அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வியாழன், 9 ஜூலை, 2009

ஒன்றே செய்; அதையும் நன்றே செய்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏جَرِيرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ بْنِ عَبْدِ اللَّهِ الثَّقَفِيِّ ‏ ‏قَالَ ‏‏قُلْتُ يَا رَسُولَ اللَّهِ قُلْ لِي فِي الْإِسْلَامِ قَوْلًا لَا أَسْأَلُ عَنْهُ أَحَدًا بَعْدَكَ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏أَبِي أُسَامَةَ ‏ ‏غَيْرَكَ ‏ ‏قَالَ ‏ ‏قُلْ آمَنْتُ بِاللَّهِ فَاسْتَقِم"
அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்குப் பிறகு (அ) தங்களைத் தவிர எவரிடம் கேட்கத் தேவையில்லாதவாறு இஸ்லாத்தைக் குறித்து எனக்குச் சொல்லித் தாருங்கள்" என்று கேட்டுக் கொண்டேன்.அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மீது நான் நம்பிக்கை கொண்டேன் என்று கூறி, அந்த நம்பிக்கையில் உறுதியாக நிலைத்து நிற்பீராக!" என்று சொன்னார்கள்.அறிவிப்பாளர் : சுஃப்யான் பின் அப்தில்லாஹ் அஸ்ஸகஃபீ (ரலி] நூல்;முஸ்லிம்எண்;55]

இந்த நபிமொழியில் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளவேண்டும். பின்பு அதில் உறுதியாக நிலைத்து நிற்கவேண்டும் என்ற கருத்தை பார்க்கிறோம். முஸ்லிம்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வை நம்புவது எனில் கலிமா ஷகாதாவை மொழிந்துவிட்டால் போதும் என்ற எண்ணமுடையவர்களாக இருப்பதை பார்க்கிறோம். கலிமாவை மொழிந்தால் மட்டும் போதாது. அந்த கலிமா சொல்லும் தத்துவமான அல்லாஹ்வை உறுதியாக நம்பவேண்டும். அந்த உறுதி நம்முடைய உள்ளத்தில் ஆழப்பதிந்துவிடும் எனில், நம்முடைய வாழ்வின் எல்லா அம்சங்களும் சீர்பெற்றுவிடும்.

அல்லாஹ்வின் மீதே நம்முடைய முழு நம்பிக்கையும் அமையும்போது, அல்லாஹ்வுடைய அல்லாஹ்வின் தூதருடைய கட்டளைக்கு மாற்றமான எந்த ஒன்றையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் மறைந்துவிடும். ஷிர்க் மற்றும் பித்அத்தை எதிர்ப்பதால் நாம் சமூகத்தால் பல்வேறு இன்னல்களுக்கு ஆட்படும்போது, ஷைத்தான் லாவகமாக நம் உள்ளத்தில் ஒரு விதைபோடுவான் அதாவது 'ஊர் கூட்டி ஒப்பாரி வைக்கும்போது நீமட்டும் ஊருக்கு மாற்றமாக செய்து இப்படி துன்பப்படவேண்டுமா ? என்று. அப்போது அல்லாஹ்வின் மீதான உறுதியான நம்பிக்கை இருக்குமெனில், அங்கே நம்முடைய இறைவன் இருக்கிறான்.இந்த ஊர் என்ன உலகமே நம்மை எதிர்த்தாலும் நம்முடைய இறைவன் பாதுகாப்பான் என்ற சிந்தனை தோன்ற நாம் அங்கே சத்தியத்தை நிலைநாட்டவும், அதனால் ஏற்படும் இழப்புகளை தாங்கிக்கொள்ளவும் தயாராகிவிடுவோம்.

இதற்கு ஒரு அற்புதமான ஒரு சான்றை அருள்மறை குர்ஆண் நமக்கு விளக்குகிறது
இறைவனின் கட்டளைப்படி பிர்அவ்னிடம் சென்ற மூஸா[அலை]அவர்கள் தன்னை நபியென நிரூபிக்க இறைவன் வழங்கிய அற்புதங்களை நிகழ்த்தி காட்டியவுடன், இந்த அற்புதங்களை சூனியம் என்று வர்ணித்த பிர்அவ்ன், கைதேர்ந்த சூனியக்காரர்களை மூஸா[அலை]அவர்களுக்கு எதிராக களமிறக்க அப்போது நடந்தவைகளை திருக்குரான் இப்படி வர்ணிக்கிறது
وَجَاء السَّحَرَةُ فِرْعَوْنَ قَالْواْ إِنَّ لَنَا لأَجْرًا إِن كُنَّا نَحْنُ الْغَالِبِينَ
அவ்வாறே ஃபிர்அவ்னிடத்தில் சூனியக்காரர்கள் வந்தார்கள். அவர்கள், "நாங்கள் (மூஸாவை) வென்றுவிட்டால், நிச்சயமாக எங்களுக்கு அதற்குரிய வெகுமதி கிடைக்குமல்லவா?" என்;று கேட்டார்கள். (7:113)
قَالَ نَعَمْ وَإَنَّكُمْ لَمِنَ الْمُقَرَّبِينَ
அவன் கூறினான்; "ஆம் (உங்களுக்கு வெகுமதி கிடைக்கும்). இன்னும் நிச்சயமாக நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்." (7:114)
قَالُواْ يَا مُوسَى إِمَّا أَن تُلْقِيَ وَإِمَّا أَن نَّكُونَ نَحْنُ الْمُلْقِينَ
"மூஸாவே! முதலில் நீர் எறிகிறீரா? அல்லது நாங்கள் எறியட்டுமா?" என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர். (7:115)
قَالَ أَلْقُوْاْ فَلَمَّا أَلْقَوْاْ سَحَرُواْ أَعْيُنَ النَّاسِ وَاسْتَرْهَبُوهُمْ وَجَاءوا بِسِحْرٍ عَظِيمٍ
அதற்கு (மூஸா), "நீங்கள் (முதலில்) எறியுங்கள்" என்று கூறினார். அவ்வாறே அவர்கள் (தம் கைத்தடிகளை) எறிந்தார்கள்; மக்களின் கண்களை மருட்டி அவர்கள் திடுக்கிடும்படியான மக்தான சூனியத்தை செய்தனர். (7:116)
وَأَوْحَيْنَا إِلَى مُوسَى أَنْ أَلْقِ عَصَاكَ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ
அப்பொழுது நாம் "மூஸாவே! (இப்பொழுது) நீர் உம் கைத்தடியை எறியும்" என அவருக்கு வஹீ அறிவித்தோம்; அவ்வாறு அவர் எறியவே (அது பெரிய பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) கற்பனை செய்த யாவற்றையும் விழுங்கி விட்டது. (7:117)
فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُواْ يَعْمَلُونَ
இவ்வாறு உண்மை உறுதியாயிற்று, அவர்கள் செய்த (சூனியங்கள்) யாவும் வீணாகி விட்டன. (7:118)
فَغُلِبُواْ هُنَالِكَ وَانقَلَبُواْ صَاغِرِينَ
அங்கேயே தோற்கடிக்கப்பட்டார்கள்; அதனால் அவர்கள் சிறுமைப்பட்டார்கள். (7:119)
وَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ
அன்றியும் அந்தச் சூனியக்காரர்கள் சிரம் பணிந்து (7:120)
قَالُواْ آمَنَّا بِرِبِّ الْعَالَمِينَ
"அகிலங்களின் இறைவன் மீது நிச்சயமாக நாங்கள் ஈமான் கொண்டோம்; (7:121)
رَبِّ مُوسَى وَهَارُونَ
"அவனே மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவனாவான்" என்று கூறினார்கள். (7:122)
قَالَ فِرْعَوْنُ آمَنتُم بِهِ قَبْلَ أَن آذَنَ لَكُمْ إِنَّ هَـذَا لَمَكْرٌ مَّكَرْتُمُوهُ فِي الْمَدِينَةِ لِتُخْرِجُواْ مِنْهَا أَهْلَهَا فَسَوْفَ تَعْلَمُونَ
அதற்கு ஃபிர்அவ்ன் (அவர்களை நோக்கி) "உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு முன்னரே நீங்கள் அவர் மேல் ஈமான் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக இது ஒரு சூழ்ச்சியாகும் - இந்நகரவாசிகளை அதிலிருந்து வெளியேற்றுவதற்காக மூஸாவுடன் சேர்ந்து நீங்கள் செய்த சூழ்ச்சியேயாகும் - இதன் விளைவை நீங்கள் அதிசீக்கிரம் அறிந்து கொள்வீர்கள்! (7:123)
لأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُم مِّنْ خِلاَفٍ ثُمَّ لأُصَلِّبَنَّكُمْ أَجْمَعِينَ
"நிச்சயமாக நான் உங்கள் கைகளையும், கால்களையும் மாறுகை, மாறுகால் வாங்கி உங்கள் யாவரையும் சிலுவையில் அறைந்து (கொன்று) விடுவேன்" என்ற கூறினான். (7:124)
قَالُواْ إِنَّا إِلَى رَبِّنَا مُنقَلِبُونَ
அதற்கு அவர்கள் "(அவ்வாறாயின்) நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் தான் திரும்பிச் செல்வோம்; (எனவே இதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை)" என்று கூறினார்கள். (7:125)
وَمَا تَنقِمُ مِنَّا إِلاَّ أَنْ آمَنَّا بِآيَاتِ رَبِّنَا لَمَّا جَاءتْنَا رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ
"எங்களுக்கு எங்கள் இறைவனிடமிருந்து எந்துள்ள அத்தாட்சிகளை நாங்கள் நம்பினோம் என்பதற்காகவே நீ எங்களைப் பழி வாங்குகிறாய்?" என்று கூறி "எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக முஸ்லீம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!" (எனப் பிரார்தித்தனர்.) (7:126 ]

மேற்கண்ட வசனங்களில் மூஸா[அலை] அவர்களுக்கு போட்டியாக சூனியம் செய்துகாட்ட வந்தவர்கள் இறுதியில் தோல்வியடைந்து ஈமான் கொண்ட மாத்திரமே, பிர்அவ்னின் 'மாறுகால் மாறுகை வாங்குவேன்; சிலுவையில் அறைவேன் என்ற மிரட்டலை கண்டு அஞ்சாமல் முழுக்க முழுக்க அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்து அதை எதிர்கொண்டார்கள் எனில், இதுதான் உண்மையான அல்லாஹ்வின் மீதான உறுதியான நம்பிக்கை. எத்தகைய சோதனைகளை நாம் உலக வாழ்வில் சந்தித்தாலும், அது எந்த வடிவில் வந்தாலும் அல்லாஹ்வின் மீதே அசைக்கமுடியாத நம்பிக்கை வைக்கவேண்டும். அதுதான் மகத்தான மறுமை வெற்றிக்கும், இறையச்சத்துடன் கூடிய இம்மை வாழ்விற்கும் வழிகாட்டும்.
رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلإِيمَانِ أَنْ آمِنُواْ بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الأبْرَارِ
"எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; "எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக! இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!"

கருத்துகள் இல்லை: