tag:blogger.com,1999:blog-8130809260838992754.post8136228822814801222..comments2022-04-04T17:19:02.546+03:00Comments on முகவை எக்ஸ்பிரஸ்.: பகைமை எனும் களைநீக்கி பாசமெனும் விதை விதைப்போம்!முகவைஅப்பாஸ்http://www.blogger.com/profile/14751748900393854641noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8130809260838992754.post-82661319096742280802009-05-30T13:05:11.240+03:002009-05-30T13:05:11.240+03:00மரியாதைக்குரிய சகோதரர் தங்க.முகுந்தன் அவர்களுக்கு ...மரியாதைக்குரிய சகோதரர் தங்க.முகுந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்களுடன் முகவை அப்பாஸ் எழுதிக்கொள்வது. முழுக்க-முழுக்க இஸ்லாமிய சிந்தனைகளை மையப்படுத்தி எழுதப்படும் எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு முதற்கண் எமது நன்றி. தங்களின் கருத்துரையை நேரமின்மை காரணமாக இன்றுதான் பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது. தாமதத்திற்கு வருந்துகிறோம்.மேலும் தாங்கள் 'பின்னூட்டம்' வழங்கியிருக்கும் இந்த இடுகையை பொருத்தமட்டில் தேர்தலை மையப்படுத்தி அந்த தேர்தலில் பின்தங்கியிருக்கும் எமது சமூகம் முன்னேறவேண்டும் என்ற ஆதங்கத்திலும், முஸ்லிம் சமுதாய தலைவர்கள் என்ற பெயரில் முஸ்லிம் சமுதாய நலனை புறந்தள்ளி சுய ஆதாயத்திற்காக, அதுவும் ஒரு முஸ்லிம் வேட்பாளர் களத்தில் இருக்கும்போது அவரை தோற்க்கடித்து, ஒரு முஸ்லிமுக்கு கூட தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காத திமுகவை ஆதரித்த சில முஸ்லிம் தலைவர்கள் புரிந்து கொள்வதற்காகத்தான், 'ஒரு முஸ்லிமுக்கு ஒரு முஸ்லிமல்லாதவர் சமமாக மாட்டார்' என்று நாம் குறிப்பிட்டோம். சுருங்க சொன்னால், இது வேட்பாளர்களில் யார் சிறந்தவர் என்பதுதான் மைய கருத்தே அன்றி மதத்தை முன்னிறுத்தும் கருத்தல்ல. அதே நேரத்தில் நான் சார்ந்திருக்கும் இஸ்லாம் சிறந்த மார்க்கம் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. அதே நேரத்தில் மதவெறி எமக்கு எப்போதும் இருந்ததில்லை. அதனால்தான் இந்த பதிலின் ஆரம்பத்தில் தங்களை சகோதரர் என்று முன்னிறுத்தியுள்ளேன்.<br />தங்களின் மேலான கருத்துக்கு நன்றி! தொடர்ந்து எமது தளத்திற்கு வாருங்கள்! தங்களின் கருத்தை தாட்சன்யமின்றி பதியுங்கள்! இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்தி அருள்வானாக!முகவைஅப்பாஸ்https://www.blogger.com/profile/14751748900393854641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8130809260838992754.post-64391744392762028252009-04-24T13:19:00.000+03:002009-04-24T13:19:00.000+03:00வணக்கம் அப்பாஸ்!
இங்கு நான் உங்களோடு நான் முரண்பட...வணக்கம் அப்பாஸ்!<br /><br />இங்கு நான் உங்களோடு நான் முரண்பட வேண்டிய நிர்ப்ந்தத்தில் இருக்கிறேன்! <br />அதற்காக என்னை மன்னியுங்கள்!!!<br /><br />தங்களின் கட்டுரையில் இறுதிப் பாகத்தில் நீங்கள் தெரிவித்த கருத்து இது!<br /><br />//எனவே சகோதர்களே! எந்தவகையிலும் ஒரு முஸ்லிமுக்கு ஒரு முஸ்லிமல்லாதவர் ஈடாகமாட்டார். ஒரு முஸ்லீம் என்னதான் பாவங்கள் செய்தாலும் அவனது உள்ளத்தில் கடுகளவு ஈமான் இருந்தாலும் அவர் இறுதியிலாவது சொர்க்கம் செல்வார். ஆனால் முஸ்லிமல்ல்லாதவர்கள் நிலை சொல்லி தெரியவேண்டியதில்லை. எனவே பகைமை மறந்து நமக்குள் பொதுப்பிரச்சினையிலாவது ஒன்றுபடுவோம். பலதரப்பு கொள்கையுடைய கட்சிகள் 'குறைந்தபட்ச செயல்திட்டம்' என்ற பெயரில் ஒன்றிணையும்போதுஇ நாம் இறைவன் நமக்களித்த முஸ்லிம்கள் என்ற பெயரால் ஓரணியில் திரளுவது சாத்தியமே மனமிருந்தால்......//<br /><br />மனிதர்கள் எல்லோரும் இவ்வுலகத்தில் பிறக்கும் போது ஒரு மொழியைப் பேசுபவர்களாகவோ அல்லது ஒரு சமயத்தைச் சார்ந்தவர்களாகவோ பிறப்பதில்லை. பல்வேறுபட்ட பிரிவினைகளுக்குட்பட்டே வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள். நானறிந்த வரை தங்களின் சமயத்தைச் சார்ந்த சிலரும் கிறஸ்தவ சமயத்தைச் சார்ந்த சிலரும்தான் (எல்லோரும் அல்ல – ஏனெனில் எனக்கு நிறைய நண்பர்கள் எல்லா சமயத்திலும் இருக்கிறார்கள்) தன்னுடைய சமயம் தான் சரியானது என்ற ஒரு மமதை கொண்டு இருக்கிறார்கள் - மதமாற்றத்திற்கும் வழி சமைக்கிறார்கள் - திரும்பவும் மன்னிக்கவும் இதைக் குறிப்பிடுவதற்கு – நீங்கள் எழுதிய படியாலேயே நான் எழுதவேண்டியிருக்கிறது. நான் சமயத்தைப் பற்றிச் சண்டையிட வரவில்லை – ஏனேன்றால் எந்த ஒரு சமயத்திலும் சண்டையிடு என்று சொன்னதாகத் தகவல் காணவில்லை. நீ சரியாக நடந்தால் - அதைக் கடைப்பிடித்து மற்றவர்களும் சரியாக நடந்தால் பிரச்சனைக்கு இடமில்லை. இதைத்தான் சமயங்கள் அடிப்படையில் உபதேசிக்கின்றன! உங்கள் சமயத்தில் மட்டுமல்ல எல்லாச் சமயத்திலும் எல்லா விடயங்களும் தெளிவாக தெரியப் படுத்தப்பட்டுள்ளன! <br />உலகப் பொது மறை எனப்படும் திருக்குறளிலும், <br />ஏன் சுதந்திப் போராட்டத் தியாகி பாரதியார் கவிதையிலும் <br />ஏனைய பொது தமிழ் மறைகளிலும் காணப்படுகின்றன!<br /><br />என் எழுத்தக்களால் சிலவேளை உங்களின் மனதில் ஏதேனும் கவலை ஏற்பட்டிருந்தால் தயவு செய்து மன்னிக்கவும். உலகம் பரந்தது! <br />மனம் சிறிதானாலும் பரந்த உள்ளம் எம்மால் ஏற்படுத்தப்பட முடியும் - இது எனது எண்ணம்! <br /><br />தங்களின் பதிலை எதிர்பார்த்திருக்கின்றேன்! <br /><br />ஏற்கனவே உங்களுடைய இன்னொரு கையான நிழல்களும் நிஜங்களும் என்ற பதிவுக்கும் ஒரு கருத்துரை கொடுத்துள்ளேன்<br /> <br />என்றும் அன்புடன்<br />தங்க. முகுந்தன்.தங்க முகுந்தன்https://www.blogger.com/profile/16761942939828093391noreply@blogger.com