அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

திருக்குர்ஆனோடு நபியின் கூற்று முரண்படுமா? பீஜே; அன்றும்-இன்றும்!


بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
திருக்குர்'ஆனோடு ஹதீஸ் ஒரு காலத்திலும் முரண்படாது என்று அறிஞர் பீஜே அன்று சொன்னது;
 
கேள்வி: குர்ஆன் வசனங்கள் ஸஹீஹான ஹதீஸ்களோடு சில நேரங்களில் முரண்படுகிறதே! உதாரணத்திற்கு "இறந்தவர்களை நீங்கள் செவியேற்கச் செய்ய முடியாது", "கப்ரில் உள்ளவர்களை கேட்க வைப்பவராக நீர் இல்லை" என்ற குர்ஆன் வசனங்களுக்கு மாற்றமாக நபி(ஸல்) அவர்கள் பத்ருப் போர்க்களத்தில் எதிரிகளின் சடலங்களைப் பாழடைந்த கிணற்றுக்குள் போட்டு அவர்களை நோக்கி "உங்களிறைவன் உங்களுக்கு வாக்களித்ததைப் பெற்றுக் கொண்டீர்களா?", என்று கூறிய போது உமர்(ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! இறந்தவர்களுடன் பேசுகிறீர்களே" என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், "அவர்கள் இப்போது கேட்கிறார்கள்" என்று கூறினர். இங்கே ஆயத்தும் ஹதீதும் முரண்படுகிறதல்லவா?

O.P. அப்துல் மஜீது, சென்னை .

பதில்: அல்லாஹ்வின் கூற்றோடு அவனது தூதரின் கூற்று ஒரு காலத்திலும் முரண்படாது. மேலோட்டமாகப் பார்த்தால் சிலருக்கு அப்படித் தோன்றலாம். சற்று சிந்தித்துப் பார்த்தால், குர்ஆன் வசனத்தை விளக்கம் செய்யக் கூடியதாகவே ஹதீஸ் அமைந்திருக்கும். முதலில் நீங்கள் குறிப்பிட்ட குர்ஆன் வசனத்தைப் பார்ப்போம். "அல்லாஹ், தான் நாடியவர்களுக்குக் கேட்கச் செய்பவராக இல்லை" (அல்குர்ஆன்)

இதுதான் அந்தக் குர்ஆன் வசனம். இந்த வசனத்தின் ஆரம்பத்தில் அல்லாஹ் நாடியவர்களுக்குக் கேட்க செய்கிறான்" என்று குறிப்பிடுவதன் மூலம் இயற்கையாக அவர்களால் செவியுற முடியாது. ஒரு சில சந்தர்ப்பங்களில் அல்லாஹ் நாடினால் செவியேற்கச் செய்வான் என்பதை உணர முடிகின்றது. அதற்கு விளக்கமாக நபி(ஸல்) அவர்கள் கூறிய சொல் அமைந்துள்ளது. "அவர்கள் இப்போது நான் சொல்வதைச் செவியேற்கிறார்கள" என்ற சொல்லை, நீங்கள் உற்று நோக்குங்கள்! 'இப்போது' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதன் மூலம் எப்போதும் அவர்களால் செவியுற முடியாது, என்பதை விளங்கலாம். அந்தக் காபிர்கள் கப்ரில் வேதனையை மேலும் அதிகமாக்குவது இறைவனின் விருப்பமாக இருக்கலாம். இதை நன்றாகப் புரிந்து கொள்ள ஒரு சின்ன உதாரணம் பார்ப்போம். நீங்கள் அணிந்துள்ள செருப்பு உங்கள் பேச்சைக் கேட்காது. ஆனால், அல்லாஹ் நாடினால் அதையும் செவியுறச் செய்ய முடியும் அல்லவா? ஒரு சந்தர்ப்பத்தில் "அல்லாஹ் தன் நாட்டப்படி செருப்பைச் செவியுறச் செய்கிறான்" என்று வைத்துக் கொள்வோம். அதிலிருந்து அந்த செருப்பு எப்போதும் நீங்கள் சொல்வதை செவியேற்றுக் கொண்டே இருக்கும் என்று சொல்ல முடியாது. இந்த பத்ரு நிகழ்ச்சி அது போன்ற ஒரு அற்புத நிகழ்ச்சியாகும். அல்லாஹ் நாடினால், எது, எதையும் கேட்க இயலாமல் இருக்கின்றதோ அதனையும் சில நேரங்களில் கேட்கச் செய்து தனது ஆற்றலை வெளிப்படுத்துகின்றான். இங்கே முரண்பாடு எதுவுமில்லை. விளக்கமாகத்தான் அமைந்துள்ளது
[மவ்லவி P. ஜைனுல் ஆபிதீன்அந்நஜாத் செப்டம்பர்,1986 செப்டம்பர்,ஐயமும்! தெளிவும்!!]
அல்லாஹ்வின் கூற்றோடு அவனது தூதரின் கூற்று இன்று மட்டுமல்ல ஒரு காலத்திலும் முரண்படாது என்று அன்று ஆணித்தரமாக முழங்கிய அறிஞர், குர்'ஆனோடு நேரடியாக மோதுவது போன்ற ஹதீஸுக்கு விளக்கமளித்து குர்'ஆணுடன் நபிமொழி ஒரு காலத்திலும் முரண்படாது என்று நிலைநாட்டியவர்,  இன்று என்ன சொல்கிறார்?
 
''மிகச்சில ஹதீஸ்கள் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் அதன் கருத்து குர்'ஆனுக்கு மாற்றமாக இருப்பதால் நபி[ஸல்] அவர்கள் இதை கூறியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் இந்த ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்கிறார்.
 
ஏனிந்த மாற்றம்? எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த மாற்றம்? 'குர்'ஆணுடன்  மோதுவது போன்ற கருத்துடைய ஹதீஸ் வந்தால் அது நான் சொல்லியதல்ல அதை புறக்கணியுங்கள் என்று நபியவர்கள் சொன்ன ஹதீஸை கண்டதால் வந்த மாற்றமா? இல்லை சகோதரர்களே! மனோ இச்சையால் வந்த மாற்றம் மார்க்கத்தை வளைக்குமாறு இந்த அறிஞரை தூண்டியுள்ளது. சிந்திப்பவர்கள் இவரின் முரண்பாட்டை விளங்கிக் கொள்வார்கள்.
 
 

கருத்துகள் இல்லை: