அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வெள்ளி, 6 மார்ச், 2009

கொள்கைப்பிரிவும்- கோஷ்டிப்பிரிவும் ஒன்றா?

சமீபத்தில் ஒரு இஸ்லாமிய நிகழ்ச்சிக்கு சென்றிருந்தோம். அதில் கேள்விநேரத்தின் போது ஒருவர், 'ஆக்,ஜாக், த.மு.மு.க, அனைத்து தவ்ஹீத் ஜமாஅத், த.த.ஜ., இ.த.ஜ. இப்படி பல்வேறு பிரிவுகளாக பிரிவது சரியா? என்று கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்தவர் 'இந்த பிரிவுகள் என்ன? இன்னும் ஒரு லட்சம் பிரிவுகள் ஏற்ப்பட்டாலும் கவலைப்படக்கூடாது. ஏனெனில், நாம் கொள்கைக்காகவே பிரிந்தோம் என்று கூறிவிட்டு, நபி[ஸல்]அவர்களும் பிளவை ஏற்ப்படுத்தினார்கள்[நவூதுபில்லாஹ்]. நபி[ஸல்]அவர்கள் கொள்கையை சொன்ன காரணத்தால் குடும்பத்திற்குள் கூட பிளவை ஏற்ப்படுத்தினார்கள். தந்தைக்கும் மகனுக்கும் மத்தியில் பிளவு ஏற்ப்பட்டது உதாரணம்; அபூபக்கர்[ரலி], அப்துர்ரஹ்மான்[ரலி] எனவே, கொள்கையை சொன்னால் ஏற்படும் பிளவு தவறில்லை என்று பதிலளித்தார்.

தவ்ஹீத் கொள்கையைச்சொன்னால் பிளவு ஏற்ப்படும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இயக்கப்பிரிவுக்கு இது ஆதாரமாகுமா? என்பதுதான் நமது கேள்வி. ரசூல்[ஸல்] அவர்கள், அறியாமைக்கால மக்களிடம் சத்திய மார்க்கத்தை எடுத்தியம்பியபோது அங்கே பிரிவு ஏற்ப்பட்டது. எப்படிப்பட்ட பிரிவு? ஒரு பிரிவு முஸ்லிம்கள். இன்னொரு பிரிவு காஃபிர்கள்/ இணைவைப்பாளர்கள். இதைத்தாண்டி வேறு பிரிவு ஏற்ப்படவில்லை. இன்று என்ன நடக்கிறது? முஸ்லிம்களுக்குள் முதலில் பிரிவு வந்து தவ்ஹீத்வாதிகள் உதயம். இந்தப்பிரிவு வரவேற்கத்தக்கதே! அடுத்து தவ்ஹீத்வாதிகளுக்குள் ஆறு பிரிவு வந்தது ஏன்? இந்தப்பிரிவு கொள்கைக்காக வந்தது என்று வெளியிலே சொல்லிக்கொண்டாலும், உண்மை அதுவல்ல. நிர்வாகம்/ மற்றும் உலக ரீதியான மோதல்கள்தான் என்பதுதான் உண்மை.

பிரிந்த இவர்கள் தங்களின் பிரிவுக்கு காபிர்களிடமிருந்து ஒரு கூட்டத்தை முஸ்லிம்களாக மாற்றிய நபியவர்களின் செயலை ஆதாரமாக காட்டுவதுதான் வேடிக்கை. நபி[ஸல்] அவர்களின் காலத்திலும், சத்திய சகாபாக்கள் காலத்திலும் இதுபோன்று இயக்கரீதியாக பிரிந்ததற்கான சான்று உண்டா? மிஞ்சிப்போனால் அலி[ரலி]-ஆயிஷா[ரலி]; அலி[ரலி]-முஆவியா[ரலி] ஆகியோருக்கு மத்தியில் நடந்த போரை ஆதாரமாக காட்டுவார்கள். இந்த போர்கள் மார்க்கத்தில் அலி[ரலி] அவர்கள் 'தடம்புரண்டுவிட்டார்கள்' என்று ஆயிஷா[ ரலி] போர் தொடுத்தார்களா? மார்க்கத்தில் முஆவியா[ரலி] அவர்கள் 'தடம் புரண்டுவிட்டார்கள்' என்று அலி[ரலி] போர் தொடுத்தார்களா? இல்லையே! ஆளுக்கொரு ஜமாத்தை உருவாக்கிக்கொண்டு ஒருவரையொருவர் வசைமாரி பொழிந்துகொண்டார்களா? இல்லையே! போரில் ஆயிஷா[ரலி] தோல்வியை தழுவியதும் அவர்களை அலி[ரலி]அவர்கள் கண்ணியமாக, பாதுகாப்பாக அனுப்பவில்லையா? அலி[ரலி]அவர்களுக்கு எதிராக போர்தொடுத்தது தவறு என்று பின்னாளில் ஆயிஷா[ரலி] வருந்தவில்லையா?

எனவே, நாம் சொல்லவருவது ரசூல்[ஸல்] அவர்கள் காபிர்களிடமிருந்து முஸ்லிம்கள் என்ற பிரிவை தோற்றுவித்தார்களேயன்றி, முஸ்லிம்களுக்குள் இயக்கப்பிரிவை ஒருபோதும் உருவாக்கவில்லை. எனவே, இயக்கப்பிரிவுக்கு இது ஆதாரமாகாது.

அல்லா கூறுகின்றான்;
إِنَّ الَّذِينَ فَرَّقُواْ دِينَهُمْ وَكَانُواْ شِيَعًا لَّسْتَ مِنْهُمْ فِي شَيْءٍ إِنَّمَا أَمْرُهُمْ إِلَى اللّهِ ثُمَّ يُنَبِّئُهُم بِمَا كَانُواْ يَفْعَلُونَ
நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான். (6:159)
شَرَعَ لَكُم مِّنَ الدِّينِ مَا وَصَّى بِهِ نُوحًا وَالَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهِ إِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى أَنْ أَقِيمُوا الدِّينَ وَلَا تَتَفَرَّقُوا فِيهِ كَبُرَ عَلَى الْمُشْرِكِينَ مَا تَدْعُوهُمْ إِلَيْهِ اللَّهُ يَجْتَبِي إِلَيْهِ مَن يَشَاء وَيَهْدِي إِلَيْهِ مَن يُنِيبُ
நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான். ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும் , ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்; "நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்' என்பதே - இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது - தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் - (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான். (42:13)

கருத்துகள் இல்லை: