அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வியாழன், 14 ஜூன், 2012

அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [இறுதிப்பகுதி]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அயல்நாட்டு நிதி விசயத்தில் பீஜேயின் அப்பட்டமான பொய்களையும், முரண்பாடுகளையும் அலசிவரும் இந்த தொடரில், அயல்நாட்டு நிதி விசயத்தில் மார்க்கத்திற்கு முரணனான அவரது மனோஇச்சை முடிவையும், அவரது இரட்டை வேடங்களையும் அம்பலப்படுத்தி வருகிறோம். இப்போது அவரது மற்றொரு இரட்டை வேடம் ஒன்றைப்பார்ப்போம்.

மவ்லவி ஹாமித்பக்ரி மன்பஈ அவர்கள் பத்துக்கும் மேற்ப்பட்ட பெயரில் லெட்டர் பேடு தயாரித்து வசூல் வேட்டை நடத்தினார் என்று பீஜே குற்றம் சாட்டினார். அதற்கான ஆவணங்களை அவர் பதிவு செய்யவில்லை. அது போகட்டும். இவரது மேலான்மைக்குழுத் தலைவர் சம்சுல்லுஹா அவர்கள், மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் முகவரியான 
11 A ராவுத்தர் கிழக்குத்தெரு என்றே ஒரே முகவரியில்,

  1. தவ்ஹீது ஜமாஅத்.
  2. மஸ்ஜிதுர் ரஹ்மான் நிர்வாகக் கமிட்டி.
  3. மேலப்பாளையம் ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்.
இவ்வாறான லெட்டர் பேடுகள் தயாரித்து அரபியில் பல கடிதங்கள் வெளிநாட்டிற்கு அனுப்பியுள்ளாரே! இதற்கு பீஜே என்ன சொல்லப்போகிறார்? மேற்கண்ட அனைத்தும் ஒரே இடத்தில் இயங்குகிறது எனவே ஒரே முகவரியில் லெட்டர் பேடு தயாரித்தார்கள் என்று பீஜே சொல்லலாம். தவ்ஹீத் ஜமாஅத் சரி, மஸ்ஜிதுர் ரஹ்மான் நிர்வாகக் கமிட்டி சரி. அதென்ன மேலப்பாளையம் ஜாக் என்ற அமைப்பு?

ஜாக் வழிகேடு இயக்கம் என்று ஒருபக்கம் சொல்லிக்கொண்டு அந்த ஜாக்கை உல்டா பண்ணி மேலப்பாளையம் ஜாக் என்று ஒரு அமைப்பு துவங்கியது அதுவும் 2004 ல் ததஜ உருவான பின்னால் 2005 ல் மேலப்பாளையம் ஜாக் என்ற பெயரில் ஒரு குட்டி அமைப்பு உருவாக்கியதன் காரணம் என்னவென்று பீஜே சொல்வாரா? ஊரில் உள்ள சொத்துக்களை எல்லாம் ததஜ பெயரில் எழுத வேண்டும் என்று சொல்லும் பீஜே, மேலப்பாளையம் பள்ளிவாசலை ததஜ பெயரில் எழுதி வைக்கச் சொல்ல முடியுமா? மேலப்பாளையம் ஜாக் என்ற லுஹாவின் குட்டி அமைப்பை கலைக்கச் சொல்ல முடியுமா? முடியாது. ஏனென்றால் இந்த குட்டி அமைப்பு உருவாக்கப்பட்டதே உண்மையான ஜாக் பெயரில் உள்ள மஸ்ஜிதுர் ரஹ்மானை அமுக்குவதற்காகத் தானே!

சரி போகட்டும்., வெளிநாட்டிற்கு பிழைக்கப்போன தமிழனிடம் மட்டுமே நாங்கள் காசு வாங்குவோம். வெளிநாட்டுக்காரன் கைமடக்கு தந்தால் வாங்கமாட்டோம் என்று மார்தட்டும் பீஜே, அஹ்லே ஹதீஸ் வழிகேடு என்று சொல்லிவிட்டு அந்த அமைப்பிடம் அரபியில் வாங்கிய இந்த பரிந்துரைக் கடிதம் எதற்காக என்று பதில் சொல்லட்டும். 

ததஜவுக்கு சொந்தமான, சம்சுல்லுஹா மற்றும் எம்.எஸ்.ஸுலைமான் போன்றோரின் மேற்பார்வையில் இயங்கும் அல் இர்ஷாத் மகளிர் இஸ்லாமியக் கல்லூரிக்காக ஒரு அரபி நிறுவனத்திற்கு சம்ஷுல்லுஹா அவர்கள் கையெழுத்திட்டு அனுப்பிய வெவ்வேறு இரு கடிதம் சாம்பிளுக்காக.


இந்த கடிதங்கள் எல்லாம் எந்த தமிழனுக்கு எழுதப்பட்டவை என்று சொல்லட்டும். இதுபோன்று இன்னும் ஏராளம் உண்டு.

அன்பான சகோதரர்களே!
வெளிநாட்டு நிதி விசயத்தில் தன்னை விட்டு பிரிந்து சென்ற ஹாமித்பக்ரி மற்றும் சைபுல்லாஹ் ஆகிய அறிஞர்கள் மீது பழிபோட்டு விட்டு தன்னை பரிசுத்தவனாக காட்டிய பீஜேயின் வெளிநாட்டு நிதி தொடர்பான விசயங்களையும், அவரோடு இன்றும் இருக்கும் சகாக்களின் வெளிநாட்டு நிதி தொடர்பான விசயங்களையும் உரிய ஆவணங்களின் அடிப்படையில் 13 தொடர்களாக பதிவு செய்திருக்கிறோம். பல மாதங்களாக நாம் பல்வேறு கேள்விகளை எழுப்பியும் பீஜே மவுனம் காப்பதில் இருந்து அவரது உண்மைநிலையை மக்கள் அறிந்து கொள்ளலாம். பீஜேயின் அவரது சகாக்களின், அவரது ஜமாஅத்தின் வெளிநாட்டு நிதி தொடர்பான நேரடி சாட்சிகள் மற்றும் இன்னும் சில ஆவணங்கள் நம்மிடம் உள்ளன. இதுவரை எழுப்பிய வினாக்களுக்கு பீஜே பதிலளித்தால் மீதமுள்ள ஆவணங்களும் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ். முஸ்லிம்களே இவரைத் தெரிந்து கொள்ளுங்கள் என்பதுதான் எனது ஒரே வேண்டுகோளாகும்.

பீஜேயின் இரட்டை வேடத்தை தோலுரிக்கும் எனது இந்த முயற்சிக்கு, ஆவணங்கள் தந்துதவிய சகோதரர்கள் ஆலோசனைகள் வழங்கிய சகோதரர்கள் அனைவருக்கும், என்னை தனி மெயிலில் தரக்குறைவாக திட்டிக் குவித்த பீஜேயின் அபிமானிகளுக்கும் நன்றி. 
இந்த தொடர் முற்றுப்பெருகிறது. பீஜேயின் அன்றும்-இன்றும் தொடரும் இன்ஷா அல்லாஹ்.

அன்புடன் 
இஸ்லாமிய சகோதரன்.,
முகவைஅப்பாஸ்.

கருத்துகள் இல்லை: