அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

புதன், 17 ஜூன், 2009

இறைவனின் பார்வையில் மிகப்பெரும் பாவம் எது..?

حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏جَرِيرٍ ‏ ‏قَالَ ‏ ‏عُثْمَانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي وَائِلٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ شُرَحْبِيلَ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏‏قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ ‏ ‏أَيُّ الذَّنْبِ أَكْبَرُ عِنْدَ اللَّهِ قَالَ أَنْ تَدْعُوَ لِلَّهِ نِدًّا وَهُوَ خَلَقَكَ قَالَ ثُمَّ أَيٌّ قَالَ أَنْ تَقْتُلَ وَلَدَكَ مَخَافَةَ أَنْ يَطْعَمَ مَعَكَ قَالَ ثُمَّ أَيٌّ قَالَ أَنْ تُزَانِيَ حَلِيلَةَ جَارِكَ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ تَصْدِيقَهَا ‏وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَاللَّهُ إِلَّا بِالْحَقِّ وَلَا يَزْنُونَ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ يَلْقَ

oru மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பார்வையில் மிகப் பெரிய பாவம் எது?"கேட்டார். அதற்கு அவர்கள், "அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை வைப்பதுதான் (பெரும் பாவம்)" என்று பதிலளித்தார்கள். அவர், "பிறகு எது?" என்று கேட்டார். அவர்கள், "உன் பிள்ளை உன்னுடன் (உன் உணவைப் பங்கு போட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீ கொல்வது" என்று சொன்னார்கள். "பிறகு எது?" என்று அவர் கேட்க, "உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது" என்று அவர்கள் பதிலளித்தார்கள்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது இக்கூற்றை மெய்பிக்கும் வகையில், "மேலும், அவர்கள் அல்லாஹ்வை அன்றி வேறெந்தக் கடவுளையும் அழைக்க மாட்டார்கள்; மேலும், அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் உரிமையின்றி (அநியாயமாகக்) கொலை செய்ய மாட்டார்கள்; மேலும், விபச்சாரம் செய்ய மாட்டார்கள். யாரேனும் இப்பாவச் செயல்களைச் செய்தால் அவன் (தன் பாவத்திற்கான) தண்டனையைப் பெற்றே தீருவான்" எனும் (25:68ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி).
ஆதார நூல்;முஸ்லிம்.


இந்த பொன்மொழியில் நபி[ஸல்]அவர்கள், இறைவனின் பார்வையில் பிரதானமாக கருதப்படும் மூன்று பாவங்களை குறிப்பிடுகிறார்கள். துரதிஷ்டவசமாக இந்த மூன்று பாவங்களும் இன்றைய முஸ்லிம்களில் பெரும்பாலோரிடம் இருப்பதை காணலாம்.

இணைவைப்பு;

இறைவனுக்கு இணைவைப்பதை பற்றியும், அதன் பலன் நிரந்தர நரகம் என்று அல்-குர்ஆன் தெளிவாக அறிவுருத்தியபின்னும், பன்னெடுங்காலமாக அறிஞர்கள் பலர் உபதேசங்கள் செய்த பின்னும் தர்காக்களும் குறைந்தபாடில்லை. அங்கு போய் சரணடையும் முஸ்லிம்களின் எண்ணிக்கையும் குறைந்த பாடில்லை. இதற்கு காரணம் இறையச்சமின்மையும், தர்கா வழிபாடு ஒரு பெரும்பாவம் என்ற அறியாமையும்தான்.

குழந்தைகளை கொல்வது;

அன்றைய அறியாமை காலத்தில் பெண் குழந்தை பிறந்தவுடன் அதை உயிருடன் புதைக்கும் பழக்கம் இருந்தது. இஸ்லாம் அதை அடியோடு ஒழித்துக்கட்டியது. இன்று நவீன உலகில் வயிற்றில் வளர்வது ஆனா? பெண்ணா? என்பதை அறியும் வாய்ப்பு உள்ளதால், அவ்வாறு அறிந்து வயிற்றில் வளரும் சிசு பெண்ணாக இருந்தால் கருக்கலைப்பு செய்து வயிற்றுக்கு உள்ளேயே சமாதி ஆக்குவது. மேலும், இரண்டு குழந்தை பெறுவதுதான் நாகரிகம் என்று கருதி நிரந்தர குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டு குழந்தை பெறுவதை தடுப்பது. மேலும் வறுமைக்கு பயந்து குழந்தை பெற்றுக்கொள்வதை குறைத்துக்கொள்வது. இவையாவும் ஒருவகை சிசுக்கொலைதான். எப்படி எனில், ஒரு தம்பதியருக்கு எத்துனை குழந்தைகள் பிறக்கவேண்டும் என்று தீர்மானித்து இறைவன் அத்துணை குழந்தைகளை கருவாக செய்கிறான். அல்லாஹ்வால் கருவாக்கப்பட்ட குழந்தைகளை, நாகரீகம் என்ற பெயரிலோ அல்லது நம்மால் வளர்க்க முடியாது என்ற பெயரிலோ அழிப்பது கண்டிப்பாக சிசுக்கொலையன்றி வேறென்ன!

மேலும் வல்ல ரஹ்மான் கூறுகின்றான், வறுமைக்கு பயந்து உங்கள் குழந்தைகளை கொல்லாதீர்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்[6 ;151 ]

எனவே கருவான குழந்தையை அழிப்பது பெரும்பாவமாகும். மேலும் எந்த கருவை நாம் வேண்டாம் என்று அழிக்கிறோமோ அந்த கரு மூலம் உருவான குழந்தை நமக்கு மட்டுமன்றி, சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் பயன்படும் வகையில் இறைவன் நாடியிருக்கலாம். எனவே இது போன்ற கருக்கலைப்பு செய்யும் முஸ்லிம்கள் திருந்தவேண்டும்.

அண்டை வீட்டுக்காரன் மனைவியுடன் விபச்சாரம்;

ஒரு முஸ்லிம் தனது பெற்றோர்/உற்றார்க்கு அடுத்தபடியாக நல்லுறவோடு இருக்கவேண்டியது அண்டை வீட்டினரிடம்தான். அண்டை வீட்டினருடன் நடந்துகொள்ள வேண்டிய விதம் பற்றிய நபிமொழிகள் ஏராளம் உண்டு.

அதில் ஒன்று;‏ حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَعَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ جَعْفَرٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ أَيُّوبَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏الْعَلَاءُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ لَا يَأْمَنُ جَارُهُ ‏ ‏بَوَائِقَهُ"எவருடைய தொல்லைகளிலிருந்து அவருடைய அண்டை வீட்டார் பாதுகாப்புப் பெறவில்லையோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).[முஸ்லிம்]

இந்த ஆளவுக்கு இஸ்லாம் வலியுறுத்தியுள்ள அண்டை வீட்டில் நமது நடவடிக்கை எவ்வாறு உள்ளது என்பதை நாம் ஒவ்வொருவரும் சீர்தூக்கி பார்க்க கடமைப்பட்டுள்ளோம். ஆயிரம் உறவுகள் இருந்தாலும், ஆபத்து என்ற உடன் அடுத்த நொடி ஆதரவுக்கரம் நீட்டுவது அண்டை வீடுதான். பொதுவாக மற்ற வீடுகளை விட்ட அண்டை வீட்டினரிடம் சகஜமாக பேசுவது, அவர்களது வீட்டிற்குள் உரிமையோடு சென்றுவருவது, அவர்களது பலம்-பலவீனத்தை அறிந்திருப்பது இதையெல்லாம் பயன்படுத்தி அவர்களுக்கு கெடுதல் தர நினைப்பது அதிலும் குறிப்பாக, அண்டை வீட்டார் நம்மை நல்லவன் என்று நம்பியிருக்கும் நிலையில் அவனது மனைவியுடன் ஒரு தொடர்பை ஏற்ப்படுத்திக்கொண்டு அவனது படுக்கையை பகிர்வது, ஒன்று நம்பிக்கை துரோகம் அடுத்து விபச்சாரம். இதைத்தான் மேற்கண்ட நபிமொழியில் பெரும்பாவம் என நபியவர்கள் சொல்லிக்காட்டுகிறார்கள்.ஆனால் நம்மில் சிலர் அண்டை வீட்டு கணவன் வெளியூரிலோ, வெளிநாட்டிலோ பணியாற்று பவனாக இருந்தால் அவனது மனைவிக்கு வலை வீசுபவர்களும் இருப்பதை பார்க்கிறோம். இப்படிப்பட்ட கேடுகெட்டவர்கள் தங்களை திருத்திக்கொள்ளவேண்டும். நமது அண்டை வீட்டாருக்கு நாம் அரணாக இருக்கவேண்டுமேயன்றி, அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடாது என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ், நம்மை மேற்கண்ட பெரும்பாவங்களில் இருந்து பாதுகாப்பானாக!

கருத்துகள் இல்லை: