அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வியாழன், 1 ஜனவரி, 2009

இன்னும்கெடுவோம்நாங்கள்; என்னபந்தயம்..?

அல்லாஹ் தன் அருள்மறை மூலமும், தனது திருத்தூதர்[ஸல்] அவர்கள் மூலமும் சுவனத்திற்க்கான வழியை தெளிவாக அடையாளம் காட்டிய பின்னும் ஷைத்தானின் அடிச்சுவட்டை நன்மை என்றபெயரில் செய்துவரும் முஸ்லிம்களை நாம் பார்க்கிறோம்.

தமிழகத்தில் ஏகத்துவ எழுச்சிக்குப்பின் சற்றேமந்தமான தர்காவழிபாடு, ஷேய்க்அப்துல்லா ஜமாலி போன்றோரின் வருகைக்குப்பின் மீண்டும் புத்துணர்வு பெற்றுஉள்ளதை நாம் மறுக்கமுடியாது.சமீபத்தில் நடைபெற்ற ஏர்வாடி சந்தனகூட்டுகாட்சிகள் நமக்கு இதை படம்பித்து காட்டுகிறது.

கப்ருகளை பூசாதீர்கள்; கப்ருகளில் விளக்கு ஏற்றாதீர்கள்; கப்ருகளை உயரமாக ஆக்காதீர்கள் என்றெல்லாம் நபியவர்கள் கிளிப்பிள்ளைக்கு சொன்னதுபோல் சொல்லியிருந்தும் முஸ்லிம்களில் ஒருகூட்டம் மகான் மீது கொண்ட பக்தியின் காரணமாக நபியவர்களின் கூற்றை கண்டு கொள்வதில்லை.

இவர்களின் அறியாமை எங்கே கொண்டுபோய் நிறுத்தியுள்ளது என்றால், இந்து தளங்களில் வசதிபடைத்தோர் தங்கத்தால் சிலைசெய்து/ அல்லது சிலையின் உறுப்பில் ஒரு பாகத்தை செய்து வழங்குவர். அதுபோல ஆந்திராவை சேர்ந்த ஒரு ஏர்வாடி இப்ராஹீம் பாதுஷாவின் பக்தர்[முஸ்லிம்தான்] சமாதிக்கு பத்துலட்சம் செலவில் வெள்ளிக்கவசம் செய்து பொருத்தியுள்ளார். எத்துணையோ முஸ்லிம் ஏழைகள் ஒருவேளை சாப்பாடிற்கு வழியில்லாமல் கஷ்டப்படும் நாட்டில், இந்த தொழிலதிபர் அதைப்பற்றி கவலைப்படாமல் அல்லாஹ் வழங்கிய அருட்கொடையான செல்வத்தை அல்லாஹ்வும், அவன்தூதரும் காட்டித்தராத முழுக்க முழுக்க பிற மத கலாசாரத்தின் அடிப்படையில் செலவிடுகிறார் எனில், இதைப்பற்றி அல்லாஹ் கேட்கமாட்டான் என்ற என்னமா? அல்லது இப்ராஹீம் பாதுஷா பார்த்துக்கொள்வார் என்றநினைப்பா?
அல்லாஹ்வின் பாதையல்லாத வழியில் செலவிடுபவருக்கு அல்லாஹ் கூறும் உதாரணம்;

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
2:266
أَيَوَدُّ أَحَدُكُمْ أَن تَكُونَ لَهُ جَنَّةٌ مِّن نَّخِيلٍ وَأَعْنَابٍ تَجْرِي مِن تَحْتِهَا الأَنْهَارُ لَهُ فِيهَا مِن كُلِّ الثَّمَرَاتِ وَأَصَابَهُ الْكِبَرُ وَلَهُ ذُرِّيَّةٌ ضُعَفَاء فَأَصَابَهَا إِعْصَارٌ فِيهِ نَارٌ فَاحْتَرَقَتْ كَذَلِكَ يُبَيِّنُ اللّهُ لَكُمُ الآيَاتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ
உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? - அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன - இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான்.2:௨௬௬
அறியாமையில் உள்ள முஸ்லிம்களே திருந்துங்கள்! அல்லாஹ்,மற்றும் அவன் தூதரின் வழிக்கு திரும்புங்கள்!!

படம்நன்றி;தினத்தந்தி.

1 கருத்து:

syed mohamed சொன்னது…

masha allah. very nice topic. very very useful topic.