அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

முத்தத்திலும் முன்னோனின் சான்று!

பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின்  படைப்பினங்களில் மனிதர்கள் மட்டுமன்றி, விலங்குகள்-பறவைகள்- ஏன் தாவரங்கள் கூட ஒவ்வொன்றும் ஜோடி-ஜோடியாக படைக்கப்பட்டுள்ளன. இவற்றில் எந்த ஒரு ஆண் விலங்கும் இன்னொரு ஆண் விலங்கை நாடி இணைவதில்லை. அது பெண் விலங்கை மட்டுமே நாடுகிறது. எந்த ஒரு ஆண்  பறவையும் இன்னொரு ஆண் பறவையுடன் இணைவதில்லை. பெண் பறவையை மட்டுமே நாடுகிறது.  ஐந்தறிவுள்ள இந்த ஜீவன்கள் கூட இறைவனின்  ஏற்பாட்டின் படியே, தத்தமது இணையைத் தேடி இன்புற்று, இனவிருத்தி செய்கின்றன. ஆனால் ஆறறிவு உள்ளவன், அபரிதமான ஆற்றல் வழங்கப்பட்டவனான  மனிதன் மட்டும் நாகரீகத்தின் பெயரால் இறைவனின் நியதிக்கு மாற்றமான இணையை தேடுகிறான்.
ஆம்! இன்றைய நாகரிக வளர்ச்சியில் ஓரினச்சேர்க்கை என்பது ஏறக்குறைய குற்றமில்லை  என்று கருதும் அளவுக்கு வந்துவிட்டது. மேற்கத்திய நாடுகளில் ஓரினச்சேர்க்கை திருமணங்கள் பெரும்பாலான நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது. இத்தகைய ஓரினச்சேர்க்கை இயல்பாகவே காலாச்சார சீரழிவு என்றாலும் 'முற்போக்கு' முலாம் பூசி மறைக்கின்றனர். ஆனால் ஒரு ஆணும்- பெண்ணும் இணைவதுதான் சிறந்தது என்பதற்கு எராளமான சான்றுகள் இருந்தாலும் சமீபத்தில் 'முத்தம்' மூலம் மற்றொரு சான்றும் வெளியாகியுள்ளது.
''ஆணும்-பெண்ணும் உதட்டோடு உதடு சேர்த்து வழங்கும் முத்தத்தில், முத்தம் கொடுக்கும் அந்த நேரத்தில் வாயில் ஊறும் உமிழ்நீர் நோய்க் கிருமிகளை கொல்லும் ஆற்றல் கொண்டது. இதன் மூலம் பற்களில் உள்ள பாக்டீரியாக்களை  போக்கி விடுகிறது. இத்தனை முன்னேற்பாடுகளும் வாய் மூலமாக, ஆணிடமிருந்து பெண்ணிற்கோ- பெண்ணிடமிருந்து ஆணிற்கோ கிருமிகள் பரவிவிடக் கூடாது என்பதற்காக இயற்கை[இறைவன்] செய்த முன்னேற்பாடு என்று கூறும் மருத்துவ உலகம், அடுத்து சொல்வதுதான் முக்கியமாக கவனிக்கவேண்டிய அம்சமாகும். அதாவது இந்த கிருமிகளை கொல்லும் சக்தி, ஆணும்-பெண்ணும் முத்தமிடும்போது மட்டுமே ஏற்படுகிறது என்ற மிகப்பெரிய ஆச்சரியத்தை சொல்கிறது  மருத்துவ உலகம்.
இதன் மூலம் அறிவது என்ன? இறைவன் ஏற்பாட்டின்படி இணைவதில்தான் இன்பம் என்பதோடு, அதுதான் பாதுகாப்பானது  என்பதை உணரமுடிகிறது. இனியேனும் நாகரீகம் என்றபெயரில் கால்நடைகளை விட கேவலமாக செல்லும் செயலிலிருந்து மனிதன் திருந்திக்கொள்ளுதல் நன்று.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

assalamu alaikkum

arumaiyana thokuppu

regards
Tareq -dubai