அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

புதன், 10 நவம்பர், 2010

கொலைக்கு கொலையே தீர்வு; இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் கோவை 'என்கவுண்டர்'!

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِي الْقَتْلَى الْحُرُّ بِالْحُرِّ وَالْعَبْدُ بِالْعَبْدِ وَالأُنثَى بِالأُنثَى فَمَنْ عُفِيَ لَهُ مِنْ أَخِيهِ شَيْءٌ فَاتِّبَاعٌ بِالْمَعْرُوفِ وَأَدَاء إِلَيْهِ بِإِحْسَانٍ ذَلِكَ تَخْفِيفٌ مِّن رَّبِّكُمْ وَرَحْمَةٌ فَمَنِ اعْتَدَى بَعْدَ ذَلِكَ فَلَهُ عَذَابٌ أَلِيمٌ

ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்;, அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.
وَلَكُمْ فِي الْقِصَاصِ حَيَاةٌ يَاْ أُولِيْ الأَلْبَابِ لَعَلَّكُمْ تَتَّقُونَ

நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம். [2 ;178 ,179 ]

மேற்கண்ட இறைவசனத்தில் ஒருவர்  அநியாயமாக  கொல்லப்பட்டால், கொலையுண்டவரின் வாரிசுகள் கொலையாளியை மன்னித்தாலன்றி, கொலையாளி கொல்லப்படவேண்டும். அதுவும் அந்த கொலையாளி பொதுமக்கள்  முன்னிலையில் கொல்லப்படவேண்டும் என்ற சட்டத்தை இஸ்லாம் பாதிக்கப்பட்டவனின் மன வலியை  உணர்ந்து அன்றே சொன்னது.

முக்காலமும் உணர்ந்த முதல்வனான அல்லாஹ்வின் இந்த அற்புதமான சட்டத்தை 'முற்போக்கு[வியாதிகள்]வாதிகள்' என்று சொல்லிக்கொள்ளும் மூளை மழுங்கிய ஒரு கூட்டம் தொன்று தொட்டு விமர்சித்து வருகிறது. ஆனால் அல்லாஹ்வை  தவிர வேறு எவராலும் சிறந்த சட்டத்தை வழங்கமுடியாது என்றும், அல்லாஹ்வின் சட்டமே என்றைக்கும் மேலோங்கும் என்பதை கோவையில்  இரு குழந்தைகளை கடத்தி, கொலை செய்த மாபாவியை கொன்ற விஷயத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கோவையில் முஸ்கின் என்ற 11 வயது சிறுமியையும், அவளது தம்பியான ரித்திக் என்ற 8 வயது சிறுவனையும் மோகன்ராஜ் எனும் டிரைவர் பணத்திற்காக கடத்தியதோடு, அந்த பச்சிளம் பாலகனான சிறுமியை பலாத்காரம் செய்ததோடு, இருவரையும் கொன்ற செயல் இந்தியா முழுக்க  எதிரொலித்தது. இந்த இரக்கமற்ற காமுகனை சம்பவம் நடந்த இடத்திற்கு காவல்துறையினர் அழைத்துச்சென்ற போது, காவலர்களை சுட்டுவிட்டு தப்ப முயன்றதாக, மோகன்ராஜ் 'என்கவுண்டரில்' சுட்டுக்கொல்லப்பட்டான்.

இந்த மாபவியை  சுட்டுக்கொன்ற காவல்துறையை மக்கள் பாராட்டியதோடு, இனிப்பு வழங்கியும் கொண்டாடியுள்ளனர். அதோடு, இது போன்ற பாவிகளுக்கு இதுதான் சரியான  தண்டனை என்று ஒட்டுமொத்த தமிழகமும் வரவேற்றுள்ளது. இதன் மூலம் தெரிவது என்ன? கொலைக்கு பகரம் என்பது அரசு செலவில்  அனைத்து வசதிகளுடன் சிறையில் போடுவதல்ல. மாறாக கொலை செய்தவன் உடனடியாக கொல்லப்படுவதுதான் சரியான தீர்வு என்று ஏகோபித்த குரலில் மக்கள் கூறியிருப்பதன் மூலம் 'கொலைக்கு கொலை' என்ற அல்லாஹ்வின்  சட்டம் மீண்டும் உண்மைப்படுத்தபட்டுள்ளது.

அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.

கருத்துகள் இல்லை: