அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வியாழன், 15 ஜனவரி, 2009

நபித்தோழர்கள்வாழ்வும்-நமதுநிலையும்[பாகம் 2]


எண்பதுகளில் ஏகத்துவப்பிரச்சாரத்தை எடுத்தியம்ப தொடங்கியபோது நமது தரப்பு அறிஞர்களின் அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கு ஆதாரப்பூர்வமாக பதிலளிக்கத்திணறிய சுன்னத் வல்ஜமாத்[?]அறிஞர்கள், பாமரமக்களிடம் போய்
*இந்த நஜாத்திகள் ரசூல்[ஸல்]அவர்களை சாதாரண போஸ்ட்மேன் என்கிறார்கள்.
*இந்த நஜாத்திகள் சகாபாக்களை திட்டுகிறார்கள்.
*இந்த நஜாத்திகள் நாற்பெரும் இமாம்களையும், இறைநேசச்செல்வர்களையும் இழிவாக பேசுகிறார்கள்.
இப்படியான அடுக்கடுக்கான அவதூறுகளை தவ்ஹீத்வாதிகள் மீது அள்ளிவீசினார்கள்.ஆனாலும் நாம் சத்தியத்தில் இருந்த காரணத்தால் அதையும் தாண்டி மக்கள் அலைகடலென தவ்ஹீதின் பக்கம் ஆர்பரித்து வந்தார்கள்.
ஒரு சுழற்சிக்கு பின்னால்,நம்முடைய வளர்சிக்கு பின்னால், தவ்கீத்வாதிகளை நோக்கி அவதூறுக்கணைகள் பறந்துவந்து தாக்குகிறது. ஆனால் ஒரு வித்தியாசம்!இன்று தாக்குபவர்களும்-தாக்கப்படுபவர்களும் தவ்ஹீத்வாதிகள் என்பதுதான் வேதனை கலந்த உண்மை.
ஒருவரைப்பற்றி அவரது ஒழுக்கத்தோடு/மானத்தோடு சம்மந்தப்படுத்தி ஒரு செய்தி கிடைத்தால் அதை விசாரிப்பதர்க்குமுன் ஒரு மூமீனின் எண்ணம் எப்படி இருக்கவேண்டும்? இதோ அல்லாஹ் கூறுகின்றான்;
24:12 முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் - இதனைக் கேள்வியுற்றபோது, தங்களைப் (போன்ற முஃமினானவர்களைப்) பற்றி நல்லெண்ணங் கொண்டு, 'இது பகிரங்கமான வீண் பழியேயாகும்" என்று கூறியிருக்க வேண்டாமா?
*முதலில் நல்லெண்ணம் கொள்ளவேண்டும், பின்பு அவதூறுக்குள்ளான ஆண்/ பெண் இருவரது கேரக்டர்களையும், சம்பவம் நடந்ததாக குறிப்பிடும் இடத்தின் தன்மையையும் ஆராய்ந்து, நான்கு சாட்சிகளை தீரவிசாரித்து செய்தி உறுதிசெய்யப்பட்டால் சம்மந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கவேண்டும். இதுதானே நமக்கு இஸ்லாம் காட்டிய வழிமுறை.
இன்று தவ்ஹீத்வாதிகளில் சிலரின் நடவடிக்கை எப்படியிருக்கிறது? ஒருவரை பாலியல் குற்றம் சாட்டி ஒரு செய்தி கிடைத்தமாத்திரத்தில்,[சகோதரர் முகவைதமிழனின்வார்த்தையில்] 'செர்வர் கிறுக்குப்புடிச்சு கேங் ஆகும் அளவுக்கு பரப்புகிறோமே! இதுதான் குர்'ஆண்-ஹதீஸ் வழிமுறையா? ஒருவர் விபச்சாரம் செய்தது உறுதியாக தெரிந்தால் அவருக்கு தண்டனை கொடுப்பது மட்டும்தான் இஸ்லாமியவழி.அதை உலகம் முழுதும் பரப்புமாறு மார்க்கம் நமக்கு வழிகாட்டியிருக்கிறதா?
சரி! ஆம்பிளைய விடுங்க! ஆம்பிளை அப்படித்தான் இருப்பான் என்று உலகம் சிறிது நாளில் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும். பெண்ணை எண்ணிப்பாருங்கள்!அவள் அடையும் வேதனையையும் அவமானத்தையும் எண்ணிப்பாருங்கள்! அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் மீது அவதூறு சொல்லப்பட்டபோது அவர்கள் அடைந்த வேதனையை அவர்களின் கூற்றிலிருந்து சிறு பகுதி;
'ஆயிஷாவே! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி கிடைத்துள்ளது. நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான். நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி, அவன் பக்கம் திரும்பி விடு. ஏனெனில், அடியான் தன் பாவத்தை ஒப்புக் கொண்டு (மனம் திருந்தி) பாவ மன்னிப்புக் கோரினால் அவனுடைய கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக்கிறான்" என்றார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் பேச்சை முடித்தபோது என் கண்ணீர் (முழுவதுமாக) நின்று போய் விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் எஞ்சியிருக்கவில்லை.
நூல்;புஹாரி,எண் 2661
அபாண்ட அவதூறால் உள்ளம் உடைந்து அழுது,அழுது கண்ணீர் வற்றும் அளவுக்கு அன்னையவர்கள் வேதனைப்பட்டுள்ளார்களே! இதுபோன்றுதானே நாம் பரப்பும் அவதூறால் பாதிக்கப்படும் பெண்களும் வேதனைப்படுவார்கள் என்று என்றாவது சிந்தித்தோமா? அல்லாஹ் கூறுகின்றான்;

إِنَّ الَّذِينَ يَرْمُونَ الْمُحْصَنَاتِ الْغَافِلَاتِ الْمُؤْمِنَاتِ لُعِنُوا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ
எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு.24:௨௩
மேலும்,இவ்வாறு அவதூறுகள் தவ்ஹீத்வாதிகள் மத்தியில் அதிகமானதுக்கு காரணம் மன்னிக்கும் தன்மை இல்லாததுதான். என்மீது ஒருவன் ஒரு அவதூறு சொன்னால்,'
அவனை விட்டேனா பார்' என்று எதிரியின் பிறப்பிலிருந்து ஆய்வுசெய்து அவன்செய்த சிறிய/பெரிய தவறுகள் அத்துனையையும் பரப்புவது.
ஆனால், அருமை சகாபாக்கள் இந்தவிசயத்தில் எப்படி மன்னிக்கும் தன்மையை கையாண்டுள்ளார்கள் என்பதற்கு ஒரு சான்று;
அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள்மீது சொல்லப்பட்ட அவதூறை பரப்பியவர்களில் ஹஸ்ஸான் இப்னு தாபித்[ரலி] அவர்களும் ஒருவர். இதை மனதில்கொண்டு கீழுள்ள செய்தியை படியுங்கள்;
உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்;
நான் ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) அவர்களை ஏசிக் கொண்டே (என் சிற்றன்னை) ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், 'ஹஸ்ஸானை ஏசாதே. ஏனென்றால், அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தரப்பிலிருந்து (எதிரிகளின் வசைக் கவிதைகளுக்கு) பதிலடி தருபவராய் இருந்தார்கள். (ஒரு நாள்) ஹஸ்ஸான் அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் வந்து இணைவைப்பவர்(களான குறைஷி)களுக்கெதிராக வசைக் கவி பாட அனுமதி கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'பிறகு என்னுடைய வமிசாவளியை என்ன செய்வீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், '(அவர்களைப் பற்றி நான் வசைக் கவி கூறும்போது) குழைத்த மாவிலிருந்து முடி உருவப்படுத்து போன்று உங்களை உருவி எடுத்து விடுவேன்" என்று கூறினார்.
நூல்;புஹாரி,எண் 4145
*தன்னைக்குறித்து அவதூறு பரப்பியவர்களில் ஒருவரை 'திட்டாதீர்கள்' என்று அன்னையவர்கள் பெருந்தன்மையோடு சொன்னார்களே! இந்த பண்பு நமக்கு வந்துவிட்டாலே பாதி அவதூறு மறைந்துவிடும். நடுநிலையோடு சிந்திப்போம்! நன்மையை மட்டும் பரப்புவோம்.

கருத்துகள் இல்லை: