அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

புதன், 24 டிசம்பர், 2008

முப்படைத்தலைவர்கள்[?] பதிலளிப்பார்களா..?


சகோதரர்களே,

'ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்'என்ற பழமொழிக்கேற்ப தவ்ஹீத்வாதிகளாகிய நாம் இயக்கத்தின் பெயரால் பிரிந்துகிடப்பது அசத்தியவாதிகளுக்கு அல்வா சாப்பிட்டதுபோல் உள்ளது. அந்நஜாத் டிசம்பர் இதழில் வெளியான ஷேக் அப்துல்லாஹ்ஜமாலிக்கு பகிரங்க அறைகூவல் என்ற அபுஅப்துல்லாஹ்வின் விவாத அழைப்பை நாம் பிரசுரித்திருந்தோம் அதற்க்கு பதிலாக சகோதரர் முஹம்மது அல்பாஸி என்பவர் பதில் அனுப்பியுள்ளார். அதில் சிலவற்றை தங்களின் பார்வைக்குத்தருகிறோம். அவரது கொள்கையில் எமக்கு உடன்பாடில்லை எனினும், அவர் வைக்கும் கேள்விகள் நியாயமானதாக எமக்கு தோன்றுகிறது.--ஆசிரியர்.
......................................................................


அபூ அப்தில்லாஹ் அவர்கள் ஜைனுல் ஆபிதீனுடனும் கமாலுதீன் மதனியுடனும் முதலில் விவாதம் செய்யட்டும் அபூ அப்தில்லாஹ் (அந்நஜாத் ஆசிரியர்) அவர்கள் மௌலவி ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்களுக்கு பகிரங்க அறை கூவல் விடுப்பதற்கு முன்னால் அவரை அவர் நிரூபித்துக்கொள்ளவேண்டும்.

சுன்னத் ஜமாஅத்தை எதிர்த்தவர்கள், மத்ஹபு கொள்கையை எதிர்த்தவர்கள் இன்று சிதறிக்கிடக்கிறார்கள். மார்க்கத்தை துண்டாக்குகிறார்கள் என்று சுன்னத் ஜமாஅத்தைப் பார்த்து கூக்குரலிட்டவர்கள் துண்டு துண்டாக உடைந்திருக்கிறார்கள்.அல்லாஹ் ஒருவன், குர்ஆன் ஒன்று, இஸ்லாம் ஒன்று மத்ஹபு மட்டும் நான்கா? என்று கேட்டவர்கள் இப்போது எண்ணிக்கையில்லாமல் பிரிந்து ஒவ்வொருவருக்கும் தனித் தனிக் கொள்கை வைத்திருக்கிறார்கள்.

இம்மூவரும் ஒன்றாக இருந்துதான் மத்ஹபு மட்டும் நான்கா? என்று ஓலமிட்டவர்கள். சுன்னத் ஜமாஅத்தை எதிர்த்த இம்மூவரும் மூன்று மத்ஹபுகளாக உருவெடுத்து நட'மாடு'கிறார்கள்.நண்டு ஒரு மத்ஹபுக்கு கூடும் இன்னொரு மத்ஹபுக்கு கூடாது என்று கிண்டலடித்த, சுன்னத் ஜமாஅத்தை எதிர்த்த ஜைனுல் ஆபிதீன், கமாலுதீன் மதனி, அபூ அப்தில்லாஹ் போன்ற இவர்களுக்குள் என்ன நடக்கிறது. குர்ஆனை ஒலுவின்றி தொடலாம் என்று ஒருவர் சொல்கிறார். தொடக்கூடாது என்று இன்னொருவர் சொல்கிறார். தொழுகையில் ஆண்கள் தொடை தெரிய தொழலாம் என்கிறார் ஒருவர். இன்னொருவர் கூடாது என்கிறார்.அத்தஹிய்யாத்தில் விரலை ஆட்டலாம் என்கிறார் ஒருவர். ஆட்டலாம் ஆட்டாமலும் இருக்கலாம் என்கிறார் இன்னொருவர். ஆட்டக்கூடாது என்கிறார் மற்றொருவர்.ஜக்காத் வருடம் வருடம் கொடுக்கத் தேவையில்லை என்கிறார் ஒருவர். கொடுக்கவேண்டும் என்கிறார் இன்னொருவர்.(சுன்னத் ஜமாஅத்தை கேலி கிண்டலடித்த இவர்களுக்குள்ளேயே ஜக்காத் பற்றி விவாதமே நடந்தது மதுரையில்) இதுபோன்ற பட்டியல் நீளும்இப்படி 25வருடங்களிலேயே இந்த அளவுக்கு சிதறி சின்னாபின்னமாகியிருக்கிறார்கள்.

இவர்களும் இவர்களைப் பின்பற்றும் கூட்டத்தாரும் குர்ஆன் மற்றும் ஹதீஸில் இருக்கிறதா? இல்லையா? இஸலாம் மார்க்கத்தில் அனுமதியா? அனுமதி இல்லையா? என்றெல்லாம் பார்க்காமல் ஒருவர் சொன்னார் என்பதற்காக ஏற்றுக்கொள்வதும் வேண்டாம் என்று சொன்னார் என்பதற்காகவேண்டி விட்டுவிடுவது என்ற கொள்கையுடையவர்கள் எல்லாம் சுன்னத் ஜமாஅத்தைப்பற்றி பேசுகிறார்கள்.

எனவே அபூ அப்தில்லாஹ் (அந்நஜாத் ஆசிரியர்) அவர்கள் ஜைனுல் ஆபிதீனுடனும் கமாலுதீன் மதனியுடனும் முதலில் விவாதம் செய்யட்டும். அல்லாஹ் ஒருவன், குர்ஆன் ஒன்று, இஸ்லாம் ஒன்று மத்ஹபு மட்டும் நான்கா? என்று கேட்ட இம்மூவரும் கலந்து இம்மூவரின் கொள்கையை வைத்து முதலில் விவாதம் செய்யட்டும். வஹி வந்ததுபோல திடீர் திடீரென்று மார்க்க பத்வா கொடுப்பதை நிறுத்தி, சண்டையிடுவதை நிறுத்தி இம்மூவரும் ஒன்றாக வரட்டும் மௌலவி ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்களிடம், விவாதம் செய்து மார்க்க விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளட்டும்.

கருத்துகள் இல்லை: