அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

திங்கள், 11 பிப்ரவரி, 2013

சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி : ஊடகங்களின் திரித்தல் அம்பலம்!


சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி : ஊடகங்களின் திரித்தல் அம்பலம்!

 

Download SocButtons

டந்த 25.12.2011 அன்று பலத்த காயங்களுடன் தன் நினைவின்றி சவூதித் தலைநகர் ரியாதின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லமா அல்-காமிதி (Lama Al Ghamidi) எனும் ஐந்து வயதுச் சிறுமி, ஏறத்தாழ பத்துமாத காலம் தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் வைக்கப்பட்டிருந்து 22.10.2012 அன்று மரணமடைந்தாள்.

இந்தச் செய்தி முதன்முதலாக பிபிஸீயின் மத்தியக் கிழக்குச் செய்திப் பிரிவில் 31.1.2013இல் சில சேர்க்கைகளுடன் வெளியிடப்பட்டது.


அந்தச் செய்திக்கு மேலும் கண்ணும் காதும் மூக்கும் இன்ன பிறவும் சேர்த்து, பல ஆங்கில இதழ்கள் வெளியிட்டன. குறிப்பாக, கல்ஃப் ந்யூஸ் இதழின் 3.2.2013 தேதியிட்ட செய்தியில், "தன் சொந்தப் பிள்ளைகளை ஒரு தகப்பன் கொலை செய்தால் அவனை தண்டிக்க முடியாது என்பது சவூதி அரபியாவில் நடப்பிலுள்ள சட்டமாகும்" எனும் தவறான கருத்தைச் சேர்த்து வெளியிட்டது.

"
சவூதி அரபியாவின் சட்டம்" என்று கல்ஃப் ந்யூஸ் வெளியிட்ட செய்தியை "ஷரிஆ சட்டம்" என்பதாக மாற்றி, இன்னும் கொஞ்சம் பில்ட்-அப் செய்து நமது தமிழ் அறிவுசீவிகள் மாய்ந்து மாய்ந்து எழுதித் தள்ளினர். அவர்களுள் இஸ்லாத்தை எதிர்த்து நிற்பதைக் குலத் தொழிலாகச் செய்துவரும் திண்ணை வார இதழ் தனது 3.2.2013 பதிப்பில் "5 வயது மகளை பாலுறவு பலாத்காரம் செய்து சித்ரவதை செய்த சவுதி இஸ்லாமிய பிரச்சாரகர் விடுதலை" எனும் தலைப்பிட்டு வெளியிட்டிருந்தது. இதே செய்தி, தினமலர் நாளிதழின் 4.2.2013 அன்று "மகளை கற்பழித்து கொன்றவருக்கு தண்டனை குறைப்பு: பெண்கள் எதிர்ப்பு" எனும் தலைப்பில் வெளியாகியிருந்தது.

இவை மட்டுமல்லாது 'கோடங்கி' எனும் ஒரு பாவனைப் பகுத்தறிவாளர், "மகளைக் கொன்ற மதவாதி; பணம் கொடுத்தால் விடுதலை" என்று தலைப்பிட்டு இஸ்லாமியக் காழ்ப்பைக் கக்கியிருந்ததோடு, It was narrated that the Prophet (peace and blessings be upon him) said, "No father should be killed (executed) for killing his son." (At-Tirmidhi) என்ற ஒரு அரைகுறைத் தகவலை வெளியிட்டிருந்தார்.

பொய்யான தகவலைப் பரப்புகிறோம் என்ற சிந்தனையின்றி அத்தனை பேரும் ஒட்டு மொத்தமாக ரிப்பீட் அடித்தது ஒரே செய்தியைத்தான். அவற்றுள்:

1. ஃபய்ஹான் அல் காமிதி என்பவன் இஸ்லாமிய மதபோதகன்.
2.
அவன் தொலைக்காட்சிகளில் தோன்றி இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்பவன்.
3.
தன் சொந்த மகளின் உடலின் 'எல்லா பாகங்களிலும்' வல்லுறவு கொண்டான்.
4.
மகளை சித்திரவதை செய்து கொன்றுவிட்டு, அவளின் தாயாரும் தன் முன்னாள் மனைவியுமான பெண்மணிக்கு $50,000 அபராதம் செலுத்தியபின் சுதந்திரமாக உலா வருகிறான்.
5.
சொந்தப் பிள்ளைகளைக் கொன்றால் தந்தையைப் பழிக்குப்பழி எனும் தண்டனை இஸ்லாத்தில் கிடையாது.

ஆகிய தவறான ஐந்து குற்றச்சாட்டுகளை அடுக்கி, தம் மனம்போன போக்கில் எழுதி மாய்ந்து போயினர்.

ஃபய்ஹான் அல் காமிதி என்பவன், இறந்தவர்களைக் குளிப்பாட்டும் தொழிலாளி. மூன்றாம் வகுப்புவரை மட்டுமே கல்வி பயின்ற ஃபய்ஹான், மதபோதகன் அல்லன். சிறுவயதில், தான் சீரழிக்கப்பட்டதையும் போதைக்கு அடிமையாகிக் கிடந்து, இஸ்லாத்தின் போதனைகளால் போதைப் பழக்கத்திலிருந்து மீண்டு வந்ததையும் தொலைக்காட்சி அமர்வுகள் சிலவற்றில் விவரித்திருக்கிறான்.

அவனுடைய ஐந்து வயது மகள், எவராலும் வல்லுறவு செய்யப்படவில்லை என்பதை மருத்துவ அறிக்கைகள் தெளிவு படுத்துகின்றன. "என் மகள், தன் சொந்தத் தகப்பனால் சித்திரவதை செய்யப்பட்டு இறந்துவிட்டாள்; அவள் வல்லுறவு செய்யப்படவில்லை. இறந்துவிட்ட என் மகளை ஊடகங்கள் மானபங்கப் படுத்தவேண்டாம்" என்று சிறுமி லமாவின் தாய் ஸயீதா முகம்மது அலீ குமுறுகிறார்.

ஊடகங்களின் பொறுப்பற்ற இழிநிலையை சவூதியின் நீதித்துறை அமைச்சகம் வன்மையாகக் கண்டித்திருக்கிறது. நீதித்துறை அமைச்சகத்தின் செய்தியாளர் ஃபஹத் அல் பூக்ரான், "இன்னும் விசாரணையே முற்றுப் பெறாமல் நடந்து கொண்டிருக்கும் வழக்கில், தீர்ப்பு வெளியாகிவிட்டதாக அச்சு/மின் ஊடகங்களும் சமூக வலைத் தளங்களும் திரித்துக் கூறுகின்றன" என்று மறுப்புக் கூறுகிறார்.


Saudi Arabia's justice ministry has denied reports that a father who allegedly raped and tortured his five-year-old daughter Luma to death had been set free after having to pay diya (blood money).

"The media reports published in newspapers and posted on electronic websites and social networks on the court verdict in the Luma case are not true," Fahad Bin Abdullah Al Bokran, the ministry spokesperson, said.

"The case is still being heard at the court and no sentence has been issued yet. The father is still in prison and we expect a ruling soon after all aspects related to the case are examined," he said in remarks published by the Saudi media on Thursday.

Fahad Bin Abdullah Al Bokran


சொந்த மகளை சித்திரவதை செய்து கொன்ற ஃபய்ஹான் அல் காமிதி இன்னும் சிறையில்தான் இருக்கிறான். வருகின்ற 13.2.2013இல் விசாரணை நடைபெறவுள்ளது எனும் செய்தியையும் கல்ஃப் ந்யூஸ் வெளியிட்டுள்ளது. குறைந்தபட்சம், தமது முந்தைய செய்தியில் பிழை இருப்பதைக் கண்டு, வெட்கப்படாமல் உண்மை நிலையை வெளியிட்டுள்ளது கல்ஃப் ந்யூஸ்.

ஆனால், தவறான தகவல்களைப் பதிந்த எந்த ஊடகமும் எந்தப் பதிவரும் இதைக் கண்டுகொள்ளாமல் கள்ள மௌனம் சாதிப்பது வேடிக்கையும் வேதனையுமான விஷயம்.

"
இந்த வழக்கில், குழந்தையின் தாயான, தன் மனைவிக்கு அவர் ரத்த இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இதுவரை அவர் சிறையிலிருந்த காலமே போதுமானது என்றும், சவுதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இஸ்லாமிய சட்டங்களின்படி, தன் சொந்த குழந்தைகளை கொன்ற தந்தை மற்றும் மனைவியை கொன்ற கணவனுக்கு தண்டனை ஏதும் விதிக்கப்படாது. அதற்கு பதிலாக, கொலையாளி, கொல்லப்பட்டவரின் நெருங்கிய உறவினருக்கு, இழப்பீட்டுத் தொகையாகப் பணம் வழங்க வேண்டும். இது, 'ரத்த இழப்பீடு' என்று அழைக்கப்படுகிறது" என்று அவிழ்த்துவிட்ட தினமலர் நாளிதழில் இதுவரை சவூதியின் நீதித்துறை அமைச்சகம் கண்டித்த இந்தச் செய்தி வெளிவரவில்லை.

பொதுவாகவே, உலக அளவில் பெரும்பாலான ஊடகங்கள் இஸ்லாத்துக்கு எதிராக எதையாவது அவ்வபோது கக்கிக்கொண்டிருப்பதையே தங்களின் பிரதான தொழிலாகக் கொண்டுள்ளன. அதிலும் தமிழகத்திலுள்ள தினமலர் நாளிதழைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. இஸ்லாத்துக்கு அல்லது முஸ்லிம்களுக்கு எதிராக எழுதுவதற்கு ஏதாவது கிடைத்தால் அவ்வாய்ப்பை அது தவறவிடுவதே இல்லை. நாளிதழ்கள் படிக்கும் பழக்கமுடைய பெரும்பாலான தமிழர்களுக்கு இந்த உண்மை ஏற்கனவே நன்கு தெரியும். ஆகவே, தினமலரில் வரும் செய்திகள், அதுவும் இஸ்லாம் அல்லது முஸ்லிம்களை மையப்படுத்தி வரும் காழ்ப்புணர்வுச் செய்திகளை இப்போதெல்லாம் எவரும் பெரிதாக கண்டு கொள்வதில்லை.

ஆனால், மேற்கண்ட இச்செய்தியினை அவ்வளவு இலகுவாக புறம்தள்ளி சென்றுவிடமுடியாது. ஒற்றைப்பார்வையில், மிகக் கொடூரமாக பச்சிளம் குழந்தையை வன்புணர்ந்து கொலை செய்த இஸ்லாமிய மதப்போதகருக்குத் தண்டனை என்ற பெயரில் வெறும் 4 மாத சிறைவாசமும் ரத்தப்பணமும் மட்டும் விதித்து விடுதலை செய்துள்ளது இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில்தான் என்ற மிகப் பாரதூரமானதொரு அவதூறு இச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை வாசிக்கும் சாதாரண பாமரனுக்கும் இஸ்லாத்தின்மீது, "இவ்வளவு கேவலமான மார்க்கமா இஸ்லாம்? ஆணாதிக்கத்தின் உச்சத்தில் உள்ளதே இஸ்லாம்?" என்ற எண்ணத்தைத் தோற்றுவித்துவிடும் ஆபத்து உள்ளது.

ஆகவே, இச்செய்தி உண்மைதானா? தினமலர் குறிப்பிடுவது போன்றதொரு சட்டம் இஸ்லாத்தில் உள்ளதா? சவூதியின் ஷரீஆ நீதிமன்றம் இப்படியொரு தீர்ப்பை வெளியிட்டதா? ஆகிய விஷயங்களைத் தேடிப் பயணித்தபோது, இச்செய்தியில் ஒளிந்திருக்கும் கயமைத்தனம் அப்பட்டமாக வெளிப்பட்டது.

அதனைத் தெளிவாக பார்ப்பதே இப்பதிவின் நோக்கம்.

குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் ஃபய்ஹான் அல் காமிதி குறித்த விவரங்கள் இதோ:

சிறுவயதில் தாயை இழந்து, மோசமான தந்தையிடமிருந்து பிரிந்து உறவினர்களிடம் வளர்ந்த ஃபய்ஹான், மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். சரியான கவனிப்பு இல்லாமல் வளர்ந்த ஃபய்ஹான், சிறு வயதிலேயே போதைப்பொருள், புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானவர். இதனால் இளம்வயதிலேயே சிறை சென்ற அவர், தன் 24ஆம் வயதில் இஸ்லாமிய அழைப்புப்பணி புரிவோரால் நல்லொழுக்கம் போதிக்கப்பட்டு மனம் திருந்தி, போதைப் பொருளுக்கு அடிமையானோரை அதிலிருந்து விடுவிப்பதற்கான பயிற்சி கொடுப்பவராக மாறியுள்ளார். இவரின் முயற்சியால், சிறையில் போதைப்பொருளுக்கு அடிமையாகிக் கிடந்த பலர் மனம் திருந்தியுள்ளனர். இதில் பிரபலமான அவர், தொலைக்காட்சிகளிலும் அவ்வப்போது போதைப் பொருளின் தீமைகள் குறித்துத் தொடர் பேச்சுகளும் பேட்டிகளும் வழங்குபவராக மாறியுள்ளார்.

இக்காலகட்டத்தில், எகிப்தில் பிறந்து 25 ஆண்டுகாலம் சவூதியில் வசித்துவருபவரும் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவருமான ஸயீதா முஹம்மது அலீ என்பவர் ஃபய்ஹானைப் பற்றி நல்லவிதமாகக் கேள்விப்பட்டு, அவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்தான் கொல்லப்பட்ட சிறுமியான லமாவின் தாயார். இனி அவரின் வாயாலேயே ஃபய்ஹான் குறித்து அறிவோம்:

"மார்க்கத்தில் சிறந்த நல்லதொரு ஒழுக்கச்சீலர் எனவும் மரணமடைந்தவர்களைச் சுத்தம் செய்து அவர்களை அடக்கம் செய்யும் உயரிய சமூகப்பணியினை மேற்கொள்பவர் என்றும் ஃபய்ஹான் குறித்து எனக்கு விவரங்கள் சொல்லப்பட்டன. அதன் அடிப்படையில் அவரைத் திருமணம் செய்துகொண்டேன். ஆனால், திருமணத்துக்குப் பின்னர் அவருடைய குணத்தில் பெருத்த மாறுதல் ஏற்பட்டது. என்னை அடிக்கடி அடித்துத் துன்புறுத்தினார். பிறருக்கு வெளியே நல்லுபதேசம் செய்வதற்கு நேர் எதிரான குணங்களையே என்னிடம் காண்பித்தார். மார்க்கக் கடமைகளை அவர் சரியாக பேணுவதில்லை. கடமையான நோன்புகளைக்கூட ரமளானில் அவர் விட்டுள்ளார்.

போதைப்பொருட்களை மீண்டும் உபயோகிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் நான் கர்ப்பமானேன். அதற்கு மேலும் அவருடன் இருப்பது என் வாழ்வுக்கு நல்லதல்ல என முடிவு செய்து அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்றேன். ஃபய்ஹானும் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். எங்களுக்குப் பிறந்த குழந்தை லமாவை, அவளுடைய 7 வயதுவரை நானே பராமரித்துக்கொள்ள நீதிமன்ற உத்தரவைப் பெற்று நானே வளர்த்து வந்தேன். முறைப்படி மாதத்தில் இரு வாரங்கள் மட்டும் லமா ஃபய்ஹானுடன் இருக்கவேண்டும்.

அவ்வாறு கடந்த முறை அவரிடம் லமாவை விட்டபோது, என் மகளைத் திரும்ப என்னிடம் தரமுடியாது என அவர் மறுத்தார். திரும்பத் திரும்ப என் மகளை என்னிடம் ஒப்படைக்குமாறு அவரிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். நீதிமன்ற உத்தரவை நினைவூட்டினேன். இந்நிலையிலேயே சுமார் நான்கு மாதங்களுக்குப் பின்னர் ரியாத் காவல்துறையினரிடமிருந்து எனக்கு ஓர் அழைப்பு வந்தது. லமாவுக்கு விபத்து ஒன்று நேர்ந்துள்ளதாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். மருத்துவமனையில் 10 மாதம் தொடர் சிகிட்சையில் இருந்த லமா, சிகிட்சை பலனில்லாமல் 2011 டிசம்பரில் மரணமடைந்தாள். தன் தந்தையின் பொறுப்பில் இருந்த வேளையில் குழந்தை பாதிக்கப்பட்டதால், அதன்பேரில் காவல்துறை ஃபய்ஹானையும் அவரின் புது மனைவியையும் கைது செய்து சிறையில் அடைத்தது. அவரின் புது மனைவி கர்ப்பமாக இருந்ததால், கைது செய்யப்பட்ட இரு வாரங்களுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்"

மேற்கண்டவாறு லமாவின் தாயார் கூறுகிறார். அவருடைய பேட்டியினை முழுமையாகக் கீழே காணலாம்:


Dim lights Embed

"கொலைக்குக் கொலை" என்று விதித்துள்ள இஸ்லாம், கொலை செய்யப்பட்டவரின் நெருங்கிய உறவினர் மன்னித்தால் மட்டும் கொலையாளி, "இழப்பீட்டு பணம்" கொடுத்து விடுதலை செய்யப்படலாம் என்கிறது. மேலும், இந்தத் தண்டனை விசயத்தில், ஏழை - பணக்காரன், வலியவன் - எளியவன் என்ற எந்தப்பாகுபாடும் இஸ்லாம் காட்டவில்லை. மாறாக, அவ்வாறு காட்டக்கூடாது என்றே கடுமையாக கட்டளையும் இடுகிறது. தன் மகள் ஃபாத்திமாவே திருடினாலும் கையை வெட்டுவதுதான் தீர்ப்பு என்று வலியுறுத்தும் நபிமொழியில்கூட, முந்தைய சமுதாயங்கள் தம்மிடையே கவுரமான நிலையிலுள்ள வலியவர்களுக்கு ஒரு சட்டமும் ஏழைகளுக்கு மற்றொரு சட்டமும் செயல்படுத்திய காரணத்தாலே அல்லாஹ்வால் அழிக்கப்பட்டதாகக் குறிப்பிடுவதோடு, அவ்வாறு சட்டத்தில் பாகுபாடு கூடாது; அனைவருக்கும் சமமான நீதிதான் இஸ்லாம் என்பதை மிகக் கண்டிப்புடன் வலியுறுத்துகிறது.

இறைச்சட்டங்களை நடைமுறைபடுத்தக் கூறும் இறைவசனங்கள்கூட, குற்றவாளி யூதனோ, கிறிஸ்தவனோ, முஸ்லிமோ யாராக இருந்தாலும் சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்றும் அனைவருக்கும் சமமான நீதியே காட்டவேண்டுமெனவும் கட்டளையிடுகிறது.

இவ்வாறு இஸ்லாத்தில் மிகத்தெளிவாக தண்டனை சட்டம் இருக்கும்போது, "ஒருவன் தன் மனைவியையோ தன் குழந்தையையோ கொன்றால் அவனுக்கு மரணதண்டனை இல்லை" என இஸ்லாம் கூறுவதாகத் திரிப்பது அப்பட்டமான அவதூறும் கடுமையாக எதிர்க்கப்படவேண்டிய அக்கிரமச் செயலுமாகும்.

இச்செய்தியினை மையமாக வைத்து இஸ்லாத்தை விமர்சிக்க வந்தவர்களுள் ஒருவரான கோடங்கி எனும் பதிவர், திரிமிதீயில் பதிவான கீழ்க்கண்டதொரு அரைகுறைச் செய்தியினை மேற்கோள்காட்டி இஸ்லாம் அவ்வாறு கூறுவதாகப் பழி சுமத்துகிறார்.

It was narrated that the Prophet (peace and blessings be upon him) said, "No father should be killed (executed) for killing his son" (At-Tirmidhi).

"
எந்த ஒரு தந்தையும் தன் மகனைக் கொன்றதற்காகப் பழிவாங்கப்படக்கூடாது" என நபியவர்கள் கூறியதாகக் குறிப்பிடும் மேற்கண்ட திர்மிதீயின் பதிவு குறித்து, அது ஆதாரப்பூர்வமான செய்தியல்ல எனப் பலர் குறிப்பிட்டுள்ளனர். பலர் என்பதில் இமாம் திர்மிதீயும் அடக்கம். இந்தச் செய்தியைத் தமது 1399ஆவது பதிவில் வைத்திருக்கும் இமாம் திர்மிதீ அவர்கள், "இது பலவகையிலும் குழறுபடியான செய்தி" என்ற முக்கியக் குறிப்புடன்தான் அதை வைத்திருக்கிறார் (இணைப்பு).


 

مسألة: التحليل الموضوعي
بَاب مَا جَاءَ فِي الرَّجُلِ يَقْتُلُ ابْنَهُ يُقَادُ مِنْهُ أَمْ لَا

1399
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ عَيَّاشٍ حَدَّثَنَا الْمُثَنَّى بْنُ الصَّبَّاحِ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ عَنْ سُرَاقَةَ بْنِ مَالِكِ بْنِ جُعْشَمٍ قَالَ حَضَرْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقِيدُ الْأَبَ مِنْ ابْنِهِ وَلَا يُقِيدُ الِابْنَ مِنْ أَبِيهِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ سُرَاقَةَ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ وَلَيْسَ إِسْنَادُهُ بِصَحِيحٍ رَوَاهُ إِسْمَعِيلُ بْنُ عَيَّاشٍ عَنْ الْمُثَنَّى بْنِ الصَّبَّاحِ وَالْمُثَنَّى بْنُ الصَّبَّاحِ يُضَعَّفُ فِي الْحَدِيثِ وَقَدْ رَوَى هَذَا الْحَدِيثَ أَبُو خَالِدٍ الْأَحْمَرُ عَنْ الْحَجَّاجِ بْنِ أَرْطَاةَ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ عَنْ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ مُرْسَلًا وَهَذَا حَدِيثٌ فِيهِ اضْطِرَابٌ وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ أَنَّ الْأَبَ إِذَا قَتَلَ ابْنَهُ لَا يُقْتَلُ بِهِ وَإِذَا قَذَفَ ابْنَهُ لَا يُحَدُّ

சவூதியின் புகழ்பெற்ற மார்க்க அறிஞர்களான முஹம்மது ஸாலிஹ் அல் முனஜ்ஜித் , முஹம்மது பின் ஸாலிஹ் அல் உதைமீன் ஆகியோர் மேற்காணும் செய்தி குறித்து ஆழமாக ஆய்ந்து அதைத் தள்ளுபடி செய்திருக்கின்றனர். கூடுதலாக இமாம் அல் அஸ்கலானீ அவர்கள் "இது தள்ளுபடியாவதற்கு எல்லா வகையிலும் பொருத்தமானது" எனக் குறிப்பிட்டுள்ளார்

ஒரு மார்க்கத் தீர்ப்பு (ஃபத்வா) என்றால் அதற்கான முதலாவது சான்றாதாரம் இறைமறையாகும். இறைமறை கூறுகிறது:

வேதம் வழங்கப்பட்டோர்க்கு நாம் அதில், "உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்;" எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்;. எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே! (5:45).

எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்;. இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான்.(4:93)

ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்;, அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு. (2:178).

"எந்தப் பாவத்திற்காக அச்சிறுமி கொல்லப்பட்டாள்?" (81:9).

ஃபய்ஹானுக்கு என்ன தண்டனை?

ஃபய்ஹான் அல் காமிதி, தன் மகள் லாமாவைக் கொல்ல வேண்டும் என்ற வெறியோடு சித்திரவதை செய்திருந்தான் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், விரைவில் ஒரு வெள்ளிக்கிழமை பொதுவெளியில் தலை சீவப்படுவான். குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றால் அல்லது லமாவின் தாய், தம் முன்னாள் கணவனான ஃபய்ஹானை மன்னித்தால் மட்டுமே தண்டனையிலிருந்து தப்பமுடியும். கூட்டு மனசாட்சிக்காக ஷரீஆவில் எவரும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.


இன்னும் தீர்ப்பே வெளிவராத ஒரு வழக்கை, "எந்த ஒரு தந்தையும் தன் மகனைக் கொன்றதற்காகக் கொல்லப்படக்கூடாது" எனும் நபிமொழியின் அடிப்படையில் தீர்ப்பு வெளிவந்துவிட்டதாகக் கதைகட்டிப் புனைந்து எழுதும் பாவனை அறிவுசீவிகளுக்கு, இஸ்லாத்தின் மீதான காழ்ப்பைத் தவிர இரண்டாவது காரணம் ஏதும் இருக்கமுடியாது என்பது திண்ணம்.

Regards,

Shadhuly A. Hassan

Admn. & Mgmt. Assistant

Modern Machinery Co. Ltd.

Riyadh, Saudi Arabia

Tel: 00966-1-4030745     Fax: 00966-1-4036410

Mobile: 00966-504259841





--


ALAVUDEEN



* Read Quran Regular Basis with translation
* Dhikr Allah everyday morning & evening
* Pray promptly and guide others to pray also.
* Please don't waste water and food in your daily life, you should answer to Allah for wastage.
* Reach islamic messages to everyone,it's ur duty.

கருத்துகள் இல்லை: