அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

செவ்வாய், 5 மே, 2009

இணைந்த துருவங்களும்-இஸ்லாமிய நிலைப்பாடும்!



وَاعْتَصِمُواْ بِحَبْلِ اللّهِ جَمِيعًا وَلاَ تَفَرَّقُواْ وَاذْكُرُواْ نِعْمَةَ اللّهِ عَلَيْكُمْ إِذْ كُنتُمْ أَعْدَاء فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُم بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنتُمْ عَلَىَ شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا كَذَلِكَ يُبَيِّنُ اللّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ
இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்;. இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.[3 ;103 ]
மேற்கண்ட வசனத்திற்கேற்ப அல்லாஹ் தவ்ஹீத் எனும் அருளின்மூலம் மேற்கண்ட இரு சகோதரர்களை ஒன்றினைத்தான். ஷைத்தான் தன்னுடைய சூழ்ச்சியால் கடந்த ஐந்தாண்டுகளாக இவர்களுக்கு மத்தியில் பிளவை ஏற்படுத்தி ஒருவரை ஒருவர் சாடும் நிலையை உண்டாக்கினான். இப்போது மீண்டும் அல்லாஹ்வின் அருளால் இந்த இரு துருவங்களும் ஒன்றினைந்துள்ளது. இந்த இணைப்புக்கு 'அரசியல்' முத்திரை சிலர் குத்தினாலும், முஸ்லீம் அமைப்புகளின் தலைவர்களுக்கு இவர்களின் இந்த இணைப்பில் படிப்பினை உள்ளது. அமைப்புகள் வேறாக இருந்தாலும் சமுதாயநலன் என்ற விஷயத்தில் ஒன்றிணைந்த இவர்கள் நாளடைவில் ஒரே அமைப்பாகவும் இணைய இறைவன் நாடுவான். இவர்களை பின்பற்றி அனைத்து முஸ்லீம் அமைப்புகளும் 'சமுதாய நலன்' என்ற குடையின் கீழ் ஒன்றுபட முன்வரவேண்டும். இல்லை இல்லை 'எங்கள் வழி தனி வழி' என்று எவராவது 'வெட்டி'க்கொண்டு செல்ல நினைத்தால் அவர்கள் கீழ்கண்ட நபிமொழிகளை புறக்கணிக்கிறார்கள் என்று அர்த்தம்.
நபி[ஸல்]அவர்கள் கூறினார்கள்;
தன் சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் வெறுப்பது எந்த முஸ்லிமுக்கும் ஆகுமானதல்ல.அவ்வாறு மூன்று நாட்களுக்கு மேல் யாரேனும் வெறுத்து அந்த நிலையில் அவர் மரணமடைந்தால் நரகம் செல்வார்.[நூல்;அபூதாவூத்]
நபி[ஸல்]அவர்கள் கூறினார்கள்;
ஒருவன் தன் சகோதரனை ஒருவருடம் வெறுத்தால் அவன் அவனைக்கொலை செய்தவன் போலாவான்.[நூல்;அதபுல்முஃப்ரத்]
நபி[ஸல்]அவர்கள் கூறினார்கள்;
ஒவ்வொரு திங்கள்-வியாழன் ஆகிய இரு நாட்களில் மனிதர்களின் செயல்கள் இறைவனிடம் எடுத்துக்காட்டப்படுகின்றன. அப்போதுமூமினான ஒவ்வொரு அடியாருக்கும் மன்னிப்பு வழங்கப்படும். பகைத்துக்கொண்ட இருவரைத்தவிர. அவ்விருவரையும் விட்டுவிடுங்கள் அல்லது அவ்விருவரின் விவகாரத்தை ஒத்திபோடுங்கள்- அவ்விருவரும் சமாதானம் ஆகும்வரை! என வானவர்களிடம் கூறப்படும்.[நூல்;முஸ்லீம்]
நபி[ஸல்]அவர்கள் கூறினார்கள்;
ஒருவர் தன் சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் பகைத்துக்கொள்ளக்கூடாது.இருவரும் சந்திக்கும்போது ஒருவரை ஒருவர் புறக்கணித்து செல்லக்கூடாது. அவ்விருவரில் யார் முதலில் ஸலாம் சொல்கிறாரோ அவரே சிறந்தவர்.[நூல்;புஹாரி]
சொல்வது எமது கடமை; செவிமடுப்பதும், புறக்கணிப்பதும் பினங்கியிருப்பவர்களின் உரிமை. முடிவு..? முடிவில்லாதவனின் [அல்லாஹ்வின்] நீதிமன்றத்தில்!

கருத்துகள் இல்லை: