அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

ஞாயிறு, 14 நவம்பர், 2010

பீஜேயின் அநீதியைக் கண்டித்து, சகோதரர் பாக்கர் தலைமை ஏற்கிறேன்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்கினிய முஸ்லிம் சமுதாயமே! உங்களின் கனிவான பார்வைக்கு;

''ஒருவன் ஒரு பிள்ளையை பெற்று, அப்பிள்ளையின் மீது மொத்த கவனத்தையும் செலுத்தி வளர்த்துவருகிறான். அப்பிள்ளையும் அல்லாஹ்வின் அருளோடு அறிவார்ந்த பிள்ளையாக, அனைவரும் பாராட்டும் பிள்ளையாக வளர்வதை கண்ட 'மக்குப் பிள்ளையை' பெற்ற மற்றொருவன் பொறாமை கொண்டு எப்படியேனும் இந்த மக்கள் பாராட்டும் பிள்ளையை நாம் அபகரித்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டி அதற்கான சதித்திட்டம் தீட்டுகிறான். அறிவான பிள்ளையின் தந்தை ஒரு அப்பாவி என்பதால், தனது பிள்ளையின் பிறப்பு பற்றி அரசு பதிவேட்டில் பதிவு செய்யாமல் இருந்ததோடு, பிறப்புச் சான்றிதழையும் வாங்காமல் இருந்தான். இதையறிந்த அந்த சதிகாரன், அந்த அறிவார்ந்த பிள்ளையை தனக்கு பிறந்த பிள்ளை என பதிவு செய்து, பிறப்புச் சான்றிதழையும் வாங்கி உண்மையான தந்தையான அந்த அப்பாவியிடம் சொன்னான்; உன் பிள்ளை விஷயத்தில் உனக்கு எந்த உரிமையுமில்லை என்று.

மேற்கண்ட சம்பவம் உண்மையாக இருந்தால் அந்த சதிகாரனை எவ்வாறு மகா அயோக்கியன் என்று சொல்வோமோ, அதுபோல மகா அயோக்கியத்தனமான வேலையை 'மகா அறிஞர்' பீஜே செய்திருக்கிறார் என்பதுதான் உச்சகட்ட வேதனையான செய்தி.

ததஜ வில் இருந்து சகோதரர் பாக்கர் உள்ளிட்ட சகோதர்கள் நீக்கப்பட்டதும், அவர்கள் ஒன்று கூடி உருவாக்கியதுதான் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்பது உலகறிந்த விஷயம். பீஜே மற்றும் அவரது ஆதரவாளர்களால் ஒரு உண்மையோடு பல்லாயிரம் பொய்கள் புனைந்து வீசப்பட்ட அத்தனை அவதூறுகளையும் தான்டி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர் பாக்கர் மற்றும் அவரது அமைப்பை சார்ந்த சகோதரர்களின் தியாகத்தால் வளர்ந்து நிற்கிறது.

இந்த நேரத்தில் 'நாங்கள்தான் உண்மையான இந்திய தவ்ஹீத் ஜமாஅத். எங்கள் இடத்தில்தான் பதிவு சான்றிதழ் இருக்கிறது என்று அமைப்பை அபகரிப்பது அப்பட்டமான அநீதியாகும். இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் நாங்கள் அப்போதே, அதாவது பாக்கர் அவர்கள் ததஜ விலிருந்து நீக்கப்படுவதற்கு முன்பே பதிவு செய்துவிட்டோம் என்று சொல்லும் இந்த பொய்யர்கள் வெளியிட்டுள்ள சான்றிதழில் பதிவு செய்யப்பட்ட காலம் மார்ச் 2010 என்று உள்ளது. இதிலிருந்தே தெரியவில்லையா பீஜே வகையறாக்கள் பித்தலாட்டக்காரர்கள் என்று.

எனவே, பாக்கர் தலைமையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் அசுர வளர்ச்சி கண்ணை உறுத்தியதாலும், தனக்கு எதிரான ஒரு அமைப்புகளை கைப்பற்றுவது; அல்லது முடக்குவது; அல்லது அந்த அமைப்பை அவதூறுகளின் மூலம் செல்லாக் காசாக்குவது என்ற கொள்கையுடைய பீஜே, அநீதியாக சிலரை தூண்டிவிட்டு, பதிவு செய்து இந்திய தவ்ஹீத் ஜமாத்தை அபகரிக்க நினைக்கிறார். இவரின் சூழ்ச்சியை அல்லாஹ் முறியடிப்பான் இன்ஷா அல்லாஹ்.

குறிப்பு; அல்லாஹ்வின் ஆலயங்கள் தொடங்கி, அடுத்தவர் அமைப்புகள் வரை ஆக்கிரமிக்கும் எண்ணத்துடன் செயல்படும் பீஜேயை கண்டித்தும், அவரை போன்றவர்களை இந்த சமுதாயத்தில் அடையாளம் காட்டும் கடமையை உணர்ந்தும், பாதிக்கப்பட்ட பாக்கர் மற்றும் அவரது தலைமையில் இயங்கும் ஜமாஅத் சகோதரர்களுக்கு தோள் கொடுக்கும் விதமாகவும்,


சகோதரர் பாக்கர் அவர்களின் தலைமையில், அவரது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தில் என்னை உறுப்பினராக இணைத்துக் கொள்கிறேன். அல்ஹம்துலில்லாஹ். அதோடு இந்த அநீதியான அபகரிப்புக்கு எதிராக நியாயமுள்ள மனிதபிமானமுள்ள அனைவரும் ஒன்றிணையவேண்டும். சகோதரர் பாக்கர் கரத்தை பலப்படுத்த முன்வரவேண்டும் என்றும் அன்போடு அழைக்கின்றேன்.

இப்படிக்கு
உங்கள் மார்க்க சகோதரன் -முகவை எஸ்.அப்பாஸ்.

கருத்துகள் இல்லை: