அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

புதன், 20 ஜூன், 2012

இணைவைப்பை தோற்றுவித்தவரின் மறுமை நிலை.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

நபி(ஸல்) அவர்கள், 'குஸாஆ குலத்தைச் சேர்ந்த அம்ர் இப்னு
ஆமிர் இப்னி லுஹய் என்பவரை, நரகத்தில் தன் குடலை இழுத்துச் சென்று கொண்டிருக்கக் கண்டேன். அவர்தான் முதன் முதலில் 'சாயிபா' ஒட்டகங்களை (சிலைகளுக்காக) நேர்ந்து (மேய்ந்து கொண்டிருக்கும்படி)விட்டவர்" என்று கூறினார்கள்''
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்; புகாரி., எண் 3521

ஏனெனில், நபி இப்றாஹீம் (அலை) அவர்களுடைய நேரான மார்க்கத்தை சீர்குலைத்த 
முதல் வழிகேடன் அவனே. அவன்தான் சிலைகளை நிறுவினான். ஸாயிபா, பஹீரா, வஸீலா,
ஹாம் ஆகிய பெயர்களில் சிலைகளுக்குக் கால்நடைகளை நேர்ச்சை செய்யும் 
பழக்கங்களை உருவாக்கினான். (ஃபத்ஹூல் பாரி)

இணைவைப்பை தோற்றுவித்தவரின் மறுமைநிலை கண்டு, இணைவைப்பில் இருப்பவர்கள் சிந்திப்பார்களா?

கருத்துகள் இல்லை: