அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

சனி, 24 அக்டோபர், 2009

நபிகள் நாயகத்தின் பரிந்துரையில் சில தள்ளுபடி செய்யப்படும்..?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது சாந்தியும் சமாதானமும் அகிலத்திற்கோர் அருட்கொடையாம் அண்ணல் நபி[ஸல்] அவர்கள் மீதும், அவர்களின் அடியொற்றி வாழ்ந்த, வாழுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!
ஆதமின் மக்கள் அனைவரும் தவறு செய்யக்கூடியவர்களே! அதிலும் குறிப்பாக முஸ்லிம்களும் தவறு செய்யக்கூடியவர்களே! இந்நிலையில் உலகம் அழிக்கப்பட்டு மறுமை நாளில் அனைவரும் நியாயத்தீர்ப்புக்காக நமது ரட்சகனின் முன் நிற்கும் வேளையில், மக்கள் நபிமார்களிடம் பரிந்துரைக்காக செல்வார்கள். அப்போது ஒவ்வொரு நபியும் அடுத்த நபியை கைகாட்டி அவர்களிடம் செல்லுங்கள் என்று கூற, இறுதியாக நபிகள் நாயகம்[ஸல்] அவர்கள் இறைவன் முன் சஜ்தாவில் விழுவார்கள். இறைவனின் கட்டளைப்படி பரிந்துரை செய்வார்கள். என்பதை நாமெல்லாம் அறிந்து வைத்துள்ள செய்திதான். இந்த பரிந்துரை பற்றி ரசூல்[ஸல்] அவர்கள் கூறும்போது;
حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ مُسْتَجَابَةٌ فَتَعَجَّلَ كُلُّ نَبِيٍّ دَعْوَتَهُ وَإِنِّي اخْتَبَأْتُ دَعْوَتِي شَفَاعَةً لِأُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ فَهِيَ نَائِلَةٌ إِنْ شَاءَ اللَّهُ مَنْ مَاتَ مِنْ أُمَّتِي لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا ‏
"ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு (சிறப்புப்) பிரார்த்தனை ஒவ்வோரு நபிக்கும் இருந்தது. அனைத்து நபிமாரும் அந்தப் பிரார்த்தனையை அவசரப்பட்டு (இம்மையிலேயே) கேட்டுவிட்டனர். நான் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகத் தக்கவைத்திருக்கிறேன். அல்லாஹ் நாடினால், என் சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் மரணித்தவருக்கு அது கிடைக்கும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).[முஸ்லிம்எண்: 296 ]

இந்த பரிந்துரை பற்றி ஒரு முஸ்லிமல்லாதவர்களின் நிகழ்ச்சியில் ஒரு பெண்மணி, குர்ஆனில் பரிந்துரை இல்லை என்று வருகிறது; ஆனால் ஹதீஸில் லா இலாஹஇல்லல்லாஹ் என்ற கலிமாவை மொழிந்தவரை நபிகள் நாயகம் பரிந்துரை செய்து சொர்க்கத்துக்கு அழைத்து செல்வார் என்று வருகிறதே? இது இரண்டும் முரண்படுகிறதே..? என்ற கேள்விக்கு பதிலளித்த பீஜே எனும் அறிஞர்,
அல்லாஹ்வின் அனுமதியின்றி அவனிடம் பரிந்துரை செய்வது யார் என்று அல்லாஹ் கேட்கிறான். எனவே அல்லாஹ் நாடியவர்களுக்கு பரிந்து செய்ய அனுமதிப்பான். அந்த வகையில் நபிகள் நாயகம் பரிந்துரை செய்வார்கள். ஆனால் அதில் சிலருக்கான பரிந்துரையை அல்லாஹ் நிராகரித்துவிடுவான்; முஹம்மதே! நீ செஞ்சுட்டே; ஆனா தப்பு. இன்னின்ன ஆள்களுக்கு நீ பன்னீருக்கக்கூடாது . இவங்க எப்பிடி ஆளு தெரியுமா..? நீ நல்லவங்கன்னு நெனச்சுக்கிட்டுருக்க.. ஒன்னையையும் ஏமாத்தீட்டு நல்லவனா நடிச்சவங்க இவன்லாம். இவனுககெல்லாம் பரிந்துரை பண்ணினா நான் எத்துக்கிரமாட்டேன்னு கடவுள் சொல்வாரு...
என்று பதிலளிக்கிறார்.

அன்பானவர்களே! நன்றாக மேற்கண்ட அவரின் பதிலை படியுங்கள். அதாவது நபி[ஸல்] அவர்களை பரிந்துரை செய்ய சொல்லும் இறைவன், நபி[ஸல்] அவர்கள் சிலருக்கு செய்யும் பரிந்துரையை நிராகரிப்பான் என்கிறார். அதோடு நபி[ஸல்] அவர்கள் தப்பான சிலருக்கு பரிந்துரை செய்வார்கள் என்ற தோற்றத்தையும் தருகிறார். நாம் ஆரம்பத்தில் வைத்துள்ள ஹதீஸில் நபி[ஸல்] அவர்கள் தான் யாருக்கு பரிந்துரை செய்வேன் என்று அதாவது அல்லாஹ்விற்கு இனைவைக்கதவர்களுக்கு மட்டும் பரிந்துரை செய்வதாக தெளிவுபடுத்தியுள்ள நிலையில், அல்லாஹ்வால் நிராகரிக்கக்கூடிய பரிந்துரையை அல்லாஹ்வின் தூதர் செய்வார்கள் என்று இவர் வாய் கூசாமல் கூறுகிறார். சரி! நபி[ஸல்] அவர்கள் பரிந்துரை ஏதாவது நிராகரிக்கப்படுமா என்பதை கீழ்கண்ட ஹதீஸை பாருங்கள்;

மஅபத் இப்னு ஹிலால் அல்அனஸீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். பஸ்ராவாசிகளில் சிலர் (ஓரிடத்தில்) ஒன்று கூடினோம். பிறகு நாங்கள் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் சென்றோம். அனஸ்(ரலி) அவர்களிடம் பரிந்துரை (ஷஃபாஅத்) பற்றிய நபிமொழியைக் கேட்பதற்காக எங்களுடன் ஸாபித் அல் புனானீ(ரஹ்) அவர்களையும் அழைத்துச் சென்றறோம். அனஸ்(ரலி) அவர்கள் தங்களின் கோட்டையில் 'ளுஹா' தொழுதுகொண்டிருக்கையில் நாங்கள் அவர்களிடம் போய்ச்சேர்ந்தோம். பிறகு நாங்கள் உள்ளே செல்ல அனுமதி கேட்க, எங்களை அவர்கள் (உள்ளே நுழைய) அனுமதித்தார்கள். அப்போது அவர்கள் தங்களின் விரிப்பில் அமர்ந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் ஸாபித்(ரஹ்) அவர்களிடம் 'பரிந்துரை பற்றிய நபிமொழிக்கு முன்னால் வேறு எதைப் பற்றியும் கேட்காதீர்கள்' என்று சொன்னோம். உடனே ஸாபித்(ரஹ்) அவர்கள், 'அபூ ஹம்ஸா! (அனஸ்!) இதோ இவர்கள் பஸ்ராவாசிகளான உங்கள் சகோதரர்கள் ஆவர். பரிந்துரை (ஷஃபாஅத்) பற்றிய நபிமொழியை உங்களிடம் கேட்பதற்காக இங்கு வந்திருக்கிறார்கள்' என்றார்கள். அப்போது அனஸ்(ரலி) கூறினார்:
முஹம்மத்(ஸல்) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள். (பீதி மிகுந்த) மறுமை நாள் நிகழும்போது மக்கள் சிலர் சிலரோடு அலைமோதுவார்கள். அவர்கள் (ஆதி மனிதர்) ஆதம்(அலை) அவர்களிடம் சென்று '(இந்தச் சோதனையான கட்டத்திலிருந்து எங்களைக் காக்க) எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்துரை செய்யுங்கள்' என்று சொல்வார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள், 'அந்தத் தகுதி எனக்கு இல்லை; நீங்கள் இப்ராஹீம்(அலை) அவர்களைப் போய் பாருங்கள். ஏனென்றால், அவர் அளவிலா அருளாள(னான இறைவ)னின் உற்ற நண்பராவார்' என்று கூறுவார்கள். உடனே மக்கள் இப்ராஹீம்(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது இப்ராஹீம்(அலை) அவர்களும், 'அந்தத் தகுதி எனக்கு இல்லை; நீங்கள் மூஸாவிடம் செல்லுங்கள். ஏனென்றால், அவர் அல்லாஹ்வுடன் உரையாடியவராவார்' என்று சொல்வார்கள். உடனே, மக்கள் மூஸா(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது மூஸா (அலை) அவர்களும் அதற்கு(த் தகுதியானவன்) நான் அல்லன்; நீங்கள் ஈசாவைப் போய் பாருங்கள். ஏனென்றால், அவர் அல்லாஹ்வின் ஆவியும் அவனுடைய வார்த்தையும் ஆவார்' என்று சொல்வார்கள். உடனே, மக்கள் ஈசா(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது ஈசா(அலை) அவர்கள் அதற்கு(த் தகுதியானவன்) நான் அல்லன்; நீங்கள் முஹம்மத்(ஸல்) அவர்களைப் போய் பாருங்கள்' என்று சொல்வார்கள். உடனே, மக்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், 'நான் அதற்குரியவன் தான்' என்று சொல்லிவிட்டு, (மக்களுக்காகப் பரிந்துரைக்க) என் இறைவனிடம் அனுமதி கேட்பேன். அப்போது எனக்கு அனுமதியளிக்கப்படும். தற்போது எனக்குத் தோன்றாத புகழ்மாலைகளையெல்லாம் அப்போது நான் இறைவனைப் போற்றிப் புகழும் வகையில் எனக்கு அவன் என்னுடைய எண்ணத்தில் உதயமாக்குவான். அந்தப் புகழ்மாலைகளால் நான் அவனைப் (போற்றிப்) புகழ்வேன். அவனுக்காக (அவன் முன்) நான் சஜ்தாவில் (சிரவணக்கத்தில்) விழுவேன். அப்போது (இறைவனின் தரப்பிலிருந்து), 'முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; உங்களுக்காகச் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்' என்று சொல்லப்படும். அப்போது நான், 'என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்' என்பேன். அப்போது, 'செல்லுங்கள்; எவருடைய உள்ளத்தில் வாற்கோதுமையின் எடையளவு இறைநம்பிக்கை இருந்தோ அவரை நரகத்திலிருந்து அப்புறப்படுத்துங்கள்' என்று சொல்லப்படும். எனவே, நான் சென்று அவ்வாறே செய்வேன். பிறகு திரும்பி வந்து, அதே புகழ்மாலைகளைக் கூறி (மீண்டும்) அவனை நான் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் நான் விழுவேன். அப்போதும். 'முஹம்மதே! தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும் பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்' என்று கூறப்படும். அப்போது நான், 'என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்; என்று சொல்வேன். அப்போது 'சொல்லுங்கள்; யாருடைய உள்ளத்தில் 'அணுவளவு' அல்லது 'கடுகளவு' இறை நம்பிக்கை இருந்தோ அவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்' என்று சொல்லப்படும். நான் சென்று, அவ்வாறே செய்துவிட்டு, மீண்டும் திரும்பி வந்து அதே புகழ்மாலைகளைக் கூறி அவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் விழுவேன். அப்போதும், 'முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்; சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்' என்று (இறைவனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும். அப்போது நான், 'என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்' என்பேன். அதற்கு அவன், 'செல்லுங்கள்: எவருடைய உள்ளத்தில் கடுகு மணியை விட மிக மிகச் சிறிய அளவில் இறைநம்பிக்கை இருக்கிறதோ அவரை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்' என்று சொல்வான். அவ்வாறே நான் சென்று அ(த்தகைய)வரை நரகத்திலிருந்து வெளியேற்றுவேன். நான்காம் முறையாக நான் இறைவனிடம் சென்று அதே (புகழ்மாலைகளைக்) கூறி இறைவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் விழுவேன். அப்போது, 'முஹமமதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; செவியேற்கப்படும். கேளுங்கள்; அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்' என்று (இறைவனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும். அப்போது நான், 'என் இறைவா! (உலகில்) லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று சொன்னவர்களின் விஷயத்தில் (பரிந்துரை செய்ய) எனக்கு அனுமதி வழங்குவாயாக' என்று நான் கேட்பேன். அதற்கு இறைவன், என் கண்ணியத்தின் மீதும், மகத்துவத்தின் மீதும், பெருமையின் மீதும் ஆணையாக! 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று சொன்னவர்களை நான் நரகத்திலிருந்து நிச்சயமாக வெளியேற்றுவேன்' என்று சொல்வான்.
[ஆதாரம் புஹாரி எண் 7510 ]

அன்பானவர்களே! இந்த ஹதீஸில் நபி[ஸல்] அவர்களின் பரிந்துரையை கேட்ட இறைவன், அவர்களின் எந்த ஒரு பரிந்துரையாயாவது நிராகரித்தானா..? இல்லையே! அவ்வாறிருக்க, குர்ஆனில் இல்லாத-ஹதீஸில் இல்லாத ஒரு விஷயத்தை அதுவும் நபி[ஸல்] அவர்கள் சம்மந்தப்பட்ட விஷயத்தை சர்வ சாதரணமாக சொல்கிறார் எனில், மக்களே புரிந்து கொள்ளுங்கள். மேலும், சிலர் அது முஸ்லிமல்லாதவர் நிகழ்ச்சி எனவே அவர்கள் 'வெளங்கிக்' கொள்வதற்காக அவ்வாறு பேசினார் என்று யாரேனும் கூற முன்வருவார்களானால், அவர்களிடம் நாம் ஒரு கேள்வியை வைக்கிறோம்;
  • முஸ்லிமல்லாதவர்கள் 'வெளங்கிக்' கொள்வதற்காக மார்க்கத்தில் இல்லாத ஒன்றையோ, அல்லது கூட்டியோ-குறைத்தோ சொல்லலாமா..? என்ற எமது கேள்விக்கு பதிலளிக்கட்டும்!

கருத்துகள் இல்லை: