அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வியாழன், 2 ஜூலை, 2009

ஓரினச்சேர்க்கையும்-இஸ்லாமும்!

ஆணும்-பெண்ணும் இல்லறம் எனும் நல்லறம் மூலமாக இணைந்து அதன்மூலம் மனிதசமுதாயம் பல்கி பெருகும் வழிமுறையை இறைவன் ஏற்படுத்தியிருக்க, அதற்கு மாறாக நாகரீகம் என்ற பெயரிலும் சுதந்திரம் என்ற பெயரிலும் ஆணும்-ஆணும்,பெண்ணும்-பெண்ணும் இணையும் ஓரினச்சேர்க்கை மேலை நாடுகளில் தொடங்கி பின்பு நாளடைவில் உலக அளவில் தன் கிளை பரப்பி,இப்போது கற்ப்புக்கும்- கலாச்சாரத்திற்கும் பெயர் பெற்ற இந்தியாவிலும் மையம் கொண்டுள்ளது. இந்தியாவில் இந்த ஓரின சேர்க்கையாளர்கள் அடக்கி வாசித்ததற்கு காரணம், ஓரினச்சேர்க்கை குற்றம் என்று கூறும் 377 வது சட்டப்பிரிவு நடைமுறையில் இருந்ததுதான். இந்த சட்டப்பிரிவை நீக்கவேண்டும் என்று சமீபத்தில் சென்னையில் பேரணி நடத்தப்பட்டதும், அதையொட்டி மத்திய அமைச்சர் வீரப்பமொய்லி இந்த சட்டப்பிரிவை நீக்குவது பற்றி பரிசீலிப்போம் என்று சொன்னதும் நாம் அறிந்த ஒன்றே.


இந்நிலையில், ஓரின சேர்க்கையை கிரிமினல் குற்றமாக கருதக்கூடாது என்று தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், ஓரின சேர்க்கை சட்டவிரோதமானது அல்ல என்றும், அதன்மீதான கிரிமினல் முத்திரை நீக்கப்படுவதாகவும், 377 பிரிவு சட்டம் திருத்தம் செய்யப்படுவதாகவும் தீர்ப்பளித்துள்ளனர். இந்த தீர்ப்பு ஓரின சேர்க்கையாளர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்துள்ள நிலையில், இந்த ஓரின சேர்க்கை பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.


இந்த ஓரின சேர்க்கை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு சமுதாயத்திடம் இருந்தது. அதை ஒழிப்பதற்காகவே அல்லாஹ் லூத்[ அலை] எனும் நபியை அனுப்பி வைத்தான்.
وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنْ أَحَدٍ مِّن الْعَالَمِينَமேலும் லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்;) அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்; உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவோ முனைந்தீர்கள்?"[7:80 ]

إِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ شَهْوَةً مِّن دُونِ النِّسَاء بَلْ أَنتُمْ قَوْمٌ مُّسْرِفُونَ

"மெய்யாகவே நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள் - நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கின்றீர்கள்."[7:81 ]


இந்த இரு வசனங்களிலும் உலகில் முதன்முதலில் ஓரினசேர்க்கையை துவக்கிவைத்த சமுதாயம், நபிலூத்[அலை] அவர்கள் நபியாக அனுப்பப்பட்ட சமுதாயம்தான் என்பதை விளங்கமுடியும். இந்த தீயவர்களிடம் அவர்களின் தீய செயலை விட்டு விலகுமாறு நபி லூத்[அலை]அவர்கள் பிரச்சாரம் செய்தபோது, அந்த வழிகேடர்கள் நபிலூத்[அலை] அவர்களை பரிகாசம் செய்ததோடு அவர்களை ஊரை விட்டு விரட்டுமாறும் கொக்கரித்ததை அல்லாஹ் தன் அருள்மறையில் கூறுகின்றான்.
وَمَا كَانَ جَوَابَ قَوْمِهِ إِلاَّ أَن قَالُواْ أَخْرِجُوهُم مِّن قَرْيَتِكُمْ إِنَّهُمْ أُنَاسٌ يَتَطَهَّرُونَ
நிச்சயமாக இவர்கள் தூய்மையான மனிதர்களாக இருக்கிறார்கள். இவர்களை உங்கள் ஊரைவிட்டும் வெளியேற்றி விடுங்கள் என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும்) அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை.[7:82 ]
அழிக்க வந்த அமரர்களையும்[வானவர்கள்] 'அனுபவிக்க' நினைத்த பாவிகள்;

ஓரின சேர்க்கை அட்டூழியம் செய்து வந்த இந்தசமுதாயத்தை அழிக்க அல்லாஹ் வானவர்களை அழகிய ஆண்கள் வடிவில் அனுப்பிவைக்க, ஆண்கள் வடிவில் இருந்த வானவர்களை அனுபவிக்க அந்த வழிகெட்டவர்கள் விரைந்து வந்தபோது, லூத்[அலை] அவர்கள் கூறியதை அல்லாஹ்தான் அருள்மறையில் சொல்லிக்காட்டுகின்றான்.
وَجَاءهُ قَوْمُهُ يُهْرَعُونَ إِلَيْهِ وَمِن قَبْلُ كَانُواْ يَعْمَلُونَ السَّيِّئَاتِ قَالَ يَا قَوْمِ هَـؤُلاء بَنَاتِي هُنَّ أَطْهَرُ لَكُمْ فَاتَّقُواْ اللّهَ وَلاَ تُخْزُونِ فِي ضَيْفِي أَلَيْسَ مِنكُمْ رَجُلٌ رَّشِيدٌ
அவருடைய சமூகத்தார் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள்; இன்னும் முன்னிருந்தே அவர்கள் தீய செயல்களே செய்து கொண்டிருந்தார்கள். (அவர்களை நோக்கி லூத்) "என் சமூகத்தார்களே! இதோ இவர்கள் என் புதல்விகள்; இவர்கள் உங்களுக்கு(த் திருமணத்திற்கு)ப் பரிசத்தமானவர்கள்; எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சங்கள்; இன்னும் என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்தாதீர்கள்; நல்ல மனிதர் ஒருவர் (கூட) உங்களில் இல்லையா?" என்று கூறினார்.[11:78]
قَالُواْ لَقَدْ عَلِمْتَ مَا لَنَا فِي بَنَاتِكَ مِنْ حَقٍّ وَإِنَّكَ لَتَعْلَمُ مَا نُرِيدُ
(அதற்கு) அவர்கள் "உம்முடைய புதல்வியரில் எங்களுக்கு எந்த பாத்தியதையுமில்லை என்பதைத் திடமாக நீர் அறிந்திருக்கிறீர்; நிச்சயமாக நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நீர் அறிவீர்" என்று கூறினார்கள். (11:79)
قَالَ لَوْ أَنَّ لِي بِكُمْ قُوَّةً أَوْ آوِي إِلَى رُكْنٍ شَدِيدٍ
அதற்கு அவர் "உங்களைத் தடுக்க போதுமான பலம் எனக்கு இருக்கவேண்டுமே! அல்லது (உங்களைத் தடுக்கப் போதுமான) வலிமையுள்ள ஆதரவின்பால் நான் ஒதுங்கவேண்டுமே" என்று (விசனத்துடன்) கூறினார். (11:80)
மனித மிருகங்கள் மண்ணில் புதைந்தன;
(நபியே!) உம் உயிர் மீது சத்தியமாக, நிச்சயமாக அவர்கள் தம் மதிமயக்கத்தில் தட்டழிந்து கொண்டிருந்தார்கள். (15:72)
فَأَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُشْرِقِينَ
ஆகவே, பொழுது உதிக்கும் வேளையில், அவர்களை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. (15:73)
فَجَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةً مِّن سِجِّيلٍ
பின்பு அவர்களுடைய ஊரை மேல் கீழாகப் புரட்டி விட்டோம்; இன்னும், அவர்கள் மேல் சுடப்பட்ட களிமண்ணாலான கற்களைப் பொழியச் செய்தோம். (15:74)


மேற்கண்ட வசனங்களில், ஓரினச்சேர்க்கையாளர்களின் நிலை பற்றியும், அவர்களுக்கு அல்லாஹ் அளித்த தண்டனை பற்றியும் அறிந்தோம். இன்று நவீன உலகில் மீண்டும் ஓரினச்சேர்க்கையாளர்கள் கூட்டம் அரசின்/அதிகார வர்க்கத்தின் துணையோடு மீண்டும் அட்டூழியம் செய்ய புறப்பட்டுவிட்டது. இந்த பாவிகளை திருத்த லூத்
நபி வரப்போவதில்லை. இந்த பாவிகளை திருத்தும் கடமை மதத்திற்கு அப்பாற்பட்டு மனச்சாட்சியுள்ள ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இந்த இழிவான ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு இவ்வுலகில் எவ்வித அங்கீகாரமும் இல்லா நிலையை உருவாக்க ஒவ்வொருவரும் பாடுபடவேண்டும். அதிலும் குறிப்பாக லூத் நபியவர்களின் வழிவந்த நாம் இந்த தீமையை ஒழித்திட கடும் முயற்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும். ஓரினச்சேர்க்கையை அனுமதிக்க முயற்சிக்கும் அரசை எதிர்த்து வீரியமிக்க போராட்டங்களை தொடர்ந்து நடத்த சமுதாய அமைப்புகள் முன்வரவேண்டும். வழக்கம் போல முஸ்லீம் அமைப்புகள் ஆளுக்கொருநாள் என்று பந்தி வைத்து பரிமாறியது போல் போராட்டம் நடத்தாமல் ஒருங்கிணைந்து அனைத்து அமைப்புகளையும் திரட்டி போராடவேண்டும். மேலும், முஸ்லிமல்லாத மற்றும் ஒத்த கருத்துடையவர்களையும் இந்த போராட்டத்தில் பங்கெடுக்கசெய்து இந்தியாவில் இந்த இழிவான கலாச்சாரத்தை இல்லாமல் ஆக்குவோம் இன்ஷா அல்லாஹ்.

கருத்துகள் இல்லை: