திருமணம் செய்து வாழ பரிசுத்தமானவர்கள் என்றெல்லாம் கடவுளின் தூதர் லூத் [அலை] அவர்கள் சொன்ன அறிவுரைக்கு அந்த மக்கள் செவியை சென்றடையவில்லை. இறுதியாக, ''அந்த மக்கள் வசித்த அவ்வூரின் பூமியின் மேல் பரப்பை கீழ்ப் பரப்பாக மாறினோம். இன்னும் அதன் மீது சுடப்பட்ட செங்கற்களை மழைபோல் பொழிவித்தோம் என்று குர்'ஆன் விவரிக்கிறது. ஆக இந்த ஓரினச் சேர்க்கை என்பது இறைவனின் கோபத்திற்கு இலக்காக்கும் செயல் என்பதும், இயற்கைக்கும் முரணான ஒன்று என்பதும், இவ்வாறான தீய செயல்களில் ஈடுபடுபவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதும் நீதிமன்றங்கள் அறியவேண்டிய ஒன்றாக உள்ளது. 

தீர்ப்புகள் வரும்....



கருத்துகள் இல்லை: