அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

சகோதரி மகளை திருமணம் செய்தவர்கள் நிலை; பீஜே அன்றும்-இன்றும்!


بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
முஸ்லிமல்லாத ஒருவர் தனது சகோதரி மகளை திருமணம் செய்திருந்த நிலையில் இஸ்லாத்தை  தழுவினால் அந்த திருமண உறவின் நிலை என்ன என்ற கேள்விக்கு அன்று அறிஞர் பீஜே அளித்துள்ள பதிலை படியுங்கள்;
ஐயம் : தனது உடன் பிறந்த சகோதரி மகளை மனம் செய்த ஒரு மாற்று மத தம்பதியினர், முஸ்லிமாக மாறினால் அவர்களின் திருமண உறவு தொடருமா? முடியுமா?
S.M. நாசர், தேங்கா பட்டிணம்.

தெளிவு : திருமணம் செய்து கொள்ளத் தகாத உறவுகளை அல்லாஹ் திருமறையில் 4 : 23 வசனத்தில் கூறும் போது சகோதரியின் மகள்களும் ஹராமாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறான். எக்காரணத்தினாலும் சகோதரியின் மகளை ஒருவன் மணம் புரியக் கூடாது. இஸ்லாத்தை அவர்கள் தழுவினாலும் அந்த உறவு தொடரக் கூடாது. உடனடியாக அவர்கள் திருமண உறவை முறித்துக் கொள்ள வேண்டும்.

"குர்ஆனில் அல்லாஹ் இடுகின்ற கட்டளையை ஏற்கிறேன்" என்பதையும் உள்ளடக்கித்தான் ஒருவன் இஸ்லாத்தைத் தழுவுகிறான். குர்ஆனுடைய இந்தக் கட்டளைகளையும் ஏற்றே ஆக வேண்டும்.
"மூமின்களே! நீங்கள் இஸ்லாத்தில் பூரணமாக நுழைந்துவிடுங்கள்!" (அல்குர்ஆன் 2:28) என்று அல்லாஹ் ஆணையிடுகிறான். யூதர்களில் ஒரு பிரிவினர் இஸ்லாத்தை தழுவும் போது சனிக் கிழமையைத் தாங்கள் புனித நாளாகக் கொண்டாட அனுமதி கேட்டார்கள். அதை நிராகரிக்கும் விதமாகவே இந்த வசனம் இறங்கியது (இப்னு கஸீர்)

இஸ்லாத்தின் அனைத்துச் சட்டங்களையும் ஏற்றுக் கொண்டு அதில் இணைபவர்கள் தான் இஸ்லாத்திற்கு வேண்டும்.
அவர்கள் கடந்த காலங்களில் கணவன், மனைவியாக வாழ்ந்த தவறான உறவை அல்லாஹ் மன்னிக்கிறான். மேலும் அந்தக் தவறு தொடர்வதை அல்லாஹ் அனுமதிக்கவில்லை.[1987 மார்ச், அந்நஜாத்].
பீஜே அவர்களின் மேற்கண்ட பதிலை கவனமாக நீங்கள்  பார்த்தால், இஸ்லாத்தை ஏற்ற ஒருவர் தான் திருமணம் செய்திருந்த சகோதரி மகளை உடனடியாக விவாகரத்து செய்யவேண்டும் என்கிறார். இஸ்லாத்தை தழுவும் ஒருவன் குர்'ஆனின் கட்டளையை ஏற்பதாக உறுதிமொழி அளித்தே இஸ்லாத்தில் இணைகிறான். எனவே குர்'ஆனின் கட்டளையான சகோதரி மகள் விசயத்தையும் அவன் ஏற்றே ஆகவேண்டும் என்கிறார். அது மட்டுமன்றி இஸ்லாத்தின் அனைத்து சட்டங்களையும் ஏற்றுக்கொண்டு இணைய விரும்புபவர்கள் மட்டும் தான் இஸ்லாத்திற்கு வரவேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக  முன் வைக்கிறார் பீஜே. ஆனால் இன்று இதே விஷயத்தில் அவரது நிலை என்ன?  இணைப்பை படியுங்கள்; http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/sakothari_makalai_thirumanam_seythavar_islathil_sera_mutiyuma/
பீஜேயின் இந்த லேட்டஸ்ட் ஃபத்வாவில் இஸ்லாத்தில் ஒருவர் இணைவதற்கு அவர் மணந்திருந்த சகோதரி மகளை விவாகரத்து செய்து விட்டு வா என்று சொல்ல கூடாது என்கிறார். உண்மைதான். ஆனால் இஸ்லாத்தை ஏற்ற பின் அவரை  உடனடியாக தனது சகோதரி மகளை விவாகரத்து செய் என்று சொல்லக் கூடாது என்றும், சிறிது காலம் மார்க்க உபதேசங்களை கேட்டு பின்பு அவராகவே விவாகரத்து செய்ய அவகாசம் அளிக்க வேண்டும்  என்கிறார்.  இஸ்லாத்தை ஏற்ற ஒருவர் தான் திருமணம் செய்திருந்த சகோதரி மகளை உடனடியாக விவாகரத்து செய்யவேண்டும் என்று அன்று சொன்ன பீஜே, இன்று அவகாசம் அளிக்க வேண்டும் என்று சொல்லி தனக்குத் தானே முரண்படுகிறார். மேலும் இவரது இந்த நவீன ஃபத்வாவிற்கு அவர் என்ற சான்றையும் வைக்க வில்லை. முழுக்க முழுக்க இவரது சொந்த மனோஇச்சையன்றி  வேறில்லை. இவரது கூற்றுப்படி இஸ்லாத்தை  ஏற்ற  ஒருவருக்கு அவகாசம் அளித்து அந்த அவகாச காலத்தில் தனக்கு அனுமதிக்கப்படாத அந்த அந்த மனைவியுடன்  உடலுறவு கொண்டால் அதை ஆகுமானது என்று பீஜே கூறுவரா? இது ஒருபுறமிருக்க, இந்த விசயத்திற்கு மார்க்கம் தெளிவான வழியை காட்டியுள்ளது.
இப்னு உமர்[ரலி] அவர்கள் கூறினார்கள்;
ஃகைலான் இப்னு சலமா[ரலி] அவர்களுக்கு பத்து மனைவியர் இருந்தனர். அவர் இஸ்லாத்தை தழுவியபோது அவருடன் அவரது மனைவியரும் இஸ்லாத்தை தழுவினர். அப்போது நபி[ஸல்] அவர்கள் அவரிடம், 'அவர்களில் நால்வரைத் தேர்ந்தெடுத்தக் கொள்ளும்படி[யும்] மற்றவர்களை விவாகரத்து செய்யும்படி[யும்] கட்டளையிட்டார்கள். நூல்; திர்மிதீ, பைஹகீ.
நாம் வைத்துள்ள மேற்கண்ட ஹதீஸில் இஸ்லாத்தை ஏற்ற ஃகைலான் இப்னு சலமா[ரலி] அவர்களுடன் அவரது பத்து மனைவியரும் இஸ்லாத்தை   ஏற்ற நிலையிலும், அந்த  சஹாபிக்கு நபியவர்கள் அவகாசம் அளிக்கவில்லை. நால்வரைத் தவிர மற்றவர்களை விவாகரத்து செய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார்கள் என்றால், இதிலிருந்து புரிவது என்ன? இஸ்லாத்தை ஏற்ற ஒருவர்,  இஸ்லாத்திற்கு மாற்றமாக மனமுடித்திருந்தால் உடனடியாக விவாகரத்து செய்ய வேண்டும் என்பதுதானே?  சொல்ல முடியாது, இந்த ஹதீஸில் 'உடனடியாக' விவாகரத்து செய் என்று நபியவர்கள் கட்டளையிட்டார்கள் என்ற கருத்து உள்ளதா? என்று  வார்த்தை   விளையாட்டை பீஜே செய்தாலும்  ஆச்சர்யமில்லை. பீஜேயிக்கு  ஹதீஸ்கள் முக்கியமல்ல. மாறாக அவரது  நோக்கமெல்லாம் முஸ்லிமல்லாதவர்கள் ஏற்கும் வகையில் சட்டங்களை பூசி மெழுகி சொல்வது தானே!

கருத்துகள் இல்லை: